சுட சுட செய்திகள்

Sunday, January 20, 2013

தேரையார்

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.


தேரையார்



முத்தமிழுக்கு சொந்தக்காரி மூவெழுத்து நாயகி 
முருகனிடமும் அகத்தியனிடமும்
தெய்வ கனி பெற்றவள்
ஆத்திசூடியை அனைவருக்கும் தந்தவள். நடையிலே தளர் போக்க மூன்றாம் கோலூன்றிய மூபேரரசுக்கும் நமக்கும் சொந்தமான மூதாட்டி; ஒவையாரிடம் 

உமைபிள்ளை ராம தேவனை அகத்தி;ய முனிவரிடம் இச்சிறுவனை சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்ட மறுநிமிடம் மறுப்Nபுதும் சொல்லாமல் ஊமை சிறுவனை தன் சீடனாக அகத்தியர் ஏற்றுக் கொண்டார்;. கண்ணும் கருத்துமாக அகத்திய முனிவரின போதனைகளையுமு; மூலிகை வகைகளையும்அதன் வைத்திய குணங்களையும் பக்குவப்படுத்துவரிரும் நோய் கண்டறிந்து நோய் தீர்ப்பதிரும் நிபுணத்துவம் பெற்றிருந்தான்.
பாண்டிய மன்னன் ஒருவன் கூன்முதுகாலும் வலியாலும் வேதனை பட்டுக் கொண்டிலுந்தான்.இந்த அகத்திய முனிவரிடம் தம் நிலைமையை எடுத்துihத்து கூனை அதன் வலியை போக்க வைத்தியம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.அகத்திய முனிவரும் ஒப்புக் கொண்டு ராம தேவனிடம் மூலிகை சேகரித்து சாறு பிழிந்து எடுக்க வேண்டியவற்றை எடுத்தார்.
ராம தேவா அனைத்தையுமு; ஒரு பாத்திரத்தில் சேர்த்து தைல எண்ணை ஊற்றி கொதிக்க வை. நான் மண்ணதை செய்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு: சென்றார்.
ராம தேவர் அடுப்பு மூட்டி கிழக்கே ஈசனை நோக்கி வணங்கி விட்டு அடுப்பை பற்ற வைத்தான். அந்ந இடத்தில் அரண்மனையின் பிற்பகுதியில் அரசனின் பல்லாக்கு மூங்கில் சில வளைந்து மூலிகை மருந்து காய்ச்சுமிடத்திற்கு மேலே யிருந்தது.

கண் கொத்தி பாம்பாக மூலிகையை பதம் பார்த்து கொண்டிருந்தான் ராம தேவன்.
மூலிகை பதம் வந்ததும் மேலே இருந்த வளைந்த மூங்கில் நிமிர தொடங்கியது.உடனே அடுப்பை அணைந்தான் ராம தேவன்.

அரசனை சிகிச்சைக்கு தயார் செய்து விட்டு வந்த அகத்தியர் அடுப்பு அணைந்திருந்ததை பார்த்து கோபப்பட்டார்.

அகத்தியனின் கோபப்பார்வையை புரிந்துக்  கொண்ட வாய்பேச முடியாத ராமதேவன் மேலே இருக்கின்ற மூங்கிலை சைகை மூலம் காட்டினார்.
வளைந்த மூங்கில் நேராக இருப்பதை பார்த்த அகத்தியர் சரியாக பக்குவமாக மூலிகையை தயார் செய்ததை தன் மனதுக்குள் பாராட்டினார். 

வைத்தியத்திற்கு பின் பாண்டியன் கூன் முதுகு நிமிர்ந்தது. வலி காணமல் போய்விட்டது.
மன்னன் அகத்தியரை புகழ்ந்தார். அகத்தியர் சொன்னார் இந்த புகழ்ச்சி எனக்கல்ல. ராமதேவனுக்கே.
ஒப்பற்ற இலக்கிய நூல் தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியர். அவரது இன்னொரு பெயர் திரணாக்கியர்.
இவருக்கு தீராத தலைவலி இருந்தது. இவ்வலி தீர அகத்தியரை நாடினார். அகத்தியர் பரிசோதித்து பார்த்தார். தலையை ஆராயும்போது. திடுக்கிட்ட அகத்தியர்…திணாக்கியரே எப்படியோ ஒரு தேரைக்குஞ்சு உமது தலைக்குள் சென்று விட்டது. கபாலத்திற்குள் தங்கியுள்ளது. அத்தேரைதான் உங்களை படாத பாடு படுத்துகிறது என்றார்.
(சுனைகளில்; நீர் பருகும்போது தேரைக்குஞ்சு மூக்கு வழியாக கபாலத்திற்குள் எப்படியோ சென்றிருக்கிறது)

திணாக்கியருக்கு மயக்க மூலிகை சாறு தந்து மயக்கத்pல் ஆழ்த்தி அறுவை சிகிச்சை மூலம் கபாலத்தை திறந்தார். ஆனால் அந்த சிகிச்சை அவ்வளவு எளிதல்ல.
தேரை மூளையின் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தது. இடுக்கி மூலம் எடுத்தால் மூளையிலிருந்து மறுபக்கம் தாவி விடும். இப்படியே பல தடைவ நடந்தால் மூளை உருக்குலைந்து போகும். திகைத்து நின்றார் அகத்தியர்.
நிலமையை உணர்ந்த ராம தேவர் அகன்ற பாத்திரத்தில் நிறைந்த தண்ணீரைக் கொண்டு வந்து கபாலத்திலுள்ள தேரை காணும்படி தண்ணீரை சல சல பென சப்தம் வருமாறு செய்தார் உடனே தேரை தண்ணீருக்குள் தாவி குதித்தது. 
இந்நிகழ்வுக்கு பின் அந்த ராம தேவர் தேரையர் என்றே அழைக்கப்பட்டார்..
இவர் குணபாடகம், மருத்துவ பாரதம் என்ற ஏராளமான ;புத்தகங்களை எழுதியுள்ளார்.
மேலும் மலையாள பிரதேசமான தோரண மலையில் ஜீவ சமாதியடைந்தார்..

சட்டத்தின்படி

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.


சட்டத்தின்படி (17)

சொல்றேம்மா சொல்றேன் இல்லை கேட்காதே எதையும் கேட்காதே!

அண்ணா நீங்க இன்னும் என்னை  கூட பொறந்தவளா நெனைக்கல. அதுதான் ஏதோ வந்தா நம்ம கொழந்தையைப் பார்க்க ஒரு ஆள் கிடைச்சிடுச்சின்னு நெனைக்கிறீங்களே தவிர இன்னும் சொந்த தங்கச்சியா ஏத்துக்கல. அதுதான் உண்மை.

ராசாத்தி இந்த அசிங்கத்தை உங்கிட்;ட எப்படியம்மா சொல்லறது?
அண்ணா ப+சணிக்காயை மூடிமூடி வைத்தாலும் பொய்யை ஒழிச்சி ஒழிச்சி மறைத்தாலும் அது என்னைக்குமே ஆபத்துதான்.
இல்லைம்மா அது வந்து வந்து….
வந்து போயி எல்லாமே உலகத்திலே நடக்கிறதுதான் நான் உங்ககிட்ட கேட்கறது யாரு அந்த ஆளு?
உங்களுக்கும் அந்த ஆளுக்கும் என்ன உறவு..பகை இதை கூட விறந்த தங்கச்சியா நெனச்சியிருந்தா மட்டும் சொல்லுங்க இல்லை வேற மாதிரி அநனச்சியருந்தா வேண்டாம்ணே!

தயக்கத்துடன் முத்து துயர சொற்களை மென்று முழுங்கிய படி சொல்லம்மா சொல்றேன். சிறிய பெரிய பெருமூச்சுக்கு பின்…
அப்பன் ஆத்தா யாருன்னே எனக்குத் தெரியாது ஆனாலும் பெத்தவ மாதிரி ஒருத்தி என்னை வளர்த்து ஆளாக்கினா. அவ எப்படியிருந்தாலும் கடவுளுக்கு சமம் தான் இவசுட இருக்கும் வரை எந்த கஸ்டமும் தெரியலை. படிக்கவும் வைச்சா ஆன ராத்திரி முழுக்க அவ பக்கத்திலே மாத்தி மாத்தி ஆம்பளை குறல் அப்புறம் நிறைய பேர் வருவானுங்க போவானுங்க…
இதென்னமோ எனக்கு வரவு செலவு மாதிரி தோணுச்சு. அசிங்கமாவும் தெரிஞ்சிச்சு. எதிர்த்துக் கேட்;பேன்.
அவ உடல வித்துதான் இந்த அனாதையை காப்பாத்துறாள் அப்படீன்னு தெரிஞ்சுச்சு.அப்புறம் என்ன குல தொழில் அவ செத்ததுக்குப் பின்னாடி அவ மூலம் நாசூக்கா எசகு பிசகாக தெரிஞ்ச்ச தொழில் மீடியேட்டர் புரோக்கர் இப்;படி பெயருள்ள தொழில் அசிங்கத்தை ஆனாலும் செஞ்சேன்.

அரசியல் வாதியிலிருந்து ஆபிஸர்கள் வரைக்கும் 2000, 5000 வihக்கும் கிடைக்கும் சட்டம் ஒழுங்கு அது இதுன்னும் இருந்தாலும் சமூகத்திலே மரியாதைன்னு ஒண்ணு இருக்கிறது எனக்குத் தெரியல.

கண்ணில் மிருட்சியோடு கேட்டுக் கொண்டிருந்தால் ராசாத்தி.


சட்டத்தின்படி (18)

லாட்ஜிலிருந்து அரைகுறை ஆடைகளுடன் ஆண்களையும் பெண்களையும் அள்ளி வந்தது போலிஸ். அதனைக் கண்ட பாண்டி திரும்பி ஓட முயன்றவனை வேலுவின் டிரைவர் அமுக்கி பிடித்து ஓரமாக அழைத்துச் சென்று,
சொல்லு உண்மையை..உன்னை போலிஸ்ல் காட்டிக் கொடுக்க மாட்டேன். இல்லைன்னா….
உண்மையை சொல்லறேங்க…இந்த லாட்ஜ்pல் தங்கியிருந்த விடலைப் பையன் பொண்ணு வேணும்னு கேட்டான் பெரிய இடத்து பையன் மாதிரி தெரிஞ்சுது. சுலையா ஒரு தொகை கிடைக்கும்னு அலைஞ்சேன்.; அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா நானும் அந்த பையனும் போலிஸ்ல மாட்டியிருப்;போம்.

பாண்;டி; சொல்லி மு;டிப்பதற்குள் டிரைவர் லாட்ஸை நோக்கி ஓடினான்.

வரவேற்பரையில் மனேசரிடம் வேலு மகன் அரவிந்;த ஏதோ காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை கவனித்த டிரைவர்…

ஐயா இவர் பெரிய இடத்து பிள்ளை பிரச்சனை பண்ணாதீங்க…
நான் பிரச்சனையெல்லாம் பண்ணல. இந்த தம்பிதான் பண்ணுது. தம்பியுடைய ஊர் பேர் அப்பா பெயர் கேட்டா இன்ஸ்பெக்டரே ஆடி போயிட்டார். தம்பிக்கு புத்தயுமு; சொல்லிட்டு போனார். இனிமே இங்கே மட்டுமில்ல..இந்த மாதிரி லாட்ஜ்ல தங்க வேண்டாம் கொன்னேன் இது தப்பா இதுக்கு…
ஐயா நடந்தது நடந்துருச்சு. விடுங்க தம்பி ரூமை காலி பண்ணிட்டு ஏர்போர்ட் கெஸ்ட் அவுஸ்ல தங்கிட்டு ஓய்வெடுத்துட்டு காலை 5 மணிக்கு பிளைட்ல கிளம்புங்க…என்றபடி அறையை காலி செய்யச் சென்றார் டிரைவர்.

காரில் டிரைவர் மெதுவாக அரவிந்திடம்…
தம்பி சொன்னா தப்பா எடுக்காதீங்க…
உங்கப்பாவை சென்னையிலிருந்து லாரியில் கூட்டி வந்ததே நான் தான். நான் அவரை வேலைக்கு சேத்துவிடல. சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி கஸ்டப்பட்டு இன்னைக்கு பெரிய முதலாளிக்கு அடுத்தபடியா வளர்ந்திருக்காரு. அவர் பெயரை கெடுத்துராதப்பா…

இப்போதைக்கு தெரிஞ்சுக்க., புரிஞ்சுக்க வேண்டியது படிப்பு மட்டும்தான். இந்த சில்மிசம் இருந்தா வாழ்க்கையே சீரழிஞ்சிடும். இன்னும் நீ கண்ணுக் குட்டிதான். காளையில்லை.

அண்ணா…வந்து…

பயப்படாதே..உங்கப்பாகிட்ட சொல்லி உன் படிப்பை நான் கெடுக்க மாட்டேன். புதுநாடு,புது மொழி,பழக்க வழக்கம் எல்லாமே அமெரிக்காவில் உனக்கு புதுசாததான் இருக்கும்.
எல்லா கெட்ட கர்மத்தை மறந்து புதியவனாக வர முயற்சி செய்.உனக்க எல்லா வகையிலும் பெரிய முதலாளி உதவி செய்வார்.

மௌனம் கலையாமல் டிரைவர் சொன்னதைக் கேட்டபடி யிருந்தான் அரவிந்த். 
தம்பி படிக்கணும்னு ஆசையிருக்கிரவனுக்கு வசதியில்லை. வசதியுள்ள வர்களுக்கு வழி தவறி கடைசியிலே சொல்லவே கஸ்டமாயிருக்கு. உங்களுக்கு எல்லாவித வசதியுமிருக்கு நல்லா படிங்க.

வேலு தன் அறையில் பைல்களை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தான். பிய+ன் ஓடி வந்து வேலுவிடம் ஏதோ சொல்ல்…

அப்படியா வரச்சொல்லுங்க…

வாங்க உட்காருங்க. ஐயா பரவாயில்லை என்றார் டிரைவர்.

நான் சென்னையிலிருந்து வந்து ரெண்டு நாளாச்சு சம்சாரத்துக்கு உடம்பு முடியல. ஆஸபத்திரியில தங்க வேண்டியதா போச்சு. அதனால…

அதனால என்ன இப்ப?. அம்மாவுக்கு எப்படியிருக்கு? லீவு வேணும்னா எடுத்துக்கோங்க. என்றபடி
இண்டர் காமில் கேசியரிடம் ஏதோ சொல்ல…
மீண்டும் டிரைவர் தயங்கியபடி அய்யா தம்பி அரவிந்த…
நல்லபடியா அமெரிக்கா போய் சேர்ந்துட்டானாம்..நைட்தான் திவாகர முதலாளி போன்ல்ல சொன்னார்
கேசியர் கவரை வேலுவிடம் கொடுக்க அவரை போக சொல்லிவிட்டு
இந்தாங்க இதில பத்தாயிரம் ரூபாய் இருக்கு. மனைவியை நல்லபடியா பாத்துக்கோங்க..ஆ ..ஒரு விசயம் இந்த பணம்உங்க சம்பளத்திலிருந்து பிடிக்க மாட்டோம் நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு சின்ன உதவிதான் மேலும் பணம் வேணும்னா தயங்காமல் கேளுங்க
கண்ணில் நீர் தழும்;ப நன்றியுடன் வேலுவை பார்த்படி நின்றார் டிரைவர்.