சுட சுட செய்திகள்

Thursday, September 20, 2012

சட்டத்தின் படி(14) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……


வேலு மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு பைலாக பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகன் அரவிந்த் காலில் விழுந்துக கொண்டிருப்பதைகூட அவர் கவனிக்கவில்லை.

சுற்று பொறுமையிழந்த அரவிந்த் “ அப்பா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா… நான் மாநிலத்தில் 2 வதுமாணவனாக பாஸாயிட்டேன்.” ஏன்று மகி;ழ்ச்சி பொங்க சொன்னான்.


ஏவ்வித சலனமுமின்றி சந்தோசத்தை காட்டாமல் எந்திரிப்பா என்றார் வேலு.

“என்னப்பா மாநிலத்தில் 2 வது மாணவனாக பாஸ் பண்ணியிருக்கேன….; கொஞ்சம் கூட சந்தோசமா இல்லையே..?”

“இல்லைப்பா நான் உன்னை படிக்க வைச்சிருந்தேனா… பாஸ் பண்ணியிருப்ப.. ஆனால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்ட, உன்னை  ஆசிர்வாதம் பண்ணறதுக்கோ சந்தோசப்படறதுக்கோ எனக்கு உரிமையில்லப்பா.”.

“என்னப்பா சொல்லறீங்க? நீங்க என்ன பெத்த அப்பா”…

“இல்லைன்னு சொல்லலையே? உங்க அம்மாவை தொலைச்சிட்டு உன்னை மட்டும் கூட்டிட்டு வந்த எனக்கு இந்த பேக்டரியில் எல்லா உரிமையும் கொடுத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க, பேச சொல்லிக் கொடுத்து இன்னைக்கு இந்த பேக்டரியின் ஒர்க்கிங் பார்ட்டனரா உயர்ந்த நிலைமைக்கு…..”

“அது உங்களோடு கடினமான உழைப்பின் பிரதி பலன் தானப்பா”

அரவிந்தனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்து “என்னடா உழைப்பு? பெரிய உழைப்பு? இந்த பேக்டரியில் 20 வருசம் 30 வருசமா வேலை செஞ்சவனுங்க உழைக்காததை விடவா நான் கடுமையா உழைச்சுட்டேன்.? முதலாளிக்கு நாமென்ன ஒட்டா? உறவா? நம்மள இத்தனை ஒசரத்திலே வைச்சுயிருக்காரு. இவருயில்லைன்னா நீ படிச்சே யிருக்கமாட்ட…நானும் குடிச்சுட்டு தெரு தெருவா அலைஞ்சுட்டுத்தாயிருந்திருப்பேன். என்னை பற்றி டிரைவர் முழுக்கதையையும் சொல்லியும் அவரா இதுவரைக்கும் என்கிட்ட கேட்டதில்லை நானும் சொன்னதில்லை. இப்ப சொல்லு…நீ மொதல்ல யார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கணும்.?

அரவிந்த் தலைகுனிந்தபடி “சரி இப்பவே போறேன்பா…”

“நான் தான் உன்னை ஆசிர்வாதம் பண்ண வந்துட்டேனே… என்ன மாநிலத்தில் முதலாவதா வருவன்னு எதிர்பார்த்தேன், பரவாயில்லை 12 வகுப்பில் கண்டிப்பா வருவ…காலில் விழுந்த அரவிந்தை தொட்டு ஆசிர்வதித்தபடி வேலு புது பேக்டரிக்கு பூமி  பூஜை போடணும்ன்னு சொன்னேன்ல்ல…போலாமா?”


ஐயா…..
ஐயா …ஜோசியரை பார்த்துவிட்டு வந்தேன்…

என்ன வேலு…என்ன நாள் நட்சத்திரம் கிரகம் இதிலே எதாவது?

ஆமாங்கய்யா……….

“வேலு எந்த ஜோசியர்கிட்ட ஜோசியம் பார்த்து நல்ல நேரம் பார்த்து எங்கிட்ட வேலை கேட்டியா இல்லை நாதான் உனக்கு நல்ல நேரம் பார்த்து வேலைக்கு சேர்;த்தேனா?.  நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து அத்தனை பேரின் ஆசிர்வாதம் பெற்ற புது மாப்பிள்ளை புது பெண்ணுமே சில நாட்களில் கோயிலுக்கு சாமி கும்பிட போற வழியில கார் ஆக்சிடன்ட்ல செத்ததை எத்தனை பத்திரிக்கைகளில் பார்த்திருக்கோம்? சரி சரி உன் விருப்பபடியே செய்ப்பா..”


“இல்லை..முதலாளி இப்பவே பூமி  பூஜை  போடலாம்”

“வேலு இன்னொரு முக்கியமான விசயம் இவன் ப்ளஸ் 2 முடிப்பதற்கு முன்னமே பேக்டரி வேலையெல்லாம் முடிச்சிடனும்…டேய் அரவிந்த்….”

ஐயா….

ம்ம்…இந்ந ஸ்கூலியே படிக்கிறயா இல்லை…வேற ஸ்கூல சேர்ந்துப் படிக்கிறயா?

ஐயா எப்படி சொன்னாலும் சம்மதம் தாய்யா…

“ஏண்டா நானா படிக்கப் போறேன்…? இந்த நன்றி கின்றி நெனச்சு உன் படிப்பை பாழாக்கிடாதே..உனக்கு என்ன விருப்பமோ அதை செய் என்னடா முழிக்கிற?
வேலு வா போய் பூமி  பூஜை போடலாம்.  டேய் நல்லா யோசித்து சொல்”  என்றபடி முதலாளி திவாகரனும்  வேலுவும் பூமி  பூஜை  போட சென்றார்கள்.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Monday, September 10, 2012

ஈசனும் சித்தனும்


ஈசனும் சித்தனும்.

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று நமது முப்பாட்டன் கடவுளுக்கு இணையாகச் சொல்லியிருக்கிறான். இங்கே திருவள்ளுவர் கடவுள் என்று சொல்லியிருப்பது அந்த கதிரவனைத்தான் என்பது தான் வியப்பு.

இந்த உலகம் தோன்றியதும் சூர்pயனால். இருப்பதும் இந்த சூரியனால் என்று அந்த கதிரவனே எல்லாவற்றிக்கும் காரணகர்த்தாவாக இருப்பதால்தான் வள்ளுவர் கதிரவனை கடவுள் என்று சுட்டிக்காட்டுகிறார்.

காலையில் எழுந்தவுடன் சூரியனைப்பார்த்து வணங்கிவிட்டு அந்த நாளைத் தொடங்கும் வழக்கம் இன்றைக்கும் நமது நாட்டில் இருக்கிறது.

புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் ஈசானி மூலையில் ப+ஜைப் போடுகிறோம்.

கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி வாசலை அமைக்கிறோம் இப்படி எல்லா வகையிலும் அந்த கதிpரவனை நாம் முதன்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறறோம்.

நாம் கொண்டாடும் பொங்கள் தினப் பண்டிகைக்கூட சூரியக் கடவுளை வணங்கிடத்தான்.

அப்படிப்பட்ட சூரியனுக்குத்தான் எத்தனைஎத்தனை பெயர்கள்.

கதிரவன், ஞாயிறு, வல்லாள், பரிதி, ஆதவன், இதுமட்டுமில்லை இன்னொரு முக்கியமான யாரும் அதிகம் கேள்விப்பட்டிராத பெயர் ஒன்று உண்டு.
அது ஈசன் என்பதாகும்.

என்னது ஈசனா? அது அந்த சிவனின் இன்னொரு பெயராச்சே! என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.

ஆனால் அதுதான் உண்மை. ஈசன் என்பது கதிரவனின் இன்னொரு பெயர்.அப்படியென்றால் சிவன்தான் கடவுள். இந்த உலகை உருவாக்கிய இயற்கை என்பது உண்மையாகிறது அல்லவா?

ஆங்கிலேயர்கள் சூரியனை சன் என்கிறார்கள். அது இந்த ஈசனிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.





இப்படி எல்லாவகையிலும் கடவுளாக இருப்பதற்கு எல்;லாதகுதியும் உடைய ஈசனை வணங்கித்தான் நம் நாட்டில் மட்டுமே வாழ்ந்த மாய புருசர்கள் பலவிதமான ஆச்சிரியங்களோடு கூடிய மருத்துவத்தை, மூலிகைகளை, சித்துக்களை, மாயங்களை எல்லாம் செய்துக் காட்டினார்கள் என்பது வியப்படைய வைக்கக் கூடிய ஒன்று.

அந்த வகையில் சித்தபுருசர்களான 18 மாய மனிதர்களைப் பற்றி தனித்தனியாக இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

வணங்குதற்குரிய அந்த ஈசனின் தொண்டர்களைப்பற்றியும், அவர்கள் சொல்லும் மந்திர, தந்திர, மருத்துவங்கள் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
சுந்தரர் என்பவர் ஈசன் மீது அதிகத் தேடலைக் கொண்ட ஒரு திருத்தொண்டர் இருந்தார்.

பல நாட்களாக தவமிருந்து காடுகளிலும் மலைகளிலும் சுற்றித்திரிந்து இந்த உலகத்தின் ஆசாபாசங்களை துறந்து சித்தர் என்கிற நிலையையடைந்தார்.
சித்துக்களை முறையாக கற்ற சுந்தரர் இன்பத்துன்பங்களை பகுத்தறியத் தெரியாத சித்தராய் இந்த நாட்டில் வலம் வந்தார்.

கூடுவிட்டு கூடுபாயும் அற்புத சித்து ஒன்றை தனக்கென அடையாளமாய் வைத்திருந்த சுந்தரர், ஒரு மன்னர் இறந்தவுடன் அந்த நாட்டின் நலம் கருதி தன் உடலைவிட்டுவிட்டு அவர் உடலின் குடியேறினார்.

மன்னரின் மனைவி அவருடன் நெருக்கமாக இருந்தபோது, இது மன்னன் உடல் இல்லையே ! அவனுக்கு துரோகம் செய்யலாமா என்கிற கவலையோடு மீண்டும் தன் உடலுக்குள் புகுந்தார்.

அங்கு மூலன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தார். அவனும் ஈசனின் மேல் அதிகப் பற்றுக் கொண்டவர். அவனுக்கு இந்த சுந்தரரைப்பற்றி நன்குத் தெரியும். இந்த நாட்டையும், நாட்டு மக்களின் பிணியகற்;றும் மருத்துவங்கள் பற்றியறிந்திருக்கிற சுந்தரரை தன் உடம்பிற்குள் வைத்து பிறகு தன் மூலம் அவர் வாழ்ந்து சேவையாற்ற வேண்டும் என விரும்பினார்.

அதன் படியே சுந்தரரிடம் சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தன் உடலில் குடியேறி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனவும், வேலை முடிந்தவுடன் மீண்டும் தன்னைவிட்டு விலகிச் செல்லலாம் எனவும் அனுமதிவாங்கி அதன்படி அவர் உயிர் இவனுக்குள்ளும், இவன் உயிர் அவர் உடம்பிலும் சென்றது.

நாட்கள் கடந்தன. வந்த வேலை முடிந்தவுடன் சுந்தரர் தன் உடம்பைத் தேடி(மூலனை) தேடியலைந்தார். அதற்குள் மூலன் இறந்து போன் செய்திமட்டும்தான் கிடைத்தது.

இதனால் அந்த மூலனது உடம்பிலேயே வாழ வேண்டிய நிர்பந்தம் சுந்தரருக்கு ஏற்பட்டது. அதன்பிறகே சுந்தரது பெயர் திருமூலர் என ஆகியது.

திருமூலர் வருடத்திற்கு ஒருமுறைதான் பாட்டெழுதுவார். அப்படி அவர் 3000 பாடல்களை எழுதியுள்ளார். இதன்மூலம் திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியும்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுரவாசல் எனத் தொடங்கும் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, September 6, 2012

கொங்கு மண்

மலையின் உச்சியில் உள்ள தேயிலை தொழிற்சாலை சீரான முறையில் பராமரிக்கப்பட்ட தேயிலை தோட்டம் ;

இங்கு கொலக்கொம்வை எஸ்டேட் என்றும் கொலக்கொம்பை பஜார் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த எஸ்டேட் முன்பு கோத்தாரின் என்பவருக்கு சொந்தமாக இருந்தது.

 கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக படுக்கையுடன் கூடிய மருத்துவமனை, அஞ்சலகம் , காவல் நிலையம், நூலகம், இங்கே தனிச்சிறப்பு.

இந்துக் கோயில் மாகாளியம்மன் சர்ச் மசூதி என்று சமய சின்னங்கள் தனி வரலாற்றை உடையது.

சாதி மதத்திற்கு இங்கே எப்பபோதும்  தடா தான்.

பல்வேறு வகுப்பினரும் தாத்தா, பாட்டி, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, மாமா, மைத்துனர் என்ற முறையில் இந்துக்கள் முஸ்லீம்கள் கிருத்துவர்கள் வாழ்ந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஒரு நாகரீகமான ஊர் இந்த கொலக்கொம்பை.

இங்கு மளிகைக்கடை முதல் அனைத்து பொருட்களும் சரளமாக கிடைக்கும் சந்தை வரை மிக பிரபலமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது.

பக்கத்து கிராமங்களான தைமலை,ஆறுகுச்சி,அதிகரட்டி,டெரேமியா, தூதுர்மட்டம்,கிரேக் மோர்,அலசனா, கிளன்கர்ன், உட்லாண்ஸ்(மன வேதனை இந்த பெயர் இன்றைக்கு செருப்பிலும் வந்துவிட்டது)சுல்தானா, பால்மறா, ஓலாண்டு, மேலூர் என்று குட்டி குட்டி எஸ்டேட்டுகள் நெருக்கமாக அமைந்துள்ளது.இவையனைத்தும் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இங்கு நடக்கும் சந்தையில் பொருட்களை விற்க, வாங்க வரும் காட்சி திருவிழா போன்று யிருக்கும்.

இந்த பகுதியில் பழங்குடி மக்களும் உள்ளடக்கம்.

இப்படிப்பட்ட சிறப்பு மிகு ஊரில் இருமுறை தொடர்ந்து மேலூர் ஊராட்சியின் தலைவராகவும், தேயிலை தோட்ட அதிபராகவும் , குன்னூர் டூ கொலக்கொம்பை என்ற போர்டை தாங்கியபடி ஓடும் முதல் பேருந்தை அறிமுகப்படுத்தியும்(லஷ்மி டிரான்ஸ்போர்ட்), லாரி, அந்த காலத்திலேயே 12 பேர் வேலை செய்யக் கூடிய மினி டிபார்ட்மென்ட் ஸ்டோர், காய்கறி மண்டி என்று பல துறைகளில் வெற்றிநடை போட்டு வலம் வந்த வணக்கத்திற்குறிய கே . சின்னசாமி அவர்களுடைய முயற்சியால் இந்த ஊர் நீலகிரி மாவட்டத்திலேயே பேரும் புகழும் பெற்று விளங்கியது என்றால் மிகையாகாது.

இவருடைய முயற்சியால்தான் மேலே சொல்லப்பட்ட மருத்துவமனை, காவல்நிலையம், அஞ்சலகம் என்று பல அரசு சார்ந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

இவருடைய கம்பீரத்தையும், வார்த்தை ஜாலத்தையும் அன்றைக்கு இருந்த நீலகிரி கலெக்டர் (வெள்ளைக்கார துரை) ஆச்சரியப்பட்டு போனதாகவும், அதனால் இவர் கேட்ட அனைத்து திட்டங்களை மறு ஆய்வு கூட செய்யாமல் உடனே அமல்படுத்தினார் என்றும் சொல்வார்கள்.

கே.சின்னசாமி அவர்கள் காங்கிரஸில் மிக முக்கிய தலைவராக இருந்தார். சுதந்திர போராட்ட தியாகியாக தன் வாழ்க்கையை தொடங்கியவர்.பிறகு கட்சியில் தன்னை முழவதுமாக இணைத்துக் கொண்டார்.காந்தியின் மீது மிகவும் பாசம் கொண்ட தொண்டராகவும் விளங்கியவர்.கொலக்கம்பை பஜார் மத்தியில் இவர் நிறுவியுள்ள காந்தி சிலை எங்கும் பார்க்கமுடியாத வகையில் மிகவும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது.

அந்த சிலையை செய்வதற்காக சிற்பியோடு தானும் அமர்ந்து அணுஅணுவாக ரசித்து ரசித்து செதுக்கினார் என்று சொல்லுவார்கள்.





அன்றைக்கு இருந்த காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜரால் இந்த சிலையை செய்தமைக்காக மிகவும் பாராட்டப்பட்டார்.
யாரையும் புகழாத காமராஜர், புகழுக்காக வாழாத காமராஜர் பாராட்டிய ஒரு மனிதர் உண்டென்றால் அவர்கள் தலைவர் சின்னசாமி அவர்கள்தான்.

இங்கு பாகுபாடின்றி காந்தி சதுக்கத்தில் அனைத்துக் கட்சி கூட்டங்களும், பல கலைநிகழ்ச்சிகளும், சண்டை சச்சரவின்றி அமைதியாக நடக்கும். காமராஜ், கருத்திருமன், கக்கன், கலைஞர், நாஞ்சில் மனோகரன், சம்பத் என்று பல தலைவர்களும், இசைஞானி இளையராஜா,சேக் சின்னமவுலானா போன்ற முன்னணி கலைஞர்களும், பல சினிமா நட்சத்திரங்களும் பங்கு கொண்டுள்ளனர்.

மேலூர் பஞ்சாயத்துட்பட்ட கொலக்கம்பையும் தன் தலைமையின் கீழுள்ள சுற்றுவட்டார கிராமங்களின் மீது தனி கவனம் செலுத்தி கல்விக்கு முதலிடம் தந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த இளம் தலைமுறைக்கு கல்வியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

 இதன் காரணமாக பல இளைஞர்கள் டாக்டர்களாவும்,பொறியாளர்களாகவும், இந்திய காவல் பணி என்றும், பல துறைகளில் அரசு அதிகாரிகளாகவும் உள்ளனர்.

இவருடைய துணைவியார் திருமதி பாப்பம்மாளிள் ஓரே  புதல்வர்தான் நம் கொங்கு மண்ணின் பெயரை தன் பெயரில் தாங்கியபடி, 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்த மண்ணை நேசித்த முதல் கொங்குத் தமிழன். அவரது முழு பெயர் திரு கொங்கு சி மனோகரன்.

ஆனால் அவர் தந்தை மற்றவர்கள் நலனில் மிகுந்த அக்கறையின் காரணமாக தன் உடமைகளை சொத்துக்களை பாதுகாக்க தவறியதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை இழக்க நேரிட்டது.

கொங்கு.சி.மனோகரன் தந்தை வழி தொடர்ந்து தோட்ட தொழிலாளர் நலனுக்காக கடைசி மூச்சு உள்ளவரை மற்றவர்களுக்காக பாடுபடுவதையே தன் தொழிலாகக் கொண்டார்.

தி;.மு.க வின் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தலைவராக தன் வாழ்வை அந்த ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்தார்.
இன்று கோத்தாரியின் ஆளமையைவிட்டு தனியார் வசம் எஸ்டேட் சென்ற பிறகு இந்த சீரும் சிறப்புமாக, அமைந்திருந்த கொலக்கம்பை பொலிவிழந்து, ஊர் இருந்ததற்கான சுவடுகளே இல்லாதது போல் இன்றைக்கு காட்சியளிக்கிறது. தனியார் வசம் எஸ்டேட் சென்ற பிறகு அவர்களின் கெடுபிடிகளின் காரணமாக அங்கு காலங்காலமாக வாழ்ந்துவந்த குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஊரைவிட்டு வெளியேறி விட்டார்கள்.
அழகான மனிதர்கள், மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், சாதி மதம் பாராமல் வாழ்ந்து வந்த ஒப்பற்ற மக்கள் என்று தன் இயற்கை எழில் சூழ்ந்த கொலக்கம்பை இன்றைக்கு கரையான் அரித்த மரமாய் பாழ்பட்டுக் கிடக்கிறது.




நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, September 4, 2012

சட்டத்தின் படி(13) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……





“அக்கா எப்படியிருக்க?”


“வாடி சின்னதாயி அஞ்சு வருசம் கழிச்சு வந்துட்டு எப்படியிருக்கேன்னா கேக்குற?”


“என்னக்கா செய்யறது அந்த மனுசன் போனதுக்கப்புறம் பின்னாலே எல்லாவும் என் தலையிலேதான்”


“ஆமாடி ஆம்பிள்ளைங்க உசுரோட இருக்கிறவரைக்கும் அவங்க அருமை தெரியாது போனதுக்கப்புறம்தான் அருமை பெருமை எல்லாம் தெரியும். சரி பையனுக்கு புள்ளைக்கு கல்யாணம் காட்சியெல்லாம் எப்போ?”


“அது எல்லாம் கடனஒடன வாங்கி முடிச்சுவைச்சுட்டேன்.ஆனால...”;


“என்ன சின்னதாயி ஆனகூனா விசயத்தை சொல்லு”


 
“பொண்ணும் பையனும் மருமகனும் தனிகுடித்தனம் போயிட்டாங்க.”


“இப்போ நான் நீ செஞ்சத அவங்களும் செஞ்சுரக்காங்க...நாளை அது புள்ளைகளும் அப்படிதான் செய்யும் இது வாழையடி வாழையா வருவதுதான


“அதுவும் சரிதான் ஆமா அந்த ராசாத்தி... ம...; அஞ்சு வருசத்திற்கு முன்னாடி நீ சொன்னது பச்சமரத்திலே ஆணி அடிச்சமாதிரி அப்படியே நெனப்பிலே இருக்கு. ஆமா அவ என்ன முடிவெடுத்தா?”


“ஏண்டி தெரியாமத்தான் கேக்குறேன..; அஞ்சு வருசம் எத்தனை சங்கதி, உங்க குடும்பத்திலும் உன் சொந்தக்கார குடும்பத்திலும் நடந்திருக்கும?; அதையெல்லாம் மறந்திட்டு அடுத்தவ சங்கதியை மடடும் எப்படிடீ மறக்காம அதை தெரிஞ்சுக்க பேயா பறக்கிறீங்க?”


“அய்யோ அக்கா அதுக்கில்லை. பெத்த குழந்தையும் பெறாத குழந்தையையும் முத்துக்கிட்டயே கொடுத்துட்டு போயிட்டாளோ என்னவோமுன்னு நெனச்சேன்”!.


“நெனப்படி நெனப்ப.. இந்த அஞ்சு வருசம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்கோ. தன் மடியிலே ரெண்டுக் குழந்தைகளையும் படுக்க வைச்சு தன்னோடு குழந்தைக்கு தன் பாலையும் முத்துக் குழந்தைக்:கு பால்புட்டியை தன் மார்பிலே வைச்சு கொடுத்தாடி, தன்னோட குழந்தையைவிட ஒருபடி முத்து குழந்தையை நல்லவிதமா பாத்துக்கிட்டா”


“அப்படி எத்தனை வருசமா கொடுத்தா அக்கா?”


“யேய் இவளே சுகம் விசாரிக்க வந்தீயா ..இல்ல...ஏன் வாயிலே நல்ல வார்த்தை வந்துடும் போடீ..”


ஹிக்கும்...கன்னத்தில் இடித்தபடி சென்றாள் நலம் விசாரிக்க வந்த சின்னதாயி.



முத்து வந்துக்கொண்டே “என்ன ஆத்தா... எப்போதும் வராத சின்னதாயி இப்போ வந்திருக்கு”


“அஞ்சு வருசம் கழிச்சு வந்ததற்கே உன்னையும் உன் தங்கச்சியையும் பிரிக்கிற வழியைத் தேடுறா.! வருசாவருசம் வந்தாள்னா இந்த ஊரே ரெண்டுபட்டுபோக வைச்சுரவாடா இந்த சின்னதாயி.”



“அட உடுங்க ஆத்தா..அது பொம்பளைகளின் பொறந்த குணம் தானே...”



“அடி செருப்பால டேய் நானும் பொம்பளைதாண்டா...”


“அய்யோ ஆத்தா நீ பொம்பளையில்ல தெய்வம்...”


பின்னே?


“தெய்வம் ஆத்தா தெய்வம்.”


ராசாத்தி வந்துக் கொண்டே “அண்ணே யாரைன்னே தெய்வம் ன்னு சொல்றீங்க?”


“வேறு யாரை, எல்லாம் நம்ம ஆத்தாளைத்தான்.”



“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆத்தா மற்றவங்களுக்கு எப்படியோ என்க்கு அம்மாளுக்கு அம்மா சாமிக்கு சாமி.”


கண்ணீரும் கம்பளையுமாக அந்த ஆத்தா..


“ஆமா ராசா நீ எப்போ வந்தியோ அன்னையிலிருந்து செத்துப் போன என் மகள் மருஜென்மம் எடுத்து வந்த மாதிரித்தான்”


“ஆத்தா நீங்க எங்க இதுவரைக்கும..?; என்று கேட்க நினைத்த ராசாத்தியை மேலும் பேச வேண்டாம் என்றபடி சைகைக் காட்டினான் முத்து


“ஏண்டா அவள அடக்குற? கட்டி வைச்ச கட்டுச் சோறும், முத்திப்போன கத்திரிக்காயும் முழகாத முட்டச்சிகதையும் என்னைக்காவது வெளியில வந்துதானடா ஆகனும்.”!


புருசன் வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு ஓடிப்போனதுக்கப்புறம், அவன்கூட இருந்தா புள்ளை கெட்டுப்போயிருவான்னு, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்த புள்ளையை அவன்கிட்டயிருந்து பிரிச்சு, தனியாள நின்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்.”


“என் கஷ்டம் அறிஞ்சு நல்லாப் படிப்பான்ன்னு நினைச்சு கஷ்டப்பட்டு காலேஜ்ல சேத்தேன்.அங்கத்தான் விதி விளையாடிடுச்சு டுர் போன இடத்திலே...என்று ஆத்தா சொல்ல ஆரம்பிப்பதற்குள் முத்து வசிக்கும் தெருவை சேர்ந்;தவர் ஓட்டமாக வந்து மூச்சிறைக்க

“முத்துண்ணே பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரும் போது வேற ஒரு பள்ளிக்கூட பஸ் இடிச்சு ரெண்டு குழந்தைகள் மேல ஏறிடுச்சாம”;,


ராசாத்தி பதறியபடி “அண்ணே எந்த பள்ளிக்கூடம்மின்னு கேட்டீங்களா?”


“அதுதாம்மா உங்க குழந்தைகள் படிக்கிற பள்ளிக் கூடம்தான்.”


ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.


முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....


என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


அடுத்த வாரம் பார்ப்போமா?

திரு சுந்தரகனகு




தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.

99528 27529

 
 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி(13) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……





“அக்கா எப்படியிருக்க?”


“வாடி சின்னதாயி அஞ்சு வருசம் கழிச்சு வந்துட்டு எப்படியிருக்கேன்னா கேக்குற?”


“என்னக்கா செய்யறது அந்த மனுசன் போனதுக்கப்புறம் பின்னாலே எல்லாவும் என் தலையிலேதான்”


“ஆமாடி ஆம்பிள்ளைங்க உசுரோட இருக்கிறவரைக்கும் அவங்க அருமை தெரியாது போனதுக்கப்புறம்தான் அருமை பெருமை எல்லாம் தெரியும். சரி பையனுக்கு புள்ளைக்கு கல்யாணம் காட்சியெல்லாம் எப்போ?”


“அது எல்லாம் கடனஒடன வாங்கி முடிச்சுவைச்சுட்டேன்.ஆனால...”;


“என்ன சின்னதாயி ஆனகூனா விசயத்தை சொல்லு”


 
“பொண்ணும் பையனும் மருமகனும் தனிகுடித்தனம் போயிட்டாங்க.”


“இப்போ நான் நீ செஞ்சத அவங்களும் செஞ்சுரக்காங்க...நாளை அது புள்ளைகளும் அப்படிதான் செய்யும் இது வாழையடி வாழையா வருவதுதான


“அதுவும் சரிதான் ஆமா அந்த ராசாத்தி... ம...; அஞ்சு வருசத்திற்கு முன்னாடி நீ சொன்னது பச்சமரத்திலே ஆணி அடிச்சமாதிரி அப்படியே நெனப்பிலே இருக்கு. ஆமா அவ என்ன முடிவெடுத்தா?”


“ஏண்டி தெரியாமத்தான் கேக்குறேன..; அஞ்சு வருசம் எத்தனை சங்கதி, உங்க குடும்பத்திலும் உன் சொந்தக்கார குடும்பத்திலும் நடந்திருக்கும?; அதையெல்லாம் மறந்திட்டு அடுத்தவ சங்கதியை மடடும் எப்படிடீ மறக்காம அதை தெரிஞ்சுக்க பேயா பறக்கிறீங்க?”


“அய்யோ அக்கா அதுக்கில்லை. பெத்த குழந்தையும் பெறாத குழந்தையையும் முத்துக்கிட்டயே கொடுத்துட்டு போயிட்டாளோ என்னவோமுன்னு நெனச்சேன்”!.


“நெனப்படி நெனப்ப.. இந்த அஞ்சு வருசம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்கோ. தன் மடியிலே ரெண்டுக் குழந்தைகளையும் படுக்க வைச்சு தன்னோடு குழந்தைக்கு தன் பாலையும் முத்துக் குழந்தைக்:கு பால்புட்டியை தன் மார்பிலே வைச்சு கொடுத்தாடி, தன்னோட குழந்தையைவிட ஒருபடி முத்து குழந்தையை நல்லவிதமா பாத்துக்கிட்டா”


“அப்படி எத்தனை வருசமா கொடுத்தா அக்கா?”


“யேய் இவளே சுகம் விசாரிக்க வந்தீயா ..இல்ல...ஏன் வாயிலே நல்ல வார்த்தை வந்துடும் போடீ..”


ஹிக்கும்...கன்னத்தில் இடித்தபடி சென்றாள் நலம் விசாரிக்க வந்த சின்னதாயி.



முத்து வந்துக்கொண்டே “என்ன ஆத்தா... எப்போதும் வராத சின்னதாயி இப்போ வந்திருக்கு”


“அஞ்சு வருசம் கழிச்சு வந்ததற்கே உன்னையும் உன் தங்கச்சியையும் பிரிக்கிற வழியைத் தேடுறா.! வருசாவருசம் வந்தாள்னா இந்த ஊரே ரெண்டுபட்டுபோக வைச்சுரவாடா இந்த சின்னதாயி.”



“அட உடுங்க ஆத்தா..அது பொம்பளைகளின் பொறந்த குணம் தானே...”



“அடி செருப்பால டேய் நானும் பொம்பளைதாண்டா...”


“அய்யோ ஆத்தா நீ பொம்பளையில்ல தெய்வம்...”


பின்னே?


“தெய்வம் ஆத்தா தெய்வம்.”


ராசாத்தி வந்துக் கொண்டே “அண்ணே யாரைன்னே தெய்வம் ன்னு சொல்றீங்க?”


“வேறு யாரை, எல்லாம் நம்ம ஆத்தாளைத்தான்.”



“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆத்தா மற்றவங்களுக்கு எப்படியோ என்க்கு அம்மாளுக்கு அம்மா சாமிக்கு சாமி.”


கண்ணீரும் கம்பளையுமாக அந்த ஆத்தா..


“ஆமா ராசா நீ எப்போ வந்தியோ அன்னையிலிருந்து செத்துப் போன என் மகள் மருஜென்மம் எடுத்து வந்த மாதிரித்தான்”


“ஆத்தா நீங்க எங்க இதுவரைக்கும..?; என்று கேட்க நினைத்த ராசாத்தியை மேலும் பேச வேண்டாம் என்றபடி சைகைக் காட்டினான் முத்து


“ஏண்டா அவள அடக்குற? கட்டி வைச்ச கட்டுச் சோறும், முத்திப்போன கத்திரிக்காயும் முழகாத முட்டச்சிகதையும் என்னைக்காவது வெளியில வந்துதானடா ஆகனும்.”!


புருசன் வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு ஓடிப்போனதுக்கப்புறம், அவன்கூட இருந்தா புள்ளை கெட்டுப்போயிருவான்னு, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்த புள்ளையை அவன்கிட்டயிருந்து பிரிச்சு, தனியாள நின்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்.”


“என் கஷ்டம் அறிஞ்சு நல்லாப் படிப்பான்ன்னு நினைச்சு கஷ்டப்பட்டு காலேஜ்ல சேத்தேன்.அங்கத்தான் விதி விளையாடிடுச்சு டுர் போன இடத்திலே...என்று ஆத்தா சொல்ல ஆரம்பிப்பதற்குள் முத்து வசிக்கும் தெருவை சேர்ந்;தவர் ஓட்டமாக வந்து மூச்சிறைக்க

“முத்துண்ணே பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரும் போது வேற ஒரு பள்ளிக்கூட பஸ் இடிச்சு ரெண்டு குழந்தைகள் மேல ஏறிடுச்சாம”;,


ராசாத்தி பதறியபடி “அண்ணே எந்த பள்ளிக்கூடம்மின்னு கேட்டீங்களா?”


“அதுதாம்மா உங்க குழந்தைகள் படிக்கிற பள்ளிக் கூடம்தான்.”


ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.


முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....


என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


அடுத்த வாரம் பார்ப்போமா?

திரு சுந்தரகனகு




தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.

99528 27529
   
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.