சுட சுட செய்திகள்

Monday, September 6, 2010

கவிஞர் வசுப்ரதா

கிளை முறிந்த மரங்கள்

கண்டம் கண்டமாய் பிரித்தாளும் கொள்கையில்
பிரிந்த்தது நம் தேசமும்.
கேட்டது கிடைத்தது..ஆள்பவர்களுக்கு
நம் கூக்குரல் புதைந்தது பிளவுகளின் பள்ளத்தில்..
தனி மரம் தோப்பானது சுதந்திரம் வேண்டி
மரங்களின் தூளியில் துயில் கொண்ட நேரம்..
கிளை முறிந்த மரங்களாய் வீழ்ந்துதான் போனோம் வெற்றிக்குப் பிறகும்
சுதந்திர மயக்கத்தில் கிளை முறிந்த மரங்களை விட
கிளைகளை முறித்த மரமாய் ஆனோம்.

கவிதை போட்டி முடிவுகள்

கவிதை போட்டி முடிவுகள்

முதல் பரிசு கவிஞர் வசுபிரதா
இரண்டாம் பரிசு கவிஞர் ஹேமா பாலாஜி
மூன்றாம் பரிசு கவிஞர் இந்திராணி



மூன்றுமே முதல் பரிசாக கருதப்படுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
பரிசுகள் விரைவில் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும்.

Saturday, September 4, 2010

கவிஞர் ஹேமபாலாஐ

நீரில் இடும் கோலங்கள்:

காற்றின் ஏதோ ஒரு அளாவளில்

மலர்ந்த மொட்டுகள் போல

நிலவின் ஏதோ ஒரு கிரணம் தொட்டு

உயர்ந்தெழுந்த அலைகள் போல

மழையின் ஏதோ ஒரு துளி உள் வாங்கி

முத்தெடுத்த சிப்பி போல

உன்னின் எந்த அலை என் மேகம்

நனைத்துச் சென்றது?...

கருக்கள் தாங்கி நிற்கும் கருவரைக் காட்டிலும்

உன் ஒற்றைக் காதல் மட்டும்

சுமந்து நிற்கும் என் இதயம் தனித்துவமானது...

இரவில் விழுந்த நிழலாய்

நீரில் இட்ட கோலமாய்

தடயங்களற்ற தடம் பதித்துச்

சென்றது உன் காதல்...>

Wednesday, September 1, 2010

கவிஞர் ஹேமலக்ஷனா

கிளைமுறிந்த மரங்கள்:

என் மேல் கிளை இழந்தேன்
உன் மேல் படிப்புச் செலவுக்காக
என் வலக் கிளை இழந்தேன்
நீ உன் வளை கரம் பற்றி இல்லறம் நுழைவதற்காக
என் இடக் கிளை இழந்தேன்
உன் அடுக்குமாடி இடப்பெயற்சிக்காக
என் பக்கக் கிளை இழந்தேன்
உன் தலைமுறை தழைக்க வேண்டி
இன்று நான் கிளை முறிந்த ஒற்றை மரமாய்
வேரிலும் துளிர்விட்டு காத்திருக்கிறேன்
உன் அடுத்த கிளைத் தேவக்காய்
முதியோர் இல்லத்து நீர் உரிஞ்சி...

கவிஞர் இந்தி ராணி

நீரில் இடும் கோலங்கள்.

நிறைவேறா ஆசை எனினும்
நினைக்காத நெஞ்சம் இல்லை
வாடாத‌ ம‌ல‌ர் எனினும்
வ‌ர்ணிக்காத‌ க‌ண்க‌ள் இல்லை
கேட்காத‌ பாட‌ல் எனினும்
ம‌ய‌ங்காத‌ உள்ள‌ம் இல்லை
தொடாத‌ தேக‌ம் எனினும்
தொட்டுசெல்லாத‌ தென்ற‌ல் இல்லை
பேசாத‌ விழிக‌ள் எனினும்
கேட்காத‌ செவிக‌ள் இல்லை
உள்ள‌ம் உரைப்ப‌தை
எண்ண‌மென்ற‌ ஏட்டிலே
எதிர்கால‌மென்ற
எழுத்தாணி கொண்டு
க‌டித‌மாய்
வ‌டித்திட்ட‌ வ‌ரிக‌ள்
உற‌க்க‌மென்ற
க‌ன‌வுக்கோட்டைக்குள்ளே
யாரும‌ற்ற மாயலோக
வ‌னாந்த‌ர‌த்தில்
ப‌ற‌ந்துகிட‌க்கின்றன‌
நொடிப்பொழுதினில்
மறைந்துபோகும்
நீரிலிட்ட
கோலத்தின் சாயலாய்
க‌ன‌வென்ற‌ மாளிகைக்குள்
க‌விதைக‌ளாய் பூக்கின்ற‌ன‌!

கவிதை .கவிஞர். அ.அப்துல் காதர்,

கவிஞர் அ.அப்துல் காதர்,

கிளை முறிந்த மரங்கள்

எதுகை மோனைகளிட்டு

உவமை உருவகங்கள் கூட்டி

அணிகள் சேர்த்து

அழகு பார்த்த பின்னும்

கிளை முறிந்த மரங்களென

ஊனப்பட்டு நிற்கின்றன

உன் மீதான

என் காதலைச் சுமந்து வரும்

என் சொற்கள் யாவும்..!

-அ.அப்துல் காதர்,

கவிதை -கவிஞர் க.சிவஹரி

கவிஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்களும் நன்றிகளும்..
கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட கவிதை போட்டிகளில் சில கவிதைகள் தேர்ந்தெடுக்க பட்டு இந்த ஒட்டக்கூத்தன் வலைப்பூவில் பதிவிடப் பட்டுள்ளது. போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட உலகளாவிய கவிஞர்களுக்கு இந்த நண்பன் ஓட்டக்கூத்தனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.



கிளை முறிந்த மரங்கள்
- கவிஞர் க.சிவஹரி
பாலூட்டி சீராட்டி பக்குவமாய் குளிப்பாட்டி
தேனும் திணைமாவும் தெள்ளுதமிழும் புகட்டி
நாம்பெற்ற மைந்தன் நலமாய் வாழ் வேண்டி
இளநங்கையெனும் மங்கை யொருத்தியைக்கூட்டி
இல்லறம் நல்லறமாய் வாழ வாழ்த்தினோமே!!

வந்த மகராசி வருசம் முடிவதற்குள்ளே
வார்த்தைகொண்டு வதைத்தெடுக்க; மனதை துளைத்தெடுக்க
நேரமெடுக்காமல் நெடுந்துயர் கொடுக்காமல்
வந்த மனகலக்கத்தையே வலிமையான ஆயுதமாய் பாவிக்க
என்னவள் என்னை விட்டு பிரிந்தாள் அவள்..
மண்ணுலக வாழ்வில் மறக்காத நினைவுகளோடு
விண்ணுலகில் எனக்காய் வீடுகட்டச்சென்றாள்.

கால்வயிற்றுக் கஞ்சியேனும் என் மகன்
கட்டிய மனைவி தருவாளென்று
நித்தமும் ஏங்கியே நிம்மதியைத்தொலைத்தேன்
வேலைக்கு அவன் செல்ல வெளியில் மிடுக்காய் இவள் உலாவ
கோலம் போடுவது முதல் கொழம்புச்சட்டி கழுவுவது வரை
பொறுப்பாய் நான் கற்றேன் ..
எல்லாம் நம் பிள்ளைக்காகத்தானே என்று..

தேற்றிய மனதிற்கு திடமாய் வந்தது
தித்திக்கும் ஒரு செய்தி
மாத பட்ஜெட்டில் விழும் துண்டை
மதிகொண்டு அகற்றிடவே மெனக்கு
மத்தியான சோத்தை போடா மென
நீளமான கதையொன்றை நித்தியரசியிடம் மகன் சொல்ல…

விடுவாளா சண்டாளி வேகம் பூட்டிய
வேட்டொன்றை வைத்தாள் எனக்கு
முழு நேர சோத்தையுமொரு நேரமே சாப்பிடுங்கள் மாமாவென்று
முற்றும் துறந்த முனிவனுக்குப் போலவே
மூன்று கரண்டி சாதம் மட்டும் தந்தாளே!!
பெற்றோரும் வேண்டாவே சுற்றத்தாரும் வேண்டாவே
தங்களாய் வாழ்ந்த நாங்களில் இன்று நான் மட்டும் நிற்க
என்னவள் என்னை விட்டுச்சென்றதன் காரணமேனோ??

யாரிடம் போய் எப்படி அழுவேன்?
எவரிடம் போய் என்னவென்று சொல்வேன்?
காலங்கள் நகர்த்தவே கடினமான வேளையினிலே
கால்களை நகர்த்தியே கடிதூரம் சென்றிற்றேன்
கிழக்கு வீதியினிலே கிழடுகளுக்கு இல்லமொன்று இருப்பதாய்
கில்லி விளையாடிய சிறுவன் சொல்ல ஆங்கே
கண்டேன் கருத்தொற்றிய பலபேரை
நலமாய் விசாரித்து பலமாய் வரவேற்க
நானும் கலந்திட்டேன்
சொந்தக்கதை சோகக்கதை சொல்லி அழப்போக
நாங்களும் அப்படியேமென்று
நகைத்துக்கொண்டே அவர்கள் கேட்க
கடவுளை கணநேரம் கருத்தில் வைத்தேன்
கிளை முறிந்த மரமாய் விடாமல்
கிளை முறிந்த மரங்களைக்கொண்டே
வனமொன்று உருவாக்கியதேனோ வென்று!!!

நன்றி