சுட சுட செய்திகள்

Tuesday, March 19, 2013

சட்டத்தின் படி - விறவிறுப்பான தொடர்கதை (27))

ராசாத்திக்கு திருப்புர் ஒன்றும் புதிதல்ல.

ஆனால் 20 வருடம் கழித்து வந்த ராசாத்திக்கு அதி வேக வளர்ச்சியைக் கண்டு பிரம்மிப்படைந்தாள்.

கண்டக்டரிடம் விலாசத்தைக் காட்டி தென்னம்பாளையத்திலுள்ள திவாகரன் எக்ஸ்போர்ட் க்கு போகும் வழியை தெளிவாக தெரிந்துக் கொண்டு தட்டுத் தடுமாறாமல் சரியான இடத்திற்கு வந்து செக்யுரிட்டியிடம் தமயந்தி தாய் என அறிமுகம் செய்து கொண்டு தமயந்தியைப் பார்க்க வந்ததாகக் கூறினாள்.

இண்டர்காமில் வேலுவை தொடர்புக் கொண்டார் செக்யுரிட்டி….

போனில் “செக்யுரிட்டி தமயந்தி அம்மா வந்துட்டாங்களா, எனக் கேட்டார் வேலு”

“வந்துட்டாங்க சார்”

“சரி அவங்கள ஆபிசுக்கு அனுப்பி வைங்க”

“அம்மா உங்க பேரை சொல்லுங்கம்மா…ரிஜிஸ்டர்ல எழுதனும்.”
(இண்டர்காம் தொடர் துண்டிக்கப்பட வில்லை)

“ராசாத்திங்க….”

இந்த பெயரை இன்டர்காமில் கேட்ட வேலு திடுக்கிட்டார். ஏதோ உணர்வு உந்தலில்

“செக்யுரிட்டி உடனே அவங்களைக் கூட்டிட்டு வா…”

வேலுவின் அறைக்;குச் சென்ற ராசாத்தி, “வணக்கம் முதலாளி” என்றாள்.

குரலைக் கேட்டதும் திரும்பிப்பார்த்த வேலு, சிலையான நிலைமைக்கு ஆளானார்.

ராசாத்தி குழப்பத்துடன் இது என் கணவரா, இல்லை அவர் சாயல் கொண்ட வேறு யாரோவா,? என்று குழப்பம் கலந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

இருபக்கமும் அமைதியிலும் அமைதி. அப்படியொரு அமைதி.

தொட்டு தாலி கடட்டிய மனைவியுடன் 7 ஆண்டுகால தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்தது அவ்வளவு எளிதாக மறந்து விட முடியுமா?

கண்ணீரை துடைத்தபடி “நீ….நாக்கு குழறியது. எ..எ…என் ராசாத்தியா….?”

தாரை தாரையாக வரும் கண்ணீரை துடைத்தபடி அழுது கொண்டே ‘ஆ ஆ ஆமாங்க உங்க ராசாத்pயே தான்.

தன்னையே மறந்த வேலு ராசாத்தியை கட்டடிபிடித்து நெற்றியில் முத்தமிடட்டபடி “ராசாத்தி:” …என பாசமழை பொழிந்தான்.

“சொல்லுங்க நீங்க…எப்படி…?”

“இந்த நிலைமைக்குள்…என்று தானே கேட்குற? எல்லாத்தையும் பின்னால் சொல்றேன்.”

“தமயந்தி நம்ம….”…

“ஆமாங்க தமயந்தி உங்க மகதானுங்க..நம்ம பொண்ணுங்க.” 

அப்போது வேலுவின் செல் அடித்தது.

“சொல்லும்மா…”

அரவிந்த உடன் வரும் விசயத்தை தமயந்தி சொல்கிறாள்.

“தமயந்தி அரவிந்த கூட நீயும் வீட்டிற்குப் போ…ஆபிசுக்கு வர வேண்டாம்.”

“அய்யா அம்மா…”

“வந்துட்டாங்களான்னு தானே கேட்குற? அம்மாவை நான் கூட்டிட்டு வரேன். அதுவரை அங்கேயே யிரும்மா.”

போனை ஆப் செய்தான் வேலு….

அப்போது மெல்லிய குரலில்

“என்னங்க என்னை மன்னிசுடுங்க. நம்ம பையன் அரவிந்தை…” அழுதாள் ராசாத்தி..

“கவலைப்படாதே ராசாத்தி…அரவிந்த் என்கூடத்தான் இருக்கான். வா எல்லா விசயத்தையும் விலாவரியா சொல்றேன்.”

காரில் போகும்போது வேலுவும் ராசாத்தியும் கடந்த கால நிகழ்வினை ஒருவரொக்கொருவர் பகிர்ந்து கொண்டே வேலுவின் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

சென்னையில் வீட்;டிற்கு வந்த, தியாகு டிரைனிங் முடித்து திருப்புரில் அப்பாயின்மெண்ட் ஆகியிருந்த விசயத்தை முத்துவிடம் சொன்னான்.

அத்தையும், தமயந்தியும் திருப்புரில் இருப்பதையும் முத்துவிடமிருந்து அறிந்துக் கொண்டான்.

“அப்பா நாளைக்கு நல்ல நாள் டூட்டியில் ஜாயின் பண்ணிடலாம்ன்னு நினைக்கிறேன். அப்படியே அத்தையும் தமயந்தியையும் பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.”

இருவரும் திருப்புருக்கு கிளம்பினார்கள்.

திவாகரனும்.  அவர் மகனும்…அமெரிக்கவிலிருந்து சென்னையில் ஒரு மீட்டிங்கை முடித்துவிட்டு திருப்புருக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.

அரவிந்த தமயந்தி வந்த கார் பங்களாவை அடைந்தது.

வேகமாகச் சென்ற அரவிந்த் தமயந்தியை திரும்பிப்பார்த்து, “ஹலோ பி எ மேலே என்  ரூம்க்கு வா”…என்றான்;,

“பரவாயில்லை சார். நான் இங்கயே வெயிட் பண்றேன்”.

“ஹலோ பேர் ஹ தமயந்தி…ஐ எம் ய ஓனர்…என் பேச்சை ஒபே பண்ணுங்க.”

வேறு வழியின்றி அரவிந்த ரூம்க்கு தமயந்தி சென்றாள்.

சோபாவைக் காட்டி உட்காரச் சொன்னான் அரவிந்த்.

உடையை மாற்றிக் கொண்டு வந்த அரவிந்த ரூம் கதவினை தாழிட்டான்.

சோபாவில் உட்கார்ந்திருந்த தமயந்தி திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.

“ஏ..பயப்படாதே..உட்கார். அப்பா வர்றதுக்கு எப்படியும் 10 நிமிசம் ஆகும். ம் ம் நீ ரொம்ப அழகாயிருக்க. ஆடம்பரமில்லாத அழகு.” என்று சொல்லியபடி தமயந்தியின் தோள் மீது கை வைத்தான்.

தேள் கொட்டியது போல் விலகி நி;ன்றாள் தமயந்தி.

தமயந்தி கை கூப்பி “சார் தயவு செய்து என்னை ஒன்றும் செய்திடாதீங்க ப்ளீஸ்.”

“இதுதான வேண்டாங்கிறது. இங்கே நடக்க போறது யாருக்கும் தெரியாது.”

“அண்ணா( காலை பிடித்தபடி) உங்க தங்கையா நினைச்சுக்குங்க..என்னை விட்டுடுங்க…”

“என்னது தங்கையா…இந்த சென்டிமெண்ட் எல்லாம் வேண்டாம்.”

காமம் கண்ணை மறைக்க, அரவிந்த மிருகமானான்.

அவனிடமிருந்து தப்பிக்க தமயந்தி அங்குமிங்கும் ஓடினாள்.

வேலுவும் ராசாத்தியும் மகனையும் மகளையும் காண காரிலிருந்து இறங்கி வேகமாக பங்களாவில் நுழைந்தார்கள்.

தமயந்தியின் அபாய குறல் கேட்டு வேலு மாடிக்கு விரைந்தார்.

திறந்த ஜன்னல வழியாக கண்ட காட்சி வேலுவை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்லுகிறது.

“டேய் அவளை விட்டுடா அவ உன் கூட பொறந்த தங்கச்சிடா..கதவைத் திறடா…”

வேலுவின் பேச்சை கொஞ்சம் கூட கேட்காமல் தமயந்தியை கட்டிலில் தூக்கிப்போட்டான் அரவிந்த்.

வேலு சிறிதும் காலம் தாழ்த்தாமல் வேகமாக தன் ரூமுக்கு சென்று கைத் துப்பாக்கியை எடுத்து வந்து ஜன்னல் வழியாக ஆறு தோட்டா தீரும் வரை அரவிந்தை சுட்டுத் தள்ளுகிறார். அரவிந்தவின் உடல் சல்லடையாகி தரையில் விழுகிறது.

இக்காட்சியைக் கண்ட ராசாத்தி என்ன செய்வது என்று தெரியாமல் மயக்கமுற்று வேலுவின் தோளில் சாய்கிறாள்.

இன்னும் பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள் காத்திருக்கின்றன…..அதிர்ச்சிகள் தொடரும்….
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: