சுட சுட செய்திகள்

Saturday, October 7, 2017

புதையல்


                                                                  Gijay;
புதிதாக நிலம் வாங்கிய கைலாசம்ரூபவ் மரத்தை நடுவதற்காக மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்தார்.
ஒரு மூன்று அடி தோண்டியிருப்பார். மண்ணுக்குள் இருந்து உடைந்த பானைகளின் சில்லுகள் கலந்திருந்தன.
பெரிதாக இருந்த அந்த ஒற்றை சில்லை கையிலெடுத்தார். அந்த பானை ஓட்டில் ஏதோ சில குறியீடுகள் எழுதப்பட்டிருந்தன. அதையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த கைலாசத்திற்கு தலைச்சுற்றிக்கொண்டு வந்தது. கண்கள் இருண்டன. அப்படியே கீழே சாய்ந்தார். அவரது மண்டைக்குள் மின்னல் கீற்றுக்களாய் பலவித காட்சிகள்.
துரிதமா வேலையை செய்யுங்கோள்…..கட்டளையிட்டபடி அந்த தொழிற்சாலையை  சுற்றிசுற்றி வந்தார் சேந்தன் அவந்தி.
கரும்புகையைக்கக்கிக்கொண்டுரூபவ் பெருமூச்சு விட்டபடிரூபவ் தன் வேலையைப்பார்த்துக்கொண்டிருந்து அந்த 100 பேர் வேலை செய்யும் பிரமாண்ட தொழிற்சாலை.
உற்பத்தி செய்த வில்களை வளைத்துப்பார்த்தார் அவந்தி.
“இன்னும் கொஞ்சம் இரும்பை கலக்குங்கோள். அம்பை இன்னும் உசத்தியா சாணம் பிடியுங்கோள்..”
சேந்தன் அவந்தி…
கி.மு.100 ல் குந்தி மாநகரத்தில் வாழ்ந்த கொல்லன்.
இன்றைக்கு இருக்கும் திருப்பறங்குன்றத்தின் நேர் கிழக்கே அமைந்திருக்கும் கீழடிதான் அந்த ஊரின் பெயர்.
அந்த ஊரின் பெருமையேரூபவ் நகர்புறம் என்று அவர்கள் உருவாக்கிய அந்த கீழடி நகர் தான்.
சேந்தன்  அவந்தி கருத்த தேகமுடைய ஆஜானுபாகுவான ஆள்.
கொல்லன் என்பதோடு மட்டுமல்லாமல் வணிகம் தெரிந்த திறமைசாலி.
மன்னனின் அன்பை பெற்ற சேந்தன் என்றைக்குமே அந்த ஊருக்கு ஒரு பொக்கிசம்தான்.
கீழடியில் மொத்தமாக ஒரு 500 பேர் தான் இருப்பார்கள்.
உழைப்பதை தவிர வேறு எதுவும் தெரியாத கண்ணியவான்கள்.
புதிதாக சிந்திக்கும் புத்திசிகாமணிகள்.
“அவந்தி…. உன்னை மன்னர் அழைத்திருக்கிறார். உடனே வந்து சந்திக்கச் சொன்னார்” அந்த ஊரிலிருந்த
திண்ணையில் அமர்ந்தபடி மகளின் முடியைக் கோதிவிட்டுக்கொண்டிருந்த அவந்தி “ ஏன்.. ஏதாவது சிறப்புண்டோ? விருந்து ஏற்பாடு செய்திருக்கிறாரா என் அன்பு மன்னர்” என்றபடி எழுந்தான்.
“யாதென்று நான் அறியவில்லை. என்றாலும் கூட ஏதோ சிறப்பு இருந்தாலும் இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு வீரன் விடைக்கொடுத்தான்.
செம்மண் பூமியில் விளைந்த நெற்கதிரை தன் தலையில் சுமந்தபடி வந்தரூபவ் அவன் மனைவி அங்கை திண்ணையில் இறக்கிவைத்தாள்.
பேருக்கு ஏற்றபடி அழகான கைகளைரூபவ் செங்காந்தழ்மலர்களைப்போல் கொண்டவள் அவள்.
கருப்பு சிலையாய்; உழைத்து உருவேற்றிய தேகம்.
செந்தாமரை இதழ்களில் ஒன்றை பிய்த்து உதடுகளாய் ஒட்ட வைத்த முகம்.
“வீரன் வந்தானோ ? என்ன காரணம் என நான் அறியலாமோ?”
“மன்னவன் விளித்ததாகச்சொன்னான். காரணம் அறியலேன்”
‘நல்ல காரணமாகத்தான் இருக்கும். ஆமாம். மன்னவனை பார்த்துக்கொண்டு வரும்போது ஆவரை வாங்கியாங்;கோ”
“சாவார் யாருமில்லை எனும்போது எதற்கு ஆவாரை அங்கையே”
“காரணம் உண்டு என்மன்னவா… வாங்கியாருங்கோ”
“அப்பா பள்ளிக்குபோக ஓலை வேணும். அதையும் வாங்கியாருங்கோ”
வீட்டிற்கு வெளியே இருந்த கொப்பரை பானையில்ரூபவ் மண்ணால் ஆன குடுவையை உள்நுழைத்து நீரை நிரப்பி முகம் கழுவினான்.
“ஏன் அங்கை. கழிவறையில் நீர் தேங்கியிருக்கிறது. அடைப்பு உண்டாகிவிட்டதா? என்னவென்று பாரும்.”
“மூடிய கால்வாயில்தான் முட்டிக்கொண்டு நிற்கிறது. கல் ஏதோ சிக்கியிருக்கும். பார்த்துக்கொள்கிறேன்”
தங்ககாசு இரண்டை தன் சட்டைப்பையில் நிறைத்தப்படிரூபவ் சின்னக்குடுவையில் நீரை அள்ளிக்கொண்டுரூபவ் மதுரை நோக்கிப் புறப்பட்டான் அவந்தி.
சுற்றிலும் காடு. இங்கிருந்து மதுரை சென்றடைய எப்படியும் ஒருநாள் ஆகும். கள்ளர்கள் நடமாடும் பெரும்பாதையில் இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். பக்கத்தில் வைகை நடந்து போகும் சலசலக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அவந்தி கழுத்தில்ரூபவ் ரோமானியர்களிடமிருந்து பண்டமாற்றிக்கொண்ட ரத்தினமாலை அங்கும்இங்கும் அவன் நடக்கும் அசைவிற்கேற்ப நாட்டியமாடிக்கொண்டே வந்தன.
உச்சி வெயில் உச்சந்தலையில் அடித்தாலும்ரூபவ் வைகையில்
கீழடியை விட்டால்ரூபவ் மதுரை வரும்வரைக்கும் இடையில் எந்த ஊரும் இல்லை.
மக்கள் நடமாட்டமும் கண்ணிற்கு தென்படவில்லை.
என்றாலும் கூட கள்ளர்கள் வந்தால் என்ன செய்வது என்று அவன் உருவாக்கிய வேலைக் கையில் பிடித்தபடி வெகுவேகமாக நடந்துக் கொண்டிருந்தான் அவந்தி.
ஆ…அதோ பட்;டித் தெரிகிறது. குதிரைகள் அங்குமிங்கும் அலைந்தபடி மேய்ந்துக்கொண்டிருந்தன.
அவந்தி முகத்தில் ஆனந்த புன்னகை.
ஆமாம். குதிரை வாங்கவேண்டும் என்ற எண்ணம் சிலநாட்களாகவே அவன் மனதில் வந்து போயின.
எப்படியும் வாங்கிடணும் என்றபடி பட்டியருகே வந்து நின்றபடி இளைப்பாறினான்.
அப்போது குதிரையில் வந்த இரண்டு வீரர்கள் அவனை நோக்கி வந்தார்கள்.
“யார் நீ.. என்ன செய்கிறீர். இங்கே”
“நான்தான் அவந்தி. கொல்லன். கீழடியிலிருந்து வருகிறேன். மன்னர் என்னை அழைத்ததாக தகவல் வந்தது”
“ஓ.. மன்னிக்கனும் கொல்லரே. யாரோ என்று எண்ணிவிட்டேன். உங்கள் புண்ணியத்தில் தானே இந்த மாமதுரையே நிம்மதியாக தூங்குகிறது. தரமாக நீங்கள் உருவாக்கித்தரும் ஆயுதங்கள் தானே எங்களின் இரு கண்கள். வாருங்கள் உங்களை யாம் அழைத்துச்செல்லுகிறோம்”
போகின்ற வழியில் எங்குப்பார்த்தாலும் எழில்கொஞ்சும் வயல்வெளிகள்.
தலைப்பணிந்து கொல்லனை வரவேற்றன முற்றிய நெற்கதிர்கள்.
“கொல்லருக்கு புரவி யேற்றம் தெரியுமோ?”
“ம்…புரவி இருந்திருந்தால் யாம் ஏன் நடந்து வருகிறோம் ? கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தோதான புரவி ஒன்று வாங்கித்தாரும் வீரரே”
“கொல்லர் நினைத்தால் ஆயிரம் புரவிகளை வாங்கமுடியும். மன்னவனுக்கு அடுத்தப்படியாக இருக்கிற செல்வந்தன் நீவிர் அல்லவா. என்றாலும் தங்களுக்கு நான் புரவி தருவது எனக்குப் பெருமை கொல்லரே”
பேசியபடியே வந்ததில் நேரம் குறைந்துபோனது. மாடமாளிகைகள் கண்ணில் தென்பட்டன.
பிரமாண்ட கற்களில் அமைக்கப்பட்டிருந்த கோட்டை கொத்தளம்ரூபவ் தென்பாண்டி அரசின் செல்வாக்கை சொல்லாமல் சொல்லியது.
எங்கும் மீன்கொடி. தூரத்திலிருந்துப் பார்த்;தால் வான நீலத்தில்ரூபவ் மீன் கடலில் நீந்திக்கொண்டிருப்பது போல் இருந்தது.
வழியெங்கும் வணிகத்தில்
கருப்பு சிவப்புப் பானைகள்ரூபவ் தந்தத்தினாலான பாசிகள்ரூபவ் தாயக்கட்டைகள்ரூபவ் தங்க சிலம்புகள்ரூபவ் பசும்பால் இனிப்புகள் என்று சந்தை பரபரப்பாக இருந்தது.
“மன்னவன் ஆட்சியில் என்ன குறை வீரர்களே. எங்குப்பார்த்தாலும் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள். விதைத்த பயிர் செழிக்கிறது. புலவர்களால் மக்கள் ஏற்றமிகு கல்வியைக்கற்கிறார்கள். நிறைந்த அறிவை நம் இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். பயமறியா வீரர்கள் நீங்கள் இருக்கிறீர்கள். வாழ்க எம்மான் மன்னவன்” என்றபடி வாய்நிறை வார்த்தைகள் அள்ளிவிட்டபடி மகிழ்வோடும் மனநிறைவோடும் வீரர்களிடம் சொல்லிக்கொண்டுரூபவ் கொண்டு வந்த நீரை குடித்தபடி மாடமாளிகைளை நோட்டமிட்டபடி வந்தான் அவந்தி.
வாயிலை நெருங்கியது புரவி.
“கொல்லரே இறங்கி;க்கொள்ளுங்கள். யாம் மீண்டும் எல்லைகளுக்கு செல்லவேண்டியிருக்கிறது. வாயிற் காப்பாளனே இவர்தான் நமது படைக்கொல்லர். இவரை மன்னரிடம் அழைத்துச்செல்லுங்கள் என்றபடி அவந்தியை இறக்கிவிட்டபடி புழுதிபறக்க திரும்பிச்சென்றார்கள் அந்த இரு வீரர்களும்.
அவந்திக்கு வணக்கம் தெரிவித்துரூபவ் அவனை மன்னன் இருக்கும் அரசவை மண்டபத்திற்கு அழைத்துச்சென்றான் காப்பாளன்.
வண்ண வண்ண தூரிகையால் வரையப்பட்ட அழகான ஓவியங்களை கண்குளிரப் பார்த்தபடி கையிலிருந்த வேலை அங்கிருந்த ஒரு தூணில் சாய்த்துவிட்டு அரசவை மண்டபத்தை நெருங்கினான் அவந்தி.
“கொல்லரே… சற்று இங்கே இரும். யாம் மன்னரிடம் அனுமதி பெற்று பின்னர் வந்து  அழைத்துச்செல்கிறோம்”
உள்ளே சென்ற வீரன்ரூபவ் பரபரப்பாக இருந்த மண்டபத்திற்குள் புகுந்தான்.
மன்னர் தன் சக அமைச்சர்களோடுரூபவ் தீவிர ஆலோசனையை நடத்திக்கொண்டிருந்தார்.
மண்டபத்தில் அரசவை புலவர் நக்கீரனார் தன் நரைத்த தாடியை தடவியபடியும்ரூபவ் போர்தளபதி ஆதிமந்திரூபவ் பிரதான மந்திரி இளம்போதியார்ரூபவ் பொருளாதார மேதை செம்பியனார் என்று ஒரு பெரும் அறிஞர்கள் சபையே அங்கு கூடியிருந்தது.
“மன்னவா.. தங்களை காண கீழடியிலிருந்து பெருங்கொல்லர் சேந்தன் அவந்தி வந்திருக்கிறார்”
“இருங்கள். அவரே வந்து விட்டார். அவரையும் கலந்து ஆலோசி;த்த பிறகு நாம் நம் முடிவைச்சொல்லுவோம். அழைத்து வாருங்கள் கொல்லரை.” மன்;னர் உத்திரவிட அரசவை பெருங்கதவு திறந்தது.
உள்ளே நுழைந்தர் அவந்தி.
கூடியிருக்கும் பெரும்சபையை கண்டுரூபவ் வணங்கினார்.
“வணக்கம் மன்னவா. தென்பாண்டி தமிழ் பெற்ற கோவலனே. தமிழ் இனத்தின் காவலனே. நீவிர் அழைத்ததாக தகவல் பெற்றேன். மன்னவனைக் காண ஓடோடி வந்திருக்கிறேன்” தலைகுனிந்தவாறு கணீரென்ற குரலில் வந்த நோக்கத்தை சொன்னான் அவந்தி.
“வாரும் கொல்லரே. உமைத்தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இப்போது நம் நாடு மிகப்பெரிய பேராபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. நாட்டையும்ரூபவ் மக்களையும்ரூபவ் நம் செல்வங்களையும் உயிர் கொடுத்துக் காக்க வேண்டிய பெரும்பொறுப்பு நமக்கு வந்திருக்கிறது. அதைப்பற்றி ஆலோசிக்கத்தான் யாம் உம்மை அழைத்திருந்தோம்”
“எஃகு கோட்டைக்குள் எறும்புகள் நுழைய முடியுமா அரசே? ஆணையிடுங்கள் ஆயிரமாயிரம் ஆயுதங்களை செய்து குவிக்கிறேன்.”
“ஆம். ஆதிமந்தியே உங்கள் திட்டத்தை கொல்லருக்குச் சொல்லுங்கள்”
உடைவாளை சரிபடுத்திக்கொண்டு எழுந்தார் போர்தளபதி ஆதிமந்தி.
“கொல்லரே. வடக்கிலிருந்து ஒரு பெரும்படை நம் பாண்டிய தேசத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக ஒற்றன் மூலம் தகவலறிந்தோம். பல்லாயிரம் புரவிகளோடுரூபவ் பல லட்சம் காலாட்படையை கூட்டிக்கொண்டு ஆதிஇனமான நம்மை அழிக்க வந்துக்கொண்டிருக்கிறது. தமிழ் என்கின்ற நம்மை அழித்துவிட்டால் நாளை இந்த உலகை தாம் ஆண்டு விடலாம் என்கின்ற ஒற்றை எண்ணத்தில் அவர்கள் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகாரும் சிறுசிறு சண்டைகளை எதிர்கொண்ட நாம்ரூபவ் ஒரு பெரும்போருக்கு தயாராக வேண்டும். அவர்கள் அழைத்துவரும் பெரும்படையை சமாளிக்க நாம் புதுபுது போர் யுக்திகளையும்ரூபவ் ஆயுதங்களையும் உடனே தயார் செய்ய வேண்டும்”
திகைத்து நின்ற அவந்தியின் முன்ரூபவ் அமைச்சர் இளம்போதியார் வந்து நின்றார்.
“அவந்தி. முதல்மனிதன் என்ற பெருமை மிகுந்த இந்த தமிழ் சமூகத்தை காத்து நிற்க வேண்டிய பெரும்பொறுப்பு நமக்கு வந்திருக்கிறது. மதிகூர்மையோடு நாம் ஆயுதங்களை படைக்க வேண்டும். அந்த பெரும்படையைரூபவ் நம் மண்ணை பிடிக்க நினைக்கும் கொடும்படையை மின்னல் மின்னும் நேரத்திற்குள்ளாக வெட்டி சாய்த்தாக வேண்டும். பொறுப்பை கையிலெடுங்கள்”
“என் இனத்திற்கு ஒரு இடர் என்றால் பொறுப்பேனா அமைச்சரே ?. இதோ தொடங்கி விடுகிறேன்.புதிய புதிய ஆயுதங்களை களமிறக்குகிறேன். எனக்கு ஒரு யோசனை. சொல்லலாமா?
“இந்த தேசத்தை காக்கும் எந்த யோசனையையும் நாம் ஏற்றுக்கொள்வோம். சொல்லுங்கள் கொல்லரே.”
“ஆயுதங்கள் செய்வதால் மட்டுமேரூபவ் நாம் வெற்றியடைந்துவிட முடியாது. அவர்கள் புரவிகளைக்கொண்டு போரில் ”
“ம்..நல்ல யோசனைதான். என்றாலும் கூட அதைப் பழக்கப்படுத்தி போரில் ”
“பொறுங்கள் தளபதி. மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகம் சிந்திக்கும் விலங்கு யானைதான். அந்த பெரிய கரிய விலங்குரூபவ் ஆயிரம் படைவீரர்களுக்கு சமம். சுலபமாக யானையை பழக்கப்படுத்தி விட முடியும்”
‘அப்படியென்றால் நமக்கு குறைந்தபட்சம் ஆயிரம் யானைகள் தேவைப்படும். பாண்டிநாடான நம் தேசத்தில் யானைகள் இல்லையே.. என்ன செய்வது.?’ முகத்தில் சோக ரேகையை ஓடவிட்டு கேள்வி எழுப்பினார் தளபதி.
“சேர நாடு இருக்கிறதே. அங்கு ஆட்சிசெய்யும் மன்னரிடம் கேட்கிறேன். முடிந்தால் அவர்களையும் இந்த தமிழ்மண்ணை காக்க அழைப்பு விடுக்கிறேன்” என்றபடி மன்னர் முகத்தாடையை தடவியபடி பதில் சொன்னார்.
“நல்லது. மன்னவனே. யானைகளின் தும்பிக்கையில் பொறுத்த ஒரு ஆயுதத்தை தயாரிக்கப்போகிறேன். அது ஒன்றே போதும். நாம் வெற்றிக்கொள்ள. புறப்படுகிறேன்” என்றபடி அரசவை மண்டபத்திலிருந்து புறப்பட்டார் அவந்தி.
புறாவின் கால்களில் மடல் ஒன்று கட்டப்பட்டது. சேரநாட்டு மன்னவன் சேரன் இரும்பொறைக்கு எழுதப்பட்ட மடல் அது.
தமிழுக்கு துயர் வந்தால் பொறுப்பானா இரும்பொறை? ஆயிரம் யானைகளை பத்தாயிரம் வீரர்களோடு அனுப்பி வைத்தான் அந்த சேரமன்னன்.
ஒரு பெரும் மலையே ஆடிவருவது போல் யானைகள் அசைந்து வந்தன. பெரும்பாதை வழியே வந்த யானைகளைப் பார்த்த மக்கள் குதூகலித்தனர்.
கீழடி சென்ற அவந்தி நேராக தன் தொழிற்சாலையில் நுழைந்தார்.
துரிதமா வேலையை செய்யுங்கோள்…..கட்டளையிட்டபடி அந்த தொழிற்சாலையை  சுற்றிசுற்றி வந்தார் சேந்தன் அவந்தி.
கரும்புகையைக்கக்கிக்கொண்டுரூபவ் பெருமூச்சு விட்டபடிரூபவ் தன் வேலையைப்பார்த்துக்கொண்டிருந்து அந்த 100 பேர் வேலை செய்யும் பிரமாண்ட தொழிற்சாலை.
உற்பத்தி செய்த வில்களை வளைத்துப்பார்த்தார் அவந்தி.
“இன்னும் கொஞ்சம் இரும்பை கலக்குங்கோள். அம்பை இன்னும் உசத்தியா சாணம் பிடியுங்கோள்.. இன்னும் நிறைய ஆயதங்களை செய்யவேணும். யானைகளின் தும்பிக்கையில் மாட்டும் கொடூர கத்தியை தயார் செய்யுங்கோள். அதன் கால்களில் பொருத்தும் நட்சத்திர கத்தியை எப்படி செய்வது என்பதை இங்கே பாருங்கோள் என்றபடி வேலைகளை துரிதப்படுத்தினார்.
இரண்டு மாதங்களில் அனைத்தும் தயார். இதுபோதும் என்பதுபோல் வந்திருந்த தளபதி  ஆதிமந்தி தலையசைத்தார்.
யானைகளின் முகத்திலும்ரூபவ் கால்களிலும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன.
வீரர்கள் அமரும் போர் அம்பாரிகள் பொருத்தப்பட்டன.
வேல்களும்ரூபவ் வில்களும்ரூபவ் எண்ணிலடங்காத அம்புகளும்ரூபவ் இரும்பு சாட்டைகளும்ரூபவ் சுழழும் வாட்களும் கோட்டையின் துருப்புகளில் வரிசைப்படுத்தப்பட்டன.
காலாட்படைக்கு பயிற்சி இரவுபகல் பாராமல் கொடுக்கப்பட்டது.
ஓர்நாள் இரவு.
இடிஇடித்தது. ஆனால் மழை வரவில்லை. இரும்புகளில் கொடூரச்சத்தம் தூங்கிக்கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பியது.
அலறியடித்தபடி மதுரை நகரமே எழுந்தரித்தது.
அதோ எதிரிப்படை கடலலைப்போல் அலையலையாய் வந்துக்கொண்டிருக்கிறது.
தகவல் போனது மன்னருக்கு. எதிரிப்படை கோட்டை வருவதற்குள் எல்லாம் தயார் செய்யப்பட்டது.
வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட காலாட்படை கவசங்களோடும்ரூபவ் கையில் வேல்களோடும் தயார்நிலையில் இருந்தது.
அதற்குப்பின்னே விற்போர் புரியும் மறவர் கூட்டம் கொத்தளங்களின் மேலும்ரூபவ் கீழுமாக அம்புகளோடு காத்திருந்தது.
புரவிகளும்ரூபவ் போர் நாய்களும்ரூபவ் எப்போது வேண்டுமானாலும் அவிழ்த்துவிடப்படலாம் என்கிற நிலையில் பாய்வதற்கு தயாராக இருந்தன.
மண் புழுதி விண்ணில் பறந்தது. புரிந்து கொண்டார்கள் பாண்டிதேசத்து மக்கள்.
குதிரைகளின் லாடச்சத்தம் காது மடல்களில் இடிஇடியாய் இடித்தது.
தூரத்தில் இருப்பதைப்பார்ப்பதற்காக வைத்திருந்த பூதக்கண்ணாடியில் ஆதிமந்தி கோட்டையின் மீதிருந்து பார்த்தார்.
இன்னும் சில நொடிகளில் அந்த எதிரிப்படை நம் கோட்டையை தாக்குவார்கள். எல்லாரும் தயார் நிலையில் இருங்கள் என்று அறிவிப்பைச்செய்தான்.
பெருத்த ஓசையோடுரூபவ் வடநாட்டுப்படை கோட்டைக்கு முன்னிருந்த மைதான பெருவெளியில் ஆக்ரோசமாக வந்து நின்றது.
“சங்கு முழங்கட்டும். நறுமண தோட்டத்தில் நரிகள் புகுந்துவிட்டன. செந்;தமிழர் வாழும் சொர்க்கபுரியை தொட்டுப்பார்க்கும் ஓநாய்களை ஓடஓட விரட்டுங்கள். அவர்கள் தலைகள் நம் மண்ணில் விழட்டும். அவர்கள் குருதிப்பட்டு கருத்த இந்த மண்ரூபவ் சிவப்பாகட்டும். தொடுங்கள் போரை” என்றபடி கட்டளையிட்டான் தளபதி ஆதிமந்தி.
கோட்டையின் முன்னிருந்த கால்வாயிலிருந்து முதலைகள் சீறி எழுந்தன.
காலாட்படை வீரர்கள் அசுர வேகத்தில் அவர்களை தாக்க வேல்கொண்டு ஓடினார்கள்.
மரண ஓலம். எங்கும் ஆக்ரோச கத்தல்கள்.
எதிரிப்படை தமிழ்வீரர்களை துவம்சம் செய்துக்கொண்டிருந்தது.
அவர்களின் குதிரைகளின் கால்பட்டுரூபவ் செத்து மடிந்தார்கள் பாண்டிதேசத்து வீரர்கள்.
அப்போதுதான் அது நடந்தது.
காலாட்படை பின்னால்ரூபவ் மறைந்திருந்த சிறுசிறு மலைகள்ரூபவ் கொஞ்சம்கொஞ்சமாக  வெளியே வந்தன.
அவந்தியின் புதுபுது ஆயுதங்களைத் தன் உடலில் தாங்கிய அந்த களரிகள்ரூபவ் தன்னை எதிர்த்துத்தாக்கிய எதிராளிகளை பந்தாக உருட்டியபடி முன்னேறிக்கொண்டிருந்தன. கண்ணில் அகப்பட்டவர்களின் வயிறை தன் தும்பிக்கை ஆயுதத்தால் குத்திரூபவ் குடலை உருவி வெளியே போட்டன.
அதிர்ச்சியிலிருந்து மீளாத எதிர்நாட்டு தளபதிரூபவ் நெருப்புப்பந்தை எறிந்துப்பார்த்தான்.
வாயில் கவ்விரூபவ் செரிமானம் செய்தன யானைகள்.
பாண்டிதேசத்து போர் நாய்கள்ரூபவ் அந்த குதிரைகளின் கால்களை துண்;டாக்கி சென்றன.
முடமாகிப்போன குதிரைகளால்ரூபவ் முன்னேற முடியாமல் படுத்தே விட்டன.
பலதேசத்தை சுலபமாக வென்ற அம்மன்னன்ரூபவ் புதுபுது ஆயுதங்களால் துவண்டு போனான்.
யாரோ ஒரு வீரன் விட்ட அம்புரூபவ் எதிரிநாட்டு மன்னனின் விலா எலும்பைத் துளைத்துரூபவ் இதயத்தை வெளியே கொண்டுவந்துப் போட்டது.
“வெற்றி. வெற்றி தமிழ்பேசும் நல்லுலகத்திற்கு வெற்றி” என எங்கும் ஒலித்தது.
வெற்றிக்கொண்டாடத்தில் மக்கள் எல்லாம் தேறல் சாற்றை பருகிக்கொண்டு களிப்படைந்துக் கொண்டிருந்த வேளையில்ரூபவ்
“மன்னவா.. கீழடியிலிருந்த ஒரு இழவு செய்தி வந்திருக்கிறது” என்று கனத்த குரலில் சொன்னான் ஒரு வீரன்.
“என்ன நடந்தது ? மன்னன் வினவினார்.
“சேந்தன் அவந்தி எதிரிநாட்டு தளபதியால் கொல்லப்பட்டார்..”
“ஐயோ.. இந்த வெற்றியை கொண்டாடும் தருணத்தில்  இப்படியா ஒரு பேரிடி விழ வேண்டும். ஆயுதம் செய்து கொடுக்கும்ரூபவ் ஒரு அறிவார்ந்த கொல்லனை இந்த தமிழ் சமூகம் இழந்துவிட்டது. அந்த பொன்னுடலை பார்க்க உடனே புறப்படுங்கள்.”
கீழடி…
எங்கும் இழவு ஓலம்.
அவந்தியோடு சேர்த்துரூபவ் பலபேர் கொல்லப்பட்டிருந்தனர். அவனது ஆயுதத் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டிருந்தது.
தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சேந்தன் அவந்தியை இரும்புத்தடியால் அடித்தே கொன்றிருக்கிறார்கள் அந்த எதிரிப்படை கயவர்கள். அவந்தி;க் குடித்த அந்த தண்ணீர் குவளையும் அவர்கள் வெறிக்குத் தப்பாமல் சுக்கு நூறாக உடைந்துபோயிருந்தது.
ஏன் அவனைத்தேடி போய் கொன்றிருக்க வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கிக்கொண்டிருந்த மன்னனுக்கு அவரின் ஆஸ்த்தான அமைச்சர் இளம்போதியார்ரூபவ் காரணத்தைச்சொன்னார்.
“மன்னாரூபவ் வந்த எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. தன் மேல் விழுந்த அம்புகளை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதைச்செய்துக் கொடுத்த கொல்லனைத்தான் கணக்கெடுத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இந்த தோல்வி நம் படையாலும்ரூபவ் வீரத்தாலும் அல்ல. புதிய ஆயுதங்களைச் செய்து கொடுத்த கொல்லனால் என்று. ஆகவேதான் அவந்தியைத் தேடிச்சென்று கடுங்கோபத்தில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.”
நொறுங்கிக் கிடந்த அந்த தண்ணீர் குவளையின் ஒரு ஓட்டை தன் கையில் எடுத்தப்படி கண்ணீர்மல்க பார்த்துக்கொண்டிருந்தார் மன்னர்.
அதில் “சேந்தன் அவந்தி கொல்லன்” என்று அவன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
என்ன ஆச்சு? குழிப்பறிக்க போனபோது மயங்கி கிடந்தார். என்ன ஆனதுன்னு தெரியலையே  ? என்றபடி கைலாசத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்தபடி தட்டி எழுப்பினார்கள் சுற்றி இருந்தவர்கள்.
கைலாசம் கண்திறந்துச் கேட்டார்…. “சேந்தன் அவந்தி” எங்கே ?”

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: