சுட சுட செய்திகள்

Wednesday, October 15, 2008

பாவப் பட்ட ...இனம்...

ஊதாரி கணவனின்
மரணம் தான் ..இங்கே
சில பேருக்கு தீபாவளி....
ஓரிரவில் கள்ள சாராயம் குடித்து
செத்தான்...கணவன்...
இவளுக்கோ...அடுத்த நாள்...
விதவை கோலத்தில் விடியல்...வந்தது...
உடலுறவுக்கு மட்டுமே...
பயன்படுகிற பொருள்...
ஆககி கொட்டவே...
அடுப்படி வந்தவள்...
இப்படி தான்...அவளை பற்றி
நினைத்தவர்கள் உண்டு....
பல கணவன்கள்
உழைக்கும் எண்ணத்திற்கு
அப்பால் சென்றதால்...
இந்த பெண்கள்....பாவம்....
வறுமை கோட்டில்....
இதனால்....தான்...
பல இடங்களில்...
வயிற்றுக்காக...
குறிகளை...விற்கிறார்கள்...
தாசி களாக...
இவளும் ஒரு வணிகன் தான்.....
கேட்டதை தர வேண்டும்.....
வருபவன்....
குமரனோ...கிழவனோ...
கவலை படக்கூடாது...
வெட்கத்தை பாடையில் கிடத்தி...
பாலுர்டி விட வேண்டும்...
மொத்தத்தில்....நடை பிணமாய்....
வயிற்றுக்காக.. மட்டும்...
ஒப்பனை கொண்ட அழகியாய்...
ஒரு பெண் ....அப்படித் தான்..
படுக்க வந்தவனிடம் கேட்டாளாம்..
." என் மகன் மாதிரி இருக்கீங்க...
இன்னும் ...கொஞ்சம் சேர்த்து
கொடுங்களேன் "

No comments: