சுட சுட செய்திகள்

Sunday, May 19, 2013

சட்டத்தின் படி - விறவிறுப்பான தொடர்கதை (28)

திருப்பூர்  ரயில்வே ஸ்டேசனில் முத்துவும் தியாகுவும்

டியுட்டியில் ஜாயின் பண்ணிட்டு அந்த டிரஸ்சோடு போனா அத்தையும் தமயந்தியும் ரொம்ப சந்தோசப்படுவாங்க..என்ன சொல்லற தியாகு?
ஆமாப்பா..சரி வாங்க ஹெட் கோட்டரஸ் போலாம்.

கோவை விமானநிலையத்தில் திவாகரனும் அவர் மகனும்,

என்னப்பா நம்மள ரிசீவ் பண்ண ஒருத்தரும் வரல?

நான்தான் வேலுக்கிட்ட சொன்னனே….திடிர்ன்னு ஒருநாள் சர்ப்பரைசா வருவோம் ன்னு…

டேக்சியை அழைத்து லக்கேஜ்டன் வேலு பங்களாவை நோக்கி கார் சென்றது.
அங்கே மயங்கிக் கிடந்த ராசாத்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்;துக் கொண்டிருந்தார்கள் அங்கேயிருந்த வேலையாட்கள்.

மயக்கம் தெளிந்த ராசாத்தி  அலங்கோலமான நிலையில் இருந்த தமயந்தியை கட்டிக் கொண்டு, செய்வதறியாமல் சொல்வதறியாமல் பெருமூச்சோடு அழுதாள்.

“தமயந்தி இவர்தாம்மா உங்க அப்பா”

அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த தமயந்திக்கு தாங்க முடியாத ஆச்சரியம்.

“என்ன சொன்னீங்க அம்மா?”

தங்கையும் அண்ணனுமாக இருந்து, மகிழ்ச்சியின் தோட்டத்தில் மயங்கிக் கிடக்க வேண்டிய குடும்பம் இன்றைக்கு தாறுமாறாய் ஆனதற்கு காரணம் நான் தானே என்று எண்ணி வெதும்பி கொண்;டிருக்கும் வேலுவை அப்பா என்று அழுதுக்கொண்டே கட்டி பிடித்துக் கொண்டாள் தமயந்தி.

வாழ்த்துக்கள் தியாகு உங்கள் கடமையில் கண்ணியமும் நேர்மையும் இருக்க மீண்டும் வாழ்த்ததுக்கள் இந்த யுனிபார்மில் நீதி நேர்மை நியாயம் நிறைந்து இருக்க வேண்டும்.

அப்பொழுது போன் அலறுகிறது.

குட்மார்னிங் சார் சொல்லுங்க….

மறுமுனையில்…

ஐயொ நீங்களா? ஓமை காட்….ஓகே சார். டி எஸ் பியை அனுப்பறேன். மிஸ்டர் தியாகு உங்களுக்கு முதல் கேஸ் ஏட்டு ரைட்டர் போலிஸை கூட்டிக்கொண்டு வேலு பங்களாவுக்கு போங்க.

திவாகரனும் மகனும் வேலுவின் பங்களாவில் வழக்கத்திற்கு மாறாகயிருப்பதை கண்டு, செக்யுரிட்டியிடம் விசாரித்து கேட்டறிந்துக் கொண்டனர்.

உள்ளே சென்று பதைபதைப்போடு சோகமே உருவாக அமர்ந்திருந்த வேலுவின் கையைப் பிடித்தபடி என்ன வேலு?

ஐயா வந்து ……நடந்து முடிந்த தன் சொந்தகதை அனைத்தையும் சொல்லி முடித்தான் வேலு.

டி எஸ் பி தியாகு மற்றும் காவலர்கள்…இப்போது பங்களாவில்..

யுனிபார்மில் தியாகுவை பார்த்த ராசாத்தியும் தமயந்தியும் திடுக்கிட்டனர்.
இவர்கள் இருவரையும் பார்த்த தியாகு ஒருகணம் அதிர்ச்சியடைந்தபடி நின்றான்.

வாங்க சார்…நான் தான் இந்த கொலையை பண்ணினேன்.என்னை அரெஸ்ட் செய்யுங்க.

அவசரப்படாமல் நடந்ததை நிதானமாக சொல்லுங்க…..வேலு சொன்னதை அப்படியே எழுதிக் கொண்டார் ரைட்டர்.

அரவிந்த இருந்த இடத்தை ஆய்வு செய்த பின், பிணத்தை போஸ்ட் மார்ட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு இன்ஸ்பெக்டர்; ஒருவருக்கு சிக்னல் காட்டினார்.

அதை தொடர்ந்து காவலர் ஒருவர் விலங்கை கொண்டு வந்தார்.

பதறிப்போன ராசாத்தி தியாகு இவர் யாருமில்ல என் புருசன். தமயந்தியோட அப்பா…

அதுதான் அவர் வாக்குமூலத்திலேயே சொல்லிடடாரே…அத்தே தன் மகளை தன் கண்முன்னால் கூடப்பிறந்தவன் கற்பழிக்க முயற்சி செய்தவனை கொன்றிருந்தாலும், சட்டப்படி குற்றமில்லைதான். என்றாலும் இங்கே நியாயப்படி குற்றம் செய்த குற்றவாளி.

எனக்கு உறவு முறையாகிறது. கடமையைக் கருத்தில் கொண்டு நீதீ வழங்க கோர்ட்டை நான் நாடுவரை தவிர வேறு வழியில்லை. நிச்சயம் இவருக்கு தண்டனைக் கிடைக்காது.. என்னை நம்புங்க…

சார் உங்களுக்கு விலங்கு தேவையில்லை. உங்கள் காரிலேயே உங்க முதலாளிக் கூட வரலாம்.

ஓர் இடத்தில் முத்துவைக்கண்ட ராசாத்தியும் தமயந்தியும் ஓடிச்சென்று கட்டிபிடித்து ஓவென அழுதனர்.

கோர்ட் குற்றம் சுமக்கப்பட்டவரின் வாக்கு மூலத்தை வைத்து தங்கை யென்றும் பாராமல,; தவறு செய்த காம கொடூரனைக் கொலை செய்த வேலுவை சட்டப்படி குற்றவாளியில்லை என தீர்மானித்து விடுதலை செய்கிறது.

வேலு திவாகரன் ராசத்தி தமயந்தி முத்து தியாகு திவாகரன் மகன் சில மாதங்கள் கழித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.

திவாகரன் வேலுவையும் ராசாத்தியையுமு; தனியே அழைத்து, எல்லாம் கெட்டக் கனவா நினைச்சுக்Nகுhங்க..என்று ஆரம்பித்து,

வேலு நான் உங்கிட்ட சொல்லனும்ன்னு நினைச்சேன்.அதை சொல்லலாமா?
என்ன முதலாளி …எதுவாயிருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்….?

இல்ல..தமயந்தியை…என் மகனுக்கு…கல்யானம் பண்ணி வைச்சரலாமா? ன்னு……

வேலுவும் ராசாத்தியும் இதைக் கேட்டு திடுக்கிட்டு…ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்….

தன்னை இந்;த உயர் நிலைக்கு கொண்டு வந்தவர்க்கு இதைவிட நன்றிக் கடன் வேறு என்ன செய்ய முடியுமு;. இருந்தாலும் ராசாத்தி அவளை எவ்வளவு கஸ்டப்பட்டு வளர்த்திருப்பாள். முத்துவை சொந்த அண்ணனாக ஏற்றுக் கொண்டவள். ஒரு வேலை முத்துவின் மகனுக்கு என்ற யோசனையில் இருந்தான் வேலு…

ஐயோ என்ன சொல்லறது. யாருமற்ற அனாதையாக சாக போனவனை காப்பாற்றி அண்ணன் என்ற முறையை தவிர எந்த கெட்ட எண்ணமுமில்லாத அவர்..ஒருவேளை தமயந்தியை தன் மருமகளாக்க எண்ணியிருந்தால்…..என்று யோசித்தபடி இருந்தாள் ராசாத்தி…

என்ன ரெண்டு பேரும் ரொம்ப நேரமா யோசனை பண்ணறீங்க…?

அப்பொழுது முத்து அங்கு வந்தான். திவாகரனிடம் முத்து “முதலாளி மன்னிக்கனும் நீங்க பேசிட்டு இருந்ததை நானும் கேட்டுட்டுத்தான் இருந்தேன்.

நானும் அதைத்த்தான் யோசித்து வைத்திருந்தேன் முதலாளி. வாழப் போறவ தமயந்தி…அவளை ஒரு வார்த்தை கேட்டிடுவோம்….

தமயந்தியும் திவாகரன் மகனும் ஆபிஸ் விசயமாக டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தியாகு வந்துக் கொண்டே திருடன் வந்தாக் கூட தெரியாதவர்களாக அப்படியென்ன டிஸ்கஸன்?

இன்னும் பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள் காத்திருக்கின்றன…..அதிர்ச்சிகள் தொடரும்….
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: