சுட சுட செய்திகள்

Tuesday, December 2, 2008

எங்கே போனார் ராஜ் தாக்கரே?

எங்கே போனார் ராஜ் தாக்கரே?மும்பை எங்கள் இனத்துக்குத் தான் சொந்தம் என்று மராட்டிய மண்ணிற்க்கு பட்டா போட நினைத்த ராஜ் தாக்கரே எங்கே? மும்பை குண்டு வெடிப்பில் சிவந்து போன அந்த மும்பை மண்ணை அள்ளி எடுத்து மார்பிலும், தலையிலும் பூசி அழுவதற்காக போய் விட்டாரா அந்த தாக்கரே? அவர்க்கு ஒன்றை ஞாபகம் படுத்த விரும்புகிறேன்.அந்த மும்பை மண்ணின் பூர்வீக குடிகள் மடிந்து வீழ்ந்த போதும்,இப்போது மரண பயத்தில் இருக்கும் போதும்...டெல்லியிலும்,இந்தியாவின் ஏனைய பகுதியிலுருந்தும் வந்த ராணுவமும்,போலிசும் தான் அவர்களை இப்பொது தாங்கி பிடித்துக் கொண்டுள்ளார்கள். புரிகிறதா இப்போது..? இந்தியாவின் ஒருமைப்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.இது இனம் புரியாத பாசத்தாலும்,மனித நேயத்தாலும் கட்டப்பட்ட பாசக் கயிறு.

No comments: