சுட சுட செய்திகள்

Tuesday, March 19, 2013

சட்டத்தின் படி - விறவிறுப்பான தொடர்கதை (26)

பக்கத்து வீட்டு பார்வதியின் மகள் சுமதி (சுமதியும்,தமயந்தியும் கல்லூரித் தோழிகள்)

“ஆண்டி ஆண்டி தமயந்திகிட்டேயிருந்து போன்:” என்று ராசாத்தியிடம் செல்லைக் கொடுத்தாள்.

“தமயந்தி எப்படியம்மாயிருக்கே,? போன காரியம் என்னம்மா ஆச்சு?”

“அம்மா என்னைப் பற்றி கவலைப்படாதே வேலை கெடச்சிருச்சு. தங்கறதுக்கு சாப்பாட்டுக்குன்னு எல்லாத்துக்கும் எந்த பிரச்சனையில்லம்மா. முதலாளி தங்கமானவர். செல்லெல்லாம் வாங்கிக் கொடுத்துரக்குறார்.”

“பரவால்லையே…நல்லா இருக்கணும் அந்த மனுசன்.”

“ம்..அம்மா மாமாக்கிட்டே போனைக் கொடு, மாமா வேலைக் கிடைச்சுருச்சு நம் கஸ்டமெல்லாம் அமல்ல மெல்ல தீர்ந்திரும். மாமா வேளாவேலைக்கு சாப்பிடுங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.”

“அம்மா தமயந்தி உன் புத்திசாலித்தனத்திற்கு கணடிப்பாக வேலைக் கிடைக்கும்னு எனக்குத் தெரியும் கண்ணு. மாமா சொன்ன கேப்பியல்ல. பேச்சை தட்ட மாட்டியே?’

‘சொல்லுங்க மாமா’

‘என்னால இப்ப அங்க வர முடியாது. அதனால உங்க அம்மாவை அனுக்கி வைக்கிறேன். நேரடியா உன்னுடைய சவுரியத்தை பார்த்துட்டு வந்துட்டா மனசுக்கு நிம்மரியாயிருக்கும். மறுக்காதேம்மா.”

“அய்யோ மாமா.. பெத்த அப்பா மாதிரி முதலாளி கவனிச்சுக்கிறார். 24 மணி நேரம் செக்யுரிட்டி இருக்கு மாமா. சரி மாமா உங்க விருப்பம். செல்லை சுமதிக் கிட்ட கொடுங்க. எப்படி வரணும்pங்கறதையும் அட்ரசையும் சுமதி எழுதி தருவாள். ஜாக்கிறதையா அம்மாவை வரச் சொல்லுங்க மாமா.”

“சரிம்மா நாளைக்கே அனுப்பி வைக்கிறேன்.”

தமயந்தியின் செல்லில் வேலு.

“சொல்லுங்க ஐயா..”

“அம்மா தமயந்தி நாளைக்கு எம்பையன் பாரின்லே இருந்து வர்றான். என்னால் ஏர்போர்ட்டுக்கு போக முடியாது. நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.அதனால கார்ல போய் பையனைக் கூட்டிட்டு வந்திரும்மா…”

தமயந்தி இருதலைக் கொள்ளி போல அமல்லவும் முடியாமல் விழுங்கவுமு; முடியாமல் பதில் சொல்லாமல் இருந்ததை கண்டு,

“தமயந்தி என்ன பதிலே காணோம். ஒன்னும் பயப்படாத. உன் கூட செக்யுரிட்டி டிரைவர் வருவார்.அவருக்கு மகனைத் தெரியும். நீ அவனை ரிசீவ் பண்ண போனா போதும்.”

தயங்கி தயங்கி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அய்யா அன்னைக்கு எங்கம்மா என்னைப் பார்க்க இங்க வர்றாங்களே.”

“ஓ அப்படியா….நேரா இங்கத்தான வருவாங்க.? அட்ரஸ் சரியாத்தானே சொல்லியிருக்க?. கவலைப்படாதே. நான் அவங்கள ரிசீவ் பண்ணி உன் ரூமில் தங்க வைச்சிடுறேன்.”

வேறு வழியில்லாமல் “சரி அய்யா” என்றாள் தமயந்தி


தொடரும் 

 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: