சுட சுட செய்திகள்

Thursday, May 9, 2013

வீரம் தமிழனின் கலாச்சாரம்.

வீரம்

தமிழனின் கலாச்சாரம்.

ஆனால் இன்றில்லை..அந்த வீரம் இன்றைக்கு வன்முறைக்குள் அடங்கிவிட்டது.

புறநானுறு என்கிற புறவியலில் தமிழர்களின் வீpரமும்,அஞ்சாமையும் அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

புறமுதுகில் புண்வாங்குபவன் கோழை என்றும்,போர்க்களம் கண்டு கலங்குபவன் வீரமில்லாத ஏழை என்றும் பரிகாசம் செய்யப்பட்டிருக்கிறது.
வீரமில்லாத இதயம் துடிக்க தகுதியற்றது.


அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்று கோழைகளை கடிந்துக் கொள்கிறார் பாரதி.

அச்சமில்லை அச்சமில்லை என்று மனதிற்கு உயிர் கொடுக்கிறார் பாரதி.
உடலால் உறுதிப்பட்டவர்கள் மட்டுமல்ல வீரன்..
உள்ளத்தாலும் உறுதிப்பட்டவர்கள்தான்.

உடலுறுதிக் கொண்டவன் கூட சில நேரம் துவண்டு விடுவதுண்டு…ஆனால் உள்ளத்தில் உறுதிக் கொண்டவர்கள் ப+மியை போல் சுற்றிக் கொண்டே இருப்பவர்கள்.

பயம் என்ற வார்த்தை அவர்களுக்கு தெரியாது.
அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

சேகுவாரா, லெனின்,பிடல் காஸ்ட்ரோ பெரியார், பிரபாகரன், ஹிட்லர்,சர்ச்சில்,இன்னும் பலபேர்.

காங்கோ காடுகளில் சுற்றித்திரிந்து போராளிகளின் ரத்தத்தை மறு சுத்தகரிப்பு செய்துக் கொண்டிருந்த சேகுவரா ஒரு வீரன்.

எவன் தொட்டால் தீட்டு என்றார்களோ அவன் தானே இந்த நாட்டடின் சட்டத்தை தீட்டோ தீட்டென்று தீட்டினான். தூழ்த்தப்பட்டவனை நாயை விட கேவலமாக நடத்திய நாட்டில் அரசியலைமைப்பு சட்டத்தையே எழுதிpக் கொடுத்த அம்பேத்கார் ஒரு வீரன்.

ஒரு சாதாரண ஓவியன் ராணுவ சிப்பாயாகி, தலைவனாகி நாட்டின் சர்வாதிகாரியாக மாறிக் காட்டிய உலகத்தின் பாதியை தன் சுட்டு விரலுக்குள் அடக்கிக் காட்டிய ஹிட்லர் ஒரு வீரன்.

அகிம்சை என்கிற கூட்டுக்குள்தான் யாரையும் அடிபணிய வைக்கும் அன்பு அடைகாக்கப்படுகிறது. என்பதை உணர்த்திய காந்தி ஒரு வீரன்.

சகலரும் கண்டு நடுங்கிக்  கொண்டிருந்த அலெக்சாண்டரை… “வா நீதானா அது?” ஏன்று சாதாரணமாக எதிர்த்து, போரில் தோற்றுப் Nபுhன போரஸ் ஒரு வீரன்.

இங்கே தோற்று போவது என்பது தோல்வியல்ல..

வெற்றி கனிகளை மூடி வைத்து இருக்கும் சூட்சும ப+க்கள்.

மூடப்புதர்களால் மறைத்து வைக்கப்பட்ட மனித அறிவை? சுத்தப்படுத்தி வெள்ளையடித்த ஈரோட்டு கிழவன் ஒரு வீரன்.

முதலாளித்;துவத்தை வேரோடு களைந்து சமத்துவத்தை நிலைநாட்டி, ஆதிக்க சக்திகளை அடிமண் வேரோடு பிடுங்கி எறிந்த நிலக்கிழார் பிடல் காஸ்ட்ரோ ஒரு வீரன்.

எண்ணங்களில் செயல்களில் நல்லவற்றுக்காக பேதாராடுபவன் எசனும் வீரனே..

இங்கே வீரன் என்பது உடல் தசைகளில் இல்லை.இதயத்தில்.

தன் கண் முன்னால் நடக்கும் அக்கிரமங்களை கண்டு கொதித்தது எழுபவன் தான் வீரன்.  எங்கே ஒழுக்கம் குடியிpரு;க்கிறதோ அங்கேதான் விPரமும் புதைக்கப்பட்டிருக்கிறது.

ஒழுக்கம் இல்லாதவன் ஒருக்காலும் வீரனாக பதிணமிக்கவே முடியாது. மனசாட்சியை மறந்து விட்டு முரடனாக கள்வனாக கொலைகாரனாக இருப்பவன் வீரன் இல்லை.

குடல் பசியை தீர்ததுக் கொள்ள வேட்டையாடும் காட்டு மிராண்டிகள் வெறி நாய்கள்.

அறிவோடும் கருணையோடும் இழைந்தோடும் ஒரு மின்சாரம் தான் அந்த வீரம்.

அது கொடியோரை சுட்டெரிக்க வேண்டும்.நல்லோரை தொட்டணைக்க வேண்டும்.

வீரமுடன் வாழ்வதற்கு சபதம் ஏற்போம்.

நாட்டிலுள்;ள கொடுமைகளை அறுத்தெறிய கைக் கோர்ப்போம்.
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: