சுட சுட செய்திகள்

Tuesday, March 19, 2013

சட்டத்தின் படி (25)


 தமயந்தி வேலுவின் நிர்வாகத்திலுள்ள எக்ஸ்போர்;ட் பனியன் கம்பெனியின் நுழைவு வாயிலில் நின்றுக் கொண்டு, அங்கிருந்த  செக்யுரிட்டியிடம் அழைப்புக் கடிதத்தை காண்;பித்தாள்.

“ ம் உள்ளே போங்கள்..”

வேலு முக்கியமான பைலில் ஆழ்ந்த கவனத்தோடு எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

May I coming Sir?    

yes…உட்காருங்க…

உங்க பெயர்….

தமயந்தி..

தமயந்தி நல்ல பெயர். என்று சொல்லியபடி தமயந்தியை நிமிர்ந்து பார்த்தார். மின்னல் அடித்தது போல் அதிர்ச்சியும் ஆச்சரியமும் சந்தோசமுமாக வேலு முகத்தில் பிரகாசம்….

ஏதோ ஒரு பரவசம் அவன் முகத்தில் பிறந்தது. அவன் குழந்தையல்லவா அவள்.

ம்..சொல்லும்மா…எங்கேயம்மா என்று கேட்பதற்குள்…தனது பயோடேட்டாவை பவ்யத்துடன் காண்பித்தாள் தமயந்தி.

அத்தனையும் படித்தாதாக தெரியவில்லை. காணம் போன தனது மனைவி ராசாத்தியை அப்படியே உரித்து வைத்தது போல் தமயந்தி உள்ளதால் அந்த பாதிப்பிலிருந்து மீளாமல் தனது அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
உங்கள் குடும்ப விபரங்கள்.

அம்மா மாமா தியாகுவைப்பற்றி சுரக்கமாக கூறியபடி…எனக்கு மட்டும் வேலைக் கிடைச்சிடுச்சுன்னா என் அம்மாவையும் மாமாவையும் நான் கூட்டிட்டு வந்திருவேன் சார்.

சிரித்தபடியே…இன்டர்காமில் மேனேசரை அழைத்தான்.

இவங்க பேர் தமயந்தி. என்னுடைய பெர்சனல் செக்ரட்டரி. கெஸ்ட் அவுசில் உள்ள என் பிரைவேட் ரெஸ்ட் ரூமை இவங்க தங்கறதுக்கு ஏற்பாடு செய்யுங்க.
அதுமட்டுமில்ல…சமையலுக்கும் ஆட்களை நியமிச்சுருங்க.

மானேசர் சென்றவுடன் தற்சமயம் அங்கே தங்கும்மா..நல்ல வீடு கிடைச்சவுடன் உன் அம்மாவையும், மாமாவையும் கூட்டி வரலாம்.

இத்தனையும் ஏதோ கனவில் நடப்பது போல் தன்னையே மறந்தவளாக..தமயந்தி நின்றுக் கொண்டிருந்தாள்.

என்னம்மா திகைச்சு போயிட்ட…உனக்கு என்ன வேலை எவ்வளவு சம்பளம் கம்பெனியின் சட்டத்திட்டம் எல்லாம் நான் சொல்றேன். உனக்கு எந்த உதவி வேணுமின்னாலும் என்னிடம் தயங்காமல் கேளு” சரி உன் போன் நம்பர் என்னன்னு சொல் நோட் பண்ணிக்கிறேன்.”

அது வந்து….எங்கிட்ட செல்போனெல்லாம் இல்லை சார்….

ஓ…அப்படியா…சரி மீண்டும் மானேசரை வரச் சொல்லி.,ஒரு போனை உடனடியாக வாங்கிவரச் சொல்லி உத்தரவிடுகிறான் வேலு.

அப்போது டெலிபோன் ஒலிக்கிறது.

போனில் திவாகரன்.

சொல்லுங்க முதலாளி…

வேலு ஒரு குட் நியுஸ். அரவிந்த படிப்பை முடிச்சுட்டான். உன்னை பார்க்கணுமிங்கற  ஆசை அவனுக்குமிருக்கும்.நாளைக்கு பிளைட்ல வர்றான். கோயம்புத்தூருக்கு நீயே வந்து கூட்டிட்டுப் போ..அது சரி உனக்கு பி எ அப்பாயிமெண்ட் போட சொன்னேனே…என்னாச்சு,?

பி எ வை செலக்ட் பண்ணிட்டேன் முதலாளி. இதோ அவங்க என் ஆபிஸ்லத்தான் இருக்காங்க.

சரி…நான் அடுத்த வாரத்தில வர்ரேன்….

சரிங்க முதலாளி….வாங்க உங்களைப் பார்க்கணும் போல இருக்கு.

தொலைபேசி இணைப்பு  துண்டிக்கப்படுகிறது.

இவர்தாம்மா என் தெய்வம்…ம்…அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.

அப்போது மானேசர் உள்ளே வந்து புதிய செல்போனைக் கொடுத்தார்.

வாங்கி தன் நம்பரை பதிவு செய்து, போனை தமயந்தியிடம் கொடுத்தார் வேலு.

கடைசிக்கட்ட விறுவிறுப்புத் நெருங்கிவிட்டது...காத்திருங்கள்

]நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: