சுட சுட செய்திகள்

Monday, November 3, 2008

வருண பகவானே...

வருண பகவானே...
கண்ணாடியின் வழியே
உன்னை அந்த அடுக்கு மாடிகள் ரசிக்கலாம்...
அண்ணல் உனை வணங்குவது
இந்த குடிசைகள் மட்டுமே...~!

குடிசையில் இழந்து போன
வாழ்கையை தவிர
வேறு என்ன இருக்கிறது..?
வறுமையும் , விரக்தியும் மட்டும் தான்
இங்குள்ள மிச்சம்.

இது சாதியின் அடையாளம்.
ஆதிக்க தீயின் நாக்குக்கு பிடித்த
சுவை மிக்க உணவு..
இந்த குடிசை..

எரிய வில்லை அடுப்பு..
சேரியில்...
போராடினோம் ...எரிந்தது அடுப்பல்ல
சேரி...

குடிசைக்கே வருகிறது சாமி..
மாடிக்கே போகிறது வரம்..!

கலையை, கலைஞ்சனை போர்ரிய
நாடிது என்கிறாய்... காலம்  காலமாய்
பறையை,பறயனை தாழ்த்திய  நீ...!
இறைவா ...
உன் கடைசி  அவதாரமாவது ....

இந்த சேரியில் இருக்கட்டும் ....
"குடிசைகளை  காப்பார்ற்ற .."

No comments: