சுட சுட செய்திகள்

Thursday, May 21, 2009

(தோழர் வினவின் இதயம் குத்தும் நியாய கணைகள்)

(தோழர் வினவின் இதயம் குத்தும் நியாய கணைகள்)

கண் திறந்து பார் தமிழகமே!
ஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்இழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசுஅறுத்து முடித்தது ராஜபக்சே அரசு!
இலங்கை அரசின் வெற்றிக்களிப்புசிங்கள வெறியின் கோரநடனம்!
முல்லைத்தீவின் கடறகரையெங்கும்இரைந்து கிடக்கும் ஈழத் தமிழர் பிணம்!
முட்கம்பிச் சிறையின் உள்ளே துடிக்கிறதுமுகம் சிதைந்த ஈழத்தமிழினம்!
படுகொலைக்கு நாள் குறித்த பாதகர்கள் - டில்லியில்பதவி ஏற்பு விழா நடத்துகிறார்கள்!
பச்சைத்துரோகம் செய்த கருணாநிதி குடும்பத்துக்குபத்தாதாம் மந்திரிப் பதவி!
படுகொலைத் தலைவி சோனியாவின் மகனோபாரதத்தின் நாளைய பிரதமராம்!
“படை அனுப்பி ஈழம் அமைக்கும்” புரட்சித்தலைவியோபடுத்துத் தூங்குகிறார் போயசு தோட்டத்தில்!
எனக்குத் தெரியாதென்று ஒதுங்க முடியுமா நம்மால்?
உன்னுடைய ஓட்டு, உன்னுடைய வரிப்பணம்,உன்னுடைய பல்லிளிப்பு, உன்னுடைய ஏமாளித்தனம்,உன்னுடைய மவுனம், உன்னுடைய அங்கீகாரம்,நீ வழங்கிய அதிகாரம்..
நாம் பேசத்தவறினால் யார் பேசுவார்?
அமைதி காப்பது அவமானம்அலட்சியம் காட்டுவது அநீதிஆர்த்தெழுவோம் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக!வீழ்த்திடுவோம் சிங்கள இனைவெறிப் பாசித்தை!
மீண்டெழட்டும் ஈழ விடுதலைப் போராட்டம்!

No comments: