சுட சுட செய்திகள்

Wednesday, April 18, 2012

மௌனமே...பார்வையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்...


சில அறிவிலிகள் சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்கலாமலும்,அழ வேணடிய
நேரத்தில் அழுகாமலும் இருக்கிறார்கள்.
ஆதனால்தான் அவர்கள் மனிதப்பிறப்பையே சில நேரம் வெறுக்கிறார்கள்.மன
அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
அழுத்தம் என்பதே,ஏதாவது ஒன்றை தேக்கி வைக்கும்போது,உண்டாகும் அதிகப்படியான விசை.
இந்த விசைகளை ஒரு போதும் மனதிற்குள் தேக்கி வைக்காதீர்கள்.மன நிம்மதி
உங்களை ஒருபோதும் எட்டிப்பார்க்காது.
எதையோ இழந்தது போலவே மனது அடித்துக் கொள்ளும்.வெறுமை என்பது உடலில் புகுந்தது போல் கண்களில் வந்து தன் அடையாளம் காட்டும்.
அந்த வெறுமையைக் கூட நேசிக்கத் தெரிந்தவிட்டால்,தன் மனம் முழு பலம் பெறும் என்பதில் கொஞ்சம் கூட ஐயமில்லை.
வெறுமை என்பது என்ன?
ஏதுமில்லாததா? ஆமாம். எதுவுமில்லாத வெற்றிடம்தான் வெறுமை.
ஆனால் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இந்த உலகத்தில் எதுவுமே வெறுமையாக படைக்கப்படவில்லை.
நீரில்லாத குடம் கூட காற்றால் அடைக்கப்படடு இருக்கிறது.
மௌனம் கூட வெறுமை அல்ல. அங்கேதான் எல்லா மொழிகளும் அடங்கியிருக்கிறது. மௌனம் எல்லோரும் பேசும் ஒரே மொழி;
இந்த உலகத்தில் தோன்றிய முதல் மொழி;
மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் அல்லது துக்கத்தின் உச்சக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் பேசக்கூடிய மொழி இந்த மௌனம்.
சில பேர் பேசி பேசியே குழப்புவார்கள். சில பேர் மௌனமாக இருந்தே பல விஷயங்களை புரிய வைப்பார்கள்.
இங்கே பாருங்களேன்…மௌனம் எப்படி பேசுகிறது என்று..
இன்பமான நேரத்தில் மௌனமாக இருப்பது என்பது சம்மததிற்கு அறிகுறி..
நண்பர்களை பிரியும்போது மௌனமாக இருப்பது என்பது துன்பத்திற்கு அறிகுறி. .
காதலில் மௌனமாக இருப்பது என்பது - சித்திரவதைக்கு அறிகுறி..
தோல்வியில் மௌனமாக இருப்பது என்பது - சாதனைப்படிக்கு அறிகுறி..
வெற்றியில் மௌனமாக இருப்பது என்பது -அடக்கத்திற்கு அறிகுறி..
இறுதியில் மௌனமாக இருப்பது என்பது – மரணத்திற்கு அறிகுறி.

பூமிதான இயக்கத்தை நடத்தி வந்த வினோபாவா அவர்களை பற்றி உங்களுக்குத் தெரியும்.அதிகார பலம் படைத்த நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களை வாங்கி அதை ஏழை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தவர்.அவருக்கு பல மொழிகள் தெரியும். அவரிடம் ஒருமுறை நிருபர்கள் சென்று பேட்டி எடுக்கச் சென்றபோது கேட்டார்கள்.
“ஐயா நாங்கள் எந்த மொழியில் உங்களை பேட்டி எடுக்கட்டும்” என்று கேட்டபோது அவர் சொன்னார், “எனக்கு பிடித்த மௌன மொழியில் கேளுங்கள்”;.

கெட்டிக்காரன் பேசுகிறான்
முட்டாள் விவாதம் மட்டுமே செய்கிறான்
அறிஞன் அமைதியாயிருக்கிறான்.
ஆகவே பேசாமல் இருப்பதால் மௌனம் என்பது வெறுமை அல்ல.வெற்றிடம் அல்ல. சில நேரங்களில் வெறுமைதான் சிலருக்கு சாதிக்கும் வெறியைக் கிளப்பியிருக்கிறது. அந்த காலியிடம்தான் சில நேரங்களில் பயன் தருகிறது.
பானையின் காலியிடம்தான் நீர் நிரப்பப் பயன்படுகிறது. அதேபோல் நம் மனதின் காலியிடத்தை, புது உத்வேகத்தை,உற்சாகத்தை நிரப்பிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

ஓன்றை புரிந்துக் கொள்ளுங்கள்.
எங்கே காலியாக இருக்கிறதோ,அங்கே தான் பல விசயங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.
அனைத்தையும் நிரம்ப பெற்றிருக்கிற நூலகம் கூட அமைதியாகத்தான் இருக்கிறது.
காலிப்பானை என்பதிலே கூட அதன் காலியான அந்த வெற்றிடம்தான் அதனுடைய உபயோகம்.
ஓரு அறையின் உபயோகம் கூட அதன் நான்கு சுவர்களுக்குள் அகப்பட்டுள்ள அந்த காலியான வெற்றிடம் தான்.

ஆகவே காலியான இடம் என்று இந்த உலகத்தில் எதுவுமே காலியாக வைக்கப்பட விலலை.எல்லாமே நிரப்பபட்டு இருக்கிறது.
மௌனமாக இருப்பது என்பது தனித்து இருப்பது.பிரச்சனைகளிலிருந்து விடுபட நினைப்பது.மௌனமாக இருக்கின்ற போது மனம் அமைதியாகிறது.
ஆதனால்தான் தியானத்தின் போது மனதை வெறுமையாக்குகிறோம்.
தியானம் என்பது வெறுமை.
எண்ணங்களை காலி செய்கின்ற போது மனம் மௌனமாகும்.
மனம் மௌனமாகிற போது நம் மூளையின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.
மனம் மௌனமாகிற போது நம் மூளையிலுள்ள செல்களின் அதிர்வு 14 லிருந்து 10 ஆக குறைகிறது.அப்போது 50000 சிந்தனைகளாக சிந்திக்கின்ற நமது மூளை மனதின் மௌனத்தால் ஒருமுகப்பட்டு ஒரே சிந்தனையாக கட்டுப்படுகிறது. இந்த ஒருமுக சிந்தனை சாதிக்க விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.

மாவீரன் நெப்போலியன் தன் அமைச்சரவை சகாக்களுடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். விருந்தில் எல்லோருக்கும் பழரசம் பரிமாறப்பட்டது. குடிக்கத் தொடங்கும் சமயத்தில் ஒரு மாபெரும் சத்தம் அனைவரின் காதையும் துளைத்து திடுக்கிட வைத்தது.
நெப்போலியனைத் தவிர மற்ற அனைவரும் பதறி பழரசத்தை கொட்டிவிட்டார்கள். நெப்போலியன் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி அமைதியாக பழரசத்தை ருசித்துக் கொண்டிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு, “பழரசத்தை அருந்த துவங்கி செயலில் இறங்கிவிட்டால் அடுத்த சிந்தனை கூடாது. நாம் மேற்கொள்ளும் காரியம் அருந்துதல் மட்டுமே. அதில் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே காரியமும் கை நழுவாது, முழுமையான ருசியும் கிடைக்கும்” என்று விளக்கம் அளித்தார்.
ஆகவே ஒரே சிந்தனையை சிந்திப்பது என்பது சாதிக்க துடிப்பவர்களின் ஒரு ஆயுதம்.

சரி... நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி? ஒவ்வொரு நிமிடமும் விழிப்பு உணர்வோடு இருப்பது எப்படி?

சுகபோதானந்தா சொல்கிறார்…
தியானத்தில் ஆழ்ந்திருப்பவர்கள் சின்முத்திரை காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள்.
சின்முத்திரைக்கான விளக்கம் என்ன? அடுத்தவர் மீது குற்றம் சுமத்த நாம் நீட்டும்
சுட்டுவிரல், இலக் கில்லாமல் பறக்கும் நம் சிந்தனையின் குறியீடு. அதை ஆத்மாவின்
குறியீடாக விளங்கும் கட்டைவிரலை நோக்கி மண்டியிட வைத்தால் பூஜ்யத்தின் வடிவம்
கிடைக்கிறது. பூஜ்யம் என்பது வெற்றிடத்தின் அடையாளம்.

இந்த விநாடி யின் அருமையை நாம் உணர வேண் டும் என்றால் முதல் கட்டமாக சிந்தனைகள் அற்ற வெற்றிடம் நம் மனதில் உருவாக வேண்டும். சின்முத்திரையின் தத்துவம் இதுதான்!

சரி, சிந்தனைகள் அற்ற வெற்றிடம் நம் மனதில் எப்படிச் சாத்தியமாகும்?
வெளியே இருந்து வரும் ஓசைகள் நம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கிறது.
அவற்றைக் கேட்காமல் புறக்கணிக்க வேண்டும். நாம் ஆழமாக உள்வாங்கி வெளியே விடும் மூச்சுக்காற்றில் மட்டுமே நம் கவனம் ஆழமாகப் பதிந்திருக்க
வேண்டும். இப்படி சிந்தனை, பேச்சு, எண்ணம், ஒலி எதுவுமே இல்லாத அந்த
வெற்றிடம் அதிக சக்தி படைத்தது.
சிதம்பர ரகசியம் என்று சொல்லி வெற்றிடத்துக்கு நாம் பூஜை செய்வதும் இந்தக் கருத்தை வலியுறுத்தத்தான்.
இந்தப் பயிற்சிக்குதான் தியானம் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். தியானத்தின் சக்தி அளப்பரியது. அதிகம் வேண்டாம், தினமும் ஒரு பத்து நிமிடம் இந்தப் பயிற்சியைச் செய்து பாருங்கள். நீங்கள் உங்கள் மனதின் எஜமானன் ஆவீர்கள்!

எங்கே கிளம்பிவிட்டீர்கள்? மனதை வெறுமையாக்கவா?

No comments: