சுட சுட செய்திகள்

Sunday, July 17, 2011

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


ஒருநாள் நள்ளிரவு காவலர் ஒருவரும் தலைமைக் காவலரும் ஒருவருமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஒருவன் இவர்களைக் கண்டு மறைந்து மறைந்து சென்றான். போலீஸஃ கண்களுக்குத் தப்ப முடியுமா? அவனைப்பின் தொடர்ந்தனர். சந்தேகமில்லை. பழைய திருடன்தான். பிடிக்கவிரைந்தனர். ஒரு சந்துக்குள் ஓடி விட்டால் தலைமைக் காவலர் சாதாரணக் காவலரை ஏவி விட்டார். “போய் அவனைப் பிடிச்சுட்டுவாய்யா”. ஆனை கேட்டு அவசரமாய் சந்துக்குள் சென்றார். அது தொடர்ந்து செல்கிற சந்தில்லை. ஒரு இடத்தில் அடைபட்டுவிடுகிறது. அதற்குமேல் போக முடியாது. திரும்பித்தான் வந்தாக வேண்டும். உள்ளே சென்ற காவலர் நெடுநேரமாகியும் வரவில்லை. சந்து முனையில் நின்ற தலைமைக் காவலர் சிந்து பாடினார். “என்னய்யா இன்னுமா பிடிக்கிறே? வா சீக்கிரம்”

காவலர் குரல் கொடுத்தார். “வரமாட்டேங்கிறான் சார்”

“லத்திக்கம்பாலே நூலு கொடுத்து இழுத்துக்கிட்டு வாய்யா” காவலருகுத் தலைமை ஆலோசனை கூறியது.

மேலும் அரைமணி நேரம் ஆயிற்று தலைமை குரல் கொடுத்தது. “என்னய்யா பண்றே இன்னும்?” இப்போது காவலர் குரல் பரிதாமாக ஒலித்தது. “விடமாட்டேங்கறான் சார்”.

தினமும் செய்தித்தாளில் இதுபோன்ற செய்திகள் ஏராளம் பிடிக்க வேண்டிய காவலரே பிடிபடுகிறார். அடிக்க வேண்டிய அலுவலர் அடிபடுகிறார்.

நம்மைப் பிடித்த பழக்கங்களும் கூட இது போலத்தான். முதலில் சிகரெட் புகைக்கக்கற்றுக் கொள்வதற்கு தம்பி எவ்வளவு சிரமப்படுகிறான்?

தொண்டைக்குச் சென்ற புகை கமறலை உண்டாக்கி, மூச்சு முட்டி, இருமலை ஏற்டுத்தி, கண்ணில் கண்ணீரைச் சிந்த வைத்து, பாவம் மிகவும் துன்பப்படுகிறான்.

நல்வழிகாட்ட வந்த நண்பனோ முதலில் அப்படித்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று நெஞ்சுரம் ஊட்டிப் பழக்கத்தை உண்டாக்குகிறான்.

L போர்டு திருட்டு தம்மில் ஆரம்பிக்கிறான். பிறரிடம் பேசும்போது வாயை மூடிக்கொண்டு பேசுகிறான், நாற்றம் தெரியாமல் இருக்க!

வீட்டில் படுத்தால் வாய் ஓயாத இருமல் அம்மாவுக்கு ஏதோ சாக்குபோக்கு சொல்கிறான். அம்மா பாவம். இவனுக்காக பனங்கறகண்டு சித்தரத்தை போட்டுப் பால் தருகிறாள். “திருடன்” அதையும் அருந்துகிறான். அப்புறமும் இருமல், சிகரெட்டு, தீக்குச்சி, பட்டை ஆகியவற்றைச் சட்டைப்பையில் பார்த்துவிட்ட தந்தை சீறிப்பாய்கிறார்.

எல்லாம் சரி, இப்போது அவன் வாலிபன். யாருக்கும் அஞ்சாது எவருக்கும் கவல்பைபடாது தெருவில் தைரியமாக தம் அடிக்கிறான். நண்பர்கள் பட்டாளம் துணை நிற்க புகைப்படலத்தில் மூழ்குகிறான். இன்னும் இன்னும் வயது கூடுகிறது. மனைவி மக்கள் என்றாகி விடுகிறது. நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதி, டாக்டரின் எச்சரிக்கை. இனிமேல் புகைப்படிப்பதாக இருந்தால் இந்த மருத்துவமனையில் உனக்கு இடமில்லை.

இப்போது இவனுக்கு அப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறத. எண்ணம் வந்து என்ன செய்ய? பழக்கம் விடமாட்டேன் என்கிறதே! உதடு ஊறுகிறது. கை பரபகிறது. ஊதினால்தான் நமச்சல் அடங்கும் என்ற நிலை.

திருடன் வரமாட்டேன் என்று சொல்லும் முதல் நிலை. பிறகு விடமாட்டேன் என்கிறான் என்று தவிக்கும் மறுநிலை. வரமாட்டேன் என்ற பழக்கத்தை வருவித்துக்கொள்வானேன்? விட முடியவில்லையே என்று பிறகு வருந்து வானேன்?

புகைப்பழக்கத்தான் என்றில்லை. இது போன்ற ஏராளமான உடலைக் கெடுக்கும் மனத்தைக் கெடுக்கும் பழக்கங்கள்.
பழகிப் பழகி வருவிப்பதைப் பழக்கம் என்கிறோம். வந்து படிந்துவிட்டால் அதையே வழக்கம் என்கிறோம். இப்படி ஏதாவது ஒன்றைப் பழகிக் கொண்டு எவ்வளவு அல்லல் படுகிறோம்?

குடிப்பழக்கம் புகையிலை போடும் பழக்கம், கஞ்சாப் பழக்கம், காப்பிப் பழக்கம், தேநீர்ப் பழக்கம் என்று ஏராளமான வழக்கங்கள்.

கஷ்டப்படுப் பழகுகிறோம். அதற்காகச் செலவு செய்கிறோம். நல்ல நண்பர்களை இழக்கின்றோம். தீய நண்பர்களோடு பழகத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். கடைசியில் அப்பழகத்திலிருந்து விடுபட அரும்பாடு படுகிறோம். முடியாமல் துன்புகிறோம். ஏன் இப்படி?

நட்பு பற்றி நிறையப் பேசுகிறார் திருவள்ளுவர. நட்பு, நட்பாராய்தல்,பைமை, தநட்பு, கூடா நட்பு என 5 அதிகாரங்களில் 50 குறட்பாகால் நட்பு பற்றி விவரிக்கிறார். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுப்பதும் ஆலோசனை கூறுவதுமே திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை ஆகும்.

நண்பர்கள்தான் பழக்கத்தை உருவாக்குகிறார்கள்.

“இந்தத் தெருவிலே உள்ள பயலுங்க சேர்ந்து எம்புள்ளய கெடுத்தாட்டாங்க”

தாய்மார்களின் இப்புலம்பலில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
என்னிடம் ஒருபழக்கம் ஏற்பட்டது. பிறகு வழக்கமாகி நிலைபெற்றது. அது இதுதான். நான் ஆசிரியாயிற்றே! வகுப்பறையில் மாணவ்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டால், “டேய் நான் ஒருத்தன் இருக்கேண்டா” என்பேன்.

நான் இருக்கும்போதே பேசுகிறீர்களே என்று அங்கலாய்ப்பதுதான் இது.

மாணவர்களும் தற்காலிக அமைதியை அனுஷடிபார்கள். ஒருநாள் இப்படித்தான் கடைசி பெஞ்சில் ஒரு சலசலப்பு.

இரு மாணவர்கள் சற்று உரக்கவே பேசிக்கொண்டிருந்தார்கள். என் வழக்கப்படி “டேய் நான் ஒருத்தன் இருக்கேண்டாம என்றேன்.

அவ்வளவுதான் மாணவர்களிடையே ‘கொல்’ லேன்று சிரிப்பு.

‘ஏம்பா சிரிக்கிறீர்கள்’ என்று கேட்டேன்.

‘வேண்டாம் ஐயா, கேட்டால் வருத்தப்படுவீர்கள்’ என்றனர் மாணவர்.

‘இல்லை தெரிஞ்சுட்டாதான் நல்லது. இல்லேன்னாதான் மனசு தவிக்கும். என்னமோ ஏதோ என்று’ என்றேன் நான்.

“ஐயா இவன் நோட்டை அவன் கிழிச்சான். அவன் பேனாவை இவன் உடைச்சான். அவன் இவனை “மடப்பயலே” என்றான். இவன் அவனை “நீதாண்ஆ மடப்பயல்” என்றான். அப்பதான் நீங்க சும்மா இருக்காம நான ஒருத்தன் இருக்கேன்னு சொன்னீங்க. அவன் சொன்னார், “ஆமாம் ஐயா ஒருத்தர் இருக்காரு அவரையும் சேர்த்துக்கங்கன்”னு நாங்கள் அடக்க முடியாம சிரிச்சிட்டோம். ஐயா இந்த மடப்பயலுவ விஸ்டிலே நீங்கல்லாம் சேரக் கூடாதுய்யா”

அன்று முதல் நான் ஒருத்தன் இருக்கேன்னு சொல்வதை விட்டுவிட்டேன்.

காரண காரியம் அறிந்து எச்சரிக்கையும் பேச வேண்டும். இல்லையேல் என்னைப் போல அவமானப்பட வேண்டியதுதான். எது நல்ல பழக்கம்? எது கெட்ட பழக்கம்? என்பதற்கு நிரம்ப ஆராய்ச்சி செய்ய வேண்டுவதில்லை. எதை மறைவாகச் செய்ய முற்படுகின்றோமோ, எதைப் பிறருக்குத் தெரியாமல் செய்ய முற்படுகிறோ அது தீமை என்று பொருள்.

நேரு அவர்கள் தன் மகள் இந்திராவுக்கு எழுதும் கடித்த்தில் “எதையும் மறைவாகச் செய்ய எண்ணாதே. மறைவாகச் செய்ய நினைக்கும் போதே அது தவறான செயல் என்பதைப் புரிந்து கொள்” என்றார்.

‘அச்சம் தவிர்’ என்று பாரதியார் தன் புதிய ஆத்திச்சூடியைத தொடங்குகிறார். அச்சமின்றிச் செயல்பட வேண்டுமானால் நல்ல காரியங்களை மட்டும் செய்யப் பழகிட வேண்டும்.

இருட்டில் நுழையும் போது பயம் கவ்வும். வெளிச்சம் வர பயம் அகலும். இருட்டு அச்சம், ஒளி அஞ்சாமை பேய் பிசாசுகள் என்ற பொய்மை இரவில் கேட்கும் போது நம்மை அறியாமல் உடல் நடுங்குகிறது. அதையே பகலில் கேட்கும் போது சிரித்துச் சுவைத்து மகிழ்கிறோம். தீயபழக்கங்கள் இருள் கவ்வுவதைப் போல் நம்மைக் கவ்வும்போது, நல்லவர் சேர்க்கை என்ற ஒளியைப் பாய்ச்சி அவ்விருளை அகற்ற வேண்டும்.

ஒருமுறை மாணவர்களிடம் பேசிக்க கொண்டிருக்கும்போது, “இருட்டில் பயம் வரும் வெளிச்சத்தில் தைரியம் வரும்” என்றேன். ஒரு மாணவன் அதை ஒத்துக்கொள்ளவில்லை. அவன் வேறு விளக்கமளித்தான்.

“நல்லவர்களுக்கு இருட்டில் பயமும் வெளிச்சத்தில் தைரியமும் வரும். கெட்டவர்களுக்கோ இருட்டில் துணிவும் வெளிச்சத்தில் பயமும் வரும்” என்றான்.

“ஆகா, எவ்வளவு அருமையாகச் சிந்திக்கிறான்” என்று மெச்சிப் பாராட்டினேன்.

ஆம். திருடர்கள் இருட்டில் துணிந்து தொழில் செய்கிறார்கள். வெளிச்சம் வந்தால் ஒளிகிறார்கள்.

பட்டப் பகலில் நாலுபேர் அறிய செய்யும் எல்லாமே சமுதாய அங்கீகாரம் பெற்ற நல்ல செயல்களே.

இருளில் – யாரும் நம்மைப்பார்க்க வில்லை என்ற துணிவில் – செய்யப்படும் செயல்கள் – தனக்கோ சமுதாயத்துக்கோ தீமை பயக்கும் செயல்களே ஆகும்.

விலை மகளிர் இல்லம் போகிறவன் இருட்டில் யாரும் காணாமல் செல்கிறானே, ஏன்? அவனுக்கே தெரிகிறது. அது தகாத செயல் என்று.

காந்தியடிகள் “எந்தச் செலவையும் கணக்கெழுதிவிட்டுச் செய். கணக்கு எழுதாமல் பைசாவைக் கூடச் செலவிடாதே, கணக்கெழுதாமல் செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் திருட்டுப் பணமே” என்கிறார்.

மது பாட்டில் வாங்கினாயா, கணக்கில் எழுது.

சிரெட் வாங்கினாயா, கணக்கெழுது.

லஞ்சம் கொடுத்தாயா, கணக்கெழுது

சின்ன வீட்டுச் செலவா? எழுதிவை. கணக்கில் மறுநாள் அக்கணக்கு நோட்டை எடுத்துப் படித்துப் பார்க்கும்போது நமக்கே வெட்கமாக இருக்கிறதா, இல்லையா?

சிலருக்கு சில வினோத வழக்கங்கள் உண்டு. சிலருடைய அறியாமையை பலர் அறிய வெளிப்படுத்தி மகிழ்ச்சி காண்பார்கள். அறியாமை அகற்ற முயலவேண்டுமே அன்றி அறியாமையை வெளிப்படுத்தி அறியாதவர்களை அவமானப்படுத்துவது ஆகாத செயல்.

விவரமில்லாமல் பதில் சொல்லி விழி பிதுங்கும் நண்பன் ஒருவன் இருந்தான். அவனுடைய விவரமின்மையை விலாசமிட்டுக் காட்டும் இன்னொரு நண்பனும் எனக்குக் கிடைத்திருந்தான். பத்துப்பேர் கூடியிருக்கும் சபையில் எடக்கு முடக்கான கேள்வி கேட்டு விழிபிதுங்க வைத்து விளையாட்டுக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று ஒருமுறை நடந்தது.

விவரமானவன் கேட்டான் “ஏம்பா உன் பொண்டாட்டி விதையாயிட்டா நீ என்ன செய்வே?”

விவரமில்லாதவன் சொன்னான் “அதனால என்ன? நானே ஆக்கித் தின்னுட்டுப் போறேன். இது என்ன பெரிய கஷ்டமோ”

சபையில் வெடிச் சிரிப்பு. விவரமில்லாதவன் பேந்தப் பேந்த விழிக்கிறான்.

நண்பனின் அறிவை நாலுபேர் அறியப் பாராட்டுவோம். நண்பனின் குறையைத் தனிமையில் சுட்டிக்காட்டித் திருத்துவோம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...



“பாத்திரம் அறிந்து பிச்சை இடு கோத்திரம் அறிந்து பெண்ணை எடு”

என்பது நம்மிடையே அடிக்கடி பேசப்படும் பழமொழி.

பிச்சை போடும் போது பாத்திரத்தைப் பார்க்க முடியுமா? அதற்கேற்ப பிச்சை தரத்தான் இயலுமா? தகரம், அலுமனியம், எவர்சில்வர் என்று வேறுபாடுகாட்டி ஈந்திடத்தான் முடியுமா?

அதுவல்ல தாத்பரியம். “பாத்திரம்” என்பது பிச்சை எடுப்பவராகிய பாத்திரம். அவருடைய தன்மை அதற்கேற்ப தருதல்.

தமிழில் “ஈ, தா, கொடு” என்று ஊன்று சொற்கள் உள்ளன. மூன்றுமே ஒர பொருள் தான் எனினும் சிறிய வேறுபாடு அவற்றிடையே உண்டு. இழிந்தார்க்கு ஈதல்; சமமானவர்களுக்குத் தருதல்; உயர்ந்தவர்க்கு கொடுத்தல்.

“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்பது திருக்குறள்.

வந்திருப்பவர்க்கு ஏற்ப வழங்குல் வேண்டும் என்பது தான் பழமொழியின் உட்குறிப்பு.

“கோத்திரம் அறிந்து பெண்ணை எடு” என்பதும் “தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டுவதில்லை” என்பதும் ஒரு பொருளையே தரக்கூடியன.

கைகேயி பற்றி ஒரு கதை சொல்வதுண்டு. “இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரத்தைக்கேட்கிறாய். அது நிறைவேறினால் உன் மங்கல நாணைத்தான் பரதனுக்கு பட்டாபிஷேகக் கங்கனக் கயிறாக் கட்ட வேண்டும்.” என்று தசரதன் சொல்லியும் கேட்காமல் வரத்தை வற்புறுத்தினாள். “மகன் பரதன் ஆளவேண்டும், இராமன் வனவாசம் செல்லவேண்டும்”என்கிறாள் கைகேயி.

இந்தப் பிடிவாளதம் தாய்வழிவந்தது. இதற்கொரு கதை கைகேயியின் தந்தை ஈ, எறும்பு முதல் அனைத்து ஜீவ ராசிகளின் மொழி தெரிந்தவன் அவை பேசுவதை இவன் புரிந்துகொள்ள முடியும். அந்த வித்தையைக் கற்று வைத்திருந்தான்.

அவனும் க்கையேயின் தாயாகிய அரசியும் அந்தப்புரத்தனிமையில் இருக்கும்போது, எதிர் எதர் வந்த இரு எறும்புகள் பேசிக் கொள்வதைக் கேட்டுச் சிரித்தான்.

சிரிப்புக்குக் காரணம் கேட்டாள் அரசி. மன்னனோ அதைச் சொல்ல மறுத்தான். “சொல்லக்கூடாது. மீறி அவற்றின்பேச்சை யாராடமாவது கூறினால் மரணம் ஏற்படும் என்று இந்தக்கலையைக் கற்பித்த குரு சொல்லியிருக்கிறார்” என்றும் சொன்னான்.

அரசியோ, சொல்லியே ஆக வேண்டும் என்றும் அரசன் செத்தாலும பரவாயில்லை என்றும் கூறிப் பிடிவாதம் பிடித்தாள். தான் இறந்தாலும் கவலைப்படாத மனைவியோடு கூடி வாழ்வது பயனில்லாத ஒன்று என்று கருதிய மன்னன் அரசிய அடித்து விரட்டினான். இப்படிக் கூறுகிறது அந்தக் கதை.

இதன் மூலம் தாயின் பிடிவாதம் கணவனைப் பொருட்படுத்தாத தன்மையும் கைகேயியிடம் அமைந்திருந்தது. என்று அறிகிறோம். இதைத்தான் கோத்திரமறிந்து பெண்ணெடுக்கக் கூறும் பழமழியும் தெரிவிக்கிறது.

வாழ்வில் இதை அன்றாடம் சந்திக்கிறோம்.

திருக்குறள் நெறியில் வாழவிரும்பும் என்னை ஒருநாள் ஒருவர் காரணமின்றி அடித்துவிட்டார். அதோடு நில்லாமல் “போடா பொறுக்கி” என்று திட்டியும் தீர்த்து விட்டார். பகல் முழுவதும் இதே சிந்தனை. இந்தப் பிரச்சனைக்குத் திருவள்ளுவர் சொல்லும் தீர்வுதான் என்ன? என்று எண்ணியபோது.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்’

என்ற திருக்குறள்தான் நினைவு வந்தது. அப்படியே நடப்போம் என்று முடிவெடுத்தேன். அன்று மாலையில் கடை வீதிக்குச் சென்றபோது, என்னை அடித்தவரை வேறொருவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியபடி வாய்க்கு வந்தவாறு திட்டிக் கொண்டிருந்தார்.

சற்றே மனம் சந்தோஷப்பட்டாலும், தீமை செய்தவர் இப்போது அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறார். இந்த நேரத்தில், குறள்நெறிப்படி தீமை செய்தவர்க்கு நன்மை செய்து தண்டித்தால், தீமை செய்தவர் நானித் தலைகுனிவார் என்று எண்ணி, என்னை அடித்தவர்க்கு உதவ முற்பட்டேன்.

துண்டைக் கழுத்தில்போட்டு முறுக்கிக் கொண்டிருந்தவரை விசாரித்தேன். பத்து ரூபாய் வாங்கி பதினொரு மாதம் ஆகிவிட்டதாகவும் கேட்டால் “உனக்கு முதி குடுத்தவனெல்லாம் சும்மா இருக்கான் உனக்கென்ன அவசரம்” எனக் கேட்பதாகவும் சொன்னான். “பத்து ரூபாய்க்காக இப்படி அவமானப்படுத்தலாமா? அதுவும் நடு வீதியில்?” என்றேன். “அப்ப அந்தப் பத்து ரூபாயை நீ கொடு” என்றார்.

இது நல்ல சந்தர்ப்பம் என்பது மனம். குறள் நெறியைக் கடைப்பிடிப்பவனல்லவா நான்? உடனே பத்து ரூபாயைக் கொடுத்தேன். என்ன நினைத்து? காலையில் நம்மிடம் அடிப்பவன் மாலையில் நமக்காகப் பத்து ரூபாய கொடுத்து அவமானத்திலிருந்து காப்பாற்றுகிறானே என்று நானித்தலை குனிவான். திருக்குறள் நெறிப்படி இவனுக்கு இதுதான் தண்டனை.

ஆயுள் முழுவதும் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் தான் செய்த தீமையையும் நான் செய்த நன்மையையும் நினைத்து நினைத்து வெட்கப்பட்டுத் தலை குனிவானே! ஆயுள் தண்டனை அல்லவா இது? இவ்வாறெல்லாம் நினைத்துத்தான் பத்து ரூபாயை கொடுத்து அவனை அவமானத்திலிருந்து மீட்டேன்.

ஆனால் நடந்ததோ வேறு.

கடன் தந்தவன் என்னிடம் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றவுடன், இவன் தன் கூட்டாளியிடம் சொன்னான் “அட, இப்படிப்பட்ட ஆள் இருக்கும்போது, எதற்காகக் கண்டவனிடமும் கடன் வாங்கி அவமானப்பட வேண்டும்? இவரை காலையிலே ஓர் அறை கொடுத்தால் மாலையிலேயே பத்து ரூபா கொடுக்கிறாரே! அப்பப்பத் தேவைக்கேற்றபடி இவருக்கு அறைய விட்டு வாங்கிட வேண்டியதுதான். 50 ரூ வேணும்னா 5 அறை கொடுக்கணும். அவ்வளுவுதான். இவ்வளவு நாளா இந்த இளிச்சவாயனைத் தெரிஞ்சிக்காம இருந்திட்டோமே”.

இவ்வாறு அவன் பேசியதைக் கேட்டதும் என சித்தம் கலங்கியது. “திருவள்ளுவரே உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தால் எனக்கு இளித்தவாயன் பட்டந்தானா?” என்று புலம்பினேன். வீடு சென்று திருக்குறளைப் புரட்டினேன்.

பொறித்தட்டினாற் போன்று புலப்பட்டது. ஒரு திருக்குறள் தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் காணப்படும் குறள்.

‘நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை’

எல்லார்க்கும் நல்லது செய்து ஏமாந்து விடாதே! அவரவர் பண்புக்கேறப நடந்து கொள்!

தீமைக்குப் பதில் நன்மை செய்யும்போது திருந்துபவர்க்கு, மனம் வருந்துவோர்க்கு மேற்கொண்டு தீமை பக்கம் சாயாதவர்க்குத் தான் நன்மை செய்ய வேண்டும்.

திருவள்ளுவர் அறிவுரை மட்டுமா சொல்கிறார். எச்சரிக்கையும் செய்கிறார்.

பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதும் இதுதான். பிச்சை எடுப்பவன் போல வந்து வீட்டை நோட்டம் விட்டுத் திருடுகிறவனும் உண்டே!

ஆசிரியர்களாகிய நாங்கள் மாணவர்களைத் தரம்பிரித்துப் பாடம் நடத்துவோம். 80க்கு மேல் மதிப்பெண்பெறும் மாணவர்களுக்கு அவ்வப்போஉ சந்தேகங்களைத்தெளிவுபடுத்தினாலே போதும். அழகாகவும் தெளிவாகவும் பதில் எழுதும் முறையைத் தெரிவித்தால் அதுவே போதும். அவன் 100க்கு 100 வாங்குவான்.

50க்கு மேல் 60,70 என்று மதிப்பெண் பெறுபவனைச் சற்றுக் கவனிகவேண்டும். அவனுகு எங்கோ ஒரு சறுகல் இருக்கிறது. இலக்கணத்தில் கவனிமில்லாமல் இருக்கலாம். எழுத்துப் பிழைகள் இருந்தாலும் இருக்கலாம். அதைக் கவனித்தது அப்பாடத்தை மட்டும் போதித்து இட்டால் போதும் முதல் தர மாணவனாய் மாறி விடுவான்.

25 முதல் 50 வரை மார்க்கு வாங்கும் மாணவனுகுத்தேர்வு நேரத்தில் சில நல்ல அறிவுரைகளை அளித்து வைக்கலாம்.

0 முதல் 10 வரை மதிப்பெண்பெறு விட்டு பூஜ்யம் மதிப்பெண் வாங்கிய நண்பர்களோடு பள்ளி முடிந்து செல்லும் போது “ஓ.. போடு” என்று உரத்த குரலில் பாடிக்கொண்டு செல்லும் மாணவர்களுக்காகப் பாடுபட நினைத்தால், அவனுக்காக ஒதுக்கும் அந்த நேரம் வீண்நேரம்.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்த ஒருவர்,

‘சொலப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோலக்
கொல்லப் பயன்படும் கீழ்’

“ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்” என்று நம்முன்னோர் சுருக்கமாக்கினர்.

கசக்கிப் பிழிந்தால்தானே கருப்பஞ்சாறு கிடைக்கிறது. எடுத்து அழுத்திப் பிழிந்ததும் எலுமிச்சைச்சாறு கிடைத்துவிடுமே.

கருப்பஞ்சாறு வேண்டுமானால் கரும்பை ஆலையிலிட்டுக் கசக்கியே ஆகவேண்டும்.

“நல்ல மாட்டுக்கு ஒரு சுடு” என்பதும் நன்மொழிதான். 5 கோடி லாட்டரி அடித்தது ஒருவருக்கு. அவர் வீட்டுக்கு வழக்கமாக வரும் பிச்சைக்காரன் அன்றும் வந்தான். புதுப்பணக்காரருக்கு ரொம்ப நாளாகவே அவன் மீது ஓர் இரக்கம் உண்டு. இப்போதோ அவரிடம் நிறைய பணம் இருக்கிறது.

பிச்சைக்காரனை அழைத்தார். “இந்தா எடுத்துக்கொள் ஒரு லட்சம். இனிமேலாவது நன்றாக இரு” என்று கொடுத்தார். ஒரு லட்சம் நாலு நாள் கழித்து காலை நேரத்தில் அதே பிச்சைக்காரனின் குரல் “அம்மா அன்னபூரணி, அஞ்சு நாளா பட்டினிம்மா தருமம் பண்ணுங்க. பகவான் உங்களுக்கு அள்ளி அள்ளிக் குடுப்பாரு. நீங்க கொஞ்சம் கிள்ளிக் கிள்ளாயவது குடுங்க தாயி!”.

பணக்காரர் கதவைத் திறந்து பார்த்தார். அவனேதான். “என்னப்பா ஒரு லட்சரூபா குடுத்தேனே அதை என்ன செய்தே?” மறுபடியும் பிச்சை எடுக்கறியே?” என்று பதறினார்.

அவன் எந்த பதற்றமும் இல்லாமல் பதில் சொன்னான். “நீங்க குடுத்த பணம், வராம வந்த மகாலட்சுமி ஆச்சே! வீணாக்குவேனுங்களா? இதோ பாருங்க தங்கத்திலே திருவோடு செஞ்சிட்டேன்”.

மூடி வைத்திருந்த திருவோட்டை எடுத்துக்காட்டினான். பிச்சைப் பாத்திரம் தங்கமுலாமிட்டதாக தகதகத்தது.

இவன் பிச்சை எடுப்பதற்கென்றே பிறந்தவன் திருந்தமாட்டான். புதுக்கோடீஸ்வரரின் ஒரு லட்சம் பாழ்!

பால் வியாபாரியிடம் வீட்டுக்காரர் சொன்னார், “பாலில் நீர் கலந்து விற்கிறியே, நீ நரகத்துக்குத்தான் போகணும். நல்ல பாலா தந்தா சொர்கத்துக்குப் போகலாம். எங்கே போக விருப்பம்? நரகமா? சொர்க்கமா?” அதற்குப் பால் வியாபாரம் நல்ல நடக்குமோ அங்கபோக வேண்டியதுதான்”
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...



“பாத்திரம் அறிந்து பிச்சை இடு கோத்திரம் அறிந்து பெண்ணை எடு”

என்பது நம்மிடையே அடிக்கடி பேசப்படும் பழமொழி.

பிச்சை போடும் போது பாத்திரத்தைப் பார்க்க முடியுமா? அதற்கேற்ப பிச்சை தரத்தான் இயலுமா? தகரம், அலுமனியம், எவர்சில்வர் என்று வேறுபாடுகாட்டி ஈந்திடத்தான் முடியுமா?

அதுவல்ல தாத்பரியம். “பாத்திரம்” என்பது பிச்சை எடுப்பவராகிய பாத்திரம். அவருடைய தன்மை அதற்கேற்ப தருதல்.

தமிழில் “ஈ, தா, கொடு” என்று ஊன்று சொற்கள் உள்ளன. மூன்றுமே ஒர பொருள் தான் எனினும் சிறிய வேறுபாடு அவற்றிடையே உண்டு. இழிந்தார்க்கு ஈதல்; சமமானவர்களுக்குத் தருதல்; உயர்ந்தவர்க்கு கொடுத்தல்.

“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்பது திருக்குறள்.

வந்திருப்பவர்க்கு ஏற்ப வழங்குல் வேண்டும் என்பது தான் பழமொழியின் உட்குறிப்பு.

“கோத்திரம் அறிந்து பெண்ணை எடு” என்பதும் “தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டுவதில்லை” என்பதும் ஒரு பொருளையே தரக்கூடியன.

கைகேயி பற்றி ஒரு கதை சொல்வதுண்டு. “இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரத்தைக்கேட்கிறாய். அது நிறைவேறினால் உன் மங்கல நாணைத்தான் பரதனுக்கு பட்டாபிஷேகக் கங்கனக் கயிறாக் கட்ட வேண்டும்.” என்று தசரதன் சொல்லியும் கேட்காமல் வரத்தை வற்புறுத்தினாள். “மகன் பரதன் ஆளவேண்டும், இராமன் வனவாசம் செல்லவேண்டும்”என்கிறாள் கைகேயி.

இந்தப் பிடிவாளதம் தாய்வழிவந்தது. இதற்கொரு கதை கைகேயியின் தந்தை ஈ, எறும்பு முதல் அனைத்து ஜீவ ராசிகளின் மொழி தெரிந்தவன் அவை பேசுவதை இவன் புரிந்துகொள்ள முடியும். அந்த வித்தையைக் கற்று வைத்திருந்தான்.

அவனும் க்கையேயின் தாயாகிய அரசியும் அந்தப்புரத்தனிமையில் இருக்கும்போது, எதிர் எதர் வந்த இரு எறும்புகள் பேசிக் கொள்வதைக் கேட்டுச் சிரித்தான்.

சிரிப்புக்குக் காரணம் கேட்டாள் அரசி. மன்னனோ அதைச் சொல்ல மறுத்தான். “சொல்லக்கூடாது. மீறி அவற்றின்பேச்சை யாராடமாவது கூறினால் மரணம் ஏற்படும் என்று இந்தக்கலையைக் கற்பித்த குரு சொல்லியிருக்கிறார்” என்றும் சொன்னான்.

அரசியோ, சொல்லியே ஆக வேண்டும் என்றும் அரசன் செத்தாலும பரவாயில்லை என்றும் கூறிப் பிடிவாதம் பிடித்தாள். தான் இறந்தாலும் கவலைப்படாத மனைவியோடு கூடி வாழ்வது பயனில்லாத ஒன்று என்று கருதிய மன்னன் அரசிய அடித்து விரட்டினான். இப்படிக் கூறுகிறது அந்தக் கதை.

இதன் மூலம் தாயின் பிடிவாதம் கணவனைப் பொருட்படுத்தாத தன்மையும் கைகேயியிடம் அமைந்திருந்தது. என்று அறிகிறோம். இதைத்தான் கோத்திரமறிந்து பெண்ணெடுக்கக் கூறும் பழமழியும் தெரிவிக்கிறது.

வாழ்வில் இதை அன்றாடம் சந்திக்கிறோம்.

திருக்குறள் நெறியில் வாழவிரும்பும் என்னை ஒருநாள் ஒருவர் காரணமின்றி அடித்துவிட்டார். அதோடு நில்லாமல் “போடா பொறுக்கி” என்று திட்டியும் தீர்த்து விட்டார். பகல் முழுவதும் இதே சிந்தனை. இந்தப் பிரச்சனைக்குத் திருவள்ளுவர் சொல்லும் தீர்வுதான் என்ன? என்று எண்ணியபோது.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்’

என்ற திருக்குறள்தான் நினைவு வந்தது. அப்படியே நடப்போம் என்று முடிவெடுத்தேன். அன்று மாலையில் கடை வீதிக்குச் சென்றபோது, என்னை அடித்தவரை வேறொருவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியபடி வாய்க்கு வந்தவாறு திட்டிக் கொண்டிருந்தார்.

சற்றே மனம் சந்தோஷப்பட்டாலும், தீமை செய்தவர் இப்போது அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறார். இந்த நேரத்தில், குறள்நெறிப்படி தீமை செய்தவர்க்கு நன்மை செய்து தண்டித்தால், தீமை செய்தவர் நானித் தலைகுனிவார் என்று எண்ணி, என்னை அடித்தவர்க்கு உதவ முற்பட்டேன்.

துண்டைக் கழுத்தில்போட்டு முறுக்கிக் கொண்டிருந்தவரை விசாரித்தேன். பத்து ரூபாய் வாங்கி பதினொரு மாதம் ஆகிவிட்டதாகவும் கேட்டால் “உனக்கு முதி குடுத்தவனெல்லாம் சும்மா இருக்கான் உனக்கென்ன அவசரம்” எனக் கேட்பதாகவும் சொன்னான். “பத்து ரூபாய்க்காக இப்படி அவமானப்படுத்தலாமா? அதுவும் நடு வீதியில்?” என்றேன். “அப்ப அந்தப் பத்து ரூபாயை நீ கொடு” என்றார்.

இது நல்ல சந்தர்ப்பம் என்பது மனம். குறள் நெறியைக் கடைப்பிடிப்பவனல்லவா நான்? உடனே பத்து ரூபாயைக் கொடுத்தேன். என்ன நினைத்து? காலையில் நம்மிடம் அடிப்பவன் மாலையில் நமக்காகப் பத்து ரூபாய கொடுத்து அவமானத்திலிருந்து காப்பாற்றுகிறானே என்று நானித்தலை குனிவான். திருக்குறள் நெறிப்படி இவனுக்கு இதுதான் தண்டனை.

ஆயுள் முழுவதும் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் தான் செய்த தீமையையும் நான் செய்த நன்மையையும் நினைத்து நினைத்து வெட்கப்பட்டுத் தலை குனிவானே! ஆயுள் தண்டனை அல்லவா இது? இவ்வாறெல்லாம் நினைத்துத்தான் பத்து ரூபாயை கொடுத்து அவனை அவமானத்திலிருந்து மீட்டேன்.

ஆனால் நடந்ததோ வேறு.

கடன் தந்தவன் என்னிடம் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றவுடன், இவன் தன் கூட்டாளியிடம் சொன்னான் “அட, இப்படிப்பட்ட ஆள் இருக்கும்போது, எதற்காகக் கண்டவனிடமும் கடன் வாங்கி அவமானப்பட வேண்டும்? இவரை காலையிலே ஓர் அறை கொடுத்தால் மாலையிலேயே பத்து ரூபா கொடுக்கிறாரே! அப்பப்பத் தேவைக்கேற்றபடி இவருக்கு அறைய விட்டு வாங்கிட வேண்டியதுதான். 50 ரூ வேணும்னா 5 அறை கொடுக்கணும். அவ்வளுவுதான். இவ்வளவு நாளா இந்த இளிச்சவாயனைத் தெரிஞ்சிக்காம இருந்திட்டோமே”.

இவ்வாறு அவன் பேசியதைக் கேட்டதும் என சித்தம் கலங்கியது. “திருவள்ளுவரே உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தால் எனக்கு இளித்தவாயன் பட்டந்தானா?” என்று புலம்பினேன். வீடு சென்று திருக்குறளைப் புரட்டினேன்.

பொறித்தட்டினாற் போன்று புலப்பட்டது. ஒரு திருக்குறள் தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் காணப்படும் குறள்.

‘நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை’

எல்லார்க்கும் நல்லது செய்து ஏமாந்து விடாதே! அவரவர் பண்புக்கேறப நடந்து கொள்!

தீமைக்குப் பதில் நன்மை செய்யும்போது திருந்துபவர்க்கு, மனம் வருந்துவோர்க்கு மேற்கொண்டு தீமை பக்கம் சாயாதவர்க்குத் தான் நன்மை செய்ய வேண்டும்.

திருவள்ளுவர் அறிவுரை மட்டுமா சொல்கிறார். எச்சரிக்கையும் செய்கிறார்.

பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதும் இதுதான். பிச்சை எடுப்பவன் போல வந்து வீட்டை நோட்டம் விட்டுத் திருடுகிறவனும் உண்டே!

ஆசிரியர்களாகிய நாங்கள் மாணவர்களைத் தரம்பிரித்துப் பாடம் நடத்துவோம். 80க்கு மேல் மதிப்பெண்பெறும் மாணவர்களுக்கு அவ்வப்போஉ சந்தேகங்களைத்தெளிவுபடுத்தினாலே போதும். அழகாகவும் தெளிவாகவும் பதில் எழுதும் முறையைத் தெரிவித்தால் அதுவே போதும். அவன் 100க்கு 100 வாங்குவான்.

50க்கு மேல் 60,70 என்று மதிப்பெண் பெறுபவனைச் சற்றுக் கவனிகவேண்டும். அவனுகு எங்கோ ஒரு சறுகல் இருக்கிறது. இலக்கணத்தில் கவனிமில்லாமல் இருக்கலாம். எழுத்துப் பிழைகள் இருந்தாலும் இருக்கலாம். அதைக் கவனித்தது அப்பாடத்தை மட்டும் போதித்து இட்டால் போதும் முதல் தர மாணவனாய் மாறி விடுவான்.

25 முதல் 50 வரை மார்க்கு வாங்கும் மாணவனுகுத்தேர்வு நேரத்தில் சில நல்ல அறிவுரைகளை அளித்து வைக்கலாம்.

0 முதல் 10 வரை மதிப்பெண்பெறு விட்டு பூஜ்யம் மதிப்பெண் வாங்கிய நண்பர்களோடு பள்ளி முடிந்து செல்லும் போது “ஓ.. போடு” என்று உரத்த குரலில் பாடிக்கொண்டு செல்லும் மாணவர்களுக்காகப் பாடுபட நினைத்தால், அவனுக்காக ஒதுக்கும் அந்த நேரம் வீண்நேரம்.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்த ஒருவர்,

‘சொலப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோலக்
கொல்லப் பயன்படும் கீழ்’

“ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்” என்று நம்முன்னோர் சுருக்கமாக்கினர்.

கசக்கிப் பிழிந்தால்தானே கருப்பஞ்சாறு கிடைக்கிறது. எடுத்து அழுத்திப் பிழிந்ததும் எலுமிச்சைச்சாறு கிடைத்துவிடுமே.

கருப்பஞ்சாறு வேண்டுமானால் கரும்பை ஆலையிலிட்டுக் கசக்கியே ஆகவேண்டும்.

“நல்ல மாட்டுக்கு ஒரு சுடு” என்பதும் நன்மொழிதான். 5 கோடி லாட்டரி அடித்தது ஒருவருக்கு. அவர் வீட்டுக்கு வழக்கமாக வரும் பிச்சைக்காரன் அன்றும் வந்தான். புதுப்பணக்காரருக்கு ரொம்ப நாளாகவே அவன் மீது ஓர் இரக்கம் உண்டு. இப்போதோ அவரிடம் நிறைய பணம் இருக்கிறது.

பிச்சைக்காரனை அழைத்தார். “இந்தா எடுத்துக்கொள் ஒரு லட்சம். இனிமேலாவது நன்றாக இரு” என்று கொடுத்தார். ஒரு லட்சம் நாலு நாள் கழித்து காலை நேரத்தில் அதே பிச்சைக்காரனின் குரல் “அம்மா அன்னபூரணி, அஞ்சு நாளா பட்டினிம்மா தருமம் பண்ணுங்க. பகவான் உங்களுக்கு அள்ளி அள்ளிக் குடுப்பாரு. நீங்க கொஞ்சம் கிள்ளிக் கிள்ளாயவது குடுங்க தாயி!”.

பணக்காரர் கதவைத் திறந்து பார்த்தார். அவனேதான். “என்னப்பா ஒரு லட்சரூபா குடுத்தேனே அதை என்ன செய்தே?” மறுபடியும் பிச்சை எடுக்கறியே?” என்று பதறினார்.

அவன் எந்த பதற்றமும் இல்லாமல் பதில் சொன்னான். “நீங்க குடுத்த பணம், வராம வந்த மகாலட்சுமி ஆச்சே! வீணாக்குவேனுங்களா? இதோ பாருங்க தங்கத்திலே திருவோடு செஞ்சிட்டேன்”.

மூடி வைத்திருந்த திருவோட்டை எடுத்துக்காட்டினான். பிச்சைப் பாத்திரம் தங்கமுலாமிட்டதாக தகதகத்தது.

இவன் பிச்சை எடுப்பதற்கென்றே பிறந்தவன் திருந்தமாட்டான். புதுக்கோடீஸ்வரரின் ஒரு லட்சம் பாழ்!

பால் வியாபாரியிடம் வீட்டுக்காரர் சொன்னார், “பாலில் நீர் கலந்து விற்கிறியே, நீ நரகத்துக்குத்தான் போகணும். நல்ல பாலா தந்தா சொர்கத்துக்குப் போகலாம். எங்கே போக விருப்பம்? நரகமா? சொர்க்கமா?” அதற்குப் பால் வியாபாரம் நல்ல நடக்குமோ அங்கபோக வேண்டியதுதான்”
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


அடர்ந்த காடு. அடர்ந்திருந்தால்தானே காடு?

சிங்கராஜா பவனிவரப் புறப்பட்டார். ராஜா என்றால் ‘கைத்தடி’ வேண்டுமே? ஒரு கரடியும், ஒரு நரியும் ‘கைத்தடிகளாக’ உடன் புறப்பட்டன.

எதிரே ஒரு மான் வந்தது. சிங்கம் அதனை வேட்டையாடிக் கொன்றது. கரடியைப் பங்கு பிரிக்கச் சொன்னது.

கரடி, மானின் தோலைக் கிழித்து தசை வேறு, எலும்பு வேறாகப் பக்குவம் செய்து சரி யாக மூன்று பாகங்களாகப் பிரித்து வைத்தது.

தசையை மூன்று குவியலாக்கியது. மூளையை மூன்று பங்காக ஆக்கி மூன்று குவியலாக்கியது. மூளையை மூன்று பங்காக்கித் தனித்தனியே பிரித்தது. தொடைக்கறியா? மூன்று பங்கு. நெஞ்சு எலும்பா? மூன்று பங்கு. என்று மிகச் சரியாக மூன்று பங்காக்கி வைத்தது.

இறுதியாக ஒவ்வொரு கூறையும் தனித்தனியே கையில் தூக்கிப் பார்த்து, சரியான எடையில் ஒவ்வொரு பங்கும் இருப்பதை உறுதிசெய்து கொண்டது. கரடிபோல இல்லவே இல்லை. ஒரு நேர்மையான நீதிபதி யாகவே செயல்பட்டது.

வேலை முடித்து சிங்கத்தைப் பார்த்து, ‘மகாராஜா சரியாகப் பங்கு பிரித்து விட்டேன்’ என்று, சரியாகப் பணியாற்றியதற்கான பாராட்டை எதிர்பார்த்து, சிங்கராஜா முகத்தை உன்னிப்பாகப் பார்த்தது.

சிங்கராஜா முகம் கடுப்பாகியது. கரடியைப் பார்த்து கர்ஜித்தது ‘ம்… சரியாகப் பிரி’

‘மகாராஜா சரியாகத்தானே பிரித்துள்ளேன்’

‘ம்… எதிர்த்தா பேசுகிறாய்? சரியாகப் பிரி’

கரடி மறுமுறையும் ஒவ்வொரு கூறையும் சரிபார்த்தது.

‘எல்லா வகைக் கறிகளும் ஒவ்வொரு பங்கிலும் இருக்குமாறு பிரித்துள்ளேன். ஒவ்வொரு பங்கும் சம எடையில் இருக்கிறது. இதுதானே சரியாகப் பிரிக்கும் முறை அரசே!’ என்றது.

சிங்கம் சீறிப்பாய்ந்து ஒரே அறையில் கரடியைக் கொன்றது.

‘பங்கு பிரித்திருக்கிறானாம் பங்கு! நரி, நீ பங்கு பிரி’ கர்ஜனைக் குரலில் கட்டளை யிட்டது.

நரி எல்லாக் கறிகளையும் ஒரு பக்கமாக மலைபோல் குவித்தது. ஒரே ஒரு எலும்புத் துண்டை மட்டும் இன்னொருபுறம் வைத்தது.

‘மகாராஜாவே! எதிர் எவரும் இல்லாத ஏந்தலே! நீதிக்குத் தலைவணங்கும் நேர்மையின் சின்னமே! தங்களின் மேலான உத்தரவின்படி இரு பங்குகளாகப் பிரித்துள்ளேன். அதோ அந்த மலை போன்ற பங்கு தங்களுடையது. இந்த எலும்புப் பங்கு என்னுடையது. பிரித்த விதம் சரிதானா? அல்லது என் எலும்புப் பங்கைப் பாதியாகக் குறைத்து அதையும் தங்கள் பங்கில் சேர்த்து விடவா?’

சிங்கத்திடம் தண்டனிட்டு, இவ்வாறு கூறியது.

சிங்க மகாராஜா புளகாங்கிதம் அடைந்து விட்டார் என்பதைப் பிடரிமயிர் கூட நிமிர்ந்து நிமிர்ந்து நின்று அடையாளம் காட்டியது. களிப்புற்ற சிங்கம் முழங்கியது.

“நீதான் என் அணுக்கத் தொண்டனாய் இருக்கும் முழுத் தகுதியையும் பெற்றுள்ளாய். சபாஷ்! இன்றுமுதல் நீதான் மந்திரி! அதுசரி, இவ்வளவு சரியாகப் பங்குபிரிக்க எப்படிக் கற்றுக்கொண்டாய்?’

நரி கைகட்டியபடியே சொல்லிற்று. ‘கரடியைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன் மகாபிரபு’

இது ஒரு கதைதான். கருத்து என்ன?

‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ இது பாரதியாரின் சத்தியவாக்கு.

மன்னன் எதை விரும்புகிறானோ, மக்கள் அதையே நிறைவேற்றுவார்கள். ‘தலைபோன வழியில் வால் போகும்’ என்பது முதுமொழி.

குடும்பத் தலைவனின் நடத்தை குழந்தை களின் நடத்தை, இதற்கு யாரைப் போய்க் கேட்க வேண்டும்?

நண்பனின் மனநிலைக்கேற்ப நாம் நடப்பதில்லையா? அப்படியானால் நமக் கென்று தனித்தன்மையே கிடையாதா? என்றால் உண்டு.

தன் மனநிலைக்கேற்ப மற்றவர்களை நடத்தும் மனிதரும், மற்றவர் மனநிலைக்கேற்ப தான் நடந்து கொள்ளும் மனிதரும் என்று இருவேறு தன்மைகொண்ட மனிதர்கள் இருக் கின்றனர். ஒருவரிடமே இருவேறு மனநிலை களும் சமயத்துக்கேற்ப அமைவதும் உண்டு.

நண்பனின் சோகத்தில் தானும் பங்கேற்று துயரமுகம் கொள்பவரும் உண்டு.

நண்பனின் சோகத்தைத் தன் இயல் பினால் மாற்றி மகிழ்விப்பவர்களும் உண்டு.

‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது கலித்தொகை. பாடு என்பது தன்மை. பிறர் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகு தலே பண்பாகும். இது கலித்தொகை என்ற சங்கநூல் காட்டும் பண்புக்கான இலக்கணம்.
பிறரின் தன்மைக்கேற்ப நாம் நடந்து நடந்து, நமக்குள் இருக்கும் நம்மை இழந்து விடலாமா?

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், ‘பீர்பால்! நம் தலைநகரில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’ என்று கேட்டார்.

ஓர் ஆட்சித் தலைவன் கவலைப்பட வேண்டிய விஷயமா இது?

எத்தனை ஏழைகள்? என்ன பரிகாரம்? குடிநீர் தர வழி? சாலை களைச் செப்பனிட என்ன செய்ய லாம்? இவ்வழியில் சிந்திக்க வேண்டிய தலைவன் பொழுது போக்குக் கேள்வி கேட்டு விளையாடுகிறான். என்ன செய்வது? அவன் மன்னன். பீர்பால் அவனுக்குக் கீழ் பணிபுரிபவர்.

உண்மையைச் சொன்னால் உதைவிழும். அறிவாளிகள் நேரடியாக நியாயம் பேசி நிம்மதியை இழந்துவிட மாட்டார்கள்.

பீர்பால் சிந்தனை செய்வதுபோல் பாவித்து, கூட்டல், கழித்தலை எல்லாம் விரலிலேயே கணக்கிட்டுக் கண்டுபிடித்தது போல மன்னனின் வினாவுக்கு விடை பகர்ந்தார்.

‘பாதுஷா நம் நகரில் 23,456 காக்கைகள் இருக்கின்றன’ என்றார்.

மன்னருக்கு சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகப்பட்டால்தானே அவர் மன்னர்.

‘சரி எண்ணிப்பார்க்கும்போது நூறு இருநூறு கூடுதலாக இருந்தால்?’

‘கூடுதலாக இருந்தால் அது என் பிழையல்ல பாதுஷா. வெளியூர் காக்கைகள் விருந்தாளியாக வந்திருக்கும்.’

‘குறைந்தால்?”

‘இந்த ஊர் காக்கைகள் வெளியூருக்கு விருந்தாளியாகச் சென்றிருக்கும் பாதுஷா’.

மன்னர் மனம் மகிழ்ந்து பரிசளித்ததாகக் கதை சொல்கிறது. வெட்டித்தனமாகக் கேள்வி கேட்ட மன்னருக்கு விளையாட்டுத்தனமாக பதிலளிக்கும் பீர்பாலைக் கண்டு நாமும் மகிழ்கிறோம்.

இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக அணுகுகிறவர்களை நாமும் அறிவுப்பூர்வமாகவே சந்திக்கலாம்.

ஒளியார்முன் ஒள்ளியராதல் வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்.

“அறிவுடையார் முன் அறிவுடைய வனாகவும், முட்டாள் முன் அவனைவிட முட்டாள் போலவும் நடந்துகொள்” என்பது வள்ளுவர் காட்டும் நெறி.

ஒருமுறை சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். நண்பர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“டேய், அமெரிக்க ஜனாதிபதி யார்னு தெரியுமா?” என்று ஒருவர் கேட்டார். கேட்கப் பட்டவருக்கு பதில் தெரியவில்லை. ஆனால், அதற்காக அவர் கவலைப்படவில்லை.

அவர் இவரிடம் கேட்டார், “நம்ம தெருவில கந்தசாமி அண்ணன் போனவாரம் செத்தாரே, அவங்க அப்பா பேர் உனக்குத் தெரியுமா?”

இவருக்கோ தெரியவில்லை. இவரை விட 50 வயது கூடுதலாக இருந்த கந்தசாமியின் தந்தை பெயர் தெரியாதது அறிவில் குறைபாடு ஆகுமா?

கந்தசாமியைத் தெரிந்துவைத்திருப்பதே அந்தத் தெருவில் அடுத்த வீட்டில் வாழ்ந்தவர் என்பதால்தான்! அவருடைய தந்தை பெயர் தெரியாதது தவறா? அவர் என்ன ஜவகர்லால் நேருவா, தெரிந்து வைத்திருக்க?

“கந்தசாமி தந்தையின் பெயர் எனக்குத் தெரியாது” என்றார்.

“அடுத்த வீட்டுக்காரரையே தெரியாத நீ அமரிக்க ஜனாதிபதி பற்றிக் கேக்கறியே, உனக்கு வெட்கமாக இல்லையா?” என்றார் அமெரிக்க ஜனாதிபதி பெயர் தெரியாதவர்.

நான் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். அந்த அறியாதவனிடம் போய், இவன் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாமா? அறியாதவன் இப்போது அறிவாளி யைப் போல் அறிந்தவனை இகழ்ந்து பேசுகிறான்.

‘வெளியார் முன் வான்சுதை வண்ணங் கொளல்’ என்று வள்ளுவர் கூறுவதைப் படித்தி ருந்தால் அறியாதவனிடம் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டிருக்க மாட்டான்.

‘பாடறிந்து ஒழுகும் பண்பு’ நமக்கு வேண்டும். இல்லையேல் நமக்குத்தான் அவமானம் வந்து சேரும்.

விபீஷணன் கும்பகர்ணனிடம் தன்னைப் போலவே இராமனிடம் வந்து சேர்ந்து கொள்ள வேண்டுகிறான். கும்பகர்ணன் விபீஷணன் கூற்றை மறுக்கிறான். ‘இராவணன் தீமை செய்கிறான். நான் தடுக்க முயல்கிறேன். முடியவில்லையென்றால் அவனுக்கு முன் சாகவே விரும்புகிறேன்’ என்கிறான் கும்பகர்ணன்.

…………………………….
திருத்தலாம் ஆகில் நன்றே
திருத்துதல் தீராதாயின்
………………………………
……………………………..
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா
என்பது கும்பகர்ணனின் பேச்சாகக் கம்பன் தருவது.
இராவணன் தீமையைத் திருத்த அறிவுரை தந்தான் கும்பகர்ணன். இராவணன் இசைய வில்லை. என்ன செய்கிறான் கும்பகர்ணன்? தீமைக்கும் உடன்படாமல் போரில் சாவதற்காக வருகிறான். செத்தாலாவது இராவணன் திருந்துவான் என்று நினைக்கிறான்.
தன் சொந்த இயல்பை இழக்காமலே அண்ணன் செய்யும் தீங்கையும் சுட்டிவிட்டு இறக்கும் கும்பகர்ணன் நமக்கு ஒரு பாடமாக விளங்கும் நல்ல படம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


அடர்ந்த காடு. அடர்ந்திருந்தால்தானே காடு?

சிங்கராஜா பவனிவரப் புறப்பட்டார். ராஜா என்றால் ‘கைத்தடி’ வேண்டுமே? ஒரு கரடியும், ஒரு நரியும் ‘கைத்தடிகளாக’ உடன் புறப்பட்டன.

எதிரே ஒரு மான் வந்தது. சிங்கம் அதனை வேட்டையாடிக் கொன்றது. கரடியைப் பங்கு பிரிக்கச் சொன்னது.

கரடி, மானின் தோலைக் கிழித்து தசை வேறு, எலும்பு வேறாகப் பக்குவம் செய்து சரி யாக மூன்று பாகங்களாகப் பிரித்து வைத்தது.

தசையை மூன்று குவியலாக்கியது. மூளையை மூன்று பங்காக ஆக்கி மூன்று குவியலாக்கியது. மூளையை மூன்று பங்காக்கித் தனித்தனியே பிரித்தது. தொடைக்கறியா? மூன்று பங்கு. நெஞ்சு எலும்பா? மூன்று பங்கு. என்று மிகச் சரியாக மூன்று பங்காக்கி வைத்தது.

இறுதியாக ஒவ்வொரு கூறையும் தனித்தனியே கையில் தூக்கிப் பார்த்து, சரியான எடையில் ஒவ்வொரு பங்கும் இருப்பதை உறுதிசெய்து கொண்டது. கரடிபோல இல்லவே இல்லை. ஒரு நேர்மையான நீதிபதி யாகவே செயல்பட்டது.

வேலை முடித்து சிங்கத்தைப் பார்த்து, ‘மகாராஜா சரியாகப் பங்கு பிரித்து விட்டேன்’ என்று, சரியாகப் பணியாற்றியதற்கான பாராட்டை எதிர்பார்த்து, சிங்கராஜா முகத்தை உன்னிப்பாகப் பார்த்தது.

சிங்கராஜா முகம் கடுப்பாகியது. கரடியைப் பார்த்து கர்ஜித்தது ‘ம்… சரியாகப் பிரி’

‘மகாராஜா சரியாகத்தானே பிரித்துள்ளேன்’

‘ம்… எதிர்த்தா பேசுகிறாய்? சரியாகப் பிரி’

கரடி மறுமுறையும் ஒவ்வொரு கூறையும் சரிபார்த்தது.

‘எல்லா வகைக் கறிகளும் ஒவ்வொரு பங்கிலும் இருக்குமாறு பிரித்துள்ளேன். ஒவ்வொரு பங்கும் சம எடையில் இருக்கிறது. இதுதானே சரியாகப் பிரிக்கும் முறை அரசே!’ என்றது.

சிங்கம் சீறிப்பாய்ந்து ஒரே அறையில் கரடியைக் கொன்றது.

‘பங்கு பிரித்திருக்கிறானாம் பங்கு! நரி, நீ பங்கு பிரி’ கர்ஜனைக் குரலில் கட்டளை யிட்டது.

நரி எல்லாக் கறிகளையும் ஒரு பக்கமாக மலைபோல் குவித்தது. ஒரே ஒரு எலும்புத் துண்டை மட்டும் இன்னொருபுறம் வைத்தது.

‘மகாராஜாவே! எதிர் எவரும் இல்லாத ஏந்தலே! நீதிக்குத் தலைவணங்கும் நேர்மையின் சின்னமே! தங்களின் மேலான உத்தரவின்படி இரு பங்குகளாகப் பிரித்துள்ளேன். அதோ அந்த மலை போன்ற பங்கு தங்களுடையது. இந்த எலும்புப் பங்கு என்னுடையது. பிரித்த விதம் சரிதானா? அல்லது என் எலும்புப் பங்கைப் பாதியாகக் குறைத்து அதையும் தங்கள் பங்கில் சேர்த்து விடவா?’

சிங்கத்திடம் தண்டனிட்டு, இவ்வாறு கூறியது.

சிங்க மகாராஜா புளகாங்கிதம் அடைந்து விட்டார் என்பதைப் பிடரிமயிர் கூட நிமிர்ந்து நிமிர்ந்து நின்று அடையாளம் காட்டியது. களிப்புற்ற சிங்கம் முழங்கியது.

“நீதான் என் அணுக்கத் தொண்டனாய் இருக்கும் முழுத் தகுதியையும் பெற்றுள்ளாய். சபாஷ்! இன்றுமுதல் நீதான் மந்திரி! அதுசரி, இவ்வளவு சரியாகப் பங்குபிரிக்க எப்படிக் கற்றுக்கொண்டாய்?’

நரி கைகட்டியபடியே சொல்லிற்று. ‘கரடியைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன் மகாபிரபு’

இது ஒரு கதைதான். கருத்து என்ன?

‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ இது பாரதியாரின் சத்தியவாக்கு.

மன்னன் எதை விரும்புகிறானோ, மக்கள் அதையே நிறைவேற்றுவார்கள். ‘தலைபோன வழியில் வால் போகும்’ என்பது முதுமொழி.

குடும்பத் தலைவனின் நடத்தை குழந்தை களின் நடத்தை, இதற்கு யாரைப் போய்க் கேட்க வேண்டும்?

நண்பனின் மனநிலைக்கேற்ப நாம் நடப்பதில்லையா? அப்படியானால் நமக் கென்று தனித்தன்மையே கிடையாதா? என்றால் உண்டு.

தன் மனநிலைக்கேற்ப மற்றவர்களை நடத்தும் மனிதரும், மற்றவர் மனநிலைக்கேற்ப தான் நடந்து கொள்ளும் மனிதரும் என்று இருவேறு தன்மைகொண்ட மனிதர்கள் இருக் கின்றனர். ஒருவரிடமே இருவேறு மனநிலை களும் சமயத்துக்கேற்ப அமைவதும் உண்டு.

நண்பனின் சோகத்தில் தானும் பங்கேற்று துயரமுகம் கொள்பவரும் உண்டு.

நண்பனின் சோகத்தைத் தன் இயல் பினால் மாற்றி மகிழ்விப்பவர்களும் உண்டு.

‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது கலித்தொகை. பாடு என்பது தன்மை. பிறர் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகு தலே பண்பாகும். இது கலித்தொகை என்ற சங்கநூல் காட்டும் பண்புக்கான இலக்கணம்.
பிறரின் தன்மைக்கேற்ப நாம் நடந்து நடந்து, நமக்குள் இருக்கும் நம்மை இழந்து விடலாமா?

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், ‘பீர்பால்! நம் தலைநகரில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’ என்று கேட்டார்.

ஓர் ஆட்சித் தலைவன் கவலைப்பட வேண்டிய விஷயமா இது?

எத்தனை ஏழைகள்? என்ன பரிகாரம்? குடிநீர் தர வழி? சாலை களைச் செப்பனிட என்ன செய்ய லாம்? இவ்வழியில் சிந்திக்க வேண்டிய தலைவன் பொழுது போக்குக் கேள்வி கேட்டு விளையாடுகிறான். என்ன செய்வது? அவன் மன்னன். பீர்பால் அவனுக்குக் கீழ் பணிபுரிபவர்.

உண்மையைச் சொன்னால் உதைவிழும். அறிவாளிகள் நேரடியாக நியாயம் பேசி நிம்மதியை இழந்துவிட மாட்டார்கள்.

பீர்பால் சிந்தனை செய்வதுபோல் பாவித்து, கூட்டல், கழித்தலை எல்லாம் விரலிலேயே கணக்கிட்டுக் கண்டுபிடித்தது போல மன்னனின் வினாவுக்கு விடை பகர்ந்தார்.

‘பாதுஷா நம் நகரில் 23,456 காக்கைகள் இருக்கின்றன’ என்றார்.

மன்னருக்கு சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகப்பட்டால்தானே அவர் மன்னர்.

‘சரி எண்ணிப்பார்க்கும்போது நூறு இருநூறு கூடுதலாக இருந்தால்?’

‘கூடுதலாக இருந்தால் அது என் பிழையல்ல பாதுஷா. வெளியூர் காக்கைகள் விருந்தாளியாக வந்திருக்கும்.’

‘குறைந்தால்?”

‘இந்த ஊர் காக்கைகள் வெளியூருக்கு விருந்தாளியாகச் சென்றிருக்கும் பாதுஷா’.

மன்னர் மனம் மகிழ்ந்து பரிசளித்ததாகக் கதை சொல்கிறது. வெட்டித்தனமாகக் கேள்வி கேட்ட மன்னருக்கு விளையாட்டுத்தனமாக பதிலளிக்கும் பீர்பாலைக் கண்டு நாமும் மகிழ்கிறோம்.

இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக அணுகுகிறவர்களை நாமும் அறிவுப்பூர்வமாகவே சந்திக்கலாம்.

ஒளியார்முன் ஒள்ளியராதல் வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்.

“அறிவுடையார் முன் அறிவுடைய வனாகவும், முட்டாள் முன் அவனைவிட முட்டாள் போலவும் நடந்துகொள்” என்பது வள்ளுவர் காட்டும் நெறி.

ஒருமுறை சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். நண்பர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“டேய், அமெரிக்க ஜனாதிபதி யார்னு தெரியுமா?” என்று ஒருவர் கேட்டார். கேட்கப் பட்டவருக்கு பதில் தெரியவில்லை. ஆனால், அதற்காக அவர் கவலைப்படவில்லை.

அவர் இவரிடம் கேட்டார், “நம்ம தெருவில கந்தசாமி அண்ணன் போனவாரம் செத்தாரே, அவங்க அப்பா பேர் உனக்குத் தெரியுமா?”

இவருக்கோ தெரியவில்லை. இவரை விட 50 வயது கூடுதலாக இருந்த கந்தசாமியின் தந்தை பெயர் தெரியாதது அறிவில் குறைபாடு ஆகுமா?

கந்தசாமியைத் தெரிந்துவைத்திருப்பதே அந்தத் தெருவில் அடுத்த வீட்டில் வாழ்ந்தவர் என்பதால்தான்! அவருடைய தந்தை பெயர் தெரியாதது தவறா? அவர் என்ன ஜவகர்லால் நேருவா, தெரிந்து வைத்திருக்க?

“கந்தசாமி தந்தையின் பெயர் எனக்குத் தெரியாது” என்றார்.

“அடுத்த வீட்டுக்காரரையே தெரியாத நீ அமரிக்க ஜனாதிபதி பற்றிக் கேக்கறியே, உனக்கு வெட்கமாக இல்லையா?” என்றார் அமெரிக்க ஜனாதிபதி பெயர் தெரியாதவர்.

நான் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். அந்த அறியாதவனிடம் போய், இவன் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாமா? அறியாதவன் இப்போது அறிவாளி யைப் போல் அறிந்தவனை இகழ்ந்து பேசுகிறான்.

‘வெளியார் முன் வான்சுதை வண்ணங் கொளல்’ என்று வள்ளுவர் கூறுவதைப் படித்தி ருந்தால் அறியாதவனிடம் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டிருக்க மாட்டான்.

‘பாடறிந்து ஒழுகும் பண்பு’ நமக்கு வேண்டும். இல்லையேல் நமக்குத்தான் அவமானம் வந்து சேரும்.

விபீஷணன் கும்பகர்ணனிடம் தன்னைப் போலவே இராமனிடம் வந்து சேர்ந்து கொள்ள வேண்டுகிறான். கும்பகர்ணன் விபீஷணன் கூற்றை மறுக்கிறான். ‘இராவணன் தீமை செய்கிறான். நான் தடுக்க முயல்கிறேன். முடியவில்லையென்றால் அவனுக்கு முன் சாகவே விரும்புகிறேன்’ என்கிறான் கும்பகர்ணன்.

…………………………….
திருத்தலாம் ஆகில் நன்றே
திருத்துதல் தீராதாயின்
………………………………
……………………………..
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா
என்பது கும்பகர்ணனின் பேச்சாகக் கம்பன் தருவது.
இராவணன் தீமையைத் திருத்த அறிவுரை தந்தான் கும்பகர்ணன். இராவணன் இசைய வில்லை. என்ன செய்கிறான் கும்பகர்ணன்? தீமைக்கும் உடன்படாமல் போரில் சாவதற்காக வருகிறான். செத்தாலாவது இராவணன் திருந்துவான் என்று நினைக்கிறான்.
தன் சொந்த இயல்பை இழக்காமலே அண்ணன் செய்யும் தீங்கையும் சுட்டிவிட்டு இறக்கும் கும்பகர்ணன் நமக்கு ஒரு பாடமாக விளங்கும் நல்ல படம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.

வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.

விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.

விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு.

‘நாநலம் என்னும் நலனுடைமை’ என்பார் திருவள்ளுவர். நாவன்மையை நானிலம் போற்றும். நலனுடைமை என்று கூறுவதன் பொருள், நாநலம் ஒரு நல்ல உடைமை. அதாவது, நல்ல சொத்து. ஆகவே, கவனமாகக் காப்பாற்ற வேண்டும்.

ஒரு பட்டிமன்றத்தில் பேசச் சென்றிருந்தோம். அந்த மன்றத்தின் செயலாளர் வரவேற்புரையாற்றினார். பட்டிமன்றப் பொருள் பற்றி விஸ்தாரமாகப் பேசினார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் யாவரும் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர். இடையிடையே ‘இதையெல்லாம் நான் பேசக்கூடாது’ என்று வேறு சொல்லிக் கொண்டே பேசுகிறார். இதைப்பற்றியெல்லாம் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேசவேண்டும் என்று கட்டளை வேறு போடுகிறார். சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.

மேடைப் பேச்சாளர்கள் எதைப் பேச வேண்டும் என்று தொகுப்பதைவிட, எதைப் பேசக் கூடாது என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். அப்போதுதான் பேச்சுக்கு வரவேற்பு கிடைக்கும்.

வரவேற்புரை சொல்லு பவர் வந்தவர்களை வரவேற்பதோடு

நிறுத்திக் கொள்ளுவதுதான் முறையாகும். அதற்குமேல் பேசி னால், அது அதிகப்பிரசங்கித் தனமே தவிர வேறல்ல.

நன்றியுரை ஆற்ற வந்தவர், நன்றி சொல்லி முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி, சொற்பொழிவாற்றிய வர்களின் பேச்சை திறனாய்வு செய்தும், பேசியவர் மனம் நோகவும் பேசுவது முறையா காது. நன்றியுரை என்பது, பேசிய வரை மனங்குளிரச் செய்வதாக அமைய வேண்டும்.

துணைப் பேச்சாளர் சுருக்க மாகப் பேசுவதே நல்லது. முக்கிய மான பேச்சாளரின் நேரத்தையும் துணைப் பேச்சாளர் எடுத்துக் கொண்டு பேசிவிட்டால், முக்கியப் பேச்சாளர் யார் நேரத்தை எடுப்பது?

குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவு பெறாத கூட்டம், கேட்க வந்தவர்களுக்கு அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்கும். ‘இனி, இவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு வருவதில்லை’ என்ற முடிவோடு வீடு செல்வார்கள். இது தேவை தானா?

ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பேசுபவர்கள், அந்தத் தலைப்பில் மட்டும் செய்தி களைத் தரவேண்டும். தலைப்பை விடுத்து வேறு விஷயங்களைப் பேசினால், மக்கள் வெறுப் படைவார்கள்.

கூட்டத்துக்கு ஏற்பாடு செய் பவர்களும் தலைப்புக்கேற்ற சொற்பொழிவாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நகைச் சுவை மன்றத்தில் பேசுமாறு நகைச்சுவை உணர்வு இல்லாத வரை அழைத்தால், அவர் என்ன செய்வார்? பாவம். ஆழ்ந்த கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பேசுவார். நகைச்சுவையை எதிர் பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். அவரை அழைத்தது தவறு என்றால், பேசவந்தது இவர் செய்யும் மிகப்பெருந்தவறு.

கூட்டம் கேட்க வந்த சுவைஞர் களின் உள்ளத்தைப் புண்படுத் தாதவாறு பேச வேண்டும். அது தான் மேடை நாகரிகம்.

ஒருமுறை பெர்னாட்ஷா லண்டனில் பேசும் போது, வந்திருந்தவர்கள் சுவைத்துக் கேட்காததை உணர்ந்து, ‘கேட்க வந்தவர்களில் பாதிப்பேர் முட்டாள் கள்’ என்றார். கூட்டம் ஆவேசத்துடன் அவர் பேச்சை எதிர்த்து மன்னிப்புக் கேட்குமாறு முழக்கமிட்டது.

பெர்னாட்ஷாவோ அமைதி யாக, ‘வந்திருப்போரில் பாதிப் பேர் அறிவாளிகள்’ என்று கூறி னார். கூட்டம் அமைதியடைந்து ‘அப்படிச் சொல்லுங்கள்’ என்றது. முதலில் சொன்ன தற்கும் மறுபடி சொன்னதற்கும் வித்தி யாசமில்லை. எனினும் பேச்சு முறையில் நயம் இருந்ததால் தப்பித்தார்.

மேடையேறிப் பேசுவது தான் பேச்சு என்பதில்லை. மற்றவர் களுடன் உரையாடுவதும் ஒரு கலையே ஆகும்.

உரையாடுவதில்தான் எத்தனை வகைகள்? நம் மன நிலை தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்? இன்று நல்ல ஓய்வு; யாராவது வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து தயாராயிருக்கும் போது ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக்கொண்டு ‘இதோ வருகிறேன்’ என்று போய் விடுவோர் எத்தனை பேர்?

உடல்நிலை சரியில்லாமல் எப்போதோ இருந்ததை விசாரிக்க வந்ததாகக் கூறிக்கொண்டு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்துவிட்டு, ‘அப்படியே ஒரு 50 ரூபாய் இருந்தால் வாங்கிட்டு போகலாம்னு நினைச்சேன்’ என்பவர்கள் எத்தனை பேர்? உடல் நலம் கேட்கவா வந்தார்? இல்லை, கடன் வாங்கத்தான் வந்தார். உடல்நலம் விசாரிக்க வந்ததாக பொய் கூறுகிறார். அவரிடமும் பேசிக் கொண்டிருக் கத்தான் வேண்டியிருக்கிறது!

ஏதோ ஒரு விஷயத்தை நம்மிடம் தெரிந்துகொள்ள வந்தது போல் பாவனை! ஆனால் அவருக்குத் தெரிந்த ஒன்றை நம்மிடம் சொல்ல வந்ததே உண்மை!

சிலப்பதிகாரத்திலே பாண்டி யன் “ஏன் சார், கோவலனைக் கொன்றான்?” என்று கேட்டு அவசரமாகப் போகும் நம்மை வழியில் நிறுத்துவார். நாமும் நம் வேலையை விட்டு, அவருக்கு விளக்கம் கூற முற்பட்டு ‘‘கோவலன் மனைவி பேரு கண்ணகிங்க. அவன் அவளை அழைச்சிட்டு மதுரைக்கு வாணி கம் செய்ய வந்தாங்க’’ என்று ஆதியோடு அந்தமாகச் சிலப்பதி காரம் சொல்ல முற்படும் வேளையில்,

‘கொஞ்சம் இருங்க’ என்று நம்மை நிறுத்திவிட்டு, தான் மதுரைக்குப் போனவாரம் சென்றிருந்ததாகவும், அங்கு ஒரு மேடான பகுதியைப் பார்த்த தாகவும், விஷயந்தெரிந்தவர் களை விசாரித்ததாகவும், அங்கு தான் கோவலன் கொலை செய்யப்பட்டதாகவும், மன்னனே நேரில் வந்து அரிவாளால் வெட்டியதாகவும், நீதி தவறி மன்னன் வெட்டியதால் கோவ லன் புதைக்கப்பட்ட மேடு கரை யாமல் இன்றுவரை அப்படியே இருப்பதாகவும் எத்தனையோ

முறை எத்தனையோ பேர் கரைத்தும் மேடு கரையவில்லை என்றும், இந்த அதிசயத்தை வெளிநாட்டுக்காரர்கள் வந்து பார்த்துச் செல்வதாகவும், தான் அதைப்பார்த்து அதிசயித்து நின்றதாகவும் கூறுவார்.

அதோடு நிறுத்தமாட்டார். ‘நீங்கள் மதுரை போனதே இல்லையா? மேட்டைப் பார்க் கவே இல்லையா? அந்த மேட்டைக் கூடப் பார்க்காமல் மதுரை போய் வந்தால் என்ன பிரயோசனம் என்றும் வேறு கேட்டு நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துவார்.

இவர் நம்மிடமிருந்து சிலப்ப திகாரம் தெரிந்து கொள்ள வர வில்லை. தான் அறிந்து வைத்தி ருக்கும் ஒரு கட்டுக் கதையை நம் தலையில் கட்டப் பார்க்கிறார். அவர் நேரமும் பாழ், நம் நேரமும் வீண். வீண் கதை கேட்டதே மிச்சம்.

பொதுவான இடங்களில் நம் நாவுக்கு வேலை தராமல் காதைத் தீட்டிவைத்துக் கொண்டு அனுப வக் கொள்முதல் செய்வதுதான் அறிவுடைமை.

பேருந்துப் பயணம், ரயில் பயணம், நடைப்பயணம் ஆகிய பொழுதுகளில் நாவுக்கு வேலை தராமல் இருப்பது சாலச் சிறந்தது. வீண் விவாதங்கள் முட்டாளிடம் பேசி அதிமுட்டாளாதல் போன்ற அசிங்கங்களில் அகப்பட்டுக் கொள்ளும் அபாயம் நேரும்.

காதைத் திறந்துகொண்டு – அதாவது காதில் வாங்காமல் இருந்துவிடாமல் – கேள்வி ஞானம் பெறலாம்.

சங்கீதம் சொல்லித்தரும் சங்கீத வித்வான்களிடம் ஒரு பழக்கம் உண்டு. சிஷ்யனுக்கு அரங்கேற்ற அளவிற்குச் சொல்லிதந்த பிறகு அவனுக்கு விடைதரும் நேரத்தில், “அப்பா, எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் குடுத்துவிட்டேன். இனி உன் கேள்வி ஞானத்தால் சங்கீதத்தை விருத்தி செய்துகொள்” என்று கூறி அனுப்பி வைப்பார்.

“கேள்வி ஞானம்” என்பது அவ்வளவு முக்கியமானது. கேட்டுக்கேட்டே சிறந்த ஞானம் பெற்றவர்கள் உண்டு. உதாரணத் துக்குச் சில சொல்வேன்.

ஒரு இளைஞன் நன்றாகக் குடித்துவிட்டு, பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தான். தாறு மாறாகப் பேசுகிறான். பக்கத்தில் அமர்ந்திருப்போரிடமெல்லாம் தகராறு செய்கிறான். மூன்றுபேர் அமரும் இருக்கையில் அவன ருகே அமர்ந்து ஒவ்வொருவராக, அவன் தொல்லை பொறுக்க முடியாது எழுந்து சென்று விடுகின்றனர். மூவர் இருக்கையில் இப்போது அவன் மட்டும்.

பேருந்தில் நிறையப்பேர் அமர இடமின்றி நின்று வருகின்றனர். எனினும் அவன ருகில் அமர எவரும் விரும்ப வில்லை. நின்றாலும் பரவா யில்லை, அவன் அருகில் மட்டும் அமரக்கூடாது என்ற உறுதியில் எல்லோரும் உள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கிழவி (60 வயதுக்குமேல்) “என்னப்பா இப்படி பயப்படுறீங்க? என்னமோ கொஞ்சம் குடிச்சிட்டான் அவ் வளவுதானே! நம்ம புள்ளயா இருந்தா இப்படி ஒதுக்கு வோமா?” என்று கூறிக் கொண்டே அவனருகில் சென்று உட்கார்ந்தார்.

சற்று நேரம் அந்தக் கிழவியைப் பார்த்துக் கொண்டே இருந்த குடிகாரன் மெதுவாக அந்த அம்மையாரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “ஏ கிழவி! இப்பவே நீ இவ்வளவு அழகா இருக்கியே? உன் வயசுல நீ என்னமா இருந்திருப்பே? பயலுவ உன்னைச் சுத்தி சுத்தி வந்திருப் பானுங்களே?” என்று பின் னோக்கி பார்வையைச் செலுத்தத் தொடங்கினான்.

“போடா நாயே! பொறுக்கி! நீ நாசமாப் போவே” என்று திட்டிச் சாபம் கொடுத்துவிட்டு எழுந்து நின்று கொண்டார். வெகுதூரம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மலத்தை மிதித்து விட்ட சகியாமை முகத்தில் தோன்ற கூச்சத்தோடு நின்றபடி பயணம் செய்தார்.

இதைக் கண்டும் கேட்டும் நான் உணர்ந்த ஒன்று உண்டு. குடிகாரனிடம் பேச்சுக் கொடுத் தால் மானம் பறிபோகும்.

திருக்குறளில்,

களித்தானைக் காரணங் காட்டல் தூநீர்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று

என்று சொல்லப்பட்டிருப் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். குடிகாரனுக்கு அறிவுரை சொல்லித் திருத்த நினைக்காதே. மெழுகுவர்த்தி கொண்டு நீருக்குள் தொலைந்த பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? என்று வள்ளுவர் சொல் வதற்கு பேருந்தில் ஓர் எடுத்துக் காட்டாக அல்லவா அந்தச் சம்பவம் அமைந்தது!

பேருந்து ஓட்டுநர் ஓர் அம்மையாரிடம் “அந்த ஊரிலே எல்லாம் இந்த பஸ் நிக்காதும்மா” என்றபோது அந்த அம்மையார், “நீ பிரேக்கைப் போடுய்யா, நிக்குதா? இல்லையான்னு பார்ப் போம்,” என்றதும் ஓட்டுநர் முகத்தில் விளக்கெண்ணெய்!

நான் ஏதாவது அந்தப் பெண் மணியிடம் பேசியிருந்தால் எனக்கும் அதே விளக்கெண் ணெய்தானே? இதனால்தான், பொது இடங்களில் வாயைத் திறக்காமல் செவி சாய்க்க வேண்டும் என்பது!
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


‘பேசுவது நாக்கின் வேலை; கேட்பது காதின் வேலை. பேசுவது வெளிப்படுத்துவது; கேட்பது உள்வாங்குவது.

வியாபார மொழியில் சொல்வ தென்றால் பேசுவது விற்று முதல்; கேட்பது கொள்முதல்.

விற்றால்தான் லாபம் கிடைக்கும்; வாங்கினால்தான் விற்பதற்கு சரக்கு இருக்கும்.

விற்பது நல்லதா? வாங்குவது நல்லதா? என்று கேட்டால், விற்க வேண்டிய இடத்தில் விற்பதும், வாங்க வேண்டிய இடத்தில் வாங்குவதும் நம் பொறுப்பு.

‘நாநலம் என்னும் நலனுடைமை’ என்பார் திருவள்ளுவர். நாவன்மையை நானிலம் போற்றும். நலனுடைமை என்று கூறுவதன் பொருள், நாநலம் ஒரு நல்ல உடைமை. அதாவது, நல்ல சொத்து. ஆகவே, கவனமாகக் காப்பாற்ற வேண்டும்.

ஒரு பட்டிமன்றத்தில் பேசச் சென்றிருந்தோம். அந்த மன்றத்தின் செயலாளர் வரவேற்புரையாற்றினார். பட்டிமன்றப் பொருள் பற்றி விஸ்தாரமாகப் பேசினார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் யாவரும் திகைத்துப்போய் அமர்ந்திருந்தனர். இடையிடையே ‘இதையெல்லாம் நான் பேசக்கூடாது’ என்று வேறு சொல்லிக் கொண்டே பேசுகிறார். இதைப்பற்றியெல்லாம் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பேசவேண்டும் என்று கட்டளை வேறு போடுகிறார். சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.

மேடைப் பேச்சாளர்கள் எதைப் பேச வேண்டும் என்று தொகுப்பதைவிட, எதைப் பேசக் கூடாது என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். அப்போதுதான் பேச்சுக்கு வரவேற்பு கிடைக்கும்.

வரவேற்புரை சொல்லு பவர் வந்தவர்களை வரவேற்பதோடு

நிறுத்திக் கொள்ளுவதுதான் முறையாகும். அதற்குமேல் பேசி னால், அது அதிகப்பிரசங்கித் தனமே தவிர வேறல்ல.

நன்றியுரை ஆற்ற வந்தவர், நன்றி சொல்லி முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி, சொற்பொழிவாற்றிய வர்களின் பேச்சை திறனாய்வு செய்தும், பேசியவர் மனம் நோகவும் பேசுவது முறையா காது. நன்றியுரை என்பது, பேசிய வரை மனங்குளிரச் செய்வதாக அமைய வேண்டும்.

துணைப் பேச்சாளர் சுருக்க மாகப் பேசுவதே நல்லது. முக்கிய மான பேச்சாளரின் நேரத்தையும் துணைப் பேச்சாளர் எடுத்துக் கொண்டு பேசிவிட்டால், முக்கியப் பேச்சாளர் யார் நேரத்தை எடுப்பது?

குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவு பெறாத கூட்டம், கேட்க வந்தவர்களுக்கு அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்கும். ‘இனி, இவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு வருவதில்லை’ என்ற முடிவோடு வீடு செல்வார்கள். இது தேவை தானா?

ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பேசுபவர்கள், அந்தத் தலைப்பில் மட்டும் செய்தி களைத் தரவேண்டும். தலைப்பை விடுத்து வேறு விஷயங்களைப் பேசினால், மக்கள் வெறுப் படைவார்கள்.

கூட்டத்துக்கு ஏற்பாடு செய் பவர்களும் தலைப்புக்கேற்ற சொற்பொழிவாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நகைச் சுவை மன்றத்தில் பேசுமாறு நகைச்சுவை உணர்வு இல்லாத வரை அழைத்தால், அவர் என்ன செய்வார்? பாவம். ஆழ்ந்த கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பேசுவார். நகைச்சுவையை எதிர் பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். அவரை அழைத்தது தவறு என்றால், பேசவந்தது இவர் செய்யும் மிகப்பெருந்தவறு.

கூட்டம் கேட்க வந்த சுவைஞர் களின் உள்ளத்தைப் புண்படுத் தாதவாறு பேச வேண்டும். அது தான் மேடை நாகரிகம்.

ஒருமுறை பெர்னாட்ஷா லண்டனில் பேசும் போது, வந்திருந்தவர்கள் சுவைத்துக் கேட்காததை உணர்ந்து, ‘கேட்க வந்தவர்களில் பாதிப்பேர் முட்டாள் கள்’ என்றார். கூட்டம் ஆவேசத்துடன் அவர் பேச்சை எதிர்த்து மன்னிப்புக் கேட்குமாறு முழக்கமிட்டது.

பெர்னாட்ஷாவோ அமைதி யாக, ‘வந்திருப்போரில் பாதிப் பேர் அறிவாளிகள்’ என்று கூறி னார். கூட்டம் அமைதியடைந்து ‘அப்படிச் சொல்லுங்கள்’ என்றது. முதலில் சொன்ன தற்கும் மறுபடி சொன்னதற்கும் வித்தி யாசமில்லை. எனினும் பேச்சு முறையில் நயம் இருந்ததால் தப்பித்தார்.

மேடையேறிப் பேசுவது தான் பேச்சு என்பதில்லை. மற்றவர் களுடன் உரையாடுவதும் ஒரு கலையே ஆகும்.

உரையாடுவதில்தான் எத்தனை வகைகள்? நம் மன நிலை தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்? இன்று நல்ல ஓய்வு; யாராவது வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து தயாராயிருக்கும் போது ஓரிரு வார்த்தைகளோடு பேச்சை முடித்துக்கொண்டு ‘இதோ வருகிறேன்’ என்று போய் விடுவோர் எத்தனை பேர்?

உடல்நிலை சரியில்லாமல் எப்போதோ இருந்ததை விசாரிக்க வந்ததாகக் கூறிக்கொண்டு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்துவிட்டு, ‘அப்படியே ஒரு 50 ரூபாய் இருந்தால் வாங்கிட்டு போகலாம்னு நினைச்சேன்’ என்பவர்கள் எத்தனை பேர்? உடல் நலம் கேட்கவா வந்தார்? இல்லை, கடன் வாங்கத்தான் வந்தார். உடல்நலம் விசாரிக்க வந்ததாக பொய் கூறுகிறார். அவரிடமும் பேசிக் கொண்டிருக் கத்தான் வேண்டியிருக்கிறது!

ஏதோ ஒரு விஷயத்தை நம்மிடம் தெரிந்துகொள்ள வந்தது போல் பாவனை! ஆனால் அவருக்குத் தெரிந்த ஒன்றை நம்மிடம் சொல்ல வந்ததே உண்மை!

சிலப்பதிகாரத்திலே பாண்டி யன் “ஏன் சார், கோவலனைக் கொன்றான்?” என்று கேட்டு அவசரமாகப் போகும் நம்மை வழியில் நிறுத்துவார். நாமும் நம் வேலையை விட்டு, அவருக்கு விளக்கம் கூற முற்பட்டு ‘‘கோவலன் மனைவி பேரு கண்ணகிங்க. அவன் அவளை அழைச்சிட்டு மதுரைக்கு வாணி கம் செய்ய வந்தாங்க’’ என்று ஆதியோடு அந்தமாகச் சிலப்பதி காரம் சொல்ல முற்படும் வேளையில்,

‘கொஞ்சம் இருங்க’ என்று நம்மை நிறுத்திவிட்டு, தான் மதுரைக்குப் போனவாரம் சென்றிருந்ததாகவும், அங்கு ஒரு மேடான பகுதியைப் பார்த்த தாகவும், விஷயந்தெரிந்தவர் களை விசாரித்ததாகவும், அங்கு தான் கோவலன் கொலை செய்யப்பட்டதாகவும், மன்னனே நேரில் வந்து அரிவாளால் வெட்டியதாகவும், நீதி தவறி மன்னன் வெட்டியதால் கோவ லன் புதைக்கப்பட்ட மேடு கரை யாமல் இன்றுவரை அப்படியே இருப்பதாகவும் எத்தனையோ

முறை எத்தனையோ பேர் கரைத்தும் மேடு கரையவில்லை என்றும், இந்த அதிசயத்தை வெளிநாட்டுக்காரர்கள் வந்து பார்த்துச் செல்வதாகவும், தான் அதைப்பார்த்து அதிசயித்து நின்றதாகவும் கூறுவார்.

அதோடு நிறுத்தமாட்டார். ‘நீங்கள் மதுரை போனதே இல்லையா? மேட்டைப் பார்க் கவே இல்லையா? அந்த மேட்டைக் கூடப் பார்க்காமல் மதுரை போய் வந்தால் என்ன பிரயோசனம் என்றும் வேறு கேட்டு நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துவார்.

இவர் நம்மிடமிருந்து சிலப்ப திகாரம் தெரிந்து கொள்ள வர வில்லை. தான் அறிந்து வைத்தி ருக்கும் ஒரு கட்டுக் கதையை நம் தலையில் கட்டப் பார்க்கிறார். அவர் நேரமும் பாழ், நம் நேரமும் வீண். வீண் கதை கேட்டதே மிச்சம்.

பொதுவான இடங்களில் நம் நாவுக்கு வேலை தராமல் காதைத் தீட்டிவைத்துக் கொண்டு அனுப வக் கொள்முதல் செய்வதுதான் அறிவுடைமை.

பேருந்துப் பயணம், ரயில் பயணம், நடைப்பயணம் ஆகிய பொழுதுகளில் நாவுக்கு வேலை தராமல் இருப்பது சாலச் சிறந்தது. வீண் விவாதங்கள் முட்டாளிடம் பேசி அதிமுட்டாளாதல் போன்ற அசிங்கங்களில் அகப்பட்டுக் கொள்ளும் அபாயம் நேரும்.

காதைத் திறந்துகொண்டு – அதாவது காதில் வாங்காமல் இருந்துவிடாமல் – கேள்வி ஞானம் பெறலாம்.

சங்கீதம் சொல்லித்தரும் சங்கீத வித்வான்களிடம் ஒரு பழக்கம் உண்டு. சிஷ்யனுக்கு அரங்கேற்ற அளவிற்குச் சொல்லிதந்த பிறகு அவனுக்கு விடைதரும் நேரத்தில், “அப்பா, எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் குடுத்துவிட்டேன். இனி உன் கேள்வி ஞானத்தால் சங்கீதத்தை விருத்தி செய்துகொள்” என்று கூறி அனுப்பி வைப்பார்.

“கேள்வி ஞானம்” என்பது அவ்வளவு முக்கியமானது. கேட்டுக்கேட்டே சிறந்த ஞானம் பெற்றவர்கள் உண்டு. உதாரணத் துக்குச் சில சொல்வேன்.

ஒரு இளைஞன் நன்றாகக் குடித்துவிட்டு, பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தான். தாறு மாறாகப் பேசுகிறான். பக்கத்தில் அமர்ந்திருப்போரிடமெல்லாம் தகராறு செய்கிறான். மூன்றுபேர் அமரும் இருக்கையில் அவன ருகே அமர்ந்து ஒவ்வொருவராக, அவன் தொல்லை பொறுக்க முடியாது எழுந்து சென்று விடுகின்றனர். மூவர் இருக்கையில் இப்போது அவன் மட்டும்.

பேருந்தில் நிறையப்பேர் அமர இடமின்றி நின்று வருகின்றனர். எனினும் அவன ருகில் அமர எவரும் விரும்ப வில்லை. நின்றாலும் பரவா யில்லை, அவன் அருகில் மட்டும் அமரக்கூடாது என்ற உறுதியில் எல்லோரும் உள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த கிழவி (60 வயதுக்குமேல்) “என்னப்பா இப்படி பயப்படுறீங்க? என்னமோ கொஞ்சம் குடிச்சிட்டான் அவ் வளவுதானே! நம்ம புள்ளயா இருந்தா இப்படி ஒதுக்கு வோமா?” என்று கூறிக் கொண்டே அவனருகில் சென்று உட்கார்ந்தார்.

சற்று நேரம் அந்தக் கிழவியைப் பார்த்துக் கொண்டே இருந்த குடிகாரன் மெதுவாக அந்த அம்மையாரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “ஏ கிழவி! இப்பவே நீ இவ்வளவு அழகா இருக்கியே? உன் வயசுல நீ என்னமா இருந்திருப்பே? பயலுவ உன்னைச் சுத்தி சுத்தி வந்திருப் பானுங்களே?” என்று பின் னோக்கி பார்வையைச் செலுத்தத் தொடங்கினான்.

“போடா நாயே! பொறுக்கி! நீ நாசமாப் போவே” என்று திட்டிச் சாபம் கொடுத்துவிட்டு எழுந்து நின்று கொண்டார். வெகுதூரம் தள்ளிப்போய் நின்று கொண்டார். மலத்தை மிதித்து விட்ட சகியாமை முகத்தில் தோன்ற கூச்சத்தோடு நின்றபடி பயணம் செய்தார்.

இதைக் கண்டும் கேட்டும் நான் உணர்ந்த ஒன்று உண்டு. குடிகாரனிடம் பேச்சுக் கொடுத் தால் மானம் பறிபோகும்.

திருக்குறளில்,

களித்தானைக் காரணங் காட்டல் தூநீர்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று

என்று சொல்லப்பட்டிருப் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். குடிகாரனுக்கு அறிவுரை சொல்லித் திருத்த நினைக்காதே. மெழுகுவர்த்தி கொண்டு நீருக்குள் தொலைந்த பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? என்று வள்ளுவர் சொல் வதற்கு பேருந்தில் ஓர் எடுத்துக் காட்டாக அல்லவா அந்தச் சம்பவம் அமைந்தது!

பேருந்து ஓட்டுநர் ஓர் அம்மையாரிடம் “அந்த ஊரிலே எல்லாம் இந்த பஸ் நிக்காதும்மா” என்றபோது அந்த அம்மையார், “நீ பிரேக்கைப் போடுய்யா, நிக்குதா? இல்லையான்னு பார்ப் போம்,” என்றதும் ஓட்டுநர் முகத்தில் விளக்கெண்ணெய்!

நான் ஏதாவது அந்தப் பெண் மணியிடம் பேசியிருந்தால் எனக்கும் அதே விளக்கெண் ணெய்தானே? இதனால்தான், பொது இடங்களில் வாயைத் திறக்காமல் செவி சாய்க்க வேண்டும் என்பது!
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


ஒரு பூங்கா, உள்ளே ஒரு பெஞ்ச். ஒரு ஓரத்தில் ஒருவரும் மற்றொரு ஒரத்தில் இன்னொரு வரும் அமர்ந்திருக்கிறார்கள். இவர் கிழக்கே பார்த்தால், அவர் மேற்கே பார்க்கிறார். ஒரு மணி நேரம் ஆனபிறகு இனிமேலும் மௌனம் கடைப் பிடிக்க முடியாது என்று எண்ணிய ஒருவர், ‘அந்த ஓர’ மனிதரிடம் மெதுவாகப் பேசத் துவங்கனார்.

“என்னங்க ரொம்ப சோகமா இருக்கீங்க? ஏதாவது பிரச்னைன்னா எங்கிட்ட சொல்லுங் களேன்”.

“ஒன்னும் இல்லீங்க. இன்னக்கி மனைவி கிட்ட சின்ன தகராறு. அவளுக்கு ரொம்ப கோபம் வந்திட்டுது. ‘இன்னும் ஒரு வாரத்துக்கு என்கூடப் பேசாதீங்க’ ன்னுட்டா. ஒரு வாரத்துக்கு எப்படிங்க பேசாம இருக்க முடியும்? அதான் கவலையா இருக்கேன்” அந்த ஓரம் தன் கவலையைக் கதவு திறந்தது.

இந்த ஓரம் ‘கல கல’ வென்று சிரித்துவிட்டுச் சொன்னது, “இதுக்காய்யா பெரிசா கவலைப் படுறே? என் பெண்டாட்டி ஒரு வாரத்துக்கு முந்தி ஏற்பட்ட சண்டையிலே இதே மாதிரி ‘இன்னும் ஒரு வாரத்துக்குப் பேசக்கூடாது’ ன்னு கண்டிஷன் போட்டா. இன்னியோட அந்த ஒருவாரம் முடியுது. சாயங்காலம் பேசியாகனுமேன்னு நான் கவலையா இருக்கேன். உம்பாடு பரவாயில்லே. இன்னும் ஒருவாரம் உனக்கு கொண்டாட்டந்தான்.”

அந்த ஓரத்து மனிதருக்கும் இந்த ஓரத்து மனிதருக்கும் பெஞ்சில் மட்டுமா இடைவெளி? இல்லை. வாழும் வாழ்க்கையிலேயே பெரிய இடைவெளி இருக்கிறது.

மனைவியுடன் பேசாமல் இருக்கவேண்டிய நிலைமையை எண்ணி வருந்துவதும், மனைவியு டன் பேசியாக வேண்டுமே என்று கவலைப்படு வதும் வாழ்வின் நிறைவையும் குறையையும் காட்டும் அடையாளங்கள் அல்லவா!

கணவனும் மனைவியும் ஒரு வீட்டுக்குள் மகிழ்ச்சியிலும் அயர்ச்சியிலும் இணைந்து வாழும் இணைப் பறவைகள்.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்வதே ஒரு மகிழ்ச்சி. கண்ணால் காண்பது களிப்பு. தொட்டுக் கிள்ளினாலும் கன்னத்தில் இடித்தாலும் எல்லாமே எண்ணத்தில் பதிந்து என்றென்றும் இனிப்பவை.

அதை இழக்க நேருகிறதே என்று ஏங்கு பவன்தான் நிறைவான வாழ்வில் திளைப்பவன்.

அதைப் பெறவேண்டியிருக்கிறதே என்று வருந்துபவன் வாழ்வில் சுகம் காணக் கொடுத்து வைக்காதவன்.

இரண்டு வகையாகவும் இன்று குடும்பங்கள் இருக்கின்றன. நிறைவாழ்வாக இல்லறத்தைச் சுவைக்கும் கணவனும் மனைவியும் குறைகளே இல்லாத தெய்வப்பிறவிகளா?

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்கி வாழும் நிலைபெற்றவர்கள் என்ன, நற்குணம் என்று எதையுமே பெற்றிராத சாத்தான்களா?

மகிழ்ந்து வாழும் அவர்களிடம் குறைகள் இல்லாமலில்லை. வருந்திக் கிடக்கம் இவர்களிடம் நிறைகள் இல்லாமலும் இல்லை. பார்க்கும் பார்வையில் தான் குறைபாடு.

கண் டாக்டரிடம் சென்ற ஒருவன்,

“டாக்டர் எனக்கு ஒருவகையான குறைபாடு கண்ணில் இருக்கிறது. ஏதாவது மருந்து கொடுத்துச் சரிப்படுத்துங்கள்” என்று கூறிவிட்டுக் குறை பாட்டை விளக்கினான்.

“தூரத்தில் போகிற பெண்களைத் தெளிவாகத் தெரிகிறது. பக்கத்தில் நடக்கிற ஆண்கள் தெரியவே இல்லை.” இதைக் கேட்ட டாக்டர் ஒரு சீட்டில் மருந்து எழுதிக் கொடுத்தார். அதில் ‘உடனடியாகத் திருமணம் செய்துகொள்’ என்று எழுதியிருந்தது.

பெண் தெரிகிறது; ஆண் தெரியவில்லை என்றால் கண்ணிலா குறைபாடு இல்லை. மனத்தில் ஏதோ கோளாறு என்றுதான் பொருள்.

கணவனிடம் குறைகாணும் மனைவி என்ன சொல்லுகிறார்? “குடிக்கிறார்; பொய் சொல்கிறார்; என்னைத் திட்டுகிறார்; நேரத்தில் வீடு திரும்புவதில்லை; என் சமையலை ருசித்துச் சாப்பிடுவதே இல்லை. கல்யாணம் செய்தாயிற்றே என்பதற்காக என்னோடு குடும்பம் நடத்துகிறாரே தவிர, விருப்பத்தோடு என்னிடம் பழகுவதில்லை.”

ஏன் இந்தக் கணவன் இப்படி இருக்கிறார்? அவர் என்ன சொல்கிறார். தன் மனைவியைப் பற்றி?

“எதையோ பறிகொடுத்தது போல இருக் கிறாள். முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. எப்போதும் சண்டைக் கோழி போல சிலிர்த்துக்கொண்டு நிற்கிறாள். வீட்டுக்குப் போனால் அவளைப் பார்க்கவேண்டி வருமே என்று மனம் கவலைப் படுகிறது. சமைத்ததைப் பரிமாறுவதில் ஓர் அன்பே இல்லை. தண்டமே என்று எல்லாம் செய்கிறாள்.”

என்னம்மா. உங்கள் கணவரிடம் உங்களைக் கவரும் அம்சங்கள் என்று எதுவுமே இல்லையா? என்று கேட்டால்,

அந்தப் பெண் கூறுகிறார், “ஏன் இல்லை? ஆஜானுபாகுவான உடல், கம்பீரமான தோற்றம், எந்தப் பெண்ணும் சற்று நின்று பார்க்கும்படியான அழகர். ஊரில் உள்ள எல்லோருமே இவருடைய வியாபாரத் திறமையைப் பாராட்டுகிறார்கள். எனக்கு ஏதாவது வாங்கிவந்து கொடுக்காமல் ஒருநாளும் இருக்கமாட்டார். தூய்மையான உடைகளையே உடுத்துவார். ‘இந்தா’ ‘வா’ ‘போ’ ‘ஏ, கழுதை’ என்றெல்லாம் அழைக்கமாட்டார். அழகாக என் பெயரைச் சொல்லி ‘ரம்யா!’ன்னு தான் கூப்பிடுவார்”.

“உங்கள் மனைவியிடம் முழுவதுமே வெறுக் கத்தக்க தன்மைகள்தானா? நல்லது என்று எதுவும் கிடையாதா?” என்று கணவரிடம் கேட்டால், “அதெல்லாம் இல்லை. என் மனைவி அழகானவள். இனிமையாகப்பாடுவாள். அருமையாகச் சமைப் பாள். என் தாய் தந்தையரை மதிப்போடும் மரியாதையோடும் பேணுகிறாள். ஓய்வு நேரத்தை நல்ல புத்தகம் படிப்பதிலும் கைத்தொழில் கற்றுக் கொள்வதிலும் செலவிடுகிறாள். தெருவிலுள்ள பெண்களோடு சேர்ந்து ஊர்க்கதை பேசுவது கிடையாது” என்பார்.

ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொள்ளும் கணவன் மனைவியரின் கவனத்தை நல்லதன் பக்கமாகத் திருப்பிவிட்டுக் கேட்கும்போதுதான் இவர்கள் அடுத்தவரிடமுள்ள நல்ல குணங்களை நினைத்துப் பார்த்துக் கூறுகிறார்கள்.

குடிப்பது கெடுதல்; குடிப்பவரைப் பெண்கள் விரும்பமாட்டார்கள்; என்பது சரிதான். மனைவி நினைத்தால் இதனை மாற்றிவிட முடியாதா? நண்பர்களுடன் இருந்து அனுபவிக்கும் நட்பைவிட மேலானதொரு நட்பைத் தருவதற்கு வீட்டில் மனைவி இருக்கிறாள் என்ற எண்ணத்தைக் கணவனுக்கு ஊட்டவேண்டியவள் மனைவி அல்லவா!

நட்பைத் தரும் மனைவி கிடைத்துவிட்டால் நண்பர்களையும் புறக்கணித்துவிட்டு நேரத்தோடு – நேரத்தோடு என்ன நேரத்தோடு? அதற்கு முன்னதாகவே – வந்துவிடமாட்டானா கணவன்?

வீட்டிற்கு வரும் கணவனை சிநேகத்தோடு பார்க்கும் குளிர்பார்வை இல்லாதவர்களா பெண்கள்? அவர்களுக்கு அப்படிப் பார்க்கத் தெரியும். வெறுப்பானது, குளிர்பார்வையையும் சுடுநோக்காக்கி விடுகிறது.

சமைப்பதில் கைதேர்ந்தவர்கள் கூடப் பரிமாறுவதில் பக்குவம் பெறாமல் போவதுண்டு. தட்டில் அடிக்கடி கணவன் எடுத்துண்ணும் உணவை மறுபடியும் வைக்கலாம். அன்பான உசாவல்களால் அடுப்பங்கரையையும் உண்ணு மிடத்தையும் கூட மகிழ்வுபொங்கும் மாளிகை யாக்க முடியுமே!

சமைத்த உணவை சமைத்த சட்டியிலேயே கொண்டுவந்து பரிமாறாமல் அதை அழகாக ஒரு பாத்திரத்தில் அடுக்கிவைத்துக் காட்டமுடியுமே! அதுவும்கூட மனத்தை வசீகரிக்கும் மற்றொரு கலையாயிற்றே! பெரிய ஓட்டல்களில் பாருங்கள் தயிர் வடையைக் கூட வெறும் தயிர்வடையாகத் தராமல் அதன்மேல் கொஞ்சம் காரட் துணுக்குகளையும் கொத்து மல்லித் தழையையும் வைத்து அதை ஏதோ தேவலோகத்து அமுதத்தைத் தருவதுபோல் தருகிறார்களே! அதில் ஒரு கலை நுணுக்கம் இருக்கிறதே!

ஒரு மனைவி இதைச் செய்து காட்டினால் கணவன் ஓட்டல் பக்கம் தலை வைத்தும் பார்க்க மாட்டானே! உணவு, அதன் சுவையில் மட்டுமல்ல, அதன் அழகில், அதன் மணத்தில், அதைக் கொண்டுவந்து வைப்பவரின் அன்பு வெளிப் பாட்டில் என்று எல்லாமாக சேர்ந்தல்லவா மனத்தை ஈர்க்கிறது!

அதனால்தான், ஓட்டலில் சாப்பிட்டதற்குப் பணம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பரிமாறி யவருக்குத் தனியாக பணம் கொடுக்கிறோமே, அது எதற்கு? அவர் நம்மிடம் பரிவோடு பரிமாறிய பாங்கிற்கு நாம் தரும் வெகுமதி அல்லவா அது?

ஓட்டல் சர்வருக்குத் தனியாகப் பணம் கொடுத்து கௌரவிக்கும் நாம், மனைவியிடம் அந்த மாண்பைக் கண்டால் பணமா கொடுப்போம்? மனமெல்லாம் அவள் நிறைந்திருப்பாள். கணவன் மதுவருந்தி மனம் நோவானா? மனைவிக்கேற்ற மணாளனாகச் சுற்றிச் சுற்றி வருவானே!

கணவனும் மனைவியை மதித்துப் போற்ற வேண்டும். அவள் செய்யும் பணிகளைப் பாராட்டிப் பரிவோடு அவளை மகிழ்விக்க வேண்டும். வெளியில் அதிகமாக வேலை இருப்பவர்கள் அதன் அவசியம் பற்றி மனைவி யிடம் பேசவேண்டும். தான் அதிகநேரம் வெளியில் இருக்கவேண்டியிருப்பதை அவன், சொல்லும் முறையில் சொல்லி, உணர்த்த வேண்டும். தீய பழக்கங்களை அகற்றிட வேண்டும்.

திருமணம் ஆகிய அன்று மாலை அவள் தனித்து ஒரு அறையில் அமர்ந்திருந்தாள். அது கணவன் வீடு. அவளுடைய புக்ககம். எதிர்வீட்டி

லிருந்து வந்த நாற்பது வயதுக்கார ‘மாதரசி’ ஒருத்தி, மணமகளிடம் சொன்னாள், “நீ புதுப்பொண்ணு உனக்கு நான் ஒரு அட்வைஸ் தரேன் கேட்டுக்கோ. புருசனை எப்பவும் கைக்குள்ளே வச்சிக்கனும்” .

“அது எப்படிக்கா கைக்குள்ளேயே வச்சிக்க முடியும். அவரு கடைத்தெரு கிடைத்தெருவுக்குப் போய்வர வேணாமா?” வெகுளிப்பெண்ணாக மணமகள் கேட்டாள்.

“அடிபோடி அசடே! கையிலே வச்சிக் கிறதுன்னா, நாம சொல்றதை கேட்கிற மாதிரி வச்சுக்கனும்னு அர்த்தம்.”

“அது எப்படின்னு சொல்லுங்க அக்கா”

“15 வருசத்துக்கு முந்தி எனக்குக் கல்யாணம் ஆச்சு. அன்னைக்கே அவருகிட்டே நான் சொல்

லிட்டேனே. அங்க இங்க போயிட்டு நேரங்கழிச்சு வந்தீங்கன்னா காலை ஒடிச்சுடுவேன். சீட்டு கீட்டு ஆடினீங்க… கையை ஒடிச்சிடுவேன். தண்ணி கிண்ணி அடிச்சீங்கன்னா, அவ்வளவுதான் வாயைக் கிழிச்சிடுவேன்னு கறாராச் சொன்னேன் தங்கச்சி. நீயும் அதே மாதிரி இன்னிக்கே உன் புருசன்கிட்டே சொல்லிப்புடு”.

“நீங்க சொன்னது சரிக்கா. அதைக்கேட்டு உங்க ஊட்டுக்காரரு திருந்திட்டாரா?”

“அதை ஏன்டி கேக்கறே? அன்னக்கி போனவருதான் இன்னமும் ஊட்டுக்கே வரல்லே”.

“அடப்பாவமே அப்படின்னா எனக்கும் அந்த மாதிரி யோசனை சொல்றீங்களே ஏனக்கா?”

“ம்… நான் ஒன்ட்டியா இருக்கேன்ல. நீயும் வந்து உட்கார்ந்தா பேச்சுத்துணை கிடைக்கு மேன்னுதான்”.

நாம் நடந்துகொள்ளும் முறையில் மற்றவர் மனம் திருந்த வேண்டுமே தவிர, கடிந்து

சொல்லித் திருத்திவிட முடியாது. அதிலும் கணவனும் மனைவியும் கருத்துக்களைப் பேசாமலே உணர்த்திவிட முடியுமே!

இரவு உணவெல்லாம் முடித்தபின் பக்கத்தில் வந்தமரும் மனைவியிடம் நாம் ஏதும் சொல்லாமல், அவள் கையை எடுத்து நம் கையில் வைத்துக் கொண்டு அதில் ஓர் அழுத்தம் கொடுக்கும்போது, அவள் ஒரு மாதிரி தலையைச் சாய்த்து ஓரப்பார்வை பார்த்து “ஆமா. உங்களுக்கு வேற வேலையே இல்லை” என்கிறாளே. நாம் ஏதாவது சொன்னோமா?

இதுதான் இல்லறம். இவர்கள்தான் கணவன் மனைவி. இங்குதான் சொக்கவைக்கும் சொர்க்கம் உருவாகிறது.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


ஒரு பூங்கா, உள்ளே ஒரு பெஞ்ச். ஒரு ஓரத்தில் ஒருவரும் மற்றொரு ஒரத்தில் இன்னொரு வரும் அமர்ந்திருக்கிறார்கள். இவர் கிழக்கே பார்த்தால், அவர் மேற்கே பார்க்கிறார். ஒரு மணி நேரம் ஆனபிறகு இனிமேலும் மௌனம் கடைப் பிடிக்க முடியாது என்று எண்ணிய ஒருவர், ‘அந்த ஓர’ மனிதரிடம் மெதுவாகப் பேசத் துவங்கனார்.

“என்னங்க ரொம்ப சோகமா இருக்கீங்க? ஏதாவது பிரச்னைன்னா எங்கிட்ட சொல்லுங் களேன்”.

“ஒன்னும் இல்லீங்க. இன்னக்கி மனைவி கிட்ட சின்ன தகராறு. அவளுக்கு ரொம்ப கோபம் வந்திட்டுது. ‘இன்னும் ஒரு வாரத்துக்கு என்கூடப் பேசாதீங்க’ ன்னுட்டா. ஒரு வாரத்துக்கு எப்படிங்க பேசாம இருக்க முடியும்? அதான் கவலையா இருக்கேன்” அந்த ஓரம் தன் கவலையைக் கதவு திறந்தது.

இந்த ஓரம் ‘கல கல’ வென்று சிரித்துவிட்டுச் சொன்னது, “இதுக்காய்யா பெரிசா கவலைப் படுறே? என் பெண்டாட்டி ஒரு வாரத்துக்கு முந்தி ஏற்பட்ட சண்டையிலே இதே மாதிரி ‘இன்னும் ஒரு வாரத்துக்குப் பேசக்கூடாது’ ன்னு கண்டிஷன் போட்டா. இன்னியோட அந்த ஒருவாரம் முடியுது. சாயங்காலம் பேசியாகனுமேன்னு நான் கவலையா இருக்கேன். உம்பாடு பரவாயில்லே. இன்னும் ஒருவாரம் உனக்கு கொண்டாட்டந்தான்.”

அந்த ஓரத்து மனிதருக்கும் இந்த ஓரத்து மனிதருக்கும் பெஞ்சில் மட்டுமா இடைவெளி? இல்லை. வாழும் வாழ்க்கையிலேயே பெரிய இடைவெளி இருக்கிறது.

மனைவியுடன் பேசாமல் இருக்கவேண்டிய நிலைமையை எண்ணி வருந்துவதும், மனைவியு டன் பேசியாக வேண்டுமே என்று கவலைப்படு வதும் வாழ்வின் நிறைவையும் குறையையும் காட்டும் அடையாளங்கள் அல்லவா!

கணவனும் மனைவியும் ஒரு வீட்டுக்குள் மகிழ்ச்சியிலும் அயர்ச்சியிலும் இணைந்து வாழும் இணைப் பறவைகள்.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்வதே ஒரு மகிழ்ச்சி. கண்ணால் காண்பது களிப்பு. தொட்டுக் கிள்ளினாலும் கன்னத்தில் இடித்தாலும் எல்லாமே எண்ணத்தில் பதிந்து என்றென்றும் இனிப்பவை.

அதை இழக்க நேருகிறதே என்று ஏங்கு பவன்தான் நிறைவான வாழ்வில் திளைப்பவன்.

அதைப் பெறவேண்டியிருக்கிறதே என்று வருந்துபவன் வாழ்வில் சுகம் காணக் கொடுத்து வைக்காதவன்.

இரண்டு வகையாகவும் இன்று குடும்பங்கள் இருக்கின்றன. நிறைவாழ்வாக இல்லறத்தைச் சுவைக்கும் கணவனும் மனைவியும் குறைகளே இல்லாத தெய்வப்பிறவிகளா?

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்கி வாழும் நிலைபெற்றவர்கள் என்ன, நற்குணம் என்று எதையுமே பெற்றிராத சாத்தான்களா?

மகிழ்ந்து வாழும் அவர்களிடம் குறைகள் இல்லாமலில்லை. வருந்திக் கிடக்கம் இவர்களிடம் நிறைகள் இல்லாமலும் இல்லை. பார்க்கும் பார்வையில் தான் குறைபாடு.

கண் டாக்டரிடம் சென்ற ஒருவன்,

“டாக்டர் எனக்கு ஒருவகையான குறைபாடு கண்ணில் இருக்கிறது. ஏதாவது மருந்து கொடுத்துச் சரிப்படுத்துங்கள்” என்று கூறிவிட்டுக் குறை பாட்டை விளக்கினான்.

“தூரத்தில் போகிற பெண்களைத் தெளிவாகத் தெரிகிறது. பக்கத்தில் நடக்கிற ஆண்கள் தெரியவே இல்லை.” இதைக் கேட்ட டாக்டர் ஒரு சீட்டில் மருந்து எழுதிக் கொடுத்தார். அதில் ‘உடனடியாகத் திருமணம் செய்துகொள்’ என்று எழுதியிருந்தது.

பெண் தெரிகிறது; ஆண் தெரியவில்லை என்றால் கண்ணிலா குறைபாடு இல்லை. மனத்தில் ஏதோ கோளாறு என்றுதான் பொருள்.

கணவனிடம் குறைகாணும் மனைவி என்ன சொல்லுகிறார்? “குடிக்கிறார்; பொய் சொல்கிறார்; என்னைத் திட்டுகிறார்; நேரத்தில் வீடு திரும்புவதில்லை; என் சமையலை ருசித்துச் சாப்பிடுவதே இல்லை. கல்யாணம் செய்தாயிற்றே என்பதற்காக என்னோடு குடும்பம் நடத்துகிறாரே தவிர, விருப்பத்தோடு என்னிடம் பழகுவதில்லை.”

ஏன் இந்தக் கணவன் இப்படி இருக்கிறார்? அவர் என்ன சொல்கிறார். தன் மனைவியைப் பற்றி?

“எதையோ பறிகொடுத்தது போல இருக் கிறாள். முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. எப்போதும் சண்டைக் கோழி போல சிலிர்த்துக்கொண்டு நிற்கிறாள். வீட்டுக்குப் போனால் அவளைப் பார்க்கவேண்டி வருமே என்று மனம் கவலைப் படுகிறது. சமைத்ததைப் பரிமாறுவதில் ஓர் அன்பே இல்லை. தண்டமே என்று எல்லாம் செய்கிறாள்.”

என்னம்மா. உங்கள் கணவரிடம் உங்களைக் கவரும் அம்சங்கள் என்று எதுவுமே இல்லையா? என்று கேட்டால்,

அந்தப் பெண் கூறுகிறார், “ஏன் இல்லை? ஆஜானுபாகுவான உடல், கம்பீரமான தோற்றம், எந்தப் பெண்ணும் சற்று நின்று பார்க்கும்படியான அழகர். ஊரில் உள்ள எல்லோருமே இவருடைய வியாபாரத் திறமையைப் பாராட்டுகிறார்கள். எனக்கு ஏதாவது வாங்கிவந்து கொடுக்காமல் ஒருநாளும் இருக்கமாட்டார். தூய்மையான உடைகளையே உடுத்துவார். ‘இந்தா’ ‘வா’ ‘போ’ ‘ஏ, கழுதை’ என்றெல்லாம் அழைக்கமாட்டார். அழகாக என் பெயரைச் சொல்லி ‘ரம்யா!’ன்னு தான் கூப்பிடுவார்”.

“உங்கள் மனைவியிடம் முழுவதுமே வெறுக் கத்தக்க தன்மைகள்தானா? நல்லது என்று எதுவும் கிடையாதா?” என்று கணவரிடம் கேட்டால், “அதெல்லாம் இல்லை. என் மனைவி அழகானவள். இனிமையாகப்பாடுவாள். அருமையாகச் சமைப் பாள். என் தாய் தந்தையரை மதிப்போடும் மரியாதையோடும் பேணுகிறாள். ஓய்வு நேரத்தை நல்ல புத்தகம் படிப்பதிலும் கைத்தொழில் கற்றுக் கொள்வதிலும் செலவிடுகிறாள். தெருவிலுள்ள பெண்களோடு சேர்ந்து ஊர்க்கதை பேசுவது கிடையாது” என்பார்.

ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொள்ளும் கணவன் மனைவியரின் கவனத்தை நல்லதன் பக்கமாகத் திருப்பிவிட்டுக் கேட்கும்போதுதான் இவர்கள் அடுத்தவரிடமுள்ள நல்ல குணங்களை நினைத்துப் பார்த்துக் கூறுகிறார்கள்.

குடிப்பது கெடுதல்; குடிப்பவரைப் பெண்கள் விரும்பமாட்டார்கள்; என்பது சரிதான். மனைவி நினைத்தால் இதனை மாற்றிவிட முடியாதா? நண்பர்களுடன் இருந்து அனுபவிக்கும் நட்பைவிட மேலானதொரு நட்பைத் தருவதற்கு வீட்டில் மனைவி இருக்கிறாள் என்ற எண்ணத்தைக் கணவனுக்கு ஊட்டவேண்டியவள் மனைவி அல்லவா!

நட்பைத் தரும் மனைவி கிடைத்துவிட்டால் நண்பர்களையும் புறக்கணித்துவிட்டு நேரத்தோடு – நேரத்தோடு என்ன நேரத்தோடு? அதற்கு முன்னதாகவே – வந்துவிடமாட்டானா கணவன்?

வீட்டிற்கு வரும் கணவனை சிநேகத்தோடு பார்க்கும் குளிர்பார்வை இல்லாதவர்களா பெண்கள்? அவர்களுக்கு அப்படிப் பார்க்கத் தெரியும். வெறுப்பானது, குளிர்பார்வையையும் சுடுநோக்காக்கி விடுகிறது.

சமைப்பதில் கைதேர்ந்தவர்கள் கூடப் பரிமாறுவதில் பக்குவம் பெறாமல் போவதுண்டு. தட்டில் அடிக்கடி கணவன் எடுத்துண்ணும் உணவை மறுபடியும் வைக்கலாம். அன்பான உசாவல்களால் அடுப்பங்கரையையும் உண்ணு மிடத்தையும் கூட மகிழ்வுபொங்கும் மாளிகை யாக்க முடியுமே!

சமைத்த உணவை சமைத்த சட்டியிலேயே கொண்டுவந்து பரிமாறாமல் அதை அழகாக ஒரு பாத்திரத்தில் அடுக்கிவைத்துக் காட்டமுடியுமே! அதுவும்கூட மனத்தை வசீகரிக்கும் மற்றொரு கலையாயிற்றே! பெரிய ஓட்டல்களில் பாருங்கள் தயிர் வடையைக் கூட வெறும் தயிர்வடையாகத் தராமல் அதன்மேல் கொஞ்சம் காரட் துணுக்குகளையும் கொத்து மல்லித் தழையையும் வைத்து அதை ஏதோ தேவலோகத்து அமுதத்தைத் தருவதுபோல் தருகிறார்களே! அதில் ஒரு கலை நுணுக்கம் இருக்கிறதே!

ஒரு மனைவி இதைச் செய்து காட்டினால் கணவன் ஓட்டல் பக்கம் தலை வைத்தும் பார்க்க மாட்டானே! உணவு, அதன் சுவையில் மட்டுமல்ல, அதன் அழகில், அதன் மணத்தில், அதைக் கொண்டுவந்து வைப்பவரின் அன்பு வெளிப் பாட்டில் என்று எல்லாமாக சேர்ந்தல்லவா மனத்தை ஈர்க்கிறது!

அதனால்தான், ஓட்டலில் சாப்பிட்டதற்குப் பணம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பரிமாறி யவருக்குத் தனியாக பணம் கொடுக்கிறோமே, அது எதற்கு? அவர் நம்மிடம் பரிவோடு பரிமாறிய பாங்கிற்கு நாம் தரும் வெகுமதி அல்லவா அது?

ஓட்டல் சர்வருக்குத் தனியாகப் பணம் கொடுத்து கௌரவிக்கும் நாம், மனைவியிடம் அந்த மாண்பைக் கண்டால் பணமா கொடுப்போம்? மனமெல்லாம் அவள் நிறைந்திருப்பாள். கணவன் மதுவருந்தி மனம் நோவானா? மனைவிக்கேற்ற மணாளனாகச் சுற்றிச் சுற்றி வருவானே!

கணவனும் மனைவியை மதித்துப் போற்ற வேண்டும். அவள் செய்யும் பணிகளைப் பாராட்டிப் பரிவோடு அவளை மகிழ்விக்க வேண்டும். வெளியில் அதிகமாக வேலை இருப்பவர்கள் அதன் அவசியம் பற்றி மனைவி யிடம் பேசவேண்டும். தான் அதிகநேரம் வெளியில் இருக்கவேண்டியிருப்பதை அவன், சொல்லும் முறையில் சொல்லி, உணர்த்த வேண்டும். தீய பழக்கங்களை அகற்றிட வேண்டும்.

திருமணம் ஆகிய அன்று மாலை அவள் தனித்து ஒரு அறையில் அமர்ந்திருந்தாள். அது கணவன் வீடு. அவளுடைய புக்ககம். எதிர்வீட்டி

லிருந்து வந்த நாற்பது வயதுக்கார ‘மாதரசி’ ஒருத்தி, மணமகளிடம் சொன்னாள், “நீ புதுப்பொண்ணு உனக்கு நான் ஒரு அட்வைஸ் தரேன் கேட்டுக்கோ. புருசனை எப்பவும் கைக்குள்ளே வச்சிக்கனும்” .

“அது எப்படிக்கா கைக்குள்ளேயே வச்சிக்க முடியும். அவரு கடைத்தெரு கிடைத்தெருவுக்குப் போய்வர வேணாமா?” வெகுளிப்பெண்ணாக மணமகள் கேட்டாள்.

“அடிபோடி அசடே! கையிலே வச்சிக் கிறதுன்னா, நாம சொல்றதை கேட்கிற மாதிரி வச்சுக்கனும்னு அர்த்தம்.”

“அது எப்படின்னு சொல்லுங்க அக்கா”

“15 வருசத்துக்கு முந்தி எனக்குக் கல்யாணம் ஆச்சு. அன்னைக்கே அவருகிட்டே நான் சொல்

லிட்டேனே. அங்க இங்க போயிட்டு நேரங்கழிச்சு வந்தீங்கன்னா காலை ஒடிச்சுடுவேன். சீட்டு கீட்டு ஆடினீங்க… கையை ஒடிச்சிடுவேன். தண்ணி கிண்ணி அடிச்சீங்கன்னா, அவ்வளவுதான் வாயைக் கிழிச்சிடுவேன்னு கறாராச் சொன்னேன் தங்கச்சி. நீயும் அதே மாதிரி இன்னிக்கே உன் புருசன்கிட்டே சொல்லிப்புடு”.

“நீங்க சொன்னது சரிக்கா. அதைக்கேட்டு உங்க ஊட்டுக்காரரு திருந்திட்டாரா?”

“அதை ஏன்டி கேக்கறே? அன்னக்கி போனவருதான் இன்னமும் ஊட்டுக்கே வரல்லே”.

“அடப்பாவமே அப்படின்னா எனக்கும் அந்த மாதிரி யோசனை சொல்றீங்களே ஏனக்கா?”

“ம்… நான் ஒன்ட்டியா இருக்கேன்ல. நீயும் வந்து உட்கார்ந்தா பேச்சுத்துணை கிடைக்கு மேன்னுதான்”.

நாம் நடந்துகொள்ளும் முறையில் மற்றவர் மனம் திருந்த வேண்டுமே தவிர, கடிந்து

சொல்லித் திருத்திவிட முடியாது. அதிலும் கணவனும் மனைவியும் கருத்துக்களைப் பேசாமலே உணர்த்திவிட முடியுமே!

இரவு உணவெல்லாம் முடித்தபின் பக்கத்தில் வந்தமரும் மனைவியிடம் நாம் ஏதும் சொல்லாமல், அவள் கையை எடுத்து நம் கையில் வைத்துக் கொண்டு அதில் ஓர் அழுத்தம் கொடுக்கும்போது, அவள் ஒரு மாதிரி தலையைச் சாய்த்து ஓரப்பார்வை பார்த்து “ஆமா. உங்களுக்கு வேற வேலையே இல்லை” என்கிறாளே. நாம் ஏதாவது சொன்னோமா?

இதுதான் இல்லறம். இவர்கள்தான் கணவன் மனைவி. இங்குதான் சொக்கவைக்கும் சொர்க்கம் உருவாகிறது.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...

thannambikkai

எல்லாம் தெரிஞ்ச, ஏகாம்பரம் என்று ஒருவர் இருந்தார். தனக்கு எல்லாமே தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வார். ஊரில் உள்ளோர் அவருக்கு எல்லாமே தெரியும் என்று நம்பினர்.

அந்தப் பகுதியிலேயே பனைமரம் கிடையாது. எங்கிருந்தோ, எப்படியோ, யாரோ ஒரு பனம்பழத்தைத் தெருவில் போட்டு வைத்திருந்தார். யாரோ ஒருவர் கண்ணில் பனம்பழம் பட்டுவிட்டது. அவருக்கு அது ஒரு வினோதப் பொருளாகத் தெரிந்தது. ஊரே கூடிவிட்டது. யாருக்கும் அது என்னவென்று தெரியவில்லை.

எல்லோரும் ஏகோபித்த முடிவுக்கு வந்தனர். எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்திடம் செல்வதென்று! சென்றனர். காட்டினர். அவருக்கு மட்டும் பனம்பழம் எப்படி அறிமுகமாகியிருக்கும்? ஏகாம்பரம் அகராதியில்தான் தெரியாது என்ற சொல்லே இல்லையே! வந்திருக்கும் அனைவருக்குமே இது பற்றித் தெரியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அப்போதுதானே எது வேண்டுமானாலும் சொல்லலாம்! அது என்ன என்பதை சபைக்கு உரத்த குரலில் அறிவித்தார். நம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.

“இதுதான் கரடி முட்டை”

எல்லோரும் கலைந்து போகும்போது கலவரந்தோய்ந்த முகத்துடன் சென்றனர். கலவரம் இருக்காதா பின்னே? எப்போது கரடி முட்டை கிடக்கிறதோ, அப்போதே இங்கு இரவில் கரடி வருகிறதென்று உறுதியாகிறது. ஆகவே, இரவில் குழந்தைகளை வெளியில் அனுப்பக்கூடாது. நாமும் கூடுமானவரை கையில் ஆயுதமில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்று பீதியடைந்து பேசிக்கொண்டே சென்றனர்.

எல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்க முடியாது. ஒன்றில் பெரியர், ஒன்றில் சிறியர் என்றார் கவிமணி. அறிவியல் மேதை அப்துல் கலாமுக்கு பூக்களைக் கொண்டு மாலை தொடுக்கத் தெரியாமல் இருக்கலாம். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழி தெரியாமல் இருக்கலாம். இது ஒன்றும் குறையல்ல. பூமாலை கொடுக்கும் பணியை அந்தத் தொழிலாளியிடம் விடலாம். திருத்துறைப் பூண்டிக்குச் செல்லும் வழியைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் செய்யலாம்.

எனக்கு இதுவும் தெரியும். இதற்கு மேலும் தெரியும் என்று எண்ணிக்கொண்டு, திருத்துறைப் பூண்டிக்குப் பதிலாக மயிலாடுதுறைக்குப் போய் நிற்கலாமா? மாலை கட்டுவதாக பூக்களை உதிர்த்து விட்டு நாரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு நிற்கலாமா?

இன்னும் சிலரோ திருத்துறைப்பூண்டிக்குப் பதிலாக மயிலாடுதுறை சென்றதோடு இல்லாமல், மயிலாடுதுறையை இதுதான் திருத்துறைப்பூண்டி என்றும் சாதிப்பார்கள். நாரை வைத்துக்கொண்டு இதுதான் மாலை, இப்படித்தான் கட்ட வேண்டும் என்றும் தீர்த்துக் கட்டுவார்கள். இது எதைக் காட்டுகிறது? எனக்குத் தெரிந்த வேலையில் தான் நான் ஈடுபட வேண்டும். தெரியாத வேலையில் முனைந்து ‘திருதிரு’ வென விழிக்கக்கூடாது. தெரியாத்தைச் செய்ய நினைத்து, முடியாதபோது, தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாமல் தான் செய்ததே சரியென்று வாதிடுவது அதைவிடப் பெருந்தவறாகும்.

ஒரு வழக்காடு மன்றம். நான் நடுவர். கண்ணப்ப நாயனார் பற்றிய வழக்கு வாதாடுபவர் கண்ணப்பன் கண்டபடி பூசை செய்தான். கோயில் அர்ச்சகர் சிவகோசரியார் ஆகம நெறிப்படி பூசை செய்தார் என்று சொல்ல வருகிறார். ஆகம நெறிப்படி என்று சொல்லத் தெரியவில்லை. “சிவகோசரியார் எப்படி ஐயா பூசை செய்தார்?” என்று என்னிடம் கேட்க, நாம் “ஆகமவிதிப்படி” என்று கூறினேன்.

மேற்கொண்டு வளர்த்தாமல் மேலே வாதிட வேண்டிய அந்த நண்பர், “அதான், உங்களுக்குத் தெரியுதான்னு பார்த்தேன்” என்றார். “நீ என்னைத் தானா சோதிப்பாய்? உங்க அப்பாவையே சோதிப்பியே!” என்று சொன்னேன். நாணினார்.

தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லை. மறதி இருக்கலாம். கேட்டுச்சொல்ல்லாம். ஆனால், மற்றவர்களை இழிவுபடுத்துவதும், மற்றவர்களுக்கு தனக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியாமல் இருப்பது, மன்னிக்க முடியாத குற்றமென்றும் நினைத்துப் பேசக்கூடாது. தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ளலாம். பிறரை இழிவாக நினைக்க எனக்கு ஏது உரிமை?

கங்கையில் படகு செல்கிறது. ஒரு பண்டிதரை வைத்துக்கொண்டு, படகோட்டி படகைச்செலுத்துகிறார். அன்னப்பறவை நீந்துவதுபோல படகு அலுங்காமல் குலுங்காமல் செல்லும் வண்ணமாக நீரோட்டம் தெரிந்தது. காற்றின் திசை தெரிந்து அழகாகப் படகு செலுத்துகிறார். ரசித்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும்.

பண்டிதர் படகோட்டியிடம், “உனக்கு இராமாயணம் தெரியுமா? “என்றார்.

படகோட்டி, “தெரியாது, சுவாமி” என்றான்.

“அப்படியா? வாழ்க்கையில் கால்பகுதியை வீணாக்கிவிட்டாயே! போகிறது. பாகவதமாவது தெரியுமா?” என்றார்.

“தெரியாதுங்களே”

“அடபோப்பா, வாழ்க்கையின் அரைப் பகுதியைத்தொலைத்து விட்டாயே! தொலையட்டும். பகவத்கீதையாவது தெரியுமா?”

“தெரியாதே பிரபு”

“ஐயய்யோ வாழ்க்கையின் முக்கால் பகுதியை வீணாக்கிட்டியேப்பா. இதெல்லாம் கூடத் தெரிஞ்சுக்காம வாழ்ந்திருக்கியே, நீயெல்லாம் மனுஷனா?”

இவ்வாறு பண்டிதர் கேட்டபோது, படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உள்ளே நுழைவதைக் கண்ட படகோட்டி திடுக்கிட்டுக் கேட்டான்.

“சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

“தெரியாதேப்பா!”

“சுவாமி உங்களோட முழு வாழ்க்கையும் இப்போ முடியப்போகுதே என்ன செய்வீங்க?”

பண்டிதர் கதி என்னாயிற்று என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்வீர்களே!

படகோட்டிக்குக் கல்வியறிவு இல்லை. பண்டிதருக்கோ வாழ்வியல் அறிவு இல்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாதபோது எல்லோருமே சமந்தானே!

என்னுடைய அறிவு எனக்குப் பெரிதுதான். அவருடைய அறிவு அவருக்கப் பெரிதாயிற்றே! எண்ணிப் பார்த்ததுண்டா நாம்?

யாரையும் அலட்சியம் செய்யக்கூடாது.

“சிங்கமும் சுண்டெலியும்” கதை சிறு குழந்தையாக இருக்கும்போது படித்ததுதான். மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்போமே. சிங்கதின் மீது அது உறங்கும்போது ஏறி விளையாடுகிறது எலி. விழித்தெழுந்த சிங்கம் ஆர்ப்பரித்தது. “சுண்டெலி நீ என் மீது ஏறி விளையாட என்ன தைரியம்”

“மன்னிச்சுடுங்க மகாராஜா நான் எப்பவாவது உங்களுக்கு உதவுவேன்”

“உன் உதவி எனக்குத் தேவையா? அற்பப் பயலே. நான் சிங்கம் – சுண்டெலி, எனக்கெப்படி உன்னால் உதவமுடியும்? சரி, சரி ஓடிப்போ, இனிமேல் இப்படி விளையாடதே! மன்னிக்கிறேன். ஓடிவிடு”.

மன்னிக்கும் மனோபாவம் ஒன்றுமில்லை. அன்று என்னவோ, சுண்டெலியின் அதிர்ஷ்டம் சிங்கத்துக்குப் பசிதான் இல்லையோ, அல்லது சுண்டெலி தன் பசிக்குப் போதாது நினைத்தோ தெரியவில்லை. எவ்வாறாயினும் சுண்டெலி பிழைத்து.

மற்றொரு நாள், வேடன் விரித்திருந்த வலையில் சிங்கம் அகப்பட்டுக்கொண்டது. கர்ஜித்து என்ன பயன்? காப்பாற்ற யாரும் இல்லை. அல்லது எதுவும் இல்லை. அப்போது ஓடிவந்த சுண்டெலி வலையை சிறிது சிறிதாகக் கடித்து அறுத்துவிட்டு சிங்கத்தை வெளியேற்றி வைத்தது.

சிங்கம் இப்போது உணர்கிறது. மகாராஜா “தான்” என்றும் “மகா அற்பம்” சுண்டெலி என்றும் நினைத்திருந்த சிங்கத்தின் மனோ ராஜ்யம் சிதைந்துவிட்டது. இதோ, கண் முன்னேயே, சாக இருந்த மகாராஜாவை மகா அற்பம் காப்பாற்றி இருக்கிறதே!

இப்போது சிங்கத்தின் கண்களில், சுண்டெலி பிரம்மாண்டமாகத் தெரிகிறது. பிரமாண்டமாக இருந்த தான் ஒரு சுண்டெலியாகி கைகட்டி வாய்பொத்தி நிற்பதாகத் தெரிகிறது.

இதை நிறையவே சிந்தித்துப்பார்த்த திருவள்ளுவர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – என்கிறார்.

உருவத் தோற்றத்தால் எளிமையாக எண்ணிவிடக்கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எவ்வளவு பெரியது! அதன் அதிகாரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது! அந்த சாம்ராஜ்யத்துக்கு ஒரு உருவம் கொடுத்துப் பார்க்க வேண்டுமானால் , அது வின்ஸ்டன் சர்ச்சில் உருவமாகத் தெரியும். வாயில் மொத்தமான சுருட்டு. கண்ணில் அலட்சியப் பார்வை. நாக்கில் எவரையும் பொருட்படுத்திப் பேசாத ஆணவம்!

அவரை எதிர்த்து நிற்பவர் யார்?

ஆசியாக் கண்டத்தின் அரை நிர்வாணப் பக்கிரி என்று ஆணவக்கார சர்ச்சிலால் அழைப்பப்பெற்றவர்.

முழங்கால்வரை வேட்டி கட்டி, மேல் உடம்புக்குச் சட்டை போடாமல் துண்டு போர்த்தியவர்.

பழங்காலக் கண்ணாடியைக் கண்ணில் அணிந்தவர். இடுப்பில் ஒரு சங்கிலி மாட்டிய கடிகாரம். ராட்டையில் நூற்றுக்கொண்டு, எவரையும் நிமிர்ந்து நோக்காதவர், பொக்கை வாய்ச் சிரிப்பு கொண்ட பொல்லாத கிழவர்.

அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. “மகாத்மா” என்றும் “காந்திஜி” என்றும் அன்போடு அழைக்கப்பெற்ற தேசந்தந்தை.

சர்ச்சிலுக்குத்துணை நிற்க, பீரங்கிப்படை, விமானப்படை, கப்பற்படை, காலாட்படை என்று ஏராள ஆயுதப் படை! காந்தியடிகளுக்குத் துணை அகிம்சையும் சத்தியமும்! சமமான எதிரிகளா? இல்லை.

சர்வவல்லமை படைத்தவரை எதிர்த்துச் சாமானியமான கிராமத்து விவசாயிக் கோலங்கொண்ட ஒல்லியான கிழவர்! சர்ச்சில் கை பிசைந்து நிற்கிறார். சுருட்டு புகையுடன் சொற்களை உச்சரிக்கிறார்.

“என்னை எதிர்த்து, பீரங்கி துப்பாக்கியோடு வந்தால் போரட்டு ஒழித்துவிடலாம். வெறுங்கையோடு நின்று கொண்டிருப்பவரோடு எப்படிப் போரிடுவது? சங்கடமாக அல்லவா இருக்கிறது?”

பீரங்கியும், துப்பாக்கியும், விமானப்படையும், கப்பற்படையும் எல்லாம் செயலற்று வீழ, வெறுங்கை மனிதர் காந்தியடிகளின் வெள்ளையரை வென்று இந்தியாவுக்கு விடுதலையை வாங்கி வழங்கிவிட்டாரே!

சுதந்திரம் வாங்கித் தந்தவர் எந்தப் பதவியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவர் மகாத்மா என்பதால் எந்த ஒரு பதவியையும் ஏற்காமல் இருந்தார். இப்படி நடக்கப் போவதை உய்த்துணர்ந்தோ என்னவோ, “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லி வைத்துச் சென்றுள்ளார். எவரையும் அலட்சியம் செய்யாது இருப்போம்.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பதை அறிந்து அவ்வாற்றலை மதித்துப் போற்றுவோம்.

பெருமிதம் இருக்கலாம், ஆணவன் இருக்க வேண்டாம். எளிமை கண்டு இகழ வேண்டாம்.

அவரவர்க்கும் உரிய மதிப்பை அளிப்போம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...

thannambikkai

எல்லாம் தெரிஞ்ச, ஏகாம்பரம் என்று ஒருவர் இருந்தார். தனக்கு எல்லாமே தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வார். ஊரில் உள்ளோர் அவருக்கு எல்லாமே தெரியும் என்று நம்பினர்.

அந்தப் பகுதியிலேயே பனைமரம் கிடையாது. எங்கிருந்தோ, எப்படியோ, யாரோ ஒரு பனம்பழத்தைத் தெருவில் போட்டு வைத்திருந்தார். யாரோ ஒருவர் கண்ணில் பனம்பழம் பட்டுவிட்டது. அவருக்கு அது ஒரு வினோதப் பொருளாகத் தெரிந்தது. ஊரே கூடிவிட்டது. யாருக்கும் அது என்னவென்று தெரியவில்லை.

எல்லோரும் ஏகோபித்த முடிவுக்கு வந்தனர். எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்திடம் செல்வதென்று! சென்றனர். காட்டினர். அவருக்கு மட்டும் பனம்பழம் எப்படி அறிமுகமாகியிருக்கும்? ஏகாம்பரம் அகராதியில்தான் தெரியாது என்ற சொல்லே இல்லையே! வந்திருக்கும் அனைவருக்குமே இது பற்றித் தெரியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அப்போதுதானே எது வேண்டுமானாலும் சொல்லலாம்! அது என்ன என்பதை சபைக்கு உரத்த குரலில் அறிவித்தார். நம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.

“இதுதான் கரடி முட்டை”

எல்லோரும் கலைந்து போகும்போது கலவரந்தோய்ந்த முகத்துடன் சென்றனர். கலவரம் இருக்காதா பின்னே? எப்போது கரடி முட்டை கிடக்கிறதோ, அப்போதே இங்கு இரவில் கரடி வருகிறதென்று உறுதியாகிறது. ஆகவே, இரவில் குழந்தைகளை வெளியில் அனுப்பக்கூடாது. நாமும் கூடுமானவரை கையில் ஆயுதமில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்று பீதியடைந்து பேசிக்கொண்டே சென்றனர்.

எல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்க முடியாது. ஒன்றில் பெரியர், ஒன்றில் சிறியர் என்றார் கவிமணி. அறிவியல் மேதை அப்துல் கலாமுக்கு பூக்களைக் கொண்டு மாலை தொடுக்கத் தெரியாமல் இருக்கலாம். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழி தெரியாமல் இருக்கலாம். இது ஒன்றும் குறையல்ல. பூமாலை கொடுக்கும் பணியை அந்தத் தொழிலாளியிடம் விடலாம். திருத்துறைப் பூண்டிக்குச் செல்லும் வழியைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் செய்யலாம்.

எனக்கு இதுவும் தெரியும். இதற்கு மேலும் தெரியும் என்று எண்ணிக்கொண்டு, திருத்துறைப் பூண்டிக்குப் பதிலாக மயிலாடுதுறைக்குப் போய் நிற்கலாமா? மாலை கட்டுவதாக பூக்களை உதிர்த்து விட்டு நாரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு நிற்கலாமா?

இன்னும் சிலரோ திருத்துறைப்பூண்டிக்குப் பதிலாக மயிலாடுதுறை சென்றதோடு இல்லாமல், மயிலாடுதுறையை இதுதான் திருத்துறைப்பூண்டி என்றும் சாதிப்பார்கள். நாரை வைத்துக்கொண்டு இதுதான் மாலை, இப்படித்தான் கட்ட வேண்டும் என்றும் தீர்த்துக் கட்டுவார்கள். இது எதைக் காட்டுகிறது? எனக்குத் தெரிந்த வேலையில் தான் நான் ஈடுபட வேண்டும். தெரியாத வேலையில் முனைந்து ‘திருதிரு’ வென விழிக்கக்கூடாது. தெரியாத்தைச் செய்ய நினைத்து, முடியாதபோது, தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாமல் தான் செய்ததே சரியென்று வாதிடுவது அதைவிடப் பெருந்தவறாகும்.

ஒரு வழக்காடு மன்றம். நான் நடுவர். கண்ணப்ப நாயனார் பற்றிய வழக்கு வாதாடுபவர் கண்ணப்பன் கண்டபடி பூசை செய்தான். கோயில் அர்ச்சகர் சிவகோசரியார் ஆகம நெறிப்படி பூசை செய்தார் என்று சொல்ல வருகிறார். ஆகம நெறிப்படி என்று சொல்லத் தெரியவில்லை. “சிவகோசரியார் எப்படி ஐயா பூசை செய்தார்?” என்று என்னிடம் கேட்க, நாம் “ஆகமவிதிப்படி” என்று கூறினேன்.

மேற்கொண்டு வளர்த்தாமல் மேலே வாதிட வேண்டிய அந்த நண்பர், “அதான், உங்களுக்குத் தெரியுதான்னு பார்த்தேன்” என்றார். “நீ என்னைத் தானா சோதிப்பாய்? உங்க அப்பாவையே சோதிப்பியே!” என்று சொன்னேன். நாணினார்.

தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லை. மறதி இருக்கலாம். கேட்டுச்சொல்ல்லாம். ஆனால், மற்றவர்களை இழிவுபடுத்துவதும், மற்றவர்களுக்கு தனக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியாமல் இருப்பது, மன்னிக்க முடியாத குற்றமென்றும் நினைத்துப் பேசக்கூடாது. தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ளலாம். பிறரை இழிவாக நினைக்க எனக்கு ஏது உரிமை?

கங்கையில் படகு செல்கிறது. ஒரு பண்டிதரை வைத்துக்கொண்டு, படகோட்டி படகைச்செலுத்துகிறார். அன்னப்பறவை நீந்துவதுபோல படகு அலுங்காமல் குலுங்காமல் செல்லும் வண்ணமாக நீரோட்டம் தெரிந்தது. காற்றின் திசை தெரிந்து அழகாகப் படகு செலுத்துகிறார். ரசித்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும்.

பண்டிதர் படகோட்டியிடம், “உனக்கு இராமாயணம் தெரியுமா? “என்றார்.

படகோட்டி, “தெரியாது, சுவாமி” என்றான்.

“அப்படியா? வாழ்க்கையில் கால்பகுதியை வீணாக்கிவிட்டாயே! போகிறது. பாகவதமாவது தெரியுமா?” என்றார்.

“தெரியாதுங்களே”

“அடபோப்பா, வாழ்க்கையின் அரைப் பகுதியைத்தொலைத்து விட்டாயே! தொலையட்டும். பகவத்கீதையாவது தெரியுமா?”

“தெரியாதே பிரபு”

“ஐயய்யோ வாழ்க்கையின் முக்கால் பகுதியை வீணாக்கிட்டியேப்பா. இதெல்லாம் கூடத் தெரிஞ்சுக்காம வாழ்ந்திருக்கியே, நீயெல்லாம் மனுஷனா?”

இவ்வாறு பண்டிதர் கேட்டபோது, படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உள்ளே நுழைவதைக் கண்ட படகோட்டி திடுக்கிட்டுக் கேட்டான்.

“சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

“தெரியாதேப்பா!”

“சுவாமி உங்களோட முழு வாழ்க்கையும் இப்போ முடியப்போகுதே என்ன செய்வீங்க?”

பண்டிதர் கதி என்னாயிற்று என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்வீர்களே!

படகோட்டிக்குக் கல்வியறிவு இல்லை. பண்டிதருக்கோ வாழ்வியல் அறிவு இல்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாதபோது எல்லோருமே சமந்தானே!

என்னுடைய அறிவு எனக்குப் பெரிதுதான். அவருடைய அறிவு அவருக்கப் பெரிதாயிற்றே! எண்ணிப் பார்த்ததுண்டா நாம்?

யாரையும் அலட்சியம் செய்யக்கூடாது.

“சிங்கமும் சுண்டெலியும்” கதை சிறு குழந்தையாக இருக்கும்போது படித்ததுதான். மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்போமே. சிங்கதின் மீது அது உறங்கும்போது ஏறி விளையாடுகிறது எலி. விழித்தெழுந்த சிங்கம் ஆர்ப்பரித்தது. “சுண்டெலி நீ என் மீது ஏறி விளையாட என்ன தைரியம்”

“மன்னிச்சுடுங்க மகாராஜா நான் எப்பவாவது உங்களுக்கு உதவுவேன்”

“உன் உதவி எனக்குத் தேவையா? அற்பப் பயலே. நான் சிங்கம் – சுண்டெலி, எனக்கெப்படி உன்னால் உதவமுடியும்? சரி, சரி ஓடிப்போ, இனிமேல் இப்படி விளையாடதே! மன்னிக்கிறேன். ஓடிவிடு”.

மன்னிக்கும் மனோபாவம் ஒன்றுமில்லை. அன்று என்னவோ, சுண்டெலியின் அதிர்ஷ்டம் சிங்கத்துக்குப் பசிதான் இல்லையோ, அல்லது சுண்டெலி தன் பசிக்குப் போதாது நினைத்தோ தெரியவில்லை. எவ்வாறாயினும் சுண்டெலி பிழைத்து.

மற்றொரு நாள், வேடன் விரித்திருந்த வலையில் சிங்கம் அகப்பட்டுக்கொண்டது. கர்ஜித்து என்ன பயன்? காப்பாற்ற யாரும் இல்லை. அல்லது எதுவும் இல்லை. அப்போது ஓடிவந்த சுண்டெலி வலையை சிறிது சிறிதாகக் கடித்து அறுத்துவிட்டு சிங்கத்தை வெளியேற்றி வைத்தது.

சிங்கம் இப்போது உணர்கிறது. மகாராஜா “தான்” என்றும் “மகா அற்பம்” சுண்டெலி என்றும் நினைத்திருந்த சிங்கத்தின் மனோ ராஜ்யம் சிதைந்துவிட்டது. இதோ, கண் முன்னேயே, சாக இருந்த மகாராஜாவை மகா அற்பம் காப்பாற்றி இருக்கிறதே!

இப்போது சிங்கத்தின் கண்களில், சுண்டெலி பிரம்மாண்டமாகத் தெரிகிறது. பிரமாண்டமாக இருந்த தான் ஒரு சுண்டெலியாகி கைகட்டி வாய்பொத்தி நிற்பதாகத் தெரிகிறது.

இதை நிறையவே சிந்தித்துப்பார்த்த திருவள்ளுவர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – என்கிறார்.

உருவத் தோற்றத்தால் எளிமையாக எண்ணிவிடக்கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எவ்வளவு பெரியது! அதன் அதிகாரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது! அந்த சாம்ராஜ்யத்துக்கு ஒரு உருவம் கொடுத்துப் பார்க்க வேண்டுமானால் , அது வின்ஸ்டன் சர்ச்சில் உருவமாகத் தெரியும். வாயில் மொத்தமான சுருட்டு. கண்ணில் அலட்சியப் பார்வை. நாக்கில் எவரையும் பொருட்படுத்திப் பேசாத ஆணவம்!

அவரை எதிர்த்து நிற்பவர் யார்?

ஆசியாக் கண்டத்தின் அரை நிர்வாணப் பக்கிரி என்று ஆணவக்கார சர்ச்சிலால் அழைப்பப்பெற்றவர்.

முழங்கால்வரை வேட்டி கட்டி, மேல் உடம்புக்குச் சட்டை போடாமல் துண்டு போர்த்தியவர்.

பழங்காலக் கண்ணாடியைக் கண்ணில் அணிந்தவர். இடுப்பில் ஒரு சங்கிலி மாட்டிய கடிகாரம். ராட்டையில் நூற்றுக்கொண்டு, எவரையும் நிமிர்ந்து நோக்காதவர், பொக்கை வாய்ச் சிரிப்பு கொண்ட பொல்லாத கிழவர்.

அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. “மகாத்மா” என்றும் “காந்திஜி” என்றும் அன்போடு அழைக்கப்பெற்ற தேசந்தந்தை.

சர்ச்சிலுக்குத்துணை நிற்க, பீரங்கிப்படை, விமானப்படை, கப்பற்படை, காலாட்படை என்று ஏராள ஆயுதப் படை! காந்தியடிகளுக்குத் துணை அகிம்சையும் சத்தியமும்! சமமான எதிரிகளா? இல்லை.

சர்வவல்லமை படைத்தவரை எதிர்த்துச் சாமானியமான கிராமத்து விவசாயிக் கோலங்கொண்ட ஒல்லியான கிழவர்! சர்ச்சில் கை பிசைந்து நிற்கிறார். சுருட்டு புகையுடன் சொற்களை உச்சரிக்கிறார்.

“என்னை எதிர்த்து, பீரங்கி துப்பாக்கியோடு வந்தால் போரட்டு ஒழித்துவிடலாம். வெறுங்கையோடு நின்று கொண்டிருப்பவரோடு எப்படிப் போரிடுவது? சங்கடமாக அல்லவா இருக்கிறது?”

பீரங்கியும், துப்பாக்கியும், விமானப்படையும், கப்பற்படையும் எல்லாம் செயலற்று வீழ, வெறுங்கை மனிதர் காந்தியடிகளின் வெள்ளையரை வென்று இந்தியாவுக்கு விடுதலையை வாங்கி வழங்கிவிட்டாரே!

சுதந்திரம் வாங்கித் தந்தவர் எந்தப் பதவியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவர் மகாத்மா என்பதால் எந்த ஒரு பதவியையும் ஏற்காமல் இருந்தார். இப்படி நடக்கப் போவதை உய்த்துணர்ந்தோ என்னவோ, “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லி வைத்துச் சென்றுள்ளார். எவரையும் அலட்சியம் செய்யாது இருப்போம்.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பதை அறிந்து அவ்வாற்றலை மதித்துப் போற்றுவோம்.

பெருமிதம் இருக்கலாம், ஆணவன் இருக்க வேண்டாம். எளிமை கண்டு இகழ வேண்டாம்.

அவரவர்க்கும் உரிய மதிப்பை அளிப்போம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


“இந்தப் பிள்ளையாருக்கு எத்தனை முறை தேனபிஷேகம் பண்ணியிருப்பேன்? எத்தனை தடைவை சந்தக்க் காப்பு செஞ்சிருப்பேன்? என்னை இப்படி சோதிக்கிறாரே? செய்யலாமா?”

“அந்த மனுஷன் மகா நன்றிகெட்டவன் சார்? அவருக்கு ஒடம்பு சரியில்லேன்னதும் ஆஸ்பத்திரிக்கு ‘லொங்கு லொங்கு’ ன்னு ஓடி ஓடிப் பார்த்துக்கிட்டேனே? ஒரு நூறு ரூபா கேட்டப்போ இல்லேன்னு எடுத்தெறிஞ்சி பேசிட்டானே? இனிமேதான் அவனுக்கு இருக்கு. பாருங்க அவன் படாதபாடு படப்போறான்!”

“பெரிய பயலப் பாருங்க சார்! அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லே ஓர் ஆயிரம் ரூபா அனுப்புடான்னு எழுதினேன். இப்ப முடியாது எழுதியிருக்கான் சார். இந்தப் பயல வளர்த்து ஆளாக்க நான் என்ன பாடுபட்டிருக்கேன்! மெட்ராஸ்ல பார்க்காத வைத்தியம் இல்லை! எவ்வளவு செலவழிச்சிருக்கேன்?”

இப்படி பலபேர் அங்கலாய்ப்பதைக் கேட்டிருக்கிறோம். இந்த மனச்சங்கடத்துக்கு என்ன காரணம்ழ நாம் எது ஒன்றையும் செய்யும்போது பலனை எதிர்பார்த்துச் செய்வதே இதற்குக் காரணம்.

மகனுக்கே சாபம்

பெண் குழந்தை பிறந்தால் பரிதவிக்கிறோம். ஆண் குழந்தை பிறந்தால் அகமகிழ்கிறோம். என்ன காரணம்? பெண் குழந்தை பிறந்தால் திருமணச் செலவு ஆகும். படிக்க வைக்கச் செலவு ஆகும். படித்து முடித்துக் கணவனுக்குத்தான் பயன். வேறு குடும்பம் நன்மையடைய நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்? ஆண்குழந்தைத என்றால் அவன் படித்து முடித்து வேலைபார்த்து நமக்கு உதவுவான். கடைசிக்காலத்தில் அவன் தயவில் நாம் வாழலாம். எனக்கும் மனைவிக்கும் கவலையில்லை. இவ்வாறு நினைப்பதால் தான், பெண் குழந்தை பிறந்ததும் மனக்கஷ்டப்படுவதும் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் ஆகாயத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதிபதும் நடக்கிறது. அந்த ஆண் குழந்தை கடைசிக்காலத்தில் நமக்கு உதவாதபோது துன்ப்ப் படுகிறோம். மனம் தாங்குவதில்லை. நாம் பெற்ற மகனுக்கே சாபமிடுகிறோம்.

பக்தியா – கடமையா?

முகம்மது நபி, எப்போதும் எல்லாக்காலங்களிலும் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து, நண்பர்களிடம் ‘இவர் எப்போதும் தொழுகையில் ஈடுபட்டிருக்கிறாரே, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்?’ என்று கேட்டிருக்கிறார். ‘இவர் அண்ணன் விறகு வெட்டியாக வேலை செய்து வருகிறார். அவர் வீட்டில் இவர் சாப்பிட்டுக் கொள்கிறார்’ என்றார்களாம்.

அப்போது முகம்மது நபி அவர்கள்,

அவரிடம் சொல்லுங்கள், ‘பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு, தொழுகையல் சதா ஈடுறபடுகிறவர்களின் வணக்கத்தை அல்லா ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று சொன்னாராம்.

எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார்..! இறைவனிடம் பக்தி செலுத்துவதை முக்கியந்தான் என்று ஏற்றுக்கொண்டாலும், கடமையைச் சரிவரச் செய்வது அதைவிட முக்கியம் என்றே மேலோர்கள் சொல்லுகிறார்கள்.

எதையாவது ஒன்றை வேண்டிப் பெறுவதற்காகவே இறைவனைத் தொழுதால் அது வியாபாரமாக ஆகிவிடுகிறது. இறைவனிடமே ஒன்றை எதிர்பார்த்து பக்தி செய்யக்கூடாது என்னும்போது,மனிதர்களிடம் ஒன்றை எதிர்பார்த்து எதையாவது செய்வதை எவ்வாறு ஏற்க முடியும்?

என்னை நன்றாக இறைவன் படைத்தன்ன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

என்று திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது.

அவன்ப் பாடுவதற்காகவே – போற்றுவதற்காகவே நான் இருக்கிறேன் என்ற உணர்வுதான் பக்தி, அன்றாட வாழ்வுக்கு வளர்த்துக் கொண்டு வீணே அல்லல்பட வேண்டியதில்லை.

நல்லது செய்

நல்லது செய்வது மானுடப்பிறவியின் பணி. அதற்காகவே நல்லது செய்கிறேன் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். நல்லது நல்ல விளைவைத்தான் உண்டாக்கும். ஆனால், விளைவது நமக்கே கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது பிழை.

நல்ல பெண் குழந்தை, நிறையப் படிக்க வைக்கிறோம். உரிய பருவம், கவர்ச்சி தரும் அழகு. வியக்க வைக்கும் அறிவு. எல்லாம் நிறைந்துவிடுகிறது. பின் என்ன செய்கிறோம்? இந்த எல்லா நிறைவுகளையும் சேர்த்து ஒரு ஆண் மகன் கையில் கொடுத்துவிடுகிறோம் இல்லையாழ இதுதான் மனித வாழ்வின் மாண்பு ஆகும்.

இதோ ஒரு கதை!

சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும்ப் பூவும் மணக்க நெய் த்தும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,

ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் தின்று முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர். நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.

எது சொர்க்கம்?

இந்தக் கதை என்ன சொல்கிறது? எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்ப்ப்படமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.

அரிச்சந்திரன் நாட்டை இழந்தான். மனைவியை விற்றான். மகனை இழந்தான். ஆயினும் பொய் சொல்லாமல் உண்மையே பேசினேன். என்று பாடம் நடத்தி விட்டு இதிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? என்று கேட்டேன்.

ஒரு மாணவன் சொன்னான், “உண்மை பேசினால் மனைவியை விற்க நேரும்” என்றான். தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்வோம்.

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


“இந்தப் பிள்ளையாருக்கு எத்தனை முறை தேனபிஷேகம் பண்ணியிருப்பேன்? எத்தனை தடைவை சந்தக்க் காப்பு செஞ்சிருப்பேன்? என்னை இப்படி சோதிக்கிறாரே? செய்யலாமா?”

“அந்த மனுஷன் மகா நன்றிகெட்டவன் சார்? அவருக்கு ஒடம்பு சரியில்லேன்னதும் ஆஸ்பத்திரிக்கு ‘லொங்கு லொங்கு’ ன்னு ஓடி ஓடிப் பார்த்துக்கிட்டேனே? ஒரு நூறு ரூபா கேட்டப்போ இல்லேன்னு எடுத்தெறிஞ்சி பேசிட்டானே? இனிமேதான் அவனுக்கு இருக்கு. பாருங்க அவன் படாதபாடு படப்போறான்!”

“பெரிய பயலப் பாருங்க சார்! அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லே ஓர் ஆயிரம் ரூபா அனுப்புடான்னு எழுதினேன். இப்ப முடியாது எழுதியிருக்கான் சார். இந்தப் பயல வளர்த்து ஆளாக்க நான் என்ன பாடுபட்டிருக்கேன்! மெட்ராஸ்ல பார்க்காத வைத்தியம் இல்லை! எவ்வளவு செலவழிச்சிருக்கேன்?”

இப்படி பலபேர் அங்கலாய்ப்பதைக் கேட்டிருக்கிறோம். இந்த மனச்சங்கடத்துக்கு என்ன காரணம்ழ நாம் எது ஒன்றையும் செய்யும்போது பலனை எதிர்பார்த்துச் செய்வதே இதற்குக் காரணம்.

மகனுக்கே சாபம்

பெண் குழந்தை பிறந்தால் பரிதவிக்கிறோம். ஆண் குழந்தை பிறந்தால் அகமகிழ்கிறோம். என்ன காரணம்? பெண் குழந்தை பிறந்தால் திருமணச் செலவு ஆகும். படிக்க வைக்கச் செலவு ஆகும். படித்து முடித்துக் கணவனுக்குத்தான் பயன். வேறு குடும்பம் நன்மையடைய நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்? ஆண்குழந்தைத என்றால் அவன் படித்து முடித்து வேலைபார்த்து நமக்கு உதவுவான். கடைசிக்காலத்தில் அவன் தயவில் நாம் வாழலாம். எனக்கும் மனைவிக்கும் கவலையில்லை. இவ்வாறு நினைப்பதால் தான், பெண் குழந்தை பிறந்ததும் மனக்கஷ்டப்படுவதும் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் ஆகாயத்திற்கும் பூமிக்கும் துள்ளிக்குதிபதும் நடக்கிறது. அந்த ஆண் குழந்தை கடைசிக்காலத்தில் நமக்கு உதவாதபோது துன்ப்ப் படுகிறோம். மனம் தாங்குவதில்லை. நாம் பெற்ற மகனுக்கே சாபமிடுகிறோம்.

பக்தியா – கடமையா?

முகம்மது நபி, எப்போதும் எல்லாக்காலங்களிலும் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து, நண்பர்களிடம் ‘இவர் எப்போதும் தொழுகையில் ஈடுபட்டிருக்கிறாரே, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்?’ என்று கேட்டிருக்கிறார். ‘இவர் அண்ணன் விறகு வெட்டியாக வேலை செய்து வருகிறார். அவர் வீட்டில் இவர் சாப்பிட்டுக் கொள்கிறார்’ என்றார்களாம்.

அப்போது முகம்மது நபி அவர்கள்,

அவரிடம் சொல்லுங்கள், ‘பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு, தொழுகையல் சதா ஈடுறபடுகிறவர்களின் வணக்கத்தை அல்லா ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று சொன்னாராம்.

எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார்..! இறைவனிடம் பக்தி செலுத்துவதை முக்கியந்தான் என்று ஏற்றுக்கொண்டாலும், கடமையைச் சரிவரச் செய்வது அதைவிட முக்கியம் என்றே மேலோர்கள் சொல்லுகிறார்கள்.

எதையாவது ஒன்றை வேண்டிப் பெறுவதற்காகவே இறைவனைத் தொழுதால் அது வியாபாரமாக ஆகிவிடுகிறது. இறைவனிடமே ஒன்றை எதிர்பார்த்து பக்தி செய்யக்கூடாது என்னும்போது,மனிதர்களிடம் ஒன்றை எதிர்பார்த்து எதையாவது செய்வதை எவ்வாறு ஏற்க முடியும்?

என்னை நன்றாக இறைவன் படைத்தன்ன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

என்று திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது.

அவன்ப் பாடுவதற்காகவே – போற்றுவதற்காகவே நான் இருக்கிறேன் என்ற உணர்வுதான் பக்தி, அன்றாட வாழ்வுக்கு வளர்த்துக் கொண்டு வீணே அல்லல்பட வேண்டியதில்லை.

நல்லது செய்

நல்லது செய்வது மானுடப்பிறவியின் பணி. அதற்காகவே நல்லது செய்கிறேன் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். நல்லது நல்ல விளைவைத்தான் உண்டாக்கும். ஆனால், விளைவது நமக்கே கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது பிழை.

நல்ல பெண் குழந்தை, நிறையப் படிக்க வைக்கிறோம். உரிய பருவம், கவர்ச்சி தரும் அழகு. வியக்க வைக்கும் அறிவு. எல்லாம் நிறைந்துவிடுகிறது. பின் என்ன செய்கிறோம்? இந்த எல்லா நிறைவுகளையும் சேர்த்து ஒரு ஆண் மகன் கையில் கொடுத்துவிடுகிறோம் இல்லையாழ இதுதான் மனித வாழ்வின் மாண்பு ஆகும்.

இதோ ஒரு கதை!

சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும்ப் பூவும் மணக்க நெய் த்தும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,

ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் தின்று முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர். நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.

எது சொர்க்கம்?

இந்தக் கதை என்ன சொல்கிறது? எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்ப்ப்படமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.

அரிச்சந்திரன் நாட்டை இழந்தான். மனைவியை விற்றான். மகனை இழந்தான். ஆயினும் பொய் சொல்லாமல் உண்மையே பேசினேன். என்று பாடம் நடத்தி விட்டு இதிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? என்று கேட்டேன்.

ஒரு மாணவன் சொன்னான், “உண்மை பேசினால் மனைவியை விற்க நேரும்” என்றான். தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்வோம்.