சுட சுட செய்திகள்

Wednesday, April 17, 2013

காதல்


காதல்

எந்த ஒரு மனிதனையுமே விட்டு வைக்காத ஒரு உணர்வு இது.

சராசரியாக 16 வயதினிலேயே பல மனக் கிளைகளில் இது வந்து அமர்ந்து விடுகிறது.

பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படுகின்ற ஒரு இனக் கலவரம் ஒரு ஈர்ப்புவிசை.

கனவுலகை காட்டுகின்ற அதிசய உணர்வு.

எல்லோருக்ககும் காதல் வருகிறது. ஆனால் அத்தனை பேரும் காதலிப்பதில்லை.

காதல் என்பது காட்டாற்று வெள்ளம். அதில் கரை சேர முடியாமல் குறைப்பட்டு போனவர்கள் ஏராளம்.

எகிப்து நாட்டின் இளவரசி கிளியோட்பாட்ராவை அழகையெல்லம் பிரம்மனால் அள்ளிக் கொடுக்கப்பட்ட அந்த அழகு தேவரைக்கும் காதல்; வந்தது. ஆண்டனி என்கிந்ற படைத்தளபதியிடம் தன்னை இழந்தாள். ஆண்டனியும்சதா அவள் நினைவுகளிலேயே கட்டுண்டு கிடந்தான்.

எதிரி படையுடன் போர் புரிந்தபோது தன் நினைவுகளையும், உணர்வுகளையும் இழந்ததன் காரணமாக தோற்றான். வெட்டுண்டான். இறந்து போனான்;. இதை கேள்விப்பட்ட கிளியோட்பாட்ரா அவனில்லாத இந்த உலகம் எனக்கு தேவையில்லை என்று விசம் மிக்க விரியன் பாம்பை தன் மார்பில் மீது படரவிட்டு மடிந்து போனாள்.

அம்பிகாபதி என்கின்ற கவிஞன், அமராவதி என்கின்ற இளவரசியை காதலித்தான். புல்லருவிகள் இடைமறித்ததன் விளைவால் சேர முடியவில்லை. காதல் சமாதியாக்கப்பட்டது.

ரோமியோ, ஜூலியட், லைலா-மஜ்னு,தேவதாஸ்-பார்வதி,இப்படி எந்த ஒரு காதல் ஜோடியும் இணைந்து வாழ்ந்த சரித்திரம் இல்லை.

ஏன் காதலுக்கு இந்த சோதனை.?

ஒன்று-இருவருக்கும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு

இரண்டு- சமுதாய ஏற்றத்தாழ்வு.

சமுதாய பொருளாதார நிலையில் இருவருக்கும் சமமான இடமிருந்தால் இணைப்பு என்பது சாத்தியம்.

ஆனால் காதல் அப்படி உருவெடுப்பதில்லையே?

தாழ்த்தப்பட்ட மதுரைவீரனுக்கும்,உயர்ந்த சாதி பொம்மிக்கும் தானே காதல் வருகிறது.

வறுமையில் வாடிய கவிஞனுக்கும்,மாளிகையில் வசிக்கும் அமராவதிக்கும் தானே காதல் வருகிறது.

பிறகு எப்படி சாத்தியமாகும்.?

வரலாற்று சுவடுகளை திரும்பி பார்க்கும் போது,சில தேவைகளுக்காக காதல் பயன்பட்டடிருக்கிறது.

ஒன்று இலக்கியம் எழுதப்படுவதற்காக…

இன்னொன்று சாதிய ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குவதற்காக…

முதல் ஒன்றை நாம் சாதித்து விட்டோம். இரண்டாவதுதான் சாத்தியமாக்க முடியவில்லை.

இலக்கியத்தில்  காதல் என்பது புனையப்பட்டதாக இருக்கலாம்.

ஏனென்றால் அது படிப்பவர்களின் உணர்ச்சியை கிளறிவிடுவதற்காக…

அது அதை எழுதும் ஆசிரியரின் சுயநலம்.

அந்த உணர்ச்சி கிளறல்களின் வாயிலாக நமது நெஞசத்தில் எங்கோ அடைந்து கிடக்கிந் காதலை நாம் அடையாளம் காணுகின்றோம்.. இன்பாம் கொள்ளுகிறோம்.

அதனால் காதல் இலக்கிய காவியங்களில் வெற்றி பெறுவது என்பது பெரிய விடயமில்லை.

ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குதல் என்பதில் தான் நாம் கண்ட தோல்வி;.

சுற்றத்தாரும், உற்றதாரும் காதலை ஏற்பதில்லை. யாரோ சில சுயநலமிகளால் பொய் யாக  புனையப்பட்ட சாதிய கட்டமைப்புகளிலிருந்து இறங்கி வர மறுக்கிறான்.

இதுதான் நாம் கண்ட தோல்விக்கு பி ள்ளையர் சுழி.

ஆனால் இ;னறைக்கு காதல் என்பது காமத்திற்குள் அடைப்பட்டு விட்டது.

காதலின் புனிதம், புரியாதவர்கள்தான் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். மீசை முளைக்காத பையனுக்கும், வயதுக்கே வராத பெண்ணுக்கும் இன்றைக்கு காதல் வருகிறது.

அது காதலா, இல்லை

உணர்வுகளை தேடிக் கொள்கிற உடலாசையை தனித்து கொள்கிற ஒரு கருவி.

பொருளாதாரமே இல்லாதவனுக்கு காதல் வந்து பயனில்டலை.
சொந்த காலில் நின்று தன்னையே காப்பாற்ற தெரியாவதவனுக்கு காதல் தேவையே இல்லை. அந்த எண்ணமே வரக்கூடாது.

ஆனால் இன்றைக்கு நாம் காணுகிற நிலமையே வேறு .

பள்ளிகளில் விடுமுறைச் சொல்லிவிட்டு கோயில் படிகடடுகளில் கட்டுண்டு கிடப்பவர்கள்.

கல்லூரி கல்வியை ஒதுக்கி வைத்துவிட்டு, காம கலவியை தேடும் வக்கிர சோடிகள்…

எழும்புத்துண்டை தேடும் நாயைப் போல உடலுக்கு தீனி போட, புதர்களையும் ,மர மறைவுகளையும் தேடும் வக்கிர காமுகர்கள்.

இப்படித்தான் இவர்கள் காதலிப்பதால் பயன் ஏதாவது உண்டா,?

உள்ளங்கள் இணையாமல் உடல் மட்டும் இணைவதால் வாழ்வுக்கு பொருளுண்டா,?

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: