சுட சுட செய்திகள்

Thursday, June 28, 2012

தாய்மை


பத்து மாத பாச சுமையில்
தன் ரத்தத்தையே சோறாக்கி 
ஒவ்வொரு மூச்சையும் உயிர் மூச்சாக்கி
மறுபிறவி எடுத்தே உன்னை பெற்றவள்
பத்தியம் பலவிருந்து தட்டிக் கழித்து
பாவி உன்னை வளர்த்தாள்
தன் தங்கமகன் வியர்வை சிந்தாமல் வாழ
தன் ரத்தத்தையே வியர்வையாக்கி உனை வளர்த்தாள்.
கடைசியில்
அலுமினிய தட்டும்
கிழிந்த பாயும்
கிழமே சும்மா கிட செத்து தொலை என்றா நீ மிரட்டுகிறாய்….
அட சண்டாளா உன்னை பெற்றெடுத்ததற்கு
அவள் ….
மலடியாகவே இருந்திருக்கலாம்.
   
திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: