சுட சுட செய்திகள்

Tuesday, March 23, 2010


காவி உடைக்குள் ஒரு காம மிருகம்...





மனிதனை மனிதன் வணங்கும் பகுத்தறிவற்ற நிலைதான் இப்படிப்பட்ட காம சாமியார்களை உருவாகுகிறது.

காலம் காலமாக சாமியார்களுக்கும், காமத்திற்கும் இருக்கும் வலிமையான பிணைப்பு நம்மை ஆச்சிரியபடுத்துகிறது. நித்தியானந்தா போன்ற போலி சாமியார்களை இந்த காமம் என்கிற நல்லவன் தான் இன்றைக்கும் அடையாளப்படுத்தி கொண்டு இருக்கிறான், சாமியார்களின் வாய் பந்தலுக்கு மயங்கி போகும் நம் அறிவற்ற பேதை நிலை , அவர்களின் காம வெறியாட்டத்திற்கு பின் நம்மை தலை குனிய செய்கிறது. 13வயதிலேயே காயகல்பம் செய்து காமத்தை அடக்கி ஆண்டு விட்டதாக சொல்லும் இந்த சாமிக்கு பாவம் ரஞ்சிதாவை பார்த்ததும் பொங்கி எழுந்து விட்டது போலும். பொதுவாகவே காயகல்பம் என்பது மூலாதாரத்தில் ஒளிந்து கிடக்கும் உயிர் சாரத்தை, இந்திரியத்தை 7 வர்மங்கள் மூலாமாக கொஞ்சம் கொஞ்சமாக தலை உச்சிக்கு எடுத்து செல்வது தான் காய கல்பம் என்று சொல்வார்கள். பாவம் இந்த சாமியார்க்கு கிழிருந்து மேலே ஏறாமல் , மேலிருந்து கிழாக இறங்கி இருக்கிறது. கொஞ்சம் நாம் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எவன் ஒருவன் நானே கடவுள் என்கிறானோ அவன் உண்மையில் மிருகமாகத்தான் இருப்பான்.

தன்னை அடக்கி ஆள தெரியாத எவனும் கடவுளாக மாற முடியாது. இன்றைக்கும் பல சாமியார்களின் காலை பாலூற்றி அதை தீர்த்தமாக நினைத்து குடிக்கும் கேனை தனமான மக்கள் கொண்ட இந்த தேசத்தில் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நாம் திருந்த போவதில்லை. வாழ்க தமிழக இந்திய மக்கள்.

No comments: