சுட சுட செய்திகள்

Wednesday, September 1, 2010

கவிஞர் இந்தி ராணி

நீரில் இடும் கோலங்கள்.

நிறைவேறா ஆசை எனினும்
நினைக்காத நெஞ்சம் இல்லை
வாடாத‌ ம‌ல‌ர் எனினும்
வ‌ர்ணிக்காத‌ க‌ண்க‌ள் இல்லை
கேட்காத‌ பாட‌ல் எனினும்
ம‌ய‌ங்காத‌ உள்ள‌ம் இல்லை
தொடாத‌ தேக‌ம் எனினும்
தொட்டுசெல்லாத‌ தென்ற‌ல் இல்லை
பேசாத‌ விழிக‌ள் எனினும்
கேட்காத‌ செவிக‌ள் இல்லை
உள்ள‌ம் உரைப்ப‌தை
எண்ண‌மென்ற‌ ஏட்டிலே
எதிர்கால‌மென்ற
எழுத்தாணி கொண்டு
க‌டித‌மாய்
வ‌டித்திட்ட‌ வ‌ரிக‌ள்
உற‌க்க‌மென்ற
க‌ன‌வுக்கோட்டைக்குள்ளே
யாரும‌ற்ற மாயலோக
வ‌னாந்த‌ர‌த்தில்
ப‌ற‌ந்துகிட‌க்கின்றன‌
நொடிப்பொழுதினில்
மறைந்துபோகும்
நீரிலிட்ட
கோலத்தின் சாயலாய்
க‌ன‌வென்ற‌ மாளிகைக்குள்
க‌விதைக‌ளாய் பூக்கின்ற‌ன‌!

No comments: