சுட சுட செய்திகள்

Thursday, November 27, 2008

ரத்தக்களறியான மும்பை

மும்பை பயங்கரம்...இதயத்தின் துடிப்பை ஒரு கணம் நிறுத்தி இருக்கும்.சுற்றுலா சென்று சுகம் காண்போம் என்றுதான் அவர்கள் அங்கே நுழைந்து இருப்பார்கள்.ஆனால் துப்பாக்கி குண்டுக்கு தன் உடலும் பகடைகாயாகும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.இதுதான் இந்தியா....வாழும் மனிதனுக்கு இங்கே பாதுக்காப்பில்லை.தினம் தினம் இங்கே குண்டு வெடிப்பு.தீவிர வாத அச்சுரத்தல் அதிகம் உள்ள அமெரிக்காவில் கூட எப்போதாவது தான் இதுபோல் நிகழும். ஆனால் இந்தியாவிலோயோ ஒவ்வொரு வினாடியும்.நினைத்து பாருங்கள்...டுவின் டவர் இடிந்த பிறகு...ஆப்கானிஷ்தானே தரைமட்டம் ஆகியது...ஆனால் இங்கே தான் நம் தலைவர்கள்....என்னதான் நடந்தாலும்.....வெறும் கண்டனங்களை மட்டுமே தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.அப்படியானால்........."எதிர் கால இந்தியா......?"

Friday, November 21, 2008

அம்பேத்கர் தேவை இல்லயா?


சென்ற வாரம் சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த அந்த வன்முறை சம்பவம் பார்த்தவர் நெஞ்சங்களை கலங்கடித்து இருக்கும்.என்னை பொறுத்த வரை அது...உணர்ச்சி போராட்டம். காலம் காலமாய் அடிமைப் படுத்தப்பட்டு இருந்த ஒரு இனம்...அடிவாங்கி கொன்டு இருந்த ஒரு இனம்...உணர்ச்சிக் கொன்டு ஒரு படி முன்னேறி இருக்கிறது. அந்த அடிதடிக் கான காரணம்..ஒரு சாதிய வன்கொடுமைத் தான். தேவர் ஜெயந்தி கொண்டாட அச்சடிக்கப் பட்ட..நோட்டீசில்..அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்பதற்க்கு பதிலாக, வெறும் சட்டக் கல்லூரி என்றே இருந்து இருக்கிறது.அம்பேத்கர் இன மாணவர்கள் இது பற்றி அவர்களிடம் கேட்டதிற்கு...அந்த ஈன சாதி பெயரெல்லாம் போடுவதில்லை என்று..சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்கள்.எது எப்படியோ...அம்பேத்கர் மக்களிடம் இருக்க வேண்டும் என்ற் சொன்ன சூடும், சொரணையும்....இப்போது அவர்களிடத்தில் நான் பார்க்கிறேன். இது ஒரு சாதி மோதல் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் நமக்கு கிடையாது.இந்த தலித்துக்களுக்கு சூடும், சொரணையும் வந்து விடக்கூடாது என்ற ஆதிக்க சாதி மனப்பான்மையை இந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் உடைத்து காண்பித்தார்கள்.எவன் தொட்டால் தீட்டு என்றார்களோ...அவன் தான், இந்த நாட்டின் சட்டத்தை தீட்டோ தீட்டு என்று தீட்டினான்.ஆனால் இந்த ஆதிக்க சாதி இந்துக்கள் இன்னும் இவர்களை தாழ்த்தியே பிழைக்க வேன்டும் என்ற சாதிய வெறியோடு அலைகிறார்கள் என்பது தான் கொடுமை.முதலில் "அவனை கொல்லுங்கடா என்று வெறியோடு கத்தியை தீட்டிக் கொன்டு வந்தவன் அதிக்க சாதி வெறியன்.அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே எந்த மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்க வேண்டி யாகிவிட்டது. இனிமேலாவது, ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் வன்கொடுமை வெறியை குறைத்து கொள்வது நலம்.

Monday, November 17, 2008

பாவம் இந்த பூமி

பாவம் இந்த பூமி ..பாரம் தாங்காமல் ஒருநாள் தடுமாற போகிறது..!
மில்லியனாய் மக்கள் , நெருக்கடியில் வாழ்க்கை., பற்றாக்குறையில் உலகம்..!
பிறந்தவர்களை பற்றி நான் குறை கூறவில்லை...இனி பிறக்க போகிறவர்களை கட்டு படுத்த கூடாதா? என கேள்வி எழுப்புகிறேன்.
இப்போதே தண்ணீருக்கு அடிதடி என்றால் வருகின்ற காலத்தில் உமிழ் நீர் மட்டுமே வாய் நனைக்கும்.
உணவுக்கு பஞ்சம் என்ற நிலை மாறி, பஞ்சமே உணவு என்ற நிலை வரும்.
விவசாய நிலங்கள் , குடியிருப்புக்காய் இரும்பு தரைகளாய், உருவாக்கப் படும்.
மரம், செடி, கோடி என அனைத்தும் தன் ஆயுளை முடித்து கொள்ளும்.
நதிகள் காயும். வறண்ட மலையில் பாறைகள் உருளும்.
கதிரவன் இனிமேல் அதிகமாய் சிரிப்பான். அந்த கோர சிரிப்பில் பனிமலை உருகும்.
பனிமலை நீரால் கடல் மட்டம் உயரும்.நிலமே ஓர்நாள் நீரால் மூழ்கும். இந்த நிலைமை நடந்தே தீரும்.
வின்ஜானத்தின் விசங்கள் வான கூரையை நனைத்த படியால் ...பாவம் அங்கே விழுந்தது ஓட்டை.
அகச் சிவப்பு அரக்கன் அதன் வழியேத் தான் தலை நுழைத்து எட்டி பார்க்கிறான். மனித தொலை பற்றிக்கொண்டு புற்றாக மாறுகிறான். அறிவியல் நல்லதை உருவாக்க வேண்டுமே தவிர , உருக்குலைக்க கூடாது.அதுவல்ல நிலைமை இங்கே...
அணுகுண்டால் அழிந்தது...ஹிரோசமா, நாகசாகி மட்டுமல்ல ...நமது மனித நேயமும் தான்.
அறிவு முதன் முதலில் அங்கே தான் தன் கோரப் பல் காட்டி சிரித்தது.
அறிவு... உலகை அழிக்க கிளம்பும் முன் .....கொஞ்சம் இதயத்தின் மிருக தோலை கொஞ்சம் உரித்து எறிந்து வாருங்கள்.

Monday, November 3, 2008

வருண பகவானே...

வருண பகவானே...
கண்ணாடியின் வழியே
உன்னை அந்த அடுக்கு மாடிகள் ரசிக்கலாம்...
அண்ணல் உனை வணங்குவது
இந்த குடிசைகள் மட்டுமே...~!

குடிசையில் இழந்து போன
வாழ்கையை தவிர
வேறு என்ன இருக்கிறது..?
வறுமையும் , விரக்தியும் மட்டும் தான்
இங்குள்ள மிச்சம்.

இது சாதியின் அடையாளம்.
ஆதிக்க தீயின் நாக்குக்கு பிடித்த
சுவை மிக்க உணவு..
இந்த குடிசை..

எரிய வில்லை அடுப்பு..
சேரியில்...
போராடினோம் ...எரிந்தது அடுப்பல்ல
சேரி...

குடிசைக்கே வருகிறது சாமி..
மாடிக்கே போகிறது வரம்..!

கலையை, கலைஞ்சனை போர்ரிய
நாடிது என்கிறாய்... காலம்  காலமாய்
பறையை,பறயனை தாழ்த்திய  நீ...!
இறைவா ...
உன் கடைசி  அவதாரமாவது ....

இந்த சேரியில் இருக்கட்டும் ....
"குடிசைகளை  காப்பார்ற்ற .."

டி. ஆர் வித் மைக்கல் ஜாக்சன்

சும்மா சும்மா ஒரு சிரிப்பு...


சர்தார் ~~~~~~

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க? சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன். ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது! சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன். சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே? நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும். சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.


சர்தார் ~~~~~

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர். சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன். கரப்பான் ~~~~~~~~ மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான், "வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன. ஏன் தெரியுமா?

.. .. ஏன்னா, அது "HIT" ஸாங்!!!


குறுக்கே ~~~~~~~~

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.


இது யார் சொத்து?

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்