சுட சுட செய்திகள்

Wednesday, September 1, 2010

கவிஞர் ஹேமலக்ஷனா

கிளைமுறிந்த மரங்கள்:

என் மேல் கிளை இழந்தேன்
உன் மேல் படிப்புச் செலவுக்காக
என் வலக் கிளை இழந்தேன்
நீ உன் வளை கரம் பற்றி இல்லறம் நுழைவதற்காக
என் இடக் கிளை இழந்தேன்
உன் அடுக்குமாடி இடப்பெயற்சிக்காக
என் பக்கக் கிளை இழந்தேன்
உன் தலைமுறை தழைக்க வேண்டி
இன்று நான் கிளை முறிந்த ஒற்றை மரமாய்
வேரிலும் துளிர்விட்டு காத்திருக்கிறேன்
உன் அடுத்த கிளைத் தேவக்காய்
முதியோர் இல்லத்து நீர் உரிஞ்சி...

No comments: