சுட சுட செய்திகள்

Wednesday, March 13, 2013

சட்டத்தின் படி (20)


 சட்டத்தின் படி (20)

முத்துவின் மகன் பள்ளி இறுதி தேர்வில் முதலிடம் பெற்றமைக்கு பாராட்டோடு கருணை உள்ளத்துடன் கல்லூரியில் கட்டணம் எதுவுமின்றி சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
ராசத்திக்கும் முத்துவிற்கும் சொல்லி மாளாத மகிழ்ச்சி.
“தியாகு உன்னை வளர்க்கறப்போ ஒவ்வொரு நாளும் நான் சந்தோசமா இருந்ததைவிட கவலைப் பட்டதுதான் அதிகம்.”
முத்து தியாகு தமயந்தி எல்லோரும் ராசாத்தியை ஆச்சிரியமாக பார்த்தார்கள்.
என்ன எல்லோரும் அப்படிப் பார்க்கிறிங்க,?
எங்கே என் வளர்ப்பிலே தப்பு வந்திடுமோ என்ற பயம். செடி கொடி மரத்தை வளர்க்கின்ற போது கூட ஒழுங்கா தண்ணி ஊத்தனும், எரு போடணும். இல்லைன்னா அது பட்டுப் போய்விடும். உன்னை சில நேரம் கண்டிச்சுயிருக்கேன். பின்னாடி நான் அழுதுமிருக்கேன். இப்போவும் அழுகிறேன். சுந்தோசத்தில.”
“அத்தை என் தாய் உயிருடன் இருந்திருந்தால் கூட என்னை இப்படி வளர்த்திருப்பாங்களோ என்னவோ..சந்தேகம் தான”;. ஏன்றான் தியாகு.
“ராசாத்தி… பானு இறந்தது எனக்கு பெரும் துக்கம் தான.; இந்த துக்கம் வருசக் கணக்கா இலர்லை மாசக் கணக்கா மட்டுமே இருந்தது. என் மருமகள் தமயந்தியை பள்ளியில பாராட்டின அப்ப நான் எப்படி சந்தோசமா இருந்தேன் தெரியுமா,?” ஏன்று முத்து ராசாத்தி மகள் தமயந்தியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாhன்.
“அத்தை நம்ம தமயந்தி  ப்ளஸ் டுவில் கட்டாயம்  மாநிலத்தில் முதலாவதாக வருவா. கட்டாயம் அவளுக்கும் என்னை போலவே கல்லூரியில் கட்டணமில்லாமல் இடம் கிடைக்கும்.”
“என்னமோப்பா எல்லாம் கடவுள் செயல். உங்க அம்மா பானுவின் ஆசீர்வாதம். நீங்க படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போய் சம்பாதிருச்சு அண்ணனை வீட்டோடு வைச்சு பார்த்தா போதும்”
“ஏ அத்தை பிரிச்சு பேசறீங்க. உங்களையும் காப்பாத்த வேண்டியது என் பொறுப்புத்தானே.?”
“அப்போ நான் அனாதையா”? என்று சிறிது வருத்தத்துடன் கூறினாள் தமயந்தி.
“அட என் செல்லமே இந்த மாமா உயிருடன் இருக்கும் வரை நீ அனாதையில்லம்மமா” நீ என் தங்கைச்சி பிள்ளை. முட்டுமில்லஃ என் மகளும் நீதான்னம்மா.” ஏன்றான் முத்து.
“எனக்கு நெனைவு தெரிந்ததிலிருந்து மாமான்னு உறவு யிருந்தாலும், பெத்த தகப்பன் மாதிரி தானே பாத்துக்கிறீங்க. அதனால என்னவோ என் அப்பாவைப் பற்றியோ , தொலைஞ்ச அண்ணனை பற்றியோ இதுவரை நான் கேட்டதில்லை” என்றாள் தமயந்தி.
கொஞ்சம் பொறுங்க. இன்னும் நாலு வருசம்…அப்புறம் உங்களை நாங்கப் பாத்துக்குறோம்.

தொடரும் 
 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: