சுட சுட செய்திகள்

Wednesday, August 29, 2012

கொங்கு மண் - மறைக்கப்பட்ட உண்மைகள்.- புதிய தொடர்

கொங்கு மண் - மறைக்கப்பட்ட உண்மைகள்.- புதிய தொடர் 



வடக்கேயிருந்து எள்ளி நகையாடி எகத்தாளமாக நம் தாய்மொழித் தமிழை கேவலமாக பேசியதன் விளைவு, சிலிர்த்த சிங்கமென வடக்கே சென்று கனகவிசயனை வென்று அவன் தலையில் கல்லை சுமக்க வைத்தவன் நமது சேர மன்னன் .  (சேரன் ஆண்ட காரணத்தால் சேர நாடு)

நம்மொழி தமிழ்க்கு மட்டும் கடவுளுண்டு. அது முருக பெருமான்.

தன் தாய் தந்தையிடம் சண்டையிட்டு எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று மக்கள் எனக்கென ஓர் மொழி என்று இருந்தவன் முருகன்.

அவன் அமர்ந்த இடம் கொங்கு மண். இந்த மண் குமரனால் ஆசிர்வதிக்கப்பட்டது.

சோழ வள நாட்டின் வளமைக்கு காவேரியை பரிவோடு வழி அனுபபி வைக்கும் நம் ஈரோடு.

பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஊர்.

மங்களகரமான மஞ்சள் சந்தை,  ஏழை பாழைகளுக்கு மலிவுவிலையில் துணி வகை. அணை மின்சார உற்பத்தி இப்படி பல சிறப்புகளோடு அமர்க்களப்படுத்தும் நமது ஈரோடு

பகுத்தறிவை பாமரனின் நெஞ்சினில் பதிக்க வைத்த வெண்தாடி வேந்தன் பிறந்த இடம்  இந்த ஈரோடு .

மேற்கு தொடர்ச்சி மலையில் பழநி, நீலகிரி கோடைவாசஸ்தலமாகிறது.

அங்கு பயிரிடப்படும் தேயிலை ரப்பர் காபி ஏலக்காய் குருமிளகு வாசனை திரவியம் முதலியவை அந்நிய நாட்டுப் பணத்தை அள்ளித்தருகிறது.

வந்தவர்க்கெல்லாம் வேலை காலியில்லை என்று சொல்வதற்கே வழியில்லாமல் கோயமுத்தூர் விளங்குகிறது.

ஜின்னிங் பேக்டரி மிக்சி கிரைண்டர் மோட்டார் பம்பு செட் என அனைத்து துறையிலும் வீறு நடை போடுகிறது நம் கோவை.

உலகிலேயே சிறந்த வேளாண்மை பல்கலைக்கழகம இங்குத்தான்.

கொஞ்சம் பயணம் செய்தால் அட நம்ம திருப்பூர் . எங்குப் பார்த்தாலும் துரும்பிலும், தூணிலும் ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஆங்காங்கே தொங்குகிறது.

பனியன் ஏற்றுமதியில் திருப்பூ ர் தான் முதலிடம்

தலைசிறந்த முறையில் நெய்யப்பட்ட போர்வைகள் தயாரிக்குமிடம் கரூர். போர்வைகள் இங்கு மிகவும் பிரசித்தம்.


இக்கொங்கு மண்ணை பற்றி இன்னும் இதுவரை வெளிவராத  தகவல்கள் ஏராளம் ஏராளம். அதை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

புதிய புதிய செய்திகள், ஆச்சர்யபடுத்தும் பல உண்மை நிகழ்வுகள் கொங்கு மக்களை மட்டுமல்லாமல், அத்தனை தமிழர்களையும் வியக்க வைக்கப் போகிறது.

இந்த மண்ணை தன் உயிராக நேசித்த தமிழர்கள் இருந்தார்கள். கொங்கு மண் வளம் பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்த உத்தமர்கள் இருந்தார்கள். 

இன்றைக்கு கொங்கு என்ற பெயரைத்தாங்கி தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் கட்சி கூட, இன்றைக்குத்தான் கொங்கு என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் போன நூற்றாண்டிலேயே தன் பெயருக்கு முன்னால் கொங்கு என்று பெருமையுடன் சூட்டிக்கொண்ட ஒரு உயர்ந்த தமிழரைப் பற்றி உங்களுக்குத தெரியுமா?

காத்திருங்கள். அடுத்த வாரம் காண்போம்.

இந்த வார காமெடி 

மலையாளி: ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

தமிழன்: ஈரோட்டுக்கு

அதில்லா ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

ஈரோட்டுக்குஎ ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு

ஆ…அதில்லா சேட்டா நா சோதிச்சது ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

யோவ….என்னைய்யா நீ…ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு

(தலைதெறிக்க ஓடினான் தமிழன்)


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, August 28, 2012

சட்டத்தின் படி(12) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சட்டத்தின் படி 12

 சென்ற வாரம் 
“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி. 

“சார் சொல்லுங்க சார்”

“பக்கத்துலே வேலுயிருந்தா செல்லக்குடுப்பா”

வேலு முதலாளி என்றபடி வேலுவிடம் வெல்லை கொடுத்தார் மனேசர்

“ஐயா வணக்கம்”

“வேலு உன் பையன்கூட பேசிட்டு இருந்தேன். அப்போ அவனுடைய காலில் தீக்காயம் இருந்ததைப் பார்த்தேன். உடனே  உன்னிடம் சொல்லாமல் ஆஸ்ப்பிட்டல் கூட்டி வந்துவிட்டேன்”

“ஐயா …நீங்க…. என் பையன் மேல..”

“ரொம்ப அக்கரையின்னு கேக்குற?”

“யோவ் வேலு.. உன் பையன் ரொம்ப புத்திசாலி. நான் வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு. அவன் சொன்ன ஜோக்குலே நான் என்னயே மறந்து சிரிச்சிட்டேன்யா.. என்னன்னு சொல்லறேன் கேளு. பழமொழி ஒரு வரி தான் சொன்னேன். அடுத்தவரி அவன் சொன்னது என்னத் தெரியுமா?

தம்பியுடையார்…அண்ணன் செட்டியர்

நல்ல மாட்டுக்கு 2கிலோ புண்ணாக்கு

தோல் கொடுப்பான் கறிக்கடை பாய்”

என்று சிரித்தபடி சொன்னார் முதலாளி திவாகரன்.

சிறிது நேர மவுனத்திற்கு “கவலைப்படாதே பையனை பங்களாவுக்கு கூட்டிட்டு போறேன். காலையிலே பேக்கரிக்கு வந்துடு.”

அடுத்தநாள் காலையில் தன் குழந்தை முதலாளி திவாகரனுடன் காரில் புது துணியணிந்தபடி முதலாளியின் கையை பிடித்தபடி காரிலிருந்து இறங்கி வந்தான்.

இக்காட்சியை கண்ட வேலு மற்றும் ஊழியர்கள் திகைப்புடனும், அதிர்ச்சியுடனும்  பார்த்தார்கள்.

வேலுவை ஆபிஜ்க்கு வரும்படி ஜாடையில் அழைத்தவாறு முதலாளி சென்றார்

“பையனுக்கு என்ன வயசாச்சு”

“ஐயா 5 முடிஞ்சு 6 வயசாச்சு”.

‘இனி நீ பழைய வீட்டை காலி செஞ்சுட்டு பேக்டரி வீட்டிலே தங்கிடு. ஸ்கூல்லே சேர்த்திடலாம். பையனை படிக்க வைக்கிறது என் செலவு”.

எப்படி இந்த ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. கடவுளே உனக்கு நன்றி.சொல்வதா முதலாளிக்கு நன்றி சொல்வதா இல்லை இங்கு என்னை வேலைக்கு சேர்த்தாரே டிரைவருக்கு நன்றி சொல்வதா என்று நினைத்து மலைபோல் சிலையாக நின்ற வேலுவைப்பார்த்து

“என்னப்பா நான் பாட்டுக்கு சொல்லிட்டேயிருக்கேன். நீ பேசாமயிருக்க?”

'முதலாளி"

“உன் குடும்பத்தை பற்றி. எல்லாம் டிரைவரிடமும் உன் பையனிடமும் கேட்டு தெரிஞ்குக்கிட்டேன். ஆனால் உன்னிடம் நிறை இருப்பதை மனேசர் மூலமாகவும் நேரிடையாகவும் தெரிந்தது. உனக்கு பனியன் கம்பெனியில் என்ன என்ன வேலைத் தெரியுமோ அத்தனையையும் செய்ய உனக்கு முழு உரிமை தருகிறேன் ஆனால் தப்பு தண்டா நடந்தால் நடக்கிறதே வேற”. என்று கடும் எச்சரிக்கை  யோடு சொன்னார்.

பத்தாண்டு கால இரவு பகல் என்று பாரமல் நேரத்தை அலட்சியப்படுத்தாமல் தன்னை அரவணைத்த பனியன் பேக்டரி முதலாளியின் நம்பிக்கையும் பெற்றார் வேலு. உழைப்புடன் சேர்ந்து நாணயமும் இருந்தததால் இன்று வேலு முதலாளி திவாகரின் வலது கை மட்டுமல்லாமல் ஒர்கிங் பார்ட்னர் என்ற நிலை வரை உயர்ந்தான்.

எல்லா தொழிலும் தெரிந்தால் மட்டும் போhதாது உண்மை வேண்டும் கடமைக்காக உழைப்பது வயிரை கழுவ மட்டுமே உதவும். அதையே தன்னுடைய தொழிலாக நினைத்தால் உயர்வு தானக தேடி வரும் என்பதற்கு வேலு ஒரு உதாரணம்.

குடிகாரனாக, ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்தவனாக. மனைவியைப் பிரிந்து இனி வாழ்க்கையே இல்லை என்ற அளவு இருந்த வேலுவுக்கு இந்த உயர் நிலைக்கு வரக் காரணம் நேர்மையான உழைப்பு.

வேலுவின் செல் மணியடித்தது.

சொல்லுங்க முதலாளி…..
….
ஆடிட்டர் ஆபிஸ்லதான் இருக்கேன்…
….
அமௌண்ட் போட்டாச்சு…
;;;;;;……….
லண்டன் ஜெர்மனிக்கு அவர்கள் கேட்ட ஆர்டர் முழுவதும் பையர் மூலமா அனுப்பிட்டேன்.அமெரிக்க பையர்க்காக வெயிட்டிங் பண்ணிட்டு இருக்கோம்.
………
நோ ப்ராப்ளம்…யூ னியன் லீடர்க்கிட்ட பேசி எல்லா பிரச்சனையையும் சால்வ் பண்ணிட்டேன்.

;;;;;……………

இன்சினியர்கிட்டப் பிளானைப்பற்றி முழுமையா சொல்லிட்டேன் இலர் ஒரு வருசத்தில் கட்டிடத்தை முடித்து தர்ரேன்னு சொல்லிட்டாரு.
……….

பாரின்லேயிருந்து நாலு கம்பெனியிடமிருந்து மெசினரி கொட்டீடசன் வந்திருக்கு நீங்க சொன்னா டிக் பண்றேன்.
……….

சரிங்க டிக் பண்ணி அ|னுப்பிச்சறேன். நாளைக்கு புது பேக்டரி கட்டறதுக்கு 
பூ மி பூ சை போடனும் நீங்க அவசியம் வரணும்.
……….

அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.

பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……


யார் அந்த அரவிந்த்…..அவனது ரிசல்ட் என்ன ஆக போகுது…….

அடுத்த வராம் வரை காத்திருங்களேன் …

திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Friday, August 24, 2012

சட்டத்தின் படி ....11


சென்ற வாரம் 

 RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

(11)
அரைமணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார் அவரின் முகம் வாட்டமாகவும் சோர்வாகவும் இருந்தது.

டாக்டர்…..என்றழைத்தபடி முத்துவும,; ராசாத்தியும் அவரை நெருங்கினார்கள.;
கருப்பை ரொம்ப பலவீனமா இருந்ததாலே வலி தாங்க முடியாம ரத்தப் போக்கு அதிகமாகிப் போச்சு. ரத்த அழுத்தமும் கம்மியாயிட்டே இருக்கு. என்னால் முடிந்த அளவுக்கு சிகிச்சையளித்துவிட்டேன். இனி கடவுளின் கையில்தான,;; உள்ளேபோய் பாருங்கள் என்று விரக்தியுடன் கூறியபடி சென்றார்.

அய்யோ என்று அலறியபடி, இருவரும் மிகுந்த சோகத்துடன் கண்களில் கவலை ததும்பும் கண்ணீரை துடைத்தபடி லேபர் வார்டுக்குள் சென்றார்கள்;.

அங்கே…அருகில் குழந்தையுடன் படுத்துக் கிடந்த பானு,  தன் உயிர் போனாலும் உன்னை உயிரோடு பெற்|றுவிட்டேன், உன்னை பிரியப் போகிறேனே என்று கண்கலங்க அரை மயக்கத்தில் வலியோடு அந்த சின்னக் குழந்தையைப் பார்த்தபடி கிடந்தாள்.

உள்ளே வந்த இருவரையும் பார்த்தாள். அழக்கூட முடியாமல் தயங்கி தயங்கி, அருகில் வந்த ராசாத்தியிடம் சன்னமான குரலில்,

“அண்ணி இனி நான் …..”

“இல்லை அண்ணி உங்களுக்கு ஒன்றும் ஆகாது.” வந்த துக்கத்தை நெஞ்சிலே அடக்கியபடி ஆறுதல் சொன்னாள் ராசாத்தி.

முத்து, தன் தோளிலிருந்த துண்டை வாயில் வைத்தபடி….“பானு பயப்படாதே என்னை விட்டு போகவிடமாட்டேன்” பானுமதி கரத்தைப் பற்றியவாறு முத்து கதறினான். அவனையறியாமல் ஆண்மையையும் மீறி, கண்களிலிருந்து  கண்ணீர் வந்தது. 

இதுதான் தாம்பத்யத்தின்; உண்மையான உறவோ?

பானு…குழந்தையை கையில் எடுக்கும் படி கண் ஜாடையில் கூற, ராசாத்தி குழந்தையை எடுத்து பானுமதியின் கழுத்தருகே காண்பித்தாள்.

பலமுறை அந்த பிஞ்சுவை முத்தமிட்டபடி, “அண்ணி இனி நான் பிழைக்க மாட்டேன. இந்த குழந்தைக்கு இனி நீங்கள்தான் தாயும் , அத்தையும்.கடவுளா பார்த்துத்தான் உங்களை எங்களுக்கு கொடுத்துள்ளார்.’ என்று கண்கலங்க அழுதாள் பானு.

என்ன செய்வது என்றே தெரியாமல் நின்ற முத்துவைப் பார்த்து, “என்னங்க எந்த காலத்திலும் உங்க தங்கையை கைவிட்டுடாதீங்க” என்று தன் கணவரை  பார்த்து கூறியபடி விக்கித்து சொன்ன பானுவின்  கண்ணுக்கு தெரியாத உயிர் பிரிந்தது.

 ராசாத்தி கையிலுள்ள குழந்தையை அணைத்தப்படி கதறினாள்..

தலைதலையாக அடித்துக் கொண்டு முத்து அழுது புரண்டான்.

என்ன செய்வது? ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும், மாண்டார் வருவதில்லை.

வந்த உயிரை பானுமதி தந்த உயிரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுவதில் ராசாத்தி மிகவும் அக்கறை செலுத்தினாள்.

காலத்தின் சக்கரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது தெரியுமா?  ஒரு நிமிடம் என்பது                      எவ்வளவு  உயர்நதது  என்பது  சோம்பேறிக்கும்  உழைக்கத் தெரியாதவர்க்கும் தெரிந்திருக்க நியாயமில்லை

ஊன் உறக்கமில்லாமல் உழைத்தவர்களின் கணடுபிடிப்பால் இன்றைக்கு இரவினில் இருளில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் பரிமாணமே நேரத்தை நேசித்ததன் விளைவுதான். அதன் பயனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டுயிருக்கிறோம்.

மாதங்கள் கடந்தன.

நிறைமாத கர்ப்பிணி ராசாத்தி, நான்கு மாத குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிற பொழுது பிரசவலி எடுததது.

பல்லைக் கடித்துக் கொண்டு, குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு, அவளையும் அறியாமல் அம்மா என்று கத்தினாள்

அந்த சப்தம் எட்டு வீடு தாண்டியும் கேட்டது. 

இதே சப்தம் பணக்காரர் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் கேட்டிருந்தால் யாரும் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டடார்கள.

ஆனால் அந்த பகுதி ஏழைகள் வாழும்;  என்பதால், போட்டது போட்டபடி பெண்களும் ஆண்களும் முத்துவின் வீட்டிற்கு ஓடி வந்தார்கள்.

நிலமையுணர்ந்த பெண்கள், ஆண்களை வெளியேபோக சொல்லிவிட்டு, ஆறுதலாக “கொஞ்சம் பொறுத்துக்கம்மா” என்று படி, வயதில் முதிர்ந்த தாய்மார்கள்.. பிரசவ ஏற்பாட்டினைச் செய்தனர்  மணிகணக்கில் இல்லை... சில நிமிடத்ததில் குழந்தையின் அழுகை சப்தம்…. அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள்.

எங்கேயோ சென்றுவிட்டு வந்த முத்துவிடம் “இந்தாட முத்து…. உன் தங்கைக்கு  பெண்குழந்தை பொறந்திருக்கு, போய் பேறுகால செலவு வாங்கிட்டு வா” (பேறுகால செலவு  என்றால் குழந்தை பெற்றவளுக்கு கொடுக்க கூடியவை துவையளாகசும் கசாயமாகசும் கொடுப்பார்கள் இன்று மருத்துவமனையில் நடப்பது வேறு.)

முகமெல்லாம் பூ ரிப்பான முத்து “இதோ ஒரு நிமிடம்” என்று கடைக்கு ஓடினான்.

செலவுடன் வந்த முத்து, குழந்தையை எடுத்து மகிழ்ந்தாள். சில நாட்கள் பக்கத்து வீட்டுத்தாய்மார்கள் முத்துவினுடைய குழந்தையையும் பச்ச ஒடம்புக்காரியான ராசாத்தியைகவனித்துக் கொண்டார்கள்.

உடல் தேறிய ராசாத்தி, தன் குழந்தைக்கு தன்னுடைய தாய் பாலையையும,; முத்துவினுடைய குழந்தைக்கு புட்டிபாலையையும் தன் மடியில் படுக்க வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

அப்போது முத்துவின் குழந்தையினுடைய பிஞ்சு விரல், ராசாத்தியின் மார்பை வருடியது.

திகைத்துப் போன ராசாத்தி பக்க வீட்டு பாட்டியிடம், முத்துவினுடைய குழந்தையைப் பார்க்க சொல்லிவிட்டு, பூ க்கடைக்கு சென்றாள்.

பூ க் கடையில் மலராத மல்லிகையும், காய்கறிக்கடைக்கு சென்று ஒரு கோஸ்(காய்) வாங்கி வந்து மார்பு மீது மல்லிகை பூ வை வைத்து, அதன் மீது கோஸ் இலையை வைத்துக் கட்டினாள்.

முத்துவின் குழந்தையை எடுத்து வந்த பாட்டி, ஏதேச்சையாகப் பார்த்துவிட்டு

“உனக்கொன்ன பைத்தயமா? அப்படி செய்யாதே பால் வற்றி போகும்.”

“இல்லைம்மா குழந்தைக்கு ஏம்மார்பு பால் குடிக்கனும் ஆசை”.

“கொடுக்க வேண்டியதுதானே ?”

“அம்மா இதென்ன கொடுமை இவன் என் மருமகன்” அதான் பார்க்கிறேன்…”

“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.

என்ன முடிவு என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?
 
திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529




 நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, August 21, 2012

குருப் 2 -12.08.2012 விடைகள்

சென்ற 12.08.2012 அன்று நடந்த tnpsc குருப் 2 வினாத்தாளின் சரியான விடைகள்.


அந்த தேர்வு  ரத்து செய்யப்பட்டு இருந்தாலும்...நீங்கள் சரியான விடையை அளித்திர்களா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ இணைப்பு...


குருப் 2 -12.08.2012 விடைகள்  

கணித வினாக்களின் விளக்கம்  





நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Friday, August 17, 2012

நீதி தேவதையே



நீதி தேவதையே உன் கண்கள் கருப்புத் துணிக் கொண்டு ஏன் கட்டப்பட்டு இருக்கிறது தெரியுமா?

இங்கே நடக்கின்ற அவலங்களை காணமலிருக்கத்தான்.

பட்டபகலில் பத்துப்பேருக்கு முன்னால் இளம்பெண் ரவுடிகளால் காரில் கடத்தப்படுகிறாள் பொது மக்களிடம் பிடிப்பட்ட ரௌடி அரசியல் தலைவனின் கட்டளைக்கு பயந்து FIR கூட போடாமல் வெளியுலக நாயகனாக நகர்வலம் வருகிறான் அதையும் மீறி மனித உரிமை மகளிர் போராட்டத் போன்றவற்றால் கைதாகி சரியான சாட்சி யில்லையென்று விடுதலையாகிறான்.

பகலிலே நடமாட முடியாத பெண் இரவில் எப்படி நடமாட முடியும்.  இது காந்தி கனவில் மண்.

லட்சோப லட்சம் இளைஞர்கள் வேலை வேண்டும் என்பதற்காக வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு படித்துக் கொண்டு தேர்வுக்கு செல்லும் போது நம்பிக்கையெல்லாம் பாழாகும் விதமாக சில கருப்பு ஆடுகள் முந்தைய நாளே கேள்விகளை மோப்பம் பிடித்து விடுகின்றன…என்ன செய்யப் போகிறாய்…தேவதையே அந்த சமூக முட்களை….

இதோ இந்த குடிசைகுள்ளிருந்து வரும் பேச்சை கேள் தண்டனை வழங்குவது பற்றி பின்னர் யோசி.

ஏப்பா மணி 12 ஆகுது. போய் தூங்குப்பா

இல்லைய்யா நாளைக்கு TNPSC பரிட்சைம்மா இன்னும் கொஞச நேரம் படிச்சுட்டு அப்புறமா துங்குறேன். இன்னைக்கு தாம்மா என் நண்பன் நம்ம நிலமையறிந்து இந்த கைடு தந்தான் நீ  போய் தூங்கும்மா.

எனனமோபப்பா கடவுள் புண்ணியத்துல இந்த வேலையாவது கிடைச்சால் உன் தங்கச்சயை ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்திரலாம் அந்த மனுசன் உயிரோடு இருந்தா உன்னை இதுமேல படிக்க வைச்சிருப்பாரு. பாலா போன பஸ்…..இவரு மேலே ஏறி……ம்மம்… பஸ்சுக்கு சொந்தக்காரர் ஆடுயு வெறும் 10 ஆயிரம், கொடுத்து வாயை அடைச்சுட்டான்…..

ஏம்மா அப்பவே நீ போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்கலியா?

புகார் கொடுக்க சின்ன சிறிசான உன்னையும் தங்கச்சியும் தூக்கிட்டு போனப்பா அந்த SI

“இந்தாம்மா இவரு MLA இவரு சொன்ன சட்டமே கேக்கும். பேசாம அவரு பெரிய மனசு வைச்சு கொடுக்கிற பணத்தை வாங்கிக்கோ” ன்னார்.
உடனே பணத்தை வாங்கி யிட்டயாம்மா?

இல்லைப்பா எம்புருசன் உயிருக்கு வெறும் பத்தாயிரம் தானா… நான் முடியாதுன்னேன்

அந்த இன்ஸ்பெக்டர் “இந்தாம்மா நான் தான் கேஸ் எழுதறவன் குஐசு அதை வைச்சு தான் கோர்ட் தீர்மானிக்கும் உன்புருசன் நிதானமில்லாம சாராயம் குடிச்சுட்டு ஓடர பஸ்லல யிருந்து கீழே குதிச்சிட்டான். என்று எழுதி விடுவேன் என்று பயமுறித்தி அப்போ ஒரு போலிஸ்காரர் தனியாக அழைத்து ஏம்மா அவனுகிட்ட உங்களால மோத முடியாது கேஸ் சீஸன்னு அலைய முடியாது பேசாமே கொடுக்கிறத வாங்கிக்கோ என்றார்

எனக்கும் சரின்னு பட்டுச்சு வாங்கிட்டேன..; என்னமோப்பா  கூலி வேலைச் செஞ்சு உங்க ரெண்டு பேரயும் என்னால முடிஞ்ச வரைக்கும் படிக்க வைச்சுட்டேன்.

அடுத்தநாள்…..

எப்படிப்பா எழுதியிருக்கிற?

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறேன்மா கட்டாயம் எனக்கு வேலை கிடைச்சிடும் நம்ம கஸ்டமெல்லாம் தீர்ந்து விடும் கவலைப்படாதேம்மா.

வேலை கெடச்சுடுச்சுன்னா யார் கிட்டேயும் லஞ்சம் வாங்காதப்பா நம்ம போல ஏழை பாளைங்க என்ன கஷ்டம் படராங்க.

இதை நான் உனக்கு சொல்ல வேண்டியதில்ல…என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் வரும்போது…

மணியின் தங்கை “அதுதான் லஞ்சம் கொடுத்து வாங்கிட்டுhனுங்களே”

தாயும் மகனும் ஒன்று சேர “என்னடி சொல்ற?”

“என்ன சொல்ல நியூ சை நீயே பாரு’

மணி கண்கலங்கி “ போச்சும்மா எல்லாம் போச்சு .. லட்சம் கொடுத்து கேள்விதாளை வாங்கி அதிக விலைக்கு வித்துயிருக்கானுங்கம்மா”

“அடபாவிகளா சோறு தண்ணி யில்லாம ராவும் பகலும் லைப்ரரி அங்கே யிங்கேயின்னு படிச்சவனுக்கு இந்த கதியா” எனறு தலைதலையாய் அடித்துக் கொண்டாள் அவன் தாய்.

கேட்டாயா நீதி தேவதையே அங்கே பார் அந்த அவலநிலையை,

பாரதத்தில் ஒரு தாய் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறாள்.  

என்ன செய்யப் போகிறாய்? இந்த சணடாளக் கூட்டத்தை. 

உன் கையிலுள்ள வாள் வெண்ணை வெட்டவா? சொல் தேவதையே சொல். இல்லை நீதியை காக்க சுழற்று உன் கத்தியை.

திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529

 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, August 15, 2012

சட்டத்தின் படி

 சட்டத்தின் படி (10)

சென்ற வாரம்  
முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.

என்ன நடந்தது பானுவிற்கு?....அடுத்த வாரம் காத்திருங்களேன்.

திவாகரன் வருவதற்கு பவ்யமாக கதவைத் திறந்து விட்டு ஏசியை ஆன்  செய்தான் ஆபீஸ் பியூ ன்.

கோட்டை கழட்டிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், இன்டர்காமில் மேனேசரை அழைத்து பேக்டரி விசயங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்ட பின் மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளையும் மற்றும் புதிதாக கிடைத்து இருக்கிற ஆடர்களை பற்றியும் இருவரும் விவாதித்தார்கள்.

நிட்டிங் சூப்பர்வைசர் வந்தாரா?

இல்லைங்க சார்…வேலைக்கு இனிமேல் வரமாட்டார் என்றார் மேனேசர்.

திவாகரன் கண்களாலேயே ஏன் என்றார்

நமக்கு வர வேண்டிய நூல் பண்டல்களை வேறு கம்பெனிக்கு அவர் அனுப்பி வைத்து கமிசன் பெற்ற அந்த விவகாரம் நிருபணமாகி விட்டது. அதை நான் தட்டிக் கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டார். என்று தயக்கத்துடன் சொன்னார் அந்த மேனேசர்.

வெரி குட். கேள்விப்பட்டேன். நானும் அதைப்பத்தி கேட்கலாமுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். நான் என்ன செய்யனுமுன்னு நினைச்சேனோ அதைத்தான் நீங்க செஞ்சு இருக்கீங்க. உடனே அவருடைய ரூமை காலி பண்ணிடுங்க.

நிட்டிங், கட்டிங,; ஓவர்லாக், பேட்லாக், பிரிண்டிங், செக்கிங், அயர்னிங், பேக்கிங் என அனைத்து செக்சன் சூப்பர் வைசர்களுடன் சென்று ஆய்வு நடத்திவிட்டு மறுபடியும் ஆபிஸ்க்குள் நுழைந்தார்.

டேபிளின் மீது இருந்த பைல்களை எடுத்துப் பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு, இண்டர்காமில் மேனேசரிடம் ஏதோ பேசிவிட்டு டையிங் பேக்டரிக்கு செல்ல காரில் புறப்பட்டு சென்றார்.

அவர் போன சிறிது நேரத்தில் ஆபிஸ்க்கு வெளியே பவ்யமாக “என்ன நினைத்தாரோ முதலாளி” என்ற குழப்பத்துடன் தன் மகனுடன் நின்றுக் கொண்டிருந்த வேலுவை அழைத்தார் அந்த மேனேஜர்.

இந்தாப்பா பையனும் நீயும் அந்த கேண்டினுக்கு சென்று சாப்பிட்டு இங்கே வாங்க… கேண்டீனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் போங்க என்றார்.

வேலு மகனுடன் கேண்டீனில் திருப்தியாக சாப்பிட்டு விட்டு மேனேசர் ரூம் அருகே வந்து நின்றான்.

டையிங் பேக்டரியிலிருந்து திவாகரன் "என்ன ரெண்டு ஜெனரேட்டர்களும் ரிப்பேரா? இன்சார்ஜ் எங்கே போனார்?" என்றபடி படு கோபமாக அங்கிருந்த ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார்.

சார் இன்சார்ஜ் எங்கயோ வெளியில போறதா சொல்லிட்டு போனாரு…

உடனே மேனேஜருக்கு போன் செய்தார் திவாகரன்.

என்னய்யா வேலைப் பாக்குறீங்க? காலையில சேம்பல் கொடுத்தாகனும் என்ன செய்வீங்களோ ஏது செயிவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் அரைமணி நேரத்துக்குள் ஜெனரேட்டர் ஓடியாகனும் என்று மிரட்டியபடி போனைக் கட் செய்தார்.

டையிங் இன்சார்ஜ்க்கும் மெக்கானிக்குக்கும் எத்தனை தடவைசொன்னாலும் மண்டையில ஏறாது இப்போ என் தலையிலதான் கட்டிட்டு போயிட்டாரு முதலாளி. அவனுங்க வரட்டும் நாளைக்கு பார்த்துக்கிறேன்  என்றபடி அந்த மேனேசர் புலம்பிக்கொண்டிருந்தார்.

“அங்கு நின்றுக் கொண்டிருந்த வேலு மிகவும் பணிவாக அய்;யா எனக்கு ஜெனரேட்டரெல்லாம் ரிப்பேர் பாக்கத் தெரியுமுங்க..மெக்கானிக்கிடம் 5 வருசம் ஹெல்பரா வேலை பாத்திருக்கேன்”;.

வேலுவை ஏற இறங்க பார்த்த மேனேசர் “உனக்கு மெக்கானிக் வொர்க் தெரியுமா? ஓட வைச்சுருவியா?”

“ஐயா ஜெனரேட்டரை பார்த்தபின்தான் என்ன போயிருக்கிறது என்பதை சொல்ல முடியும். அதை பார்த்து பின் கண்டிப்பாக ஓட வைத்து விட முடியும”; என்றான் வேலு.

உடனே திவாகரனுக்கு போனில் தகவல் சொன்னார் மேனேசர்.

உடனே வேலுவையும் அவர் மகனையும் கூட்டிக்கொண்டு மேனேசர் காரில் டையிங் பேக்டரியை அடைந்தார்.

ஜெனரேட்டர் அருகில் நின்றிருந்த திவாகரனை வேலு கும்பிட்டபடி “ஐயா” என்றான்

“போப்பா போய் என்னென்னு பாரு”

ஜெனரேட்டரை ஆன் செய்தான் வேலு. கர் கர் என்ற சப்தம் மட்டும் வந்தது



உடனே ஏதோ யோசித்தவனாய் அருகிலுள்ள டூல் பாக்ஸிலிருந்து ஸ்பேனரை எடுத்து டீசல் டியூபை கழற்றி விட்டான். பிறகு உள்ளிருந்த பில்டரை அனைத்தையும் கழட்டினான். அவன் நினைத்தபடியே டீசல் அடைத்துக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் சுத்தம் செய்துக் கொண்டிருக்கையில்…

அங்குள்ள பணியாட்கள் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்.

திவாகரன் “நிறுத்துங்க..உங்களைப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும். ஒரு பானை சோத்துக்கு”… என்று திவாகரன் முடிப்பதற்குள்

வேலுவின் மகன் “ஒரு குண்டா சாம்பார் ”; என்றான்.

திவாகரன் உட்பட அனைவரும் கொல் என்று சிரித்தனர்.

அவனுடைய தலையை மெல்ல வருடிக் கொடுத்தான் வேலு.

எல்லாவற்றையும் சரியாக பொருத்தியபின் ஜெனரேட்டரை ஸ்ட்டார்ட் செய்தான் வேலு. ஜெனரேட்டர் ஓடத் துவங்கியது. அனைவரின் முகத்திலும் சந்தோசம் தெரிந்தது.

“இந்தாப்பா ம்ம் வேலு நீ இங்கேயேயிருந்து ஜெனரேட்டரை பார்த்துக்கோ.! என்றபடி மானேசரிடம் பையனை தன்னுடைய ஆபிஸ் ரூமில் தங்க வைக்கும் படி சொல்லிவிட்டு பேக்டரிக்கு காரில் சென்றார்

ஒரு மணி நேரத்திற்குபின் தன்  மகனை காண வேலு MD ரூம்மிற்கு சென்றார். 

மகனை காணவில்லை  

ஒவ்வொரு இடமாக தேடினான் எங்கும் பையனில்லை. 

RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

எங்காவது தொலைந்து போய் விட்டானா வேலுவின் மகன்?

அடுத்தவாரம் பார்ப்போமா?


திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, August 14, 2012

சரித்திரம் வாய்ந்த நீலகிரி

சரித்திரம் வாய்ந்த நீலகிரி (நீல நிற மேகங்கள் சூழ்ந்த மலை)

அன்று சேரன் செங்குட்டுவனின் வேட்டையாடும் காடாகவும் கோட்டை கொத்தளங்களாகவும், போர் கருவிகள் செய்வதற்கும் பாதுகாப்பான மறைவிடமாகவும் இருந்து உள்ளது. அந்த அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு கருதி அருவங்காட்டில் (அரவன் என்றால் பாம்பு) பாம்புகள் நிறைந்த காடு) வெடிமருந்து தொழிற்சாலை நிறுவப்பட்டிருக்கலாம் 

பக்கத்தில் வெலிங்க்டன்னில் தலைசிறந்த ராணுவ பயிற்சி முகாமும் உள்ளது.

கேரள கர்நாடக என்ற இந்த இரண்டு மாநில மக்களும் ஏலக்காய் இஞ்சி மற்றும் விளைபொருளை வாங்க கூடுவதால் அந்த இடம் கூடலூர் ஆயிற்று.

ஒத்த கல் கொண்ட மண்டபம் இருந்த இடம் ஆங்கிலேயரின் ஆங்கிலத்தால் உதகமண்டலம் ஆயிற்று. இன்றைக்கு அதுவும் மருவி ஊட்டி ஆகி விட்டது.

சிகரத்தை தொட்டு விடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் தொட்டபெட்டா (பெரிய மலை) காட்சி முனை.

உலகத்தில் சிறந்த பொட்டானிக்கல் பூ ங்கா இந்த ஊட்டியில்தான் உள்ளது.
முதுமலையில் மிருகங்களின் சரணாலயம் உள்ளது.

குன்னூரில் (குன்றுகள் நிறைந்த ஊர்- குன்றூர்;) பல சின்ன மலைகளும், காட்சி முனைகளும் அதிகம்.

கோத்தகிரியின் அருகில் கோடநாடு என்பது (கொடார் என்பது அபாயகரமான பள்ளத்தாக்கு என்ற பொருள்) பாறைகள் நிறைந்த பகுதிதான. 
கோடநாடு வியூ பாயிண்ட் இங்கிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கில் பசுமையான வயல்வெளியும் தென்னை மரங்களும் காடு வீடுகளும் பவானி அணைக்கு போகும் கரைபுரண்டு ஓடும் ஆறுகள் தெரியும கோடார் என்ற இனம் வாழ்ந்த தாகவும் சொல்லப்படுகிறது அவவினம் இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை.

அங்கிருக்கும் அந்த தேயிலைத் தோட்டங்கள் ரொம்பவும் விசேசம். மேலிருந்து பந்தை உருட்டி விட்டால் தங்கு தடையின்றி தேயிலை செடி மீது உருண்டே கீழே வந்து சேரும். அந்த அளவிற்கு தேயிலை செடியின் பராமரிப்பு மிகுந்த எஸ்டேட் கோடநாடு.

குன்னூர் அருகில் கொலக்கொம்மை அருகில் அருவியுடன் கூடிய ஒட்டக்கொடார் உள்ளது. இங்கு பலர் தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படுகிறது.

அங்குள்ள இனங்கள்

சரி விசயத்திற்கு  வருவோம். சேரன் போர் செய்ய  வேண்டிய,  ஆயுதங்களை செய்தவர்கள் கோத்தர் என்ற பழங்குடி இனத்தவர் இன்றும் அவர்கள் தங்கள் கலை அழியாமல் காத்து வருகின்றனர் வெட்டுக்கத்தி(மரம் வெட்ட) கவாத்துக்கதத்தி  (தேயிலை செடியின் சிளைகளை சீவ) மூன்று அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறை வெட்டி விட வேண்டும் இல்லையெனில் அது மரமாகி விடும். அப்புறம் ஏணி வைத்து இலைப்பறிக்க முடியாது. இந்த தேயிலைகளின் கிளைகளை  சீவ வேண்டுமே தவிர வெட்டக் கூடாது கவாத்துக்கத்தியின் இருமுனைகளும் கூர்மையானதாக இருக்கும். இன்றைக்கும் அவர்கள் மம்பட்டி போன்ற கருவிகளை செய்து கொண்டுயிருக்கின்றனர். அவர்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டயிருக்கிற கோத்தகிரி (கோத்தர் கிரி) 




இருண்ட அடர்த்தியான இருள் சூழ்ந்த காடுகில் (பள்ளத்தாக்கில்) வாழ்ந்தவர்கள் இருளர். குறுகிய பள்ளத்தாக்கில் உள் காடுகளில்; வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இருப்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னேற இடம் பெயர்ந்து சமவெளியில் வாழ்ந்தவர்களும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் உண்டு. மொழி வேறுபாடும் உண்டு.



கூடலூரில் பகுதியில் பனியர் என்ற பழங்புகுடியினர்,  புலி கரடி பாம்புகள் அபாயகரமான மிருகங்கள் வசிக்கும் காட்டிலும்; வாழ்ந்துக் கொண்டியிருக்கிறார்கள் பயமே இல்லாதவாகள்.  மொழியில் மலையாள மொழியின் வாசம் தென்படும்.

பல வெற்றிகளை கண்ட அலக்ஸாண்டர் மேற்குமலை தொடர்ச்சி மலை நோக்கி பயணிக்கும் பொழுது சீதோஸ்ண நிலை காரணமாக பல வீரரர்கள் மடிந்தனர்.  


அதில் உயிர் தப்பியவர்கள் தொதவர் என்ற பழங்குடியினர் (பல மலைகளை  தொட்டு தொட்டு வந்தவர்கள) அவர்களுடைய தோற்றம் ஆசானுபானவாக இருக்கும.; நல்ல உயரம் கட்டுமஸ்த்தான உடல் வாகு, சிவப்ப நிறம,; பேச்சு மொழியுண்டு எழுத்து வடிவமில்லை.

வடகார் இவர்கள் லடக்கேயிருந்து வந்த வர்கள் இன்று படுகர் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்களுடைய மொழி படுகு மொழி.

இவர்களுடைய மொழி கன்னட மொழியின் அடிப்படையாகக் கொண்டது மிகக்குறுகிய காலத்தில்தான் தமிழ் எழுத்தின் துணைக்கொண்டு அவர் படுகு மொழியை எழுதி வருகிறார்கள். 

அவ்வெழுத்தை உருவாக்கியவர் ஒரு தமிழறிஞா. அவர் கொலக்கம்பையைச் சேர்ந்த அமரர் சி. டி. கிருஷ்ணய்யா என்பது குறுப்பிடத்தக்கது.

இவ்வினத்தில் நில சுவான்தார்களாகவும. தேயிலை தோட்ட அதிபர்களாகவும் அரசு அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள்.

அரசியலிலும் மாவட்டம் வட்டம் என பல பதவிகளில் உலா வருகிறார்கள். இவர்களுடைய நம்பிக்கை தெய்வம் ஹெத்தையம்மன. தை மாதம் நடக்கும் இத்திருவிழாவிற்கு அனைதது பகுதி படுக சமுதாயத்தினரும் வருகைத்தருவார்கள்.

தெங்குமரஹடாவின் சிறப்பு மலை சூ;ழ்ந்த சமவெளி யானைகளின் நடமாட்டம் அதிகம் நெல் கரும்பு வாழை நிலக்கடலை என அனைத்து பயிர்களும் பயிரிடுகிறார்கள். படுகர், ஒக்கிலி கவுண்டர், கவுண்டர், முதலியார் மலையாளி தாழ்த்தப்பட்டவர்கள் என அமைத்து பிரிவினரும் ஒன்றுமைக்கு பங்கம் வரா வண்ணம் வாழ்ந்து வருகின்றார்கள்.. இது ஒர் கூட்டுறவுப் பண்ணையாகும். 


நீலகிரி மாவட்ட ஆட்சியாளரின் ஆளுமைக்கு உட்பட்டது. ஊராட்சி மன்றம் இங்குள்ளது. 2 ஏக்கர் வீதம் உறுப்பினர்களுக்கு விவசாய நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சோலூர் மட்டத்திலுள்ள படுகர் சமுதாயத்தினர் பெரும்பாலும் உறுப்பினர்களாக உள்ளனர்..

இப்பேருராட்சி கல்லாபாளையம் அல்லிமாயார் கெஜல்பட்டி மற்றும் சில சிறிய கிராமங்களை கொண்ட பேருராட்சியாகும். பெரும் வெற்றி பெற்ற அன்னக்கிளி என்ற திரைப்படம் முழுவதுமாக இங்குதான் படமாக்கப்பட்டது.

மகாபாரத அர்ச்சுனனின் பல மனைவிகளில,; ஒரு மனைவி யான அல்லி மகாராணியினுடைய கோட்டை அல்லி மயாயாருக்கு சார்ந்த மலை பகுதியில்  உள்ளதாக கூறப்படுகிறது. (தொல்லியல் துறை கவனிக்க)

இந்த அழகிய கிராமததை  சென்றடைய வேண்டுமானால் பரிசலில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றைக் கடந்து செல்ல முடியும்.


இன்னும் ஏராளமான சிறப்பு உண்டு ஆனால் ஆண்டு ஆண்டுகாலமாக கல்லாபளையம் அல்லிமாயார் கெஜல்பட்டிகளில் உள்ள இருளர் என்ற பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பல பேர் மற்றவர்களிடம் குத்தகைககு விட்டு விட்டு அவர்களிடம் கூலி வேலை செய்யும் அவல நிலைமை உள்ளது.


கல்லாபாளையம் அல்லி மாயாரில்  உண்டு உறைவிடப் பள்ளியிருந்தாலும் கல்வி நிலை மந்தமாக இருக்கிறது.

தெங்குமரஹடாவிற்கு போகும் வழியில் மான்கள் கூட்டமாக துள்ளிச் செல்வதையும், தோகை விரித்தாடும் மயில்களையும் கடந்து போகும் காட்டு  எருமைகளையும், கழுதைப்புலிகளையும், சீறும் சிறுத்தைகளையும், பிளிரும் யானைக் கூட்டத்தையும் காண முடியும் 


வனத்|துறையினரின் சோதனைக்கு பின்னே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது .

கட்டுரை  : திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529

 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, August 9, 2012

சட்டத்தின் படி( 9) - சுவாரஷ்யமான தொடர்கதை

சட்டத்தின் படி (9)
ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.


பார்வையில் பலவிதம் என்ற உண்மை பானுவின் பார்வையில் ராசாத்தியைப் பார்க்கும்  பார்வை வினாடிக்கு வினாடி மாறுபட்டது. 

மோனோலிசாவின் பார்வையைப் போல் இருந்தது பானுவின் பார்வை. ஒன்றும் புரியவில்லை முத்துவிற்கு.

கோபம் வெறுப்பு ஏளனம் கடைசியில் ராசாத்தியை ஏற இறங்க பார்த்தபின் கொஞ்சம் அனுதாப பார்வைத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் பார்வையால் உள்ளே வா என்பது போல் இருந்தது அவள் பார்வை.

முத்து முள்ளே செல்ல ராசாத்தி பின் தொடர்ந்தாள்.

கோயமுத்தூர் சுற்றுவட்டார மண்ணுக்கே சொந்தமான முதல் உபசரிப்பு, யார் வந்தாலும் வந்தவர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பது. எங்கிருந்தோ வந்தவர்கள் தாகத்திலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆண்டாண்டு காலமாய் இந்த பழக்கம் இன்னும் இந்த கொங்கு மண்ணில் இருக்கிறது.

பானு என்கின்ற இந்த பானுமதி கோயமுத்தூரைச் சேர்ந்தவள். வீட்டார் பார்த்து முத்துவிற்கு மணமுடித்து வைத்தார்கள். மிகவும் நல்ல பழக்கம் கொண்ட ஒரு குடும்பப் பெண். ஆனால் என்ன?.. கொஞ்சம் சந்தேகப் புத்தி.

உள்ளே சென்ற பானு, ராசாத்திக்கு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“என்ன முழுகாம இருக்கியா?”

தலையை குனிந்தபடி “ம்” என்றாள் ராசாத்தி.

சற்று பதற்றமான முகத்துடன் ராசாத்தியையே பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

முத்துவின் சம்பாதனை இந்த வீட்டில் வயிற்றுக்கு மட்டும் சரியாக இருந்தது. சின்ன வீடு. மொத்தம் இரண்டே அறைகள் தான். ஒன்று வந்தவர் அமருவதற்கு. அல்லது படுப்பதற்கு, இன்னொன்று சமையல் செய்ய.

ஏதோ மனதில் தோன்றியவளாய் வேகமாக சமையல் அறைக்குள் சென்றாள் பானு.

“என்னங்க….”

பானுவின் குரல் சற்று சப்தமாகவும், கோபமாகவும் இருந்தது.

முத்து “என்ன பானு” என்றபடி உள்ளே சென்றான்.

“மெதுவாய் பேசு பானு” என்றான் முத்து.

“இனி பேசறதுக்கு என்ன இருக்கு? அதுதான் கூட்டிட்டு வந்துட்டியே ஒரு சக்களத்தியை…”

தங்கச்சியாய் நினைத்து பாசத்தோடு கூட்டி வந்தவளை சக்களத்தி என்று சொன்னவுடன் கோபம் வருவதற்கு முன்பே அவன் கை அவள் கன்னத்தை நோக்கி விரைந்தது.

“பளார்” என்று ஓர் அறை விட்டான் முத்து.

பானுவிற்கு மின்னல் தெறித்தது போல் இருந்தது அந்த அடி. வலி தாங்காமல் ஓ எனக் கத்தினாள்.

அந்த சப்தத்தை கேட்டு பதறியபடி உள்ளே வந்த ராசாத்தி…

“அண்ணா அண்ணியை அடிக்காதீங்க..என்னால உங்களுக்கு பிரச்சனை வேண்டாம். நான் இங்க இருக்க விரும்பல..அண்ணா நிறைமாசத்துல அண்ணி இருக்குறாங்க..அவங்களை போய் அடிக்கலாமா? இது தப்பில்லையா?”  என்று கண்ணீர் மல்க கை யெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தி வெளியே புறப்படத் தயாரான போது…

பானுமதி சற்றே யோசித்தவளாய், ராசாத்தியை தடுத்து நிறுத்தினாள்.

“எப்போ நீங்க என்னை அண்ணியா ஏத்துக்கிட்டீங்களோ இனிமே நீங்களும் எனக்கு அண்ணிதான். உட்காருங்க நீங்க எங்கேயும் போக வேண்டாம். இங்கயே என் கூடவே இருங்க”…என்று கண்ணீர் கன்ன மேட்டில் வழிந்தபடி பாச உணர்வுடன் சொன்னாள் பானு.

ராசாத்தி பேச வார்த்தையில்லாமல் வாய் விக்கித்து நின்றாள். அந்த இருவரின் பாசக்குவியலில் சிக்குண்டு மூச்சு திணறியபடி கண்ணீh.; விட்டாள்.

“சரி..அதுதான் சொல்லிட்டாளே..உள்ளே போய் உட்காரு தங்கச்சி”…முத்துவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மனைவியை நினைத்து பெருமைப்பட்டான் முத்து.

“மாசமா இருக்கிறாள் இல்ல…காலையில இருந்து சாப்பிட்டு இருக்கமாட்டா .. போய் ஏதாவது பண்ணிக் கொடு”.. பாசத்தோடு கணவன் என்கிற உரிமையோடு உத்திரவிட்டான்.

“ஆமா ஆமா…இருங்க அண்ணி ..அண்ணன் கூட பேசிட்டு இருங்க… கொஞ்ச நேரத்துலேயே சாப்பாடு செஞ்சுத்  தரேன்” என்று சமையல் கட்டுக்குள் போன பானுமதியை ராசாத்தி தடுத்து,

“அண்ணி நான் சமைக்கிறேன்.. நீங்களும் அண்ணனும் பேசிட்டுயிருங்க.எந்தெந்த பொருட்கள் எங்கேயிருக்குன்னு சொன்னா மட்டும் போதும்”  என்றாள் ராசாத்தி.

அனைத்து டப்பாவையும் திறந்துக் காட்டினாள் பானு.

பானுசும் ராசாத்தியும் பேசுவதைப் பார்த்து சந்தோசத்துடன் நின்றான் முத்து.

 “ஏங்க உங்க  தங்கச்சிக்கு முதன் முதலா சாப்பாடு கவுச்சியோட போடலாம்… ஏதாவது போய் வாங்கிட்டு வாங்க…” என்றாள் பானு.

“அண்ணி நான் இனிமேல் இங்கதானே யிருக்கப் போறேன்..இப்போதைக்கு சாம்பாரும்,மிளகுரசமும் பொறியலும் செய்தாலே போதும்..என்ன அண்ணா உங்களுக்கு போதுமா?”

“ராசாத்தி எனக்கு போதும் எதுக்கும் உங்க அண்ணியை ஒரு வார்த்தைக் கேட்டுக்கோ”

“அண்ணி.. நானும், உங்க அண்ணனும் காத்தாட வெளியில் இருக்கோம்”..  என்று சொல்லிவிட்டு வெளித்திண்ணையில வந்து பானுமதியும், முத்துவும் உட்கார்ந்தார்கள்..

“பானு எதற்கு வெளியே வந்தேன்னு எனக்கு தெரியும் ராசாத்தியின் கதையை கேட்கத்தானே?”

“ஆமா சொல்லுங்க அவங்க யாரு? ஆனா.. என்னமோ எனக்கு அவுங்க நல்லவங்களாத்தான் தெரியுது.”

முத்து கடற்கரையில் நடந்த முழுக் கதையையும் ஒன்றுவிடாமல் விபரமாகக் கூறினான்.

“அடப்பாவி தங்கமானவளை தறுதலை அநாதையாக்கிட்டானே?! குழந்தையின் கதி என்ன ஆச்சோ?” என்று கண் கலங்கினாள் பானுமதி.

“அண்ணா அண்ணி வாங்க சாப்பிடலாம”;

இருவருக்கும் சாதம் வைத்தாள்

“அண்ணி நீங்களும் உட்காருங்க”

“இல்லே நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க .. அப்புறம் நான் வாப்பிடுறேன்” என்றாள் ராசாத்தி

சமையலை கணவனும் மனைவியுமு; மாறி மாறி புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார்கள்.

கடவுளே இவங்களுக்கு என் வேதனை தெரிய வேண்டாம் என்னோடு இருக்கட்டும். அதற்கு எனக்கு தைரியத்தை கொடு என்று கடவுளை மனதார வேண்டினாள் ராசாத்தி.

விடிகாலை சுமார் 5 மணியளலில் பானுவிற்கு பிரசவ வலி மெல்ல மெல்ல அதிகரித்தது

அண்ணி என்று வலியால் முணுமுணுத்தாள்.

இன்னும் சில நேரத்தில் புதுக் குழந்தை இந்த மண்ணிற்கு வரப்போகிறது. அவளுக்கு இது முதல் பிரசவம் வேறு. பயந்தபடி கதறத் தொடங்கினாள். வயிறும் இரண்டு குழந்தைகள் இருப்பது போல் பெரிதாகவே இருந்தது. பனிக்குடம் கொஞ்சம் கொஞ்சமாக உடைவதற்கு தயாராகி  கொண்டிருந்தது.

ராசாத்தி அடனே எழுந்து பானுமதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அண்ணா ஏதாவது வண்டியை கூட்டிட்டு வாங்க..உடனே ஆஸ்பத்திரிக்கு போகனும்.

பதறி துடித்துக் கொண்டு எழுந்த முத்து அஞ்சரைப் பெட்டி முதல் அரிசி  டின் வரை எல்லாவற்றையும் தேடி எடுத்த பணம் 1200 ஐ தொட்டது.

இதைப் பார்தத ராசாத்தி அண்ணா “இந்தாங்க இதையும் புடிங்க”..என்று தன்னிடமுள்ள சில ஐநூறு ருபாய் அநாட்டுகளை கொடுத்தாள். (கடற்கரையில் தன்னை கற்பழித்த அந்த காமுகன் கொடுத்தப் பணம்)

பானுமதியுடைய அழுகை சப்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்களும் ஓடி வந்தார்கள்.

அதற்குள் ஒருவர் 101 போன் செய்தார்.

ஆம்புலன்ஸ் வந்ததும் ராசாத்தி, முத்து பிறர் உதவியுடன் பானுவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்க்ள்.

பானுமதியின் அழுகை அவளின் பிரசவ வேதனையை சொல்லாமல் சொல்லியது. அவசர அவசரமாக முத்துவிடம் கையெழுத்து வாங்கினார்கள் அங்குள்ள மருத்துவ ஊழியர்கள்.

ஆப்ரேசன் தியேட்டருக்குள் பானுமதி கொண்டுச் செல்லப்பட்டாள்.

பின்னாலேயே பதற்றத்துடன் சென்ற முத்துவையும், ராசாத்தியையும் தடுத்து நிறுத்தினார் ஒரு நர்ஸ்.

“நீங்கல்லாம் இங்கயே இருங்க…”

டாக்டர் புனிதா உள்ளே சென்ற 30 நிமிடத்தில் குழந்தை அழும் குரல் கேட்டது.

முத்துவுக்கும் ராசாத்திக்கும் ஆனந்த அதிர்வை அந்த மழலையின் முதல் அழுதை ஏற்படுத்தியது.ஆனந்தக் கண்ணீர் விட்டான் முத்து.

டாக்டர் புனிதா சிரித்த முகத்துடன் “ஆண் குழந்தை பிறந்திருக்கு”..என்றபடி குழந்தையை ராசாத்தியிடம் கொடுத்தார்.

என் செல்லம்..இதோடா அப்பா பாரு…அத்தையைப் பாரு என்றபடி முத்தமிட்டாள். இருவரும் மாறி மாறி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆப்பரேசன் தியேட்டரிலிருந்து பானுவின் அலறல் சத்தம் மீண்டும் கேட்டது.

ஒரு நர்ஸ் அங்கிருந்து டாக்டர் அறைக்கு வேகமாக பதறி  அடித்தபடி வேர்க்க விறுவிறுக்க ஓடினாள்.

மின்னல் வேகத்தில் புனிதா டாக்டரும் அவரோடு இன்னும் சில டாக்டர்களும் ஆப்பரேசன் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.


முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.

என்ன நடந்தது பானுவிற்கு?....அடுத்த வாரம் காத்திருங்களேன்.

கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.