சுட சுட செய்திகள்

Saturday, July 6, 2013

ஆண்டாண்டு காலமாய்

ஆண்டாண்டு காலமாய் அடிமையாய், நாய்களாய், புழுக்களாய், மொத்தத்தில் மனிதனாகவே மதிக்கப்படாத பாவப்பட்ட இனமாக இருந்த ஆதி இனம், கொஞ்சம் கொஞ்சமாக கல்விகற்று, பொருளையீட்டி, அறிவு பெற்று, சிந்தித்து , இப்போதுதான் தலைநிமிர்ந்து இருக்கிறது. இது பொறுக்கவில்லை சில சாதி வெறியர்களுக்கு.

பொறாமையில் வெந்து, உழன்று தன்னைத்தானே உண்ணும் வேதனையான நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் அந்;த சாதி வெறியர்கள்.

எது செய்தாலும் தாழ்த்;தப்பட்டவர்கள் பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டும் என்பது அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நிராயுதபாணியாக இருந்தபோது வேறு வழியில்லை இருந்தார்கள்.
ஆனால் இன்றைக்கு அது முடியாது.
மற்றவர்களுக்கு நிகராக  அவர்களும் படிக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள்.சிந்திக்கிறார்கள்.
சொத்து சேர்க்கிறார்கள்.
தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற பாகுபாடு இங்கே காணாமல் போய்வி;ட்ட பிறகு, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் ஆக முடியாது.

காதலிலும் சாதியை புகுத்தி, தன் சுயநல அரசியலுக்காக ஒரு உயிரை காவு வாங்கியிருக்கிறார்கள். மலர்களின் மத்தியில் உலாவிக் கொண்டிருந்த இரு மனங்களை
வெம்மையில் தள்ளியிருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்;டவன் என்ற ஒரே காரணத்திற்காகவே இளவரசன் கொல்லப்பட்டிருக்கிறார்.


இதை வன்மையாக கண்டிக்கப்ட வேண்டிய விசயம். ராமதாஸ் தன் சாதிய வெறியை குறைத்துக் கொள்ளாத போது, அடங்க மறுத்தலும், அத்து மீறுவதும், திமிரி எழுவதும், திருப்பி தாக்குவதும் தவிர்க்க முடியாதது ஆகி விடும்.
ஏனென்றால் இந்த உலகத்தின் முதல் மனிதனின் வழி தோன்றலே இந்த ஆதி திராவிடர்கள் தான். :மூத்தோரை மதித்தலும், மரியாதை செய்தலும் தானே நம் பண்பாடு.
தமிழ் சொந்தங்களே…தலித் இளைஞர்களே! படியுங்கள். கல்வி பெறுங்கள். அதிகாரம் மிக்க பதவியை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் ஆயுதத்தை, இன்னொரு ஆயுதத்தால் மட்டுமே ஒழிக்க முடியும்.
 

 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாகச் சொன்னீர்கள்... சக மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் இன்றைக்கு முதலில்...!