சுட சுட செய்திகள்

Thursday, July 19, 2012

சட்டத்தின் படி ....(6)

சென்ற வாரம்
ராசாத்தி மடமடவென்று கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்…
‘தங்கச்சி….. தங்கச்சி’
குரல் வந்த திசையினை திரும்பிப் பார்த்தாள்.
அதற்குள் பெரும் அலை ராசாத்தியை அணைத்தது.
 

வேலுவின் ஹலோ என்ற கேள்விக்கு மறுமுனையிலிருந்து

"ஹலோ யாரு?"

"என்ன  சார் என்னை தெரியல?" என்றான் வேலு,.

"யோவ் இது என்ன வீடியோ வா உன் மூஞ்சியெல்லாம் தெரிவதற்கு? பேரை சொல்லுய்யா?"

"சார் நான் தான் உங்கள் லாரியில திருப்புர்ல இருந்து வந்தேனே?" என்று நிறுத்தினான் வேலு.

"ஒ? புரியிது. ஆமா வந்த காரியம் என்ன ஆச்சு?"

"மனைவி மகன் கிடைத்தார்களா? சரி நீ எங்க இருக்குற? நான் மெட்ராஸ் போர்ட் ல இருக்கிறேன்." என்றார் டிரைவர்.

"சார் நானும் மெட்ராஸ் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து தான் சார் பேசறேன்".

"அப்படியா நான் இன்னும் ௪௫ நிமிசத்துல திருப்பூர் கிளம்பிடுவேன்.  நீ வரதுன்னா வா"

"சார் நானும் என் மகனும் திருப்பூர் தான் வரோம்". என்றான் வேலு.

"அப்படியா அப்போ உன் மனைவி? சரி சரி உடனே கிளம்பி வா அன்னைக்கி உன்னை இறக்கி விட்டேன் இல்லே ...அந்த இடத்துக்கு வா போகும் போது எல்லாம் பேசி கிட்டே போகலாம்".என்றார் டிரைவர்.

நகர பேருந்தை பிடித்து இருவரும் மெட்ராஸ் போர்ட்க்கு சென்றடைந்தார்கள்

"வாய்யா வேலு இது உன் பையனா? சரி லாரியில் ஏறு.. என்றபடி கிளினரை எதிர் பார்த்தபடி அதோ கிளி வந்துட்டான்...(கிளினரோட சுருக்கம் )

"என்னடா கிளி ...கிளி கூண்டோட வர? இந்த ரெண்டு கிளியையும் எங்க வாங்குன?"

"அண்ணே என்னை மன்னிச்சுடுங்க" என்றான் அந்த கிளினர்.

"ஏண்டா...என்னடா பண்ணுன?"

"அண்ணே இரண்டு வருசத்துக்கு முன்னால.."

".என்னடா பிளாஷ் பேக்கா?"

"அது இல்லைண்ணே..."

"இரண்டு வருசத்துக்கு முன்னால என் அத்தை இறந்து போன பின் என் மாமா அவருடைய பொன்னை கூட்டிட்டு மெட்ராஸ் வந்துட்டாரு. இந்த ஹோர்பார் ல தான் அவர பார்த்தேன். காலமெல்லாம் அவ தான் என் உசிருன்னு  நான் நெனச்ச என் நினைப்பு வீண் போகல. மாமாவும் கரிசனையுடன் இங்கயே வேலை வாங்கி தரதா சொல்லிட்டாரு.இனிமேல் நான் கிளினர் வேலைக்கு வர மாட்டேன்.  இந்த கிளி  அவளுக்கு..." என்று ......கிளினர் தொடருவதற்குள்...

"அது யாருடா."..என்று கேட்டார்...டிரைவர்.

"அது தான்னே ...என் அத்தை பொண்ணு ரேவதி. பார்க்க கிளி மாதிரி இருப்பான்னே... அவளுக்கு கிளின்னா ரொம்ப பிடிக்கும்...அதுதாண்ணே வாங்கிட்டு போறேன்". (கருப்பு   முகம்  சிவப்பானது ... வேறென்ன வெக்கம்  தான்)

எது எப்படியோ...நல்ல இருந்தா சரி...

"சரி இந்த உன் பேட்டா...உன் சம்பளத்தை திருப்பூர் ஆபீஸ் ல வந்து வாங்கிக்கோ.. அப்புறம்...ரெண்டு கிளி வச்சுரிக்கயில்ல....ஒரு கிளியை அந்த சின்ன பயன் கிட்ட கொடுடா...பாவம் வச்சு விளையாடட்டும்."

"சரிண்ணே...கொடுத்துட்டா போச்சு"... என்று சொல்லிய படி.....கிளி கூட்டை திறந்தான் கிளினர்.

திறந்தவுடன்...ஒரு கிளி அந்த இண்டு இடுக்கில் புகுந்தபடி...பறந்து விட்டது..

"ஐயோ அண்ணே...ஆசையாய் வாங்கிட்டு வந்த கிளி பறந்து போயிடுச்சே....அய்யய்யோ அண்ணே...இந்த ஒரு கிளியை யாவது என் அத்தை பொண்ணுகிட்ட கொண்டு போய் சேர்கிறேன் ண்ணே..என் சம்பளத்தை நீங்களே வாங்கி வச்சுகோங்க"..என்றபடி...வேகமாக நடந்தான் அந்த கிளினர்.

திகைத்து போன டிரைவர் வேலுவையும், குழந்தையையும் பார்த்தபடி வண்டியை கிளப்பினார்....டிரைவர்.
"நமக்குன்னு வாய்க்கிற கிளினர் யாருமே சரியா அமைய மாடிங்குரானுங்க.....ம்ம்... ரெண்டு நாளா சரியா தூக்கமே இல்ல வேலு...அண்ணல் சரியான நேரத்துக்கு வேற போய் சேரனும். என்று டிரைவர் பேசி முடிப்பதற்குள்  ...

அண்ணே...எனக்கும் driving   தெரியும் , உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் வேணும்னா வண்டியை ஓட்டுறேன்...அண்ணே எனக்கு நீங்க ஒரு  உதவி செய்யணும்...ஒரு  வேலை நீங்க வாங்கி கொடுத்திங்கன்னா ...நான் பொழச்சுக்குவேன் ....."

ம்ம்....சரி இங்க வா...ஒட்டு....

அவன் ஓட்டுவதை பார்த்து நம்பிக்கை வந்தவனாக...சரி சரி நான் போய் பின்னாடி பேனட்டுல படுதுகுறேன்...நீ பார்த்து பத்திரமா ஒட்டு.

வேலுவுடைய அதிர்ஷ்டம்...எந்த செக் போச்டுளையும்...எந்த வித தடையுமில்லை....வண்டி பாட்டுக்கு போய் கொண்டே இருந்தது.

அதிகாலை 5 மணிக்கு லோர்ரி வந்து சேர்ந்தது திருப்புருக்கு. வேலு டிரைவரை எழுப்பினான். டிரைவர் வேலுவை ஆச்சிரியத்துடன் பார்த்தார்.

"பரவால்லையே வேலு....சரி இன்னும் 2 கிலோமீட்டர் இருக்கு அந்த கம்பனி க்கு போக.....சரி நீ இந்த பக்கம் வா...நான் ஓட்டுறேன்..."

வண்டியை ஓட்டும் போது டிரைவருக்கு ஆயிரம் மன குழப்பம்.....
இவனை  வேலைக்கு சேர்த்து விட்டால்...நம்ம வேலைக்கு ஆப்பு  வச்சுருவானோ..? ....அவன் கதையை கேட்டாலும் பாவமா த்தான் இருக்கு..என்ன பண்ணலாம்..? சரி பாப்போம்..."

அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய  வில்லை.

வேலை வங்கி தந்தானா இல்லையா..?




  அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.
  ஆசிரியர் திரு சுந்தரகனகு
 மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: