சுட சுட செய்திகள்

Tuesday, March 20, 2012

இந்தக் காதல் எது வரை?


நீ தலை துவட்டுகையில்
மேகம் கருக்களிடுகிறது..
உன் மீசையின் வளைவுகள்
என் அந்தரங்க குடிசை பகுதிகள்...
உன் பரந்த மார்பு
நான் கோலம் போடும் முன் வாசல்..
உன் செல்ல கோபம் என் அசட்டு தீக்குளிப்பு...
உன் வருகை
என் சுக பிரசவம்...
உன் பத சுவடு
என் கண்ணீர் குளம்...
உன் எதிர்பார்ப்பு திருவிழாவின்
அம்மாவை தேடும்
பரிதாப குழந்தை...
உன் கண்ணீர்
நான் மூச்சு திணறி
சாகும் கிணறு...
உன்னுள் முளைத்த ஜுரம்
என் சுவாச குழாய் அடைப்பு...
உன் கசப்பு புன்னகை
என் இனிப்பு மரணம்...
உன் கடிதம்
தபால் காரனுக்கு பாலாபிசேகம்...
என்றெல்லாம்
எழுத நினைக்கையில்
மறைய மாறுகின்றன...
."உன் திருமண நிகழ்வும்....என் திருமண நிகழ்வும்.."

No comments: