சுட சுட செய்திகள்

Wednesday, October 17, 2012

சட்டத்தின் படி(15) ....-சுவாரஷ்யமான தொடர்கதை



சென்ற வாரம்  

ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.
முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....
என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


காலில் முள் குத்தியதா? காலில் கல் பட்டதா என்பதனைக் கூட அறிய முடியாத நிலையில் உள்ள ஓட்டம.

நெஞ்சினிலே பதற்றமும் பதைபதைப்பும் நிறைந்துயிருந்தும் கடவுளை வினாடிக்கு வினாடி முருகன் முத்தாய்யம்மன் வரை என் குழந்தைகளுக்கு எதுவும் நேரக்கூடாது என் குழந்தைகளை காப்பாற்று என வேண்டியபடி பள்ளிpக்கூடத்தை நெருங்கினாள். 

அம்மா அம்மா என்ற குரல் கேட்டு எங்கடி தியாகு ? என்று மகள் தயமந்தியைப்பார்த்து கேட்டாள் ராசாத்தி. 

கூட வந்த முத்து தமயந்தியைக் கட்டித் தழுவி சாமி கண்ணு உனக்கொன்னும் ஆகலயே?

அண்ணா வான்னா, அவதான் நல்லாயிருக்கா இல்லே..தியாகுக்கு என்ன ஆச்சோ கடவுளே அவனுக்கு ஒன்னும் ஆகக் கூடாது என்று சற்று சப்தமாக சொல்லியபடி கூட்டத்தை நெருங்கினாள்.

அத்தை அத்தை என்று கூப்பிட்டபடி தியாககு ஓடி வந்து ராசாத்தியை கட்டடி பிடித்து கொண்டாள்.

தியாகுவை உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிட்டபடி என் ராசா உனக்கு ஒண்ணுமாகாது நான் கும்பிட்ட கடவுள் நமக்குத் துணையிருக்கு என்று சந்தோசத்தில் தன்னையும் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

பின்னாலே மூச்சு வாங்கி கொண்டு வந்த பாட்டி சற்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி டேய் முத்து பார்த்தாயாடா தான் பெத்த புள்ளையைக் கூட மறந்துட்டு உன் பையன் மேலே எவ்வளவு பாசமாயிருக்கா..

முத்து தமயந்தியை தோளில் தூக்கி வைத்து தலையை வருடிக் கொண்டிருப்பதைப்பதை பார்த்த ராசாத்தி பாட்டி அண்ணனுக்கு தமயந்தியின்னா உயிரு. என்று பேச்சை மாற்றினாள் ராசாத்தி.

உடனே பாட்டி “சரி சரி எந்த கொள்ளிக் கண்ணாவது உங்க மேலே பட்டுற போகுது.”

பாட்டியின் கோபம் உடனே பள்ளியின் பஸ் ஓட்டிய டிரைவர் மீது பாய்ந்தது. கோபம்  தீம்பிளம்பாய் வெடித்தது.

யோவ் உங்கொழந்தை இப்படி செத்திருந்தா துடிச்சு போவாயா இல்லை உம் பொண்டாட்டிக்கு அலுவாயும் மல்லிகைப் pooவையும் வாங்கிக் கொடுத்து கொஞ்சி விளையாடுவியா? ஒன்;னா ரெண்டா அடுக்கடுக்கா எத்தனைப் பிஞ்சுகள்? ஓட்ட வண்டி காத்து கணக்கா வேகம் ஒரே வண்டியில 300 குழந்தைகளை 9 மணிக்குள் சேத்தியாகனும் என்ன கொடுமை முதல்ல இப்படிப்பட்ட பள்ளிக் கூடத்தை மூடணும்.

அப்புறம் இவன் மாதிரி டிரைவருடைய பரம்பரைக்கே லைசன்ஸ் தரக்கூடாது. காலமெல்லாம் களி திங்க வைக்கணும்.இதெல்லாம் இந்த அரசாங்கம் எப்போ செய்யப் போகுதோ?

பாட்டியின் ஆவேசமான பேச்சு கூட்டம் மொத்தமும் பாராட்டியது. 

அத்தை…

என்னப்பா தியாகு?

எனக்கு இந்த இங்கிலீஸ் பள்ளிக்கூடம் வேண்டாம்…

ஏன்?

அம்மா நாங்க அரசாங்கப் பள்ளிக் கூடத்திலே படிக்கிறோம் என்றாள் மகள் தமயந்தி.

ஆமா அத்தை நீங்களோ அப்பாவோ காலையிலும் மாலையிலும் கூட்டி கோக வந்துடுவீங்க. எங்களுக்கும் பயமில்லை உங்களக்கும் பயமில்லை இல்லயா?
என்னம்மா ராசாத்தி குழந்தைகள் சொல்றது எனக்கு சரியின்னு படுது உனக்கு?
இல்லையிண்ணா…இங்கிpலிஸ் பள்ளிக்கூடத்திலே படிச்சு நாளைக்கு பெரிய படிப்புக் கெல்லாம் வசதியாயிருக்கும் 

அய்யோ அத்தை அங்கேயும் இங்கிலிஸ் எல்லாம் சொல்லி தராங்க. மத்தியானம் சாப்பாடு கூட தராங்க. புத்தகம் துணிமணி எல்லாம் சும்மா தராங்க.


ஆமாம்மா. நாங்க ரெண்டு பேரும் வாத்தியார் நடத்துறதே கேட்டு நல்லபடியா படிச்சுக்கிறோம். கவலைப் படாதேயம்மா என்றாள் தமயந்தி.

கார் ராசாத்தி தமயந்தி எவ்வளவு தெளிவா சொல்லறா இது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்.

ஆமாண்ணே தியாகுவும் இதைத்தான் சொல்றான். குழந்தைகள் விருப்பப்படி யே செய்திடலாம். ஏ தியாகு அங்க எத்தனை வகுப்பு வரையிருக்கு? 12 வரை யிருக்கும்மா?

ஆமா அத்தை 12 வகுப்பு வரை யிருக்கு. சரி ராசாத்தி டி சி யை வாங்கி ரெண்டு பேரையும் சேர்த்திடலாம் என்றான் முத்து.

அப்போ 6 வருசம் இந்த கவர்ன்மென்ட் பள்ளியில படிக்கலாம்ல்ல? சந்தேகமே வேண்டாம் என்று முடிப்பதற்குள்

பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி

அதென்ன சிக்கல்?

அடுத்த வாரம் பார்ப்போம்.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, October 14, 2012

பொன்னான வாய்ப்பு.



நம்ம ஏகாம்பரத்திற்கு அவர் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு…
வாய்யா..ஏய்யா நல்ல வாய்ப்பு வரும் போது மிஸ் பண்ற? இங்க பாரு வாய்ப்பு எப்பவாவது தான் வரும். இன்னிக்கு மீட்டிங் வந்து பாரு…சுலபமா சம்பாதிக்கிற வழியை தெரிஞ்சுக்கோ…

ஒரே நேரத்தில் 1000 பேர் உட்காரக்கூடிய விசாலமான ஹால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வி ஐ பி சேர் மேடையின்  கீழ் 200 அபேருக்கு குறைந்தது இல்லை.

மேடையிpல் கோட் சூட்டில் 2 பேர் டயட் வாசிங் பவுடர் வெள்ளை வேட்டி சட்டையில் மூன்று பேர்.

வுhழ்க்கையில் மூன்னேறத்துடிக்கும் உங்களை வரவேற்கிறேன்(அதுதான் வந்துட்டீங்கள்ள? அப்புறம் என்ன வரவேற்பு?)

நீங்களே அல்லது உங்களை சார்ந்தவர்களே(நாங்களே தான்) அதிக வட்டிக்கே ஒரு ரூபாய் கட்டினா 10 ரூபாய் தருவோம் என்றதை நம்பி மோசம் போயிருப்பீர்கள்.

இங்கே அப்படி நடக்காது…(அதுதான் ஓடிப்போய்டுவீங்களே?) ஏன்னா உங்களுக்கும் நம்ம கம்பெனி உள்ள ஒப்பந்தம் தலைசிறந்த வழக்கறிஞர் (என்ன சுப்ரீம் கோர்ட் வக்கீலா?) கொண்டு ஒப்பந்தம் செய்யப்படும்.

அடுத்து அண்ணன் பனிகோதன்(என்னய்யா இப்படியும் பேரா) ஸ்கீம் பற்றி விளக்கமாக கூறுவார்.


இக்…ம்ம்ம..ஹ்ஹே…(கணைக்கிறாரா இருமுறாரா?_ அன்பான உறுப்பினர்களே (எப்பய்யா நாங்க சேந்தோம்?)

வாழக்கையில்; எவ்வளவு கஸ்டப்பட்டாலும் முன்னுக்கு வர முடியாத நிலையை நம்ம ஸ்கீம் அடியோடு மாத்திடும்.(அடப்பாவிகளா அவுத்துடறதுக்கு ஒரு அளவில்லையா,?)

இந்த ஸ்கீமில ஒரு ஸ்பெசல் என்னன்னா சந்நதாரர் ஒவ்வொருவருக்கும் வாங்கும் ய+னிட்டை பொறுத்து கால் , அரை, முக்கால் என்ற அடிப்படையில் நிலம் பக்கா பட்டா நிலம் தந்துருவோம்.

சந்தாராருக்கு எங்க இல்ல…நம்ம கம்பெனி செலவுலே பக்காவ பட்டா செய்து தந்து சந்தோசப்படுத்துவோம், 

அடுத்ததாக மேலைநாட்டில் சுற்றுப்புற சுகாதார மேற்படிப்பு படித்த திரு பணி காதகன் விளக்கமாகக் கூறுவார்.(அடடே என்னப்பா சொல்லப் போற எமக்காதகா…!)

கடல் அலை என வந்திருக்கும் சந்தாதாரர்களே! (அரசியல் வாடையில்ல அடிக்குது..உசாரு)

நம் வாழ்க்கைக்கு சுகாதாரம் மிக அவசியம்(ஆகா புதிய  மேலைநாட்டு கண்டுபிடிப்பு)

வீட்டு டாய்;லெட் கட்டியிருந்தால் அது கொசு உற்பத்தி ஆலையாகிறது அங்கிருந்து சுதந்திரமாக வரும் கொசு மனிதனை கடித்து டெங்கு மலேரியா போன்ற கொடிய நோயை உண்டாக்கி சாக வேண்டிய துர்பாக்கியம் உண்;டாகிறது.(கேட்டுக்கோங்க மகாஜனங்களே..யாருக்கும் தெரியாத புது சங்கதி)

அதனால்  இந்த ஸ்கீம் வழங்கப்பட்ட நிலத்தில் இயற்கையை ரசித்தபடி அவசரப்படாமல் ஆர அமர நிதானமாக காலை மாலை கடன்களை முடிக்கலாம் தண்ணீரக்கு பக்கத்து மாநிலத்திடம் ஒப்பந்த முறையில் 1 டி எம் சி தண்ணீர் பெற முயற்சி எடுத்துள்ளோம் அது வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது.

அடுத்து பனி அறுப்பன் நமது ஸ்கீம் பற்றி விளக்கமாக கூறுவார்…

இந்த ஸ்கீமின்; அடிப்படை கொள்கை கஸ்டப்படாமல் சுயமாக சிறிதளவு வியர்வை சிந்தி குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆவதுதான்.

நம்பர் 1.

1யூ னிட் 4 பெருக்கல் 1 – தொகை 180000
2 யூ னிட் 8 பெருக்கல் 2 – தொகை 260000
3 யூ னிட் 12 பெருக்கல் 3 – தொகை 320000

தொகை செலுத்தியவுடன் நிலம் பட்டா செய்து தரப்பட்டு தொகைகேற்ப ய+னிட் பொருள் …அதுதாங்க சஸ்பென்ஸ். தந்து உணவு  தானியம் இலவசம் மாதம் காத்தல் தொகை ய+னிட்டுக்கு 50 ஆயிரம் பென்சன் 3 வருட கடைசியில் முhலுடன் வட்டி சோத்து ந மடங்கு பெறலாம்.

என்ன மலைச்சு போயிட்டீங்களா? அந்த சஸ்பென்ஸ் என்னன்னு நான் சொல்லிறவா?


1 யூ னிட் 3 பொட்டை பன்னி.1 ஆண் பன்னி
2 யூ னிட் 6 பொட்டை பன்னி.2 ஆண் பன்னி
3 யூ னிட் 12 பொட்டை பன்னி.3 ஆண் பன்னி

மேய்க்க நிலமும் உணவும் அங்கேயே உண்டு ஓட்டலில் எச்சிலை மட்டுதம் பொறுக்கி(இது காலை மதியம் கட்டாயம் செய்ய வேண்டும் ஆட்டோ இலவசம்)

ஒரு உத்திரவாதம் நம்ம பன்னிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் நோய்வராது.

பனிகோதன் பனி அறுப்பன் இடம் கைபேசியை கொடுத்தார்…

ஹலோ….ண…ஆ…பே….பை…
(என்னடா இது என்ன புது மொழியில பேசறான்…!)

மவனே பேசு நம்மளுக்கு விளங்காது. நாமதான் முக்காபலே பாட்டுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சு அதை ஏத்துக்கிட்டவங்களாச்சே…!

அருமை சந்தாதாரர்களே.,! ஆப்பிரிக்கா கண்டத்தில் டைனோசர் வளர்ப்பு பற்றிய திட்டம் பற்;றி அதிபரிடம் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது..அநேகமாக நமது அடுத்த ஸ்கீம் அதுதான்…..

என்று பேச்சை முடித்தார்….பனி அறுப்பன்…

மயக்கம் போட்டு விழுந்தார்…நம்ம் ஏகாம்பரம்.

நீங்கள் நமது ஸ்கீமில் சேர வேண்டுமா...உடனே அழையுங்கள் 

சுந்தர கனகு 9952827529


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.