சுட சுட செய்திகள்

Thursday, July 19, 2012

கிரைம் போன்…சிறுகதை

கிரைம் போன்

என்ன சார் கார்ல வராம பைக்குல வர்ரீங்க..?

ஏன் கார்ல வந்தாத்தான் மதிப்பீங்களா? இல்லைன்னா..நான் ஒரு துப்பறியும் நிபுணர்ன்னு ஒத்துக் கொள்ள மாட்டீங்களா,?
என்று நக்கலுடன் கேட்டார் மணவாளன்.

ஐயோ சார் மன்னிச்சிடுங்க…உள்ளே SP  எல்லோரும் உங்களுக்காக காத்திருங்காங்க…போங்க…போங்க சார்…என்று கான்ஸ்டபிள் சல்யுட் அடித்தபடி சொன்னார்.

வாங்க MR .மணவாளன் குட் ஈவினிங் என்று கைக்குலுக்கிய வண்ணம்…. 

“கை தேர்ந்த கொலைக்காரன் போல சார் அவன்…ம்…கைரேகையை….மறைக்க குளோவ்ஸ் போட்டும்….மோப்ப நாய் கிட்ட மாட்டாம இருக்க…மிளகாய் பொடி தூவி விட்டும்; சென்று இருக்கிறான் என்றார் SP 

சார் please doctor report  இருந்தா கொடுங்க…என்றார் மணவாளன்..

மூச்சு திணறல் அதாவது தலையணையில் அழுத்தி கொன்றிருக்கலாம் என்றார் SP 

அவர்களுக்கு ஆஸ்த்துமா போன்ற வியாதியிருந்ததா? இது மணவாளனின் கேள்வி.

ஆமாம் இருந்து இருக்கக் கூடும் என டாக்டர் report  பதில் - இது SP 

ஆஸ்த்துமா இருந்ததற்கு Treatment   எடுத்த டாக்டர் பற்றியும், ஆஸத்துமா சிகிச்சைக்காக கூட்டி வந்த நபர் இவர்களைப் பற்றி விசாரித்தீர்களா?

என்ன சார்..ஒருவார காலமாய் விசாரிக்காம இருப்போமா? இந்தாங்க அந்த Details …என்றார் SP 

வாங்கிப் பார்த்தார் மணவாளன்…சிறிது மவுனத்திற்கு பிறகு…

SP sir …கொலையான அந்த அம்மாவுடைய மகனின் போன் நம்பர் வேணும்…ஏற்பாடு செய்யுங்கள்…


விதவை கோமதி மிகப்பெரிய கோடீஸ்வரி…அவளின் ஒரே மகன்…ஆதி….
ஆதியின் நம்பரை தெரிந்துக் கொண்ட போலீசார் மணவாளனிடம் கொண்டு வந்துக் கொடுத்தார்கள்.




சொல்லு..எதுக்காக கோமதியம்மாவை கொலை செய்தாய்? பணத்துக்காகவா..?

இல்லை…

வேறு எதுக்காக சொல்லு…

சார் மணவாளன் சார்…இவ இப்படி யெல்லாம் கேட்டா சொல்ல மாட்டா…எங்க பக்கம் அவளை அனுப்புங்க…சார்..என்றார் மகளியர் இன்ஸ்பெக்டர் திவ்யா…

ப்ளீஸ்  கொஞ்சம் இருங்க மேடம் ... சொல்லு புனிதா எதற்காக அந்த அம்மாவை கொலை செய்தாய்?

புனிதாவிடமிருந்து எந்த பதிலும்மில்லை. மணவாளன் தொடர்ந்தார்

கோமதியம்மாளின் ஒரே வாரிசு ஆதீயை நீ உயிருக்கு உயிராக காதலித்தாய் …ஆனால் ஆதி உன்னிடம் என் தாய் இருக்கும் வரை நம் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று சொல்லியிருக்கிறான்.

தவறு நடந்துவிட்டது…தயவு செய்து என்னை மன்னித்து விடு ஆஸ்த்துமா வியாதி உள்ள என் தாயை நான் காப்பாற்ற வேண்டும் இப்படி தானே ஆதி சொன்னான்?...

ஆமாம் ஆமாம்…என் வயிற்றில் அவன் குழந்தையை பெற்று வளர்க்க…அணுஅணுவாக செத்துக் கொண்டிருந்தேன்…

குழந்தையை விட அவன் அம்மாவைத் தானே ஆதி மிகவும் நேசிக்கிறான் என்ற ஆதங்கமும் கோபமும் எனக்குள் பொங்கி கொண்டிருந்தது. நானும் ஆதியும் சேர வேண்டுமென்றால் அவன் அம்மா சாக வேண்டும் என்று அதற்காக காத்திருந்தேன்….

நேரம் வந்தது…யாரும் இல்லாத போது அவன் வீட்டிற்கு சென்று…தூங்கிக் கொண்டிருந்த அவன் அம்மாவை பார்த்தேன்…மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் கிடந்த தலைகாணியை முகத்தில் அமிழ்த்திக் கொன்றேன்….

தனது வாக்குமூலத்தை அளித்தாள்….புனிதா…

 எனக்கு தெரியும் சார்….MR மணவாளன் எந்த தடயமும் இல்லாமல் இருந்தாலும் சரியா கண்டுபிடிப்பார்ன்னு…..பக்கத்திலிருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் பேசிக் கொண்டார்கள்.

 வாங்க மிஸ்டர் மணவாளன்…வாழ்த்துக்கள் மற்றும் எங்களது நன்றிகள்…..அது சரி…எப்படி எந்த தடயமும் இல்லாமல் அந்த புனிதாதான் கொலையாளின்னு கண்டுபிடிச்சீங்க…?

ஆதியிடமிருந்து கைப்பற்றிய செல்போனை காட்டினார்….

இதுல போய்…அந்த SMS இன்பாக்ஸ்  …பாருங்க 

“என் தாய் இருக்கும் வரை நம் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்;. தவறு நடந்துவிட்டது…தயவு செய்து என்னை மன்னித்து விடு ஆஸ்த்துமா வியாதி உள்ள என் தாயை நான் காப்பாற்ற வேண்டும்”
Athi
17ஃ07ஃ2012 2.30pm 

ஆசிரியர் திரு சுந்தரகனகு
 மறக்காமல்  தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: