சுட சுட செய்திகள்

Wednesday, March 13, 2013

சட்டத்தின் படி 22 தொடர்கதை

சட்டத்தின் படி 22 தொடர்கதை 
 
தியாகு படிப்பை முடித்துவிட்டான். நல்ல வேலைக்கும் சென்று சேர்ந்துவிட்டான்.

ஒருநாள் முத்துவை ஆட்டோவிலிருந்து இரண்டு பேர் கைத்தாங்கலாக இறக்கிவிட்டு, அம்மா அம்மா என்று கத்தினார்கள். கதவை திறந்த ராசாத்தி, முத்துவின் கால் கட்டை பார்த்து அண்ணா என்னண்னா இது? என்ற படி கத்தினாள்.

வந்தவர்கள் சொன்னார்கள்.பாரம் ஏற்றி கொண்டிருக்கும் போது லாரியிலிருந்து கால் தவறி கீழே விழுந்துட்டார். பெரிசா ஒண்ணுமில்ல ராசாத்தி. சின்ன காயம்தான். என்றான் முத்து.

முதல் நபர் “இல்லைம்மா வந்து….”

“சொல்லுங்கண்ணே என்னண்ணே ஆச்சு?” பதறினாள் ராசாத்தி.

“கால் முறிஞ்சி போய் கட்டு போட்டு விட்டு வந்திருக்கோம்.”

“அப்படியொன்னும் கவலை படற அளவுல இல்லைங்க…ஆனா ரெண்டு மாசம் படுக்கையில் இருக்கணும்.இந்தாம்மா மருந்து மாத்திரை. எங்க போர்டர் ய+னியன் நிச்சயம் உதவிசெய்யும். இந்தா பணத்தை தற்சமயம் செலவுக்கு வைச்சுக்கோங்க.”

பிரமை பிடித்தவள் போல் தலையை மட்டும் ஆட்டினாள் ராசாத்தி.
 
தொடரும் 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: