சுட சுட செய்திகள்

Monday, September 6, 2010

கவிஞர் வசுப்ரதா

கிளை முறிந்த மரங்கள்

கண்டம் கண்டமாய் பிரித்தாளும் கொள்கையில்
பிரிந்த்தது நம் தேசமும்.
கேட்டது கிடைத்தது..ஆள்பவர்களுக்கு
நம் கூக்குரல் புதைந்தது பிளவுகளின் பள்ளத்தில்..
தனி மரம் தோப்பானது சுதந்திரம் வேண்டி
மரங்களின் தூளியில் துயில் கொண்ட நேரம்..
கிளை முறிந்த மரங்களாய் வீழ்ந்துதான் போனோம் வெற்றிக்குப் பிறகும்
சுதந்திர மயக்கத்தில் கிளை முறிந்த மரங்களை விட
கிளைகளை முறித்த மரமாய் ஆனோம்.

1 comment:

vasupradha said...

ஆன்பு சகோதரர் ஒட்டக்கூத்தன் அவர்களுக்கு, பரிசீலித்து வலைதளத்தில் பகிர்ந்து, பரிசு அறிவித்தமைக்கு மிக நன்றிகள்.

கவிதைவரிகளில் கீழ்கண்ட எழுத்துப் பிழைகள் திருத்தியதை பதிவு செய்ய இயலுமா?


"புதைந்தது பிளவுகளின் பள்ளத்தில்
தனி மரம் தோப்பானது சுதந்திரம் வேண்டி
மரங்களின் தூளியில் துயில் கொண்ட நேரம்"

இவ்வரிகளை மறுபதிவு செய்தால் பொருள் மாறாமல் படிக்க ஏதுவாக இருக்கும். மற்றும் என்பெயர் வாசுபிரதா என்பதை திருத்தி வசுப்ரதா என மாற்றவும்.
நன்றி.

வசுப்ரதா...