சுட சுட செய்திகள்

Tuesday, August 28, 2012

சட்டத்தின் படி(12) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சட்டத்தின் படி 12

 சென்ற வாரம் 
“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி. 

“சார் சொல்லுங்க சார்”

“பக்கத்துலே வேலுயிருந்தா செல்லக்குடுப்பா”

வேலு முதலாளி என்றபடி வேலுவிடம் வெல்லை கொடுத்தார் மனேசர்

“ஐயா வணக்கம்”

“வேலு உன் பையன்கூட பேசிட்டு இருந்தேன். அப்போ அவனுடைய காலில் தீக்காயம் இருந்ததைப் பார்த்தேன். உடனே  உன்னிடம் சொல்லாமல் ஆஸ்ப்பிட்டல் கூட்டி வந்துவிட்டேன்”

“ஐயா …நீங்க…. என் பையன் மேல..”

“ரொம்ப அக்கரையின்னு கேக்குற?”

“யோவ் வேலு.. உன் பையன் ரொம்ப புத்திசாலி. நான் வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு. அவன் சொன்ன ஜோக்குலே நான் என்னயே மறந்து சிரிச்சிட்டேன்யா.. என்னன்னு சொல்லறேன் கேளு. பழமொழி ஒரு வரி தான் சொன்னேன். அடுத்தவரி அவன் சொன்னது என்னத் தெரியுமா?

தம்பியுடையார்…அண்ணன் செட்டியர்

நல்ல மாட்டுக்கு 2கிலோ புண்ணாக்கு

தோல் கொடுப்பான் கறிக்கடை பாய்”

என்று சிரித்தபடி சொன்னார் முதலாளி திவாகரன்.

சிறிது நேர மவுனத்திற்கு “கவலைப்படாதே பையனை பங்களாவுக்கு கூட்டிட்டு போறேன். காலையிலே பேக்கரிக்கு வந்துடு.”

அடுத்தநாள் காலையில் தன் குழந்தை முதலாளி திவாகரனுடன் காரில் புது துணியணிந்தபடி முதலாளியின் கையை பிடித்தபடி காரிலிருந்து இறங்கி வந்தான்.

இக்காட்சியை கண்ட வேலு மற்றும் ஊழியர்கள் திகைப்புடனும், அதிர்ச்சியுடனும்  பார்த்தார்கள்.

வேலுவை ஆபிஜ்க்கு வரும்படி ஜாடையில் அழைத்தவாறு முதலாளி சென்றார்

“பையனுக்கு என்ன வயசாச்சு”

“ஐயா 5 முடிஞ்சு 6 வயசாச்சு”.

‘இனி நீ பழைய வீட்டை காலி செஞ்சுட்டு பேக்டரி வீட்டிலே தங்கிடு. ஸ்கூல்லே சேர்த்திடலாம். பையனை படிக்க வைக்கிறது என் செலவு”.

எப்படி இந்த ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. கடவுளே உனக்கு நன்றி.சொல்வதா முதலாளிக்கு நன்றி சொல்வதா இல்லை இங்கு என்னை வேலைக்கு சேர்த்தாரே டிரைவருக்கு நன்றி சொல்வதா என்று நினைத்து மலைபோல் சிலையாக நின்ற வேலுவைப்பார்த்து

“என்னப்பா நான் பாட்டுக்கு சொல்லிட்டேயிருக்கேன். நீ பேசாமயிருக்க?”

'முதலாளி"

“உன் குடும்பத்தை பற்றி. எல்லாம் டிரைவரிடமும் உன் பையனிடமும் கேட்டு தெரிஞ்குக்கிட்டேன். ஆனால் உன்னிடம் நிறை இருப்பதை மனேசர் மூலமாகவும் நேரிடையாகவும் தெரிந்தது. உனக்கு பனியன் கம்பெனியில் என்ன என்ன வேலைத் தெரியுமோ அத்தனையையும் செய்ய உனக்கு முழு உரிமை தருகிறேன் ஆனால் தப்பு தண்டா நடந்தால் நடக்கிறதே வேற”. என்று கடும் எச்சரிக்கை  யோடு சொன்னார்.

பத்தாண்டு கால இரவு பகல் என்று பாரமல் நேரத்தை அலட்சியப்படுத்தாமல் தன்னை அரவணைத்த பனியன் பேக்டரி முதலாளியின் நம்பிக்கையும் பெற்றார் வேலு. உழைப்புடன் சேர்ந்து நாணயமும் இருந்தததால் இன்று வேலு முதலாளி திவாகரின் வலது கை மட்டுமல்லாமல் ஒர்கிங் பார்ட்னர் என்ற நிலை வரை உயர்ந்தான்.

எல்லா தொழிலும் தெரிந்தால் மட்டும் போhதாது உண்மை வேண்டும் கடமைக்காக உழைப்பது வயிரை கழுவ மட்டுமே உதவும். அதையே தன்னுடைய தொழிலாக நினைத்தால் உயர்வு தானக தேடி வரும் என்பதற்கு வேலு ஒரு உதாரணம்.

குடிகாரனாக, ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்தவனாக. மனைவியைப் பிரிந்து இனி வாழ்க்கையே இல்லை என்ற அளவு இருந்த வேலுவுக்கு இந்த உயர் நிலைக்கு வரக் காரணம் நேர்மையான உழைப்பு.

வேலுவின் செல் மணியடித்தது.

சொல்லுங்க முதலாளி…..
….
ஆடிட்டர் ஆபிஸ்லதான் இருக்கேன்…
….
அமௌண்ட் போட்டாச்சு…
;;;;;;……….
லண்டன் ஜெர்மனிக்கு அவர்கள் கேட்ட ஆர்டர் முழுவதும் பையர் மூலமா அனுப்பிட்டேன்.அமெரிக்க பையர்க்காக வெயிட்டிங் பண்ணிட்டு இருக்கோம்.
………
நோ ப்ராப்ளம்…யூ னியன் லீடர்க்கிட்ட பேசி எல்லா பிரச்சனையையும் சால்வ் பண்ணிட்டேன்.

;;;;;……………

இன்சினியர்கிட்டப் பிளானைப்பற்றி முழுமையா சொல்லிட்டேன் இலர் ஒரு வருசத்தில் கட்டிடத்தை முடித்து தர்ரேன்னு சொல்லிட்டாரு.
……….

பாரின்லேயிருந்து நாலு கம்பெனியிடமிருந்து மெசினரி கொட்டீடசன் வந்திருக்கு நீங்க சொன்னா டிக் பண்றேன்.
……….

சரிங்க டிக் பண்ணி அ|னுப்பிச்சறேன். நாளைக்கு புது பேக்டரி கட்டறதுக்கு 
பூ மி பூ சை போடனும் நீங்க அவசியம் வரணும்.
……….

அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.

பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……


யார் அந்த அரவிந்த்…..அவனது ரிசல்ட் என்ன ஆக போகுது…….

அடுத்த வராம் வரை காத்திருங்களேன் …

திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமாக செல்கிறது... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...