சுட சுட செய்திகள்

Wednesday, April 24, 2013

கோவையில் ஒரு சிரிப்பு மன்றம்…..ஜோக் சொல்லி அரங்கம் சிரித்தால் ரொக்க பணம்.


நண்பர்களுக்கு வணக்கம். இந்த நகைச்சுவை இருக்கே…அறுசுவையை விட ஆனந்தம் கொடுக்கிற சமாச்சாரம்.


ஆனா பாருங்க…நல்லா மத்தவங்கள சிரிக்க வைக்குற மனுசனுங்க நம்ம ஊருல ஏராளமா இருக்காங்க..அவங்கள எல்லாம் ஒண்ணா சந்திக்க வைச்சு, கோவை மக்களுக்கு ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட நிகழ்ச்சி ஒண்ண ஏற்பாடு பண்ணனும் ன்னு நானும் என் நண்பர்களும், நினைச்சுக்கிட்டு இருந்தோம்.

இப்பத்தான் அதுக்கு நேரம் வந்திருக்கு.

விசயம் என்னன்னா?

பெரிய அரங்கத்தில், கோவையின் மக்கள் கூடியிருப்பாங்க.

மேடையின் முன்னால் மிக முக்கிய நகைச்சுவை நடுவர்கள் மூணு பேர் உட்கார்ந்துக்கிட்டு இருப்பாங்க.

நீங்க பண்ண வேண்டியது ஒண்ணுதான்.

நல்ல ஜோக்கை எடுத்து விடணும். அதைக் கேட்டு அரங்கமே சிரித்தால்…நடுவர்கள் பச்சை விளக்கை போடுவாங்க. அப்படி போட்டுட்டாங்கன்னா உங்க அக்கவுண்டுல 100 ரூபாய் போட்டாச்சுன்னு அர்த்தம்.

எவ்வளவுக் கெவ்வளவு பச்சை லைட் எரியுதோ அந்த அளவுக்கு உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ஒரு வேளை கொஞ்சமா சிரிப்பு வந்து, பரவாயில்லை…இன்னொரு வாய்ப்புக் கொடுத்து பார்ப்போம் ன்னு நடுவர்கள் நினைச்சாங்கன்னா..மஞ்சள் லைட்டை போடுவாங்க.

எல்லாம் இந்த ஆளு இதுக்கு சரிப்பட்டு வர மாட்டாருன்னு நினைச்சாங்கன்னா அதாவது மொக்கை போட்டுட்டு இருந்தாருன்னா உடனே சிவப்பு லைட்டை போட்டு கீழே அனுப்பிச்சுருவாங்க. பணம் கிடையாது.
இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணியிருக்கோம்.

என்னங்கண்ணா….ம்;…அதுவா…வர்ற ஜூன் மாசம் அந்த நிகழ்ச்சியை நாங்க ஏற்பாடு பண்ணியிருக்கோம்.

ம்…இன்னொரு விசயம்…இந்த நிகழ்ச்சி ஒரு லோக்கல் டிவியில லைவ்வா ஒளிபரப்பாகும்.

அப்புறம் என்ன யோசனை,?

மேற்படி தகவல்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் திரு.லஷ்மிகாந்தன் 9566644997  அவர்களையும், திரு.ஒட்டக்கூத்தன் அவர்களையும் 9842112666 இப்போதே தொடர்பு கொண்டு உங்கள் பெயரை பதிவு செஞ்சுக் கோங்க.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: