சுட சுட செய்திகள்

Wednesday, July 4, 2012

கவிதை

குற்றம் பார்க்கின் சுற்றம்….?

சுய ஆதாயத்திற்காக
பகைமையை உருவாக்கி 
உறவைத் துண்டிக்கும்
கத்திரிக்கோலாய் இருக்காதே
உறவுகளை சேர்க்கும்
ஊசியாயிரு
ஊசியே உன் தலையில் ஓட்டை என்ற
ஜல்லடைக்கு உடம்பெல்லாம் ஓட்டை
பிறர் குற்றம் காணும் முன்
தன் குற்றம் காண்
உதவி என்று வந்தவனுக்க
முடிந்தால் உதவு இல்லையேல் ஒதுங்கு
குறைக் கூறி குற்றவாளியாக்காதே
குற்றமில்லா மனிதன் இவ்வுலகில்
யாருமில்லை

ஆறு மனமே ஆறு…

சிறுவன் கையில் காகித ஓடம்
அதைப்பார்த்து சொட்டு சொட்டாய் கண்ணீர் வடித்தால் காவேரி
அதோ …. என்று மணல் பள்ளத்தாக்கை காட்டியபடி.

இக்கரைக்கு அக்கரையா பச்சை?

வாழ்நாள் உன்னோடு இல்லையேல்
வாழ்வேது எனக்கு
என்ற என் இனியவளே
துபாயிலிருந்து பெரும் தொகையுடன் வந்தவனை
கண்டவுடன் செல்ல காசாக
எனை தூக்கியெறிந்தவளே
உனக்கு தெரியுமா
துபாய் போலிஸ் அவனை
தேடி வந்திருப்பது?.

வேலை வாய்ப்பு
வேண்டாம் வரதட்சனை
வேண்டவே வேண்டாம்
சமைத்து போட
துவைத்து போட
சகல வேலைகளையும் செய்யத்தயார்
நானொரு வேலையில்லா பட்டதாரி.

  திரு சுந்தரகனகு

 மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: