சுட சுட செய்திகள்

Tuesday, December 23, 2008

மெல்ல தமிழ் இனி சாகும்?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த நம் தமிழ் குடி... அழிந்து கொண்டு இருக்கிறதா..?ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்களாய் நம் முன்னோர்கள் கட்டி காத்து வந்த அந்த தமிழினத்தின் தன்மானம் எங்கே..? கலாச்சாரம் எங்கே? தமிழன் எங்கே..? அவன் இப்போது அயல் நாட்டில் கணினி முன் தவம் கிடக்கிறான்.தமிழ் தன் நாவில் தெரியாமல் வந்து அமர்ந்ததால் லேசாக நாக்கை கடிக்கிறான்... உலகத்தின் மிக பழமையான ஆறு மொழிகளில் (ஈப்ரு, லத்தின், கிரேக்கம், சமஸ்கிருதம், சீனா, தமிழ்) தமிழ் தானே...இன்றைக்கும் பேசும் மொழியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது... எத்தனை படை எடுப்புக்கள் நடந்த போதிலும் தன் நிலை மாறாமல் நடை போடுகிறது.என்றாலும் தமிழன் ஆங்கிலத்தின் மானத்தை காப்பாற்ற தன் கோவணத்தை அவிழ்த்து கொடுத்து கொண்டு இருக்கிறான். தமிழன் தன் தாய் நாட்டை தவிக்க விட்டு போனதால் இன்று தமிழகம் ஒரு அகதிகள் முகாமாய்...தமிழனை தவிர இந்த பாவப்பட்ட நாட்டில் மற்றவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான்... தன் சொந்த சகோதரர்கள் பக்கத்து நாட்டில் அடிபட்டு சாகும் போதும்...அதை கண்டு கண்ணீர் வடிக்க , தட்டி கேட்க ஒரு நாதியில்லை இந்த நாட்டில். தமிழனின் அடையாளமான வீரம் எங்கே..? மானம் எங்கே? வீரம் இன்று வன்முறைக்குள் அடங்கி விட்டது... மானம் காமத்திற்குள் புகுந்து விட்டது. அன்னையை தமிழ் வாயால் மம்மி என்று அழைக்கிறான்.அழகு குழந்தையை பேபி என்று அழைக்கிறான்..தந்தையை டாடி என்றான்.. இன்னுயிர் தமிழை கொன்று புதைத்தான்.. மதத்தை பரப்ப வந்த கால்டு வெல்லுக்கும, ஜி.யு. போபுக்கும் தமிழின் மேன்மை தெரிந்து இருக்கிறது...அதனால் தான்..அவர்கள் தெம்பா வதனி யையும் ,படைத்தார்கள். திருக்குறளையும் மொழி பெயர்த்தார்கள். ஆனால் தமிழன் மொழியை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டேன் என்கிறான். தமிழில் பேசி என்ன சாதிக்க முடியும் என்கிறான்...ஹிட்லர் சொல்லுவான்..."ஒரு நாட்டை பிடிக்க ரானுபம் தேவை இல்லை...கத்தியும்,துப்பாக்கியும் தேவை இல்லை. அவன் தாய் மொழியை அளித்தால் அவன் கலாச்சாரம் அழியும், அடையாளம் மறையும்,இனம் அழியும்,கடைசியில் தலைவனே இல்லாமல் நாடே அழியும்.." .இந்த அடிப்படையில் தான் வெள்ளையர்கள் நாட்டை பிடித்தார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக அவன் மொழியை இடையில் புகுத்துவார்கள்.கடைசியில் மொழி அழிந்து, இனம் அழிந்து, நாடே அழிந்து அவனுக்கு கீழ் அடிமை யாகும்.அப்படித்தான் பல நாடுகள் அழிந்தன..பல மொழிகள் அழிந்தன. அதுதான் இப்போது அச்சமே. ஒருவேளை எல்லோருமே தமிழை புறக்கணித்தால் தமிழனின் அடையாளம் எதிர்காலத்தில் இருக்குமா..? நம் தமிழினத்தை கட்டி காத்த தலைவர்களின் கனவுகள் மண்ணோடு மண்ணாக போய் விடுமா..? என்பதுதான். இமயத்திற்கு சென்று கல் எடுத்து வந்த சேரன் என்ன நினைப்பான்..அந்த கல்லை எடுத்து வந்த மொத்தமாக இந்த கேடு கெட்ட தமிழனின் தலையில் போட்டு ஒரே அடியாக கொன்று இருக்க லாமோ..?
சிந்தியுங்கள்... இது சிந்திக்க வேண்டிய தருணம்...

Monday, December 22, 2008

இளம் பெண்கள் தடுமாறுகிறார்களா?

தமிழின கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் காம களியாட்டங்கள் இன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொன்டிருப்ப்பது கொஞசம் வேதனை அளிக்கும் விசயமாகவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே தவறு செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது பெண்களே முந்தானையை அவிழ்த்துக் கொண்டு "வருவாயா நாயகனே" என்று வலை விரிக்கிறார்கள்.18 வயது தொடங்கும் போதே இப்போது சில பேருக்கு சில உரசல்கள் தேவை படுகின்றது.எல்லாம் ஒரு "ஜாலிக்கு" என்று உல்லாசத்திற்கு தாவணி திறப்பவர்கள் இன்றைக்கு ஏராளம் பேர்.திருமணம் ஆன பின்னும் கணவன் பணிக்கு போன பிறகு கொல்லைபுரத்தின் வாசலை கொஞ்சமாக திறந்து வைத்து கள்ள தொடர்புக்கு ஆள் தேடுபவர்களும் உண்டு...நினைத்து பாருங்கள்..."இது தொடர்ந்தால்..."

Tuesday, December 2, 2008

எங்கே போனார் ராஜ் தாக்கரே?

எங்கே போனார் ராஜ் தாக்கரே?மும்பை எங்கள் இனத்துக்குத் தான் சொந்தம் என்று மராட்டிய மண்ணிற்க்கு பட்டா போட நினைத்த ராஜ் தாக்கரே எங்கே? மும்பை குண்டு வெடிப்பில் சிவந்து போன அந்த மும்பை மண்ணை அள்ளி எடுத்து மார்பிலும், தலையிலும் பூசி அழுவதற்காக போய் விட்டாரா அந்த தாக்கரே? அவர்க்கு ஒன்றை ஞாபகம் படுத்த விரும்புகிறேன்.அந்த மும்பை மண்ணின் பூர்வீக குடிகள் மடிந்து வீழ்ந்த போதும்,இப்போது மரண பயத்தில் இருக்கும் போதும்...டெல்லியிலும்,இந்தியாவின் ஏனைய பகுதியிலுருந்தும் வந்த ராணுவமும்,போலிசும் தான் அவர்களை இப்பொது தாங்கி பிடித்துக் கொண்டுள்ளார்கள். புரிகிறதா இப்போது..? இந்தியாவின் ஒருமைப்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.இது இனம் புரியாத பாசத்தாலும்,மனித நேயத்தாலும் கட்டப்பட்ட பாசக் கயிறு.