சுட சுட செய்திகள்

Monday, February 6, 2012

பெண்....

பெண்....


பாவம் ஒரு விளையாட்டு பொருள்...


அவள் போடும் ஒப்பனைகள் கூட


அவளை அடிமை யாக்குகிறது...


பணிந்து வாழ்வதற் காகவே அவள்...படைக்க பட்டாளா..?


அவளின் அறிவு...கட்டுப்பாடுகளால் காயப்பட்டது...


அவளின் பலம்ஆணாதிக்கத்தால் ..உருக்குலைந்த்தது..


விண்ணுக்கு சென்று ...வீடு திரும்பினாலும்...--அவள்


வீட்டில் கணவனின் கை பொம்மை தான்...


விஞ்சான உலகம் தான்...


ஆனால்...


இன்னும் இங்கே ...


விதவை...மலடி...வாயாடி...ஓடுகாலி...


மாறவில்லை...




ஆண் , பெண்.. சரிநிகர் சமானம்...


இல்லை...


இது...அவளின் உடலமைப்பால்


உருக்குலைந்து போனது...


ஆணுக்கு கருப்பை இடமாற்றம் நடந்தால் ஒழிய...

சமானம் உறுதியில்லை.  



ஒருபெண்ணை....


அலங்காரம் கூட அடிமை படுத்தும்...


விளம்பரங்களே அதற்க்கு சாட்சி.

No comments: