சுட சுட செய்திகள்

Tuesday, July 24, 2012

சட்டத்தின் படி(7) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

 சட்டத்தின் படி(7)
சென்ற வாரம்  
அது பொறாமையா ? இல்ல...அவன் பொழப்பு போயிருமேன்னு பயமா ? ஒன்னும் தெரிய  வில்லை.

வேலை வங்கி தந்தானா இல்லையா..?  


“தங்கச்சி தங்கச்சி அய்யோ கடவுளே யாராவது காப்பாத்துங்களேன்”
முத்துவினுடைய கதறலைக்கேட்டு சிறு கூட்டம் கூடி விட்டது.

“அய்யோ பாவம் என்ன கஸ்டமோ… ஏய்யா நீ எல்லாம் ஒரு மனுசனா என்த விச்சனைன்னாலும் வீட்டோடுயிருக்கணும்.  இப்போ நிலைமையைப் பாரு.” என்று ஆளுக்கு ஆள், வேலுவைப்பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

சிறு தூரத்தில் மீனவத்தாய்மார்களும் பெண்களும் தங்களுடைய உறவுகள் எவ்வித ஆபத்துமின்றி கொலைவெறி பிடித்த இலங்கை கப்பற்படையிடமிருந்து உயிர் தப்பிப்பித்து வர வேண்டும் என தத்தம் தமது கடவுள்களை வேண்டிக்கொண்டிருந்தனர்.

இங்கு நடக்கும் களேபரத்தைப்பார்த்து அவர்களும் ஓடி வந்தார்கள்.

ஆர்ப்பரிக்கும் பேரலை மீது படகு ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்படகிலிருந்து இருவர் கடலில் குதித்தனர்.

கடல் அலை இழுத்து சென்ற ராசாத்தியை இருவரும் கரைக்குத் தூக்கி கொண்டு வந்தனர்.

தன் உயிரையும் துச்சமென மதித்து மற்ற உயிரை காப்பாற்றிய அந்த மீனவ சமுதாயத்தை காப்பாற்ற தமிழக மக்களிடமிருந்து எத்தனை வகையான ஆர்பாட்டம,; உண்ணாவிரதம்.?

கட்சி பாகுபாடுயின்றி ஒரே அணியாக சேர்ந்து போராடினால்தான் இதற்கெ;ல்லாம் வழி பிறக்கும். குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் முளைக்குமே தவிர நமது மத்திய அரசாங்கம் கண்டுக் கொள்ளாது.. மக்கள்  கையில் இருக்கும் வலிமையுள்ள ஒரே ஆயுதம் ஓட்டு மடடும்தான். அந்த ஆயுதத்தினால்தான் இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நினைத்ததை பெற முடியும்.

ராசாத்தியை தரையில் கிடத்தியவுடன் மீனவப் பெண்கள் முதலுதவி செய்து அவளை காப்பாற்றினார்கள்.

“அய்யோ பாவம் கர்ப்பமாயிருக்கு…இந்த புள்ள”.. அதில் ஒரு பெண் பரிதாபப்பட்டாள்.

“ஏய்யா உனக்கு அறிவிருக்கா என்ன நடந்திருந்தாலும் பேசி தீர்ககணும். ஒரு உயிரு இல்லையா..ரெண்டு உயிர். போயிருந்தா என்ன பண்ணுவ?” முத்துவைப் பார்த்து திட்டினார் ஒருவர்.

மற்;றொருவர் பீடிக் குடித்துக்கொண்டே “இவனையெல்லாம் சுட்டுக் கொள்ளணும்.”

“கொல்லுங்கைய்யா கொல்லுங்க…யாருன்னே தெரியாத இவ… கடலுக்குள்ளே விழுந்து சாக போறாளே ன்னு எப்படியாவது இவளை காப்பாற்றணும்ன்னு தங்கச்சி தங்கச்சி  ன்னு கூப்பிட்டு பின்னாலயே ஓடி வந்தேன் பாரு அதுக்காக என்னை கொல்லுங்கய்யா” கண் கலங்க கொன்னான் முத்து.

“என்னது உன் தங்கச்சி இல்லையா..?” என்றபடி எல்லோரும் முத்துவை வியந்து பார்த்தார்கள்.

“ஆமாய்யா… இவளை அந்த ரோட்டுலயே பார்த்தேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே நான் டாஸ்மாக்குல தண்ணியடிச்சிட்டு வந்திட்டு இருந்தேன்.இவளுடைய பையன்னை கார் இடிச்சிருச்சு. ஆனால் 2 பேர்     வந்து பையனை தூக்கிட்டு போனாங்;க..என்ன ஏதுன்னு விசாரிக்கல..கொஞ்ச நேரத்திலே குழந்தையை பற்றி கேட்டு. இவ வந்தா.. நான் பாதி மப்புலே  குழந்தை போயிட்டதுன்னு சென்னேன். நான்  குழந்தை செத்து போயிட்டதா சொன்னதா நினைச்சு இந்த புள்ள மயக்கமாயிட்டா. மயக்கம் தெளிந்த பின் நடந்ததுதான் இந்த சம்பவம்.. காப்பாத்தனும்ன்னு நெனச்சேன். அதான் இந்த புள்ள பின்னாடியே ஓடி வந்தேன்” சொல்லி முடித்தான் முத்து.


சுணடல் விற்கும் சிறுவன் முதல் சுற்றுலா பயணிகள் வரை சிலர் பாராட்டவும் சிலர் திட்டவும் செய்தனர். சில பேர் வேடிக்கை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தனர்.

“இப்போ அநாதையான இவளை என்ன செய்ய போற?” என்றுதான் கேட்டார்களே தவிர ராசாத்திக்கு அடைக்கலம் தரும் மன நிலைமை யாருக்கும் இல்லை.

“ஏய்யா கூட பொறந்தாத்தான் தங்கச்சியா, கூட பொறக்கலைன்னா தங்கச்சி இல்லையா? இந்த மெட்ராசுல கால்வாசி பேரு அநாதையா வந்தவங்க தாய்யா.. ஏன் நான் கூட அநாதையா வந்தவன் தாய்யா. உங்க எல்லோரும் முன்னாடியும் நான் ஒண்ணு சொல்றேன். இவளை நான் என் தங்கச்;சி மாதிரி வைச்சுக்குவேன் பாதுகாப்பேன். இனிமே இவ என் தங்கச்சித்தான் தங்கச்சித்தான.;”

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராசாத்தி வருத்தம் கலந்த சந்தோசத்துடன் முத்துவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

முத்து ராசாத்தியின் கையைப் பிடித்து “ எந்திரிம்மா தங்கச்சி…அண்ணே நான் இருக்கேன் கவலைப் படாதே..உ;ன குழந்தையை எப்படியும் தேடி கண்டு பிடிக்கலாம்.என்று சொல்லி மீனவர்களைப்பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தியை கூட்டிக்கொண்டு நடந்தான்.

அந்த படகில் உயிருடன் இருந்த ஒரு மீன் ஒரே துள்ளலில் மீண்டும் கடலுக்குள் குதித்தது.

பானு பானு என்று தன் வீட்டுக் கதவை தட்;டினான் முத்து.

கதவை திறந்துக் கொண்டு நிறைமாத கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது  ராசாத்தியைப் பார்த்து பானுவும், பானுவைப்பார்த்து ராசாத்தியும்  திகைத்து நின்றார்கள்.

எதற்காக…..இந்த திகைப்பு?

அடுத்த வாரம் வரை காத்திருக்கலாமே?!!
கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: